Tuesday, May 31, 2005

பெண்ணுரிமை - ஓர் இஸ்லாமியப் பார்வை-2

சென்ற பதிவில் ஆதிகாலம் தொட்டு இதுவரை பெண்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து பார்த்தோம். இந்தபதிவில் பெண்ணுரிமை பற்றி பார்க்கும் முன் பெண்ணுரிமை இயக்கங்களின் எழுச்சியும், அவர்கள், ஆணாதிக்கவாதிகளின் சூழ்ச்சியில் எவ்வாறு திசை திருப்பப்பட்டுள்ளனர் என்பதையும் பார்ப்போம்.
ஊடகங்களில் நம் கவனத்தைச் செலுத்தினோம் என்றால், உலகப் பெண்கள் தினம், பெண்கள் அடையாள ஊhவலம், பெண்கள் உரிமை கேட்டுப் போராட்டம், பெண்கள் கோரிக்கை தினம் என பல்வேறு தலைப்புகளில் உலகப் பெண்களின் உரிமைகள், போராட்டங்கள் பற்றிய செய்திகளை நாம் பார்க்கலாம்.

என்ன இது அநியாயம்? பெண்கள் அனைவரும் முழுச் சுதந்திரம் பெற்று விட்டார்கள். பெண்கள் இன்று சுவாசிக்கின்றார்கள் என்றால் அந்த சுவாசக் காற்றில் சுதந்திரத்தைக் கலந்து விட்டதே நாங்கள் தான் என மார்தட்டிக் கொள்ளும் இன்றைய மேலைநாடுகளிலும் சரி, நமது இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளிலும் சரி பெண்கள் தினத்தன்று பெண்கள் மீண்டும் கோரிக்கைப் பேரணி நடத்துகிறார்கள் என்றால் அவர்கள் இன்னும் முழுச் சுதந்திரம் பெறவில்லை என அல்லவா கருத வேண்டியுள்ளது.
"ஒரு இளம்பெண் தனியாக இரவில் வெளியில் சென்று பாதுகாப்பாக திரும்பி வர முடிகிறதோ அன்றுதான் இந்தியா பூரண சுதந்திரம் அடைந்ததாக அர்த்தம்" என்று அண்ணல் காந்தி சொன்ன சுதந்திரம் கிடைத்து விட்டதா நமக்கு?
எனவே இது பற்றியதொரு மீள் பார்வையும், குற்றம் சாட்டியே பழக்கப்பட்டுப் போன இஸ்லாமிய எதிர்வாதம் புரியும் மக்களுக்கு விளங்கும் வகையிலும், இன்று போராடும் இந்த பெண்கள் போராட்டத்தின் கால அளவு என்ன என்பதையும், அதே நேரத்தில் போராட்டம் இன்றியே 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் முஸ்லிம் பெண்கள் சுதந்திரம், சமூக, பொருளாதார நிலைகளில் எவ்வாறு அடைந்தனர் என்பதை ஞாபகமூட்ட வேண்டிய அவசியமும் உண்டாகிறது.

பெண்களின் விடுதலை இயக்கங்கள் வளர்ந்த வரலாறு

பிரிட்டன்:
கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு தான் பிரிட்டடினில் பெண் விடுதலை மற்றும் உரிமை கோரிப் போராட பெண் விடுதலை இயக்கங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அவ்வாறு தோற்றுவிக்கப்பட்ட பெண் விடுதலை இயக்கங்கள் யாவும் பெண் என்பவள், பாலியல் நிலையில் அவளை ஒரு கீழ்த்தரமான இனமாக எண்ணி, சமூக, பொருளாதார, அரசியல் நிலைகளில் அவர்களை ஒதுக்குவதை எதிர்த்தும், இத்தகைய நிலைகளில் அவர்களுக்கு இழைக்கப்படும் சமூகப் பாகுபாடு, துரோகங்கள் ஆகியவற்றை எதிர்த்தும், ஆணும் பெண்ணும் சமம், ஆணைப் போலவே பெண்ணுக்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலைகளில் சம அந்தஸ்து வேண்டியும், இவற்றுக்கான சட்டப் பாதுகாப்பு வேண்டியும், இவற்றை பெண்ணினத்திற்குப் பெற்றுத் தரவும் தான் பெண்ணுரிமை இயக்கங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

