ஒசாமா பின்லேடனின் சமீபத்திய வீடியோ டேப், இதுவரை அவரிடமிருந்து வந்த அனைத்து வீடியோ டேப்களையும் விடவும் காமெடியாக உள்ளது. பெரும்பாலும் அமெரிக்க மற்றும் நேட்டோ கூட்டுப் படைகளுக்கு எதிராக வீடியோ டேப் எச்சரிக்கை விடுத்து வந்த திருவாளர் பின்லேடன், தற்போது புவி வெப்பநிலை உயர்வுக்கும் அமெரிக்காவே காரணம் என்று வீடியோ டேப்பில் பேசி அனுப்பியுள்ளார்.
அல்ஜஸீரா தொலைக்காட்சி ஒளிபரப்பிய வீடியோ செய்தியில் பின்லேடன் கூறுகையில்,அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் நெருக்கடிக்கும் புவி வெப்ப மயத்துக்கும் அமெரிக்காவும்,மேற்கத்திய நாடுகளுமே காரணமென குற்றம் சாட்டியுள்ளதோடு மூன்றாம் உலக நாடுகளின் வெள்ளம்,பட்டினி,பஞ்சம், காடுகள் அழிப்புக்கும் அமெரிக்காவே காரணம் என்று சாடியுள்ளது காமெடி. மனிதர்களை மட்டும் துல்லியமாகக் குறிவைத்து அழிக்கும் அசைவ தேசம் அமெரிக்காவை,காடுகள் அழிப்புகளைச் சொல்லி சைவமாக்கும் சதித்திட்டம் இருக்குமோ என்னவோ!
நியூயார்க் வர்த்தக மையங்களைத் தகர்த்த பெருமை கொண்ட பின்லேடன், வெடிக்காத வெடிகுண்டுகளை வைத்து மிரட்டுமளவுக்கு தரம்தாழ்ந்து வந்து இருப்பதிலிருந்து அல்காயிதா நெட்வொர்க்கை செயலிழந்து முடக்கப்பட்டு விட்டதும் வெட்டவெளிச்சமாகி உள்ளது. கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று டெட்ராய்ட் விமானத்தில் இத்துப்போன குண்டைக் கடத்தியதை, வழக்கம் போல் அல்காயிதா நேர்மையாகப் பொறுப்பேற்றுக் கொண்டதோடு, அதிபர் ஒபாமாவுக்கு கிறிஸ்துமஸ் போனஸாக எச்சரிக்கைகளையும் வழங்கியது.
பின்லேடன் பேசியதாகச் சொல்லப்படும் இத்தகைய அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஆடியோ-வீடியோ டேப்கள் எல்லாமே வழக்கொழிந்து போய்விட்ட பழையவகை ஆடியோ கேசட்டில் பேசிப் பதிவு செய்தே அனுப்பப்படுகிறது. இதுகுறித்து எந்தப் புலணாய்வு அமைப்புக்கும் எவ்வித சந்தேகமும் எழாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.
சந்தையில் கிடைக்காத புத்தம் புதிய கேஸட்டுகள் பின்லாடனுக்கு மட்டும் யார் சப்ளை செய்கிறார்களோ தெரியாது! பின்னணியில் சீனா அல்லது ரஷ்யா இருக்கக்கூடும்?
அமெரிக்காவை கலங்கடிக்கும் ஓர் உலக மகா தீவிரவாதி இன்னும் பழைய ஆடியோ டேப் ரெக்கார்டரை வைத்துக் கொண்டு மிரட்டுவது மனசுக்குக் கஷ்டமாக உள்ளது. ;-))) FLASH DRIVE அல்லது MP3 வாய்ஸ் ரெக்கார்டரை, அல்ஜஸீராவுக்கு அனுப்ப வேண்டிய கேசட்டுகளைப்போடும் அதே குப்பைத் தொட்டியில் போட்டுவைத்தால்,இனி MP3, MPEG 4 ஃபார்மட்டில் நிறைய காமெடிகளை பேசி அனுப்பி வைப்பார்.