இந்த நோக்கத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல முதன் முதலில் 1792 ஆம் ஆண்டு மேரி வுல்ஸ்டோன்க்ராப்ட் (Mary Woolstone Crabt) எனும் பெண்மணி, பெண் உரிமைப் போராட்டம் ((Vindication of the Rights of Women) எனும் வெளியீட்டை வெளியிட்டார்.

அதன் பின் 1903 ஆம் ஆண்டு தீவிர பெண் அரசியல் இயக்கம் ஒன்று, பெண்ணுக்கு ஓட்டுரிமை வேண்டும் எனக் கோரி, எம்மிளின் பாங்கியுர்ஸ்ட் (Emmeline Pankhurst) என்ற பெண்ணின் தலைமையின் கீழ், பெண்களின் சமூகம் மற்றும் அரசியல் சங்கம் (Women’s Social and Political Union - WSPU) என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

எம்மிலின் தலைமையில் WSPU சங்கப் பெண்கள் வயது வித்தியாசமின்றிக் கலந்து கொண்டார்கள். இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்கள் ஒன்று கூடும் சங்கக் கட்டிடம் பூட்டப்பட்டது. பாராளுமன்ற முற்றுகையின் போது, பாராளுமன்றப் படிகளில் இருந்து உருட்டியும் விடப்பட்டார்கள்.

1914 ஆம் ஆண்டு முதலாவது உலக மகா யுத்தம் தொடங்கியதால், போரின் போது நாட்டுக்கு உதவ வேண்டும் எனும் முடிவின் கீழ் போராட்டம் கைவிடப்பட்டு, யுத்தம் சம்பந்தமான தொழிற்சாலைப் பணிகளில் தம் ஒத்துழைப்பைத் தந்தார்கள். இதன் காரணமாக அரசாங்கத்தின் மூலம் தமக்கு ஏற்பட்ட எதிர்ப்பை மட்டுப்படுத்தி, தமக்கு சாதகமான சூழலை உருவாக்கினார்கள். இவர்கள் தொடர் போராட்ட முறைகளினால் 1918 ல் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு முதன் முதலாக ஓட்டுரிமை வழங்கப்பட்டது. 1928 ல் ஓட்டுப் போடும் வயது 21 ஆகக் குறைக்கப்பட்டது.

பிரிட்டன் நாடு ஒரு பெண்ணால் எலிசபெத் குடும்பத்தால் ஆளப்பட்டு வரும் ஒரு நாடு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஒரு பெண் ஆளும் நாட்டிலே ஒரு பெண் ஓட்டுரிமை பெற்றுக் கொள்ள 2 நூற்றாண்டுகள் பிடித்துள்ளன. என்ன வேதனையான விசயம்!!!? இவர்கள் தான் பெண்ணுரிமை பற்றிப் பேசும் பெண்களின் காவலர்கள்?!

அமெரிக்கா :
அமெரிக்காவைப் பொறுத்தவரை, பெண்களுக்கான இயக்கம் என்பது முதன் முதலில் 1848 ல் எலிசபெத் கேடி ஸ்டேன்டன் என்ற பெண்மணியால் துவங்கப்பட்டது. இங்கு 1848 ல் கூடிய மாநாட்டில் நீக்ரோ அடிமைகள் விடுதலைப் பிரகடனத்துடன் (அமெரிக்காவில் இன்றும் இவர்கள் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றார்கள். நிறவேற்றுமை, நிறவெறி கொண்ட வெள்ளை சமூகம் இவர்கள் இன்னும் அடக்கியாண்டு வருகின்றது மட்டுமல்லாமல் படுபாதகமாகவும் கொலை செய்யப்படுகின்றார்கள்). பெண் விடுதலை மற்றும் பெண்ணுரிமை சம்பந்தமான பிரகடனமும் வெளியிடப்பட்டது.