கோவில் சிலைகளில் பெண்கடவுள் சிலைகளுக்கு உயர்ரகப் பட்டுத் துணி போர்த்தியிருப்பார்கள். அம்மண கோலத்தில் செதுக்கப்பட்ட சிலைகளுக்கு பட்டுத்துணி போர்த்தி, அம்மன் என்று மரியாதை செய்கிறார்கள். கடவுளை வழிபடும்போது மனம் அலைபாய்வதைத் தடுக்கவே சிலைகளுக்கும் ஆடை அணிவிக்கிறார்கள். சிலையே ஆனாலும் அங்கிருக்கும் சிற்பத்தில் கடவுள் தெரிவதைவிட அதன் பாலினமும் அங்கத்திரட்சியுமே கண்ணில்படுகிறது. தீவிர தெய்வ பக்தனுக்கும் சபலமுண்டு!
களைத்துத் திரும்பும் கணவனுக்காக தலைசீவி காத்திருக்கும் மனைவியால் கணவன் புத்துணர்வு பெறுகிறான். ஆபாசப் படங்களில் அங்கம் தெரியக் காட்சிப்படுத்தப்படுபவர்கள் பெண்களே! துரிதமாக பாலியல் வசப்படுத்தும் ரசாயன மாற்றம் பெண்ணைவிட ஆணுக்கே அதிகம் என்று மருத்துவம் சொல்கிறது. கன்னிப் பெண்களின் அங்கக் கவர்ச்சியில் தன்னிலை மறந்து தாடிவைத்தலையும் காதலர்களே இதற்குச் சான்று!
ஆணுக்குப் பெண் கவர்ச்சி - பெண்ணுக்கு ஆண் கவர்ச்சி என்றாலும் இறுதி வீழ்ச்சி ஆண்களுக்கே! இடுப்புச்சேலை மடிப்புல நான் கிறங்கிப்போனேனே! என்பதிலிருந்து பெண்ணின் சிறு அங்கமும் ஆணுக்கு பாலியல் உணர்வை தூண்டுகிறது என்பது மறைக்கமுடியாத உண்மை!
முஸ்லிம் பெண்கள் பர்தா எனும் மேலங்கி அணிவதை பெண்ணடிமைத் தனத்தின் வெளிப்பாடாகக் குற்றம்சொல்கிறார்கள். பள்ளிகளில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணியக்கூடாதென்ற தடை பிரான்ஸ்,ஜெர்மனி போன்ற நாடுகளில் சட்டமாக்கப்பட்டுள்ளது. பிரிட்டனிலும் பர்தா தடைசெய்யப்பட வேண்டுமா என்ற கருத்துக்கணிப்பை பிரபல பிபிசி நிறுவனம் நடத்துகிறது. தமிழ் வலைப்பதிவுகளிலும்கூட பர்தா குறித்த விமர்சனங்கள் அவ்வப்போது வைக்கப்படுகிறது.
முஸ்லிம் பெண்கள் தங்கள் புறஅழகை கணவன், மாமனார், தந்தை,மகன் சகோதரன் உறவுமுறை தவிர்த்த யாரிடமும் வெளிப்படுத்தக்கூடாதென்ற கட்டுப்பாடு உள்ளது. மேற்சொன்ன உறவுமுறையற்ற ஆண்களின் பார்வை முஸ்லிமல்லாத பெண்களுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும். இஸ்லாம் தவிர யூத, கிறிஸ்தவ,சீக்கியப் பெண்களும்கூட தமது உடலழகை மற்றவர்களிடம் மறைக்கவே விரும்பிகின்றனர்.
நம் இந்தியாவிலும் வடமாநிலப் பெண்கள் பர்தாவையொத்த மேலங்கியை அணிகிறார்கள். பெண்களின் அங்கங்களை மறைப்பது மத மற்றும் கலாச்சார ரீதியில் சரியென்று ஒப்புக்கொள்பவர்கள்,முஸ்லிம்கள் விசயத்தில் மட்டும் குறைகாண்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?
ஜனாதிபதியாக பதவியேற்கும் சில நாட்களுக்கு முன்பு பர்தாவைப் பற்றி விமர்சித்த திருமதி.பிரதீபா பாட்டீல் இன்றுவரை முக்காடிட்டு, கைகளை மறைக்கும் பர்தாவுக்கிணையான உடையணிகிறார். முஸ்லிம் பெண்களை பர்தா அணியச்செய்து அவர்களின் உரிமையை இஸ்லாம் பறிக்கிறதெனில் இந்திராகாந்தி முதல் ப்ரதீபா பாட்டீல்வரை முக்காடுடிட்டுக்கொள்வதற்கும் இஸ்லாம்தான் காரணமா?
விஜய் டிவியில் நீயா- நானா? என்ற நிகழ்ச்சியில் பர்தா குறித்த கருத்தாடல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.பர்தா அவசியமே என்று ஒரு பிரிவினரும் தேவையில்லை என்று இன்னொரு பிரிவினரும் வாதிடுவார்களாம்! நிகழ்ச்சி நடத்துபவர் இறுதியில் தீர்ப்பளிப்பாராம்! தீர்ப்பு என்னவாக இருக்குமென்று சொல்ல வேண்டியதில்லை. கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல்லெறிந்தால் யாருக்கு நஷ்டம்?
இஸ்லாம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டமார்க்கமல்ல என்கிறீர்கள்?ஆனால் அத்தகைய விமர்சனங்களை எதிர்கொள்ளாமல் முற்றுகைப் போராட்டம், ஆர்ப்பாடம் நடத்தி இதுபோன்ற சுதந்திரமான கருத்தாடலை தடுக்கிறீர்களே என்று சிலர் கேட்கலாம். எது சார் சுதந்திரம்? ஒருபக்கம் ஆபாச போஸ்டரை கிழிக்கும் போராட்டங்களை நடத்திக்கொண்டு இன்னொரு பக்கம் பர்தாவை விமர்சிப்பது நேர்மையான கருத்தாடலா? பர்தா தேவையில்லை என்போர் பிகினி அல்லது டூ பீஸில் வாதிடுவதுதானே நேர்மையான விவாதமாகும்?
ஆணும் பெண்ணும் சமம் என்பவர்கள் போராட்டம் நடத்த வேண்டிய இடம் பொதுக் கழிப்பிடங்கள்தான். ஏனென்றால் அங்குதான் ஆண்கள்-பெண்கள் என தனித்தனி படம்போட்டு பாகுபாட்டை வலியுறுத்துகிறார்கள். என்ன கொடுமைசார் இது!
திருக்குர்ஆனை முஹம்மது நபி (ஸல்...) அவர்கள் மக்கள் முன் எடுத்துச் சொன்ன கால கட்டத்திலேயே அதனை எப்படியாவது பொய்ப்படுத்திட வேண்டும் அல்லது குறைந்தபட்சம் குறையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று அபூஜஹ்ல் காலந்தொட்டு தொடரும் அத்தகைய முயற்சிகள் இன்றுவரை நின்ற பாடில்லை.
"மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்று சிந்திக்க வேண்டாமா? முதுகுத் தண்டுக்கும் விலா எலும்புக்கும் இடையிலிருந்து குதித்து வெளிப்படும் திரவத்திலிருந்து படைக்கப் பட்டான்" என்ற குர்ஆனின் கூற்றில் அறிவியல் முரண்பாடுகள் இருப்பதாக தருமி குற்றச்சாட்டுக்களை அடுக்கி இருந்தார்.
"ஆணின் விரையிலிருந்து வெளிப்படும் விந்திலிருந்துதான் கரு உருவாகிறது. குர்ஆன் சொல்வதுபோல் (?!) முதுகுத் தண்டுக்கும் விலா எலும்புக்கும் இடையிலில்லை" என்ற நவீன கண்டுபிடிப்பை(!) தருமி முன்வைத்திருந்தார். அதற்குப் பின்னூட்டம் இட்டிருந்த கல்வெட்டு என்பார்,ஆதிமனிதனிலிருந்து இதுவரைக்கும் யாருக்கும் தெரியாத(!) ஆண்குறியிலிருந்து விந்து வெளிப்படுவதை, குடும்பக்கட்டுப்பாடு (வாஸக்டமி) அறுவைச் சிகிச்சையைப் படம் காட்டி நிரூபித்திருந்தார்.