அதன் பின் 1850 ல் லூசி ஸ்டோன் எனும் பெண்மணியின் தலைமையின் கீழ் தேசிய பெண்கள் உரிமை மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. அதன் பின் மேற்கண்ட இரண்டு பெண்மணிகளின் அமைப்பும் ஒன்றிணைந்து சூசன் பி. அந்தோணி எனும் பெண்மணியின் தலைமையின் கீழ் பெண்களின் தேசபிமானிகள் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு, 1878 ல் பெண்களுக்கு ஓட்டுப் போடும் உரிமை வேண்டும் எனக் கோரி, அதைச் சட்டமாக்க கோரிக்கை அனுப்பினார்கள்.

அமெரிக்காவில் உள்ள மாநிலங்களில் வியோமிங் மாநிலம் தான் முதன் முதலாக 1890 ல் பெண்களை ஓட்டுப் போட அனுமதித்தது. அமெரிக்க தேசியப் பெண்களின் ஓட்டுரிமைக் கூட்டமைப்பு என்ற அமைப்பு 1900 ல் கேர்ரி ஜேப்மேன் காட் என்ற பெண்ணின் தலைமையில் இதன் செயல்பாடுகள் முடுக்கி விடப்பட்டன. இந்த அமைப்பு நடத்திய பல போராட்டங்கள், கூட்டங்கள், மாநாடுகள் பல படித்த பெண்களையும், உயர்வர்க்கப் பெண்களையும் கவர்ந்தது. அதே போல முழு நேர அரசியலில் ஈடுபடும் பெண்களையும், அமைப்புக்கான நிதிகளையும் அதிகரித்தது.
இதன் காரணமாக பெண்களால் நடத்தப்படும் ஊர்வலங்களம், மாநாடுகளும் ஒவ்வொரு நகரிலும் அதிகமான அளவில் நடக்க ஆரம்பித்தன. மேலும் சூசன் அவர்களால் கொண்டு வரப்பட்ட பெண்ணுரிமை கோரும் சட்ட முன் வரைவு, 19 வது சட்ட வரைவு எனும் பெயரில் 1920 ல் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு, அமெரிக்காவில் பெண்களும் ஓட்டுப் போடலாம் என்ற உரிமையை முதன் முதலாக அமெரிக்கப் பெண்கள் பெற்றார்கள்.
பெண்ணுரிமை சம்பந்தமாக முதன்முதலாக இயற்றப்பட்ட இந்தச் சட்டம் 1920 முதல் 1960 வரை பல பெண்ணுரிமை இயக்கங்கள் தோன்றக் காரணமாக அமைந்தன. இதில் முக்கியமானது 1920 ல் தோற்றுவிக்கப்பட்ட பெண் வாக்காளர்கள் சங்கம் (டுநயபரந ழக றுழஅநn ஏழவநசள) மற்றும் 1935 ல் தோன்றி தேசிய நீக்ரோ பெண்கள் பேரவை (National Council of Negro Women) ஆகும்.

மேற்கண்ட குழுக்கள் பெண்ணுரிமை சம்பந்தமான பல்வேறு விதமான கோரிக்கைகளை முன் வைத்தும், ஆண் பெண் சமத்துவம் மற்றும் விடுதலை வேண்டியும் தம் போராட்டத்தை ஆரம்பித்தன. மேலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை வேண்டும் என்னும் கோரிக்கையை 1923 ல் தேசியப் பெண்கள் சங்கள் முன் வைத்துப் போராட ஆரம்பித்தது. இக்கோரிக்கை 50 வருடங்களாக செயலற்றதாகவே ஆட்சியாளர்களால் கிடப்பில் போடப்பட்டது.
மேற்கண்ட இத்தகைய பெண்களின் போராட்டம் உலக அளவிலும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. 1945 ல் நடந்த ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் பெண்ணுரிமை மற்றும் ஆண் பெண் சமத்துவம் பற்றி, அதன் முன்னுரையில் சுட்டிக் காட்டப்பட்டது. பின் 1948 ல் பெண்களின் நிலையை அறிய ஒரு கமிஷன் உருவாக்கப்பட்டது. 1952 ல் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் குழுவில் பெண்களின் அரசியல் உரிமைகள் பற்றி ஒரு கருத்தரங்கமும் நடத்தப்பட்டது.

1960 ல் அமெரிக்காவில் பெண்ணியம் பற்றிப் பேசும் தீவிர அமைப்புகளும், சூழ்நிலைகளும் தோன்றக் கீழ்க்கண்ட பெண்ணியம் பற்றி ஆய்வறிக்கைகள் காரணமாக இருந்தன.
  • The Second Sex (1953) By Simone De Beauvoir
  • The Feminine Mystique (1963) By Betty Friedan
  • Sexual Politics (1969) By Kate Millett
  • The Female Eunuch (1970) By Gamaine Greer
மேலும் சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் இனப்பாகுபாடுகளுக்கு எதிரான சட்டம் இயற்றுகின்ற சாதகமான சூழல் உருவானதும் மேற்கண்ட பெண்ணுரிமை இயக்கங்கள் வரை உற்சாகம் தந்துதவின. இதன் மூலம் தீவிர பெண்ணுரிமை இயக்கங்கள் வளர்ந்து, இவைகள் பெண்கள் அரசியல் உரிமை பெறுவதைக் காட்டிலும் சமூக அந்தஸ்து பெற வேண்டி தெளிவான இலக்கியம் மற்றும் தேவையான விளக்கங்கள் மூலமும் நடைமுறையில் உள்ள பெண்களுக்கு எதிரான நம்பிக்கைகள், நோக்கங்கள் ஆகியவற்றுக்கெதிரான பிரச்சாரம் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தின.

இத்தகைய பெண் இயக்கங்களில் முக்கியமானவைகள் சில:

National Organization for Women (NOW) பெண்கள் தேசிய அமைப்பு - பெட்டி ஃபிரைடன்
National Women’s Political Caucus – 1971. தேசிய பெண்களுக்கான அரசியல் அமைப்பு

என்ற மேற்கண்ட அமைப்பு 1971ல் தேசிய அளவில் மிகப் பிரபலமான பெண் இயக்கவாதிகளான பெல்லா அப்ஸக் (Bella Abzug), செர்லி சிசோம் (Shirley Chisholm) மற்றும் குளோரியா ஸ்டெய்னம் (Gloria Stninem) என்பவர்கள் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

அதன்பின் 1973 ல் The Equal Rights Amendment Ratification Coun உடை சம உரிமை சட்ட வரைவு அமல்படுத்தும் குழுமம் என்ற அமைப்பும், அதே ஆண்டு 1973 ல் Coalition of Labour Union Women பெண் தொழிலாளர்கள் கூட்டமைப்புச் சங்கம் போன்ற அமைப்புகளாகும்.

National Organization for Women (NOW) என்ற அமைப்பால் பரவலாக நடத்தப்பட்ட போராட்ட முறைகளால், பெண்களுக்கான சமஉரிமை சட்ட வரைவு, எனும் சட்ட முன் வரைவை அமெரிக்க அமைப்புச் சட்டத்தில் கொண்டு வந்து அமுல்படுத்தும் வகையில் இப்பிரச்னை பூதகரமாகக் கிளம்பியது. பின் பெண்களுக்கான சம உரிமை சட்ட வரைவு 1971 ல் அமெரிக்க மாநிலங்களவை உறுப்பினர்களாலும், பின் 1972 ல் அமெரிக்க மேல்சபை உறுப்பினர்களாலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இருப்பினும் 1982 ஜுன் 30 ல் இந்தச் சட்டமானது 3 மாநிலங்களில் 38 ஓட்டுக் பற்றாக்குறை காரணமாக அமுல்படுத்த முடியாமல் தோல்வியைத் தழுவிக் கொண்டது. மீண்டும், இச்சட்டத்தை அமுல்படுத்த எடுத்த முயற்சிகள் தோல்வியையே கண்டன.

மேலே நீங்கள் கண்டவைகள் யாவும் நாங்கள் பெண்ணினத்தின் காவலர்கள் என மார்தட்டிக் கொள்ளும் ஒரு சமூகத்தில் தம் உரிமைகளைப் பெற பெண்கள் போரடிய, போராடிக் கொண்டிருக்கின்ற அவலத்தைக் காட்டுகிறது.

மேலும் 1980 லும் பின் 1990 லும் அதற்குப் பின்பும் இந்தப் பெண்ணுரிமை இயக்கங்கள் பெண்களின் பொருளாதாரம், அரசியல், சமூகத் தளங்களில் பெண்கள் முன்னேற்றம் காண வேண்டி தமது கவனத்தை ஒருமுகப்படுத்தின.
இந்நிலையில் அவர்களது முக்கிய நோக்கம் ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிவிகித சம்பள அளவீடு வேண்டும் என்பதாக இருந்தது. இதில் அவர்கள் ஓரளவு வெற்றி கண்டாலும், இன்னும் அவர்கள் ஆணின் சம்பள விகிதத்தைக் காட்டிலும் பின்னடைந்தவர்களாகவே உள்ளனர். போராட்டம் தொடர்ந்து சில உரிமைகளைப் பெற்றாலும் சில நேரங்களில் ஆணுக்கு நிகராக பெண் உயர்வது மட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டே வருவதையும் பெண்கள் கவனிக்கத் தவறவில்லை.

ஒரு புறம் இவர்கள் ஆணுக்கு நிகராக உயர நினைத்தாலும் இயற்கையாகவே பெண்களின் உடலில் உள்ள தகவமைப்புகள் அதிக வேலைப்பளு, வீட்டுப் பொறுப்புகள், ஆண்வர்க்கத்தின் உதாசீனம் ஆகியவை அவர்களுக்கு வெறுப்புணர்வையே வளர்த்தன.

இவர்கள் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக எந்த சம உரிமை வேண்டும் என்பதற்காகவும், பெண்ணுக்கும் உயிர் உண்டு அவளும் ஒரு மனிதப் பிறவியே, ஆணுக்கும் உள்ளது போன்ற அரசியல், எழுத்துரிமை, பேச்சுரிமை, சொத்துரிமை போன்ற சமூக உரிமைகளும் வேண்டும் என தம் போராட்டத்தை தொடங்கினார்களோ அவற்றில் அவர்கள் ஓரளவு வெற்றி பெற்றாலும், இன்று அந்தப் போராட்டங்கள் வலுவிழக்கச் செய்யப்பட்டு திசை திருப்பப்பட்டுள்ளன.
பெண்கள் அரை குறை ஆடை அணிவதும், அரங்குகளில் கவர்ச்சிகரமாக வலம் வருவதும் தான் சுதந்திரம் என்ற போதை பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடிய இவர்கள், இதுதான் உண்மையான சுதந்திரம் என அறிவிலிகள் போல் நடந்து வருகின்றனர். இவர்கள் தம்மையும் அறியாமல் ஆண்களின் வக்கிர கவர்ச்சி எண்ணங்களுக்கு இரையாக்கப்பட்டுக் கொண்டிருப்பதை அறியாமல், உண்மையான சுதந்திரத்தை மறந்த பேதைகளாக கவர்ச்சிப் பொம்மைகளாக வலம் வருகின்றார்கள்.
குறிப்பாக இதில் முஸ்லிம் பெண்கள் தம் அழகை வெளிக்காட்டாத முழு ஆடை (பர்தா) அணிவதையும், சமூக தளங்களில் ஆணின் காமப் பார்வையிலும், வஞ்சக வலையிலும் விழாமல் ஒதுங்கி தனித்துவமாக வாழ்வதையும் தான் முஸ்லிம் பெண்கள் அடிமைப்படுத்தப்படுகின்றார்கள் என இப்போலிப் பெண்ணியவாதிகள் கூச்சலிடுவதிலிருந்து, மற்ற பெண்கள் தாம் எடுத்துக் கொண்ட போராட்டத்திலிருந்து தவறி, ஆண்களின் சதிவலையில் வீழ்ந்து தம் நோக்கங்களிலிருந்து திசை திருப்பப்பட்டுள்ளார்கள் என்பதை உணரலாம்.

இதை கடந்த 30 ஆண்டுகளாக பெண்கள் சுதந்திரம் மற்றும் உரிமைக்காகக் குரல் கொடுத்து வரும் க்ரீர் அவர்களின் சமீபத்திய பேட்டி நிரூபிக்கின்றது. 1970 ல் இருந்து பெண் விடுதலைக்காகப் போராடி வரும் ஜெர்மைன் க்ரீர் (60) என்ற பெண்மணி, சமீபத்தில் லண்டனில் (மார்ச், 7, 1999) ல் நடந்த உலகப் பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் பொழுது, இன்றும் பெண்கள் அடக்குமறையில் இருந்தும், ஆணாதிக்கத்தில் இருந்தும் விடுபடவில்லை என்று கூறினார்.

இன்று குடும்ப வாழ்க்கையிலே பெண்கள், கொடூரமான முறையில் கணவனால் நடத்தப்படுகிறார்கள். வீட்டிலே அவர்களை எதையுமே எதிர்த்துச் செயல்படாத புழப் பூச்சிகளைப் போல நடத்தப்படுகிறார்கள். வெளியிலோ அவர்கள் ஆண்களின் குரூரமான இச்சைக்கும் பொழுது போக்கிற்காகவும், கவர்ச்சி காட்டும் அடிமைகளாகவும், கடைச் சரக்கிலோ கவர்ச்சி காட்டும் போதைப் பொருட்களாகவும் பயன்படுத்தப்படுகின்றார்கள்.

இவர் அரசியலையும் விட்டு வைக்கவில்லை. கடந்த தேர்தலின் போது பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் சில பெண்களை பாராளுமன்றத்துக்குக் கொண்டு வந்து, இடம் நிரப்பும் பணி என்பதை விட, அவரது கொள்கைகளைக் கண் மூடி ஆதரிக்கும், எதிர்த்துப் பேசாத ஒரு ஆட்டு மந்தைகளை உருவாக்கி வைத்துள்ளார் என்று விமர்ச்சித்துள்ளார்.

இவர் சமீபத்தில் எழுதிய புதிய வெளியீடான “The Whole Women” எனும் புத்தகத்தில் முதலில் நாங்கள் துவங்கிய ஆணுக்குப் பெண் சமம் எனும் கொள்கைப் போராட்டம் தோல்வியைத் தழுவியது மட்டுமல்லாமல், பலபடுபாதக விளைவுகளையும் ஏற்படுத்தி உள்ளது எனக் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் பிறந்த இவர் பிரிட்டிஷ் பல்கலைக்கழகம் ஒன்றில் பணியாற்றி இருக்கிறார். இவர் கூறிய கருத்துக்கள் ஏதோ அரபு நாட்டில் உட்கார்ந்து கொண்டு பேசவில்லை. மாறாக, பெண் விடுதலைக்காகவும், மதங்களின் அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் தஸ்லீமா நஸ்ரீன்களுக்காகக் குரல் கொடுப்பதற்காகவே இருக்கிறோம் என மார்தட்டிக் கொள்ளும் உலகின் வளர்ந்த சமூகம் எனக் கூறிக் கொள்ளும் பிரிட்டனில் இருந்த பேசி உள்ளார் என்பது, அவர்களின் பொய் முகமூடியைக் கிழிப்பது போல் உள்ளது எனலாம்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்

பின் குறிப்பு: மேலே காணப்படும் பெண்ணுரிமை இயக்கங்கள் பற்றிய தகவல்கள் இத்தளத்திலிருந்து பெறப்பட்டவை.

Monday, May 30, 2005

பெண்ணுரிமை- ஓர் இஸ்லாமியப் பார்வை