முன்னதாக, குர்ஆனின் மூலமொழியான அரபியில் நேரடியாகச் சொல்லப்பட்டவற்றுக்கு கூடுதல் விளக்கத்துக்காக மொழியாக்கத்தில் பிறைக்குறிக்குள் (BRACKET) மொழிபெயர்ப்பாளர்களால் குறிப்பிடப் படுவனவற்றைச் சுட்டி, "குர் ஆனுக்குத் தன்னிச்சையாக விளக்கம் கொடுத்துள்ளார்கள்" என்று கல்வெட்டு தனது ஆட்சேபனையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
மொழியியலில் பிறைக்குறிக்குள் சொல்லப்படுபவை மொழிபெயர்ப்பாளரின் கருத்துகள்;இது எல்லா மொழியாக்கத்திற்கும் பொருந்தும் என்ற அடிப்படை கூடத் தெரியாமல் குர்ஆனில் குறைகாணப் புறப்பட்ட இவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது. பிறைக்குறிக்குள் விளக்கம் இல்லாமலும் மூலப்பொருள் மாறாது என்று சொன்னதைத் தொடர்ந்து EMIT / வெளிப்படுதல் என்ற சொல்லைப் பிடித்துக்கொண்டு, "விந்து EMIT ஆகுமிடம் ஆண்குறி" என்ற இன்னொரு அரிய கண்டுபிடிப்பைச் சொன்னார் திருவாளர் கல்வெட்டு.
கருவறைக்குள் செலுத்தப்படும் விந்து விரையிலிருந்து மட்டும் உருவானதல்ல; மொத்த விந்தில் சுமார் 5%க்கும் குறைவான அளவே விரையில் உருவாகிறது. இவ்வாறு வெளியாகும் விந்தில் சுமார் 200-300 மில்லியன் உயிரணுக்கள் விரையிலிருந்து வெளியாகி PROSTATE GLAND தாதுச்சுரப்பிகளுடன் கலந்து, பிறகு அங்கிருந்து வெளியாகி SEMINAL VASICLE தாதுக் கலவையுடன் கலந்து இறுதியாக ஆண்குறியிலிருந்து வெளியாகி கருவறையைச் சென்றடைகிறது. இடையில் மூன்று வெளியேற்றங்கள் (EMIT/EMISSION) நடந்த பிறகே ஆண்குறியிலிருந்து விந்து வெளியேற்றப்பட்டுக் கருவறை சென்றடைகிறது.
ஆணின் விந்தானது 1-21 நாட்களில் படிப்படியாகச் சுரந்து இனவிருத்திக்குத் தயாராக வைக்கப்படுகிறது. இடைப்பட்ட நாளில் உடலுறவு மூலம் வெளியேற்றப் படாவிட்டால் தானாக வெளியேற்றப்படுகிறது. விரைகளில் சுரந்த விந்து நேரடியாக வெளியாகாமல், உடலில் நெடும்பயணம் செய்து தாதுச் சுரப்பிகளுடன் கலந்து வெளியாகிறது. விரையிலிருந்து நிதானப் பயணமாகத் தொடங்கி PROSTATE GLAND தாதுச் சுரப்பிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு துள்ளிக் குதித்து வெளியேறி SEMINAL VASICLE சுரப்பிகளுடன் மீண்டும் கலந்து வீரியமடைந்து இறுதியில் ஆண்குறி வழியாக இடம் பெயருகிறது.
கல்வெட்டு குறிப்பிட்டுள்ள சுட்டியிலும் இது சொல்லப்பட்டுள்ளது: *Sperm do not mature in the testes. They must first pass into the epididymis, a C-shaped storage chamber adjoining the testes composed of a 20-foot coiled tube. The sperms' journey through the epididymis takes about 2 - 3 weeks. They are held here until sexual activity forces them to move on. http://www.clarian.org/ADAM/doc/In-DepthReports/10/000037.htm
உணர்வுக்கும் உடலுக்கும் நடக்கும் இன்பப் போராட்டத்தில் (TESTICLE-SEMINAL VASICLE-PROSTATE GLAND என) மூன்று வெளியேற்றங்கள் நடந்து ஆண்குறியிலிருந்து இறுதி வெளியேற்றம் நிகழ்கிறது. இந்த இறுதி வெளியேற்றத்தை மட்டும் பிடித்துத் தொங்கி,:-)
உடலிருந்து விந்து இறுதியாக வெளியேற்றப்படுவதைக் குறிக்கும் மிகச்சரியான ஆங்கிலச்சொல் EJACULATION (விந்து வெளியேற்றல்). அப்படி இருக்கும்போது குர்ஆன் சொல்லாத EJACULATION ஐ EMIT என்று சொல்லப்பட்ட இடத்தில் தவறாகப் பொருள் கொண்டுள்ளார்.
086.007 Proceeding from between the backbone and the ribs:
இவ்விரு வசனங்களையும் வெளியேற்றப்பட்ட (EMITTED) துளியிலிருந்து (86:006) முதுகுத்தண்டுக்கும் விலா எலும்புக்கும் இடையிலிருந்து (PROCEEDING FROM) (086:007) என்று தொடர் வெளியேற்றத்தைச் சொல்கிறது.
நவீன அறிவியலும் இதையே சொல்கிறது. விரையிலிருந்து உடல் ஸ்பரிசங்களால் அனுப்பப்படும் (EMIT) விந்து, எபிடிடைமிஸ் (epididymis) என்ற பல்வேறு விரை நரம்புகளைக் கடந்து வாஸா டிபெரெண்டியா (vasa deferentia) என்ற ஒருமித்த குழாய் மூலம் Seminal Vasicle தாதுச் சுரப்பிகளுடன் கலந்து வெளியாகி, பின்னர் Prostate Gland இல் சுரந்த சுரப்பிகளையும் சேர்த்துக் கொண்டு, இறுதியாக ஆண்குறி முனையிலிருந்து வெளியாகிறது. இந்த இறுதி வெளியேற்றத்தைக் குறிக்கும் துல்லியமான ஆங்கிலச் சொல் (EJACUATION).
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
குர்ஆனின் நோக்கம் அறிவியல் பாடம் நடத்துவதல்ல.மனித வாழ்க்கைக்குத் தேவையான வாழ்வியல் நெறிகளைச் சொல்லும்போது மேலதிகமாக மனிதப்படைப்பின் ரகசியங்களையும் சொல்லி தானொரு இறைவேதம் என்பதைக் குர்ஆன் மெய்ப்பிக்கிறது. அவற்றைத் தனிநபராக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எடுத்துச் சொன்னபோது மறுத்தவர்களிடமும் இகழ்ந்தவர்களிடமும் இதைவிடச் சரியான ஒன்றைக் கொண்டு வருமாறு சவால் விட்டது. குர்ஆன் அருளப்பட்ட 23 ஆண்டுகளில் இந்தச் சவால்களை எவரும் எதிர்கொள்ளவில்லை.
குர்ஆனுக்கு முன்பே கிரேக்கர்களும் ரோமானியர்களும் அறியியலிலும் தலைசிறந்து விளங்கினார்கள்.அவர்களின் பல்வேறு அறிவியல் முடிவுகள் இன்றும் ஆய்வுக்குட்படுத்தப் பட்டு தவறென நிரூபிக்கப்பட்டுள்ளன. அத்தகைய ஆய்வுகளும் பன்னெடுங்காலங்களாக பல்வேறு அறிஞர்களால் ஆய்வு செய்யப்பட்டு மறுக்கப்பட்டுள்ளன. குர்ஆன் கூறியதற்கு எதிராக இதுவரை எந்த அறிஞனும் நிரூபிக்கப்பட்ட அறிவியல் முடிவுகளை முன்வைக்க வில்லை.
எத்தனை உதவியாளர்களை துணைக்கழைத்துக் கொண்டாலும், இதுபோன்று உங்களால் ஒன்றைக் கொண்டுவர முடியாது என்று 1400 ஆண்டுகளுக்கு முன்வைக்கப்பட்ட சவால் இன்றுவரை எதிர்கொள்வாரின்றி நிலுவையில் உள்ளது. இனியும் எதிர்கொள்ளப் படப்போவதில்லை, இன்ஷா அல்லாஹ்!
Read more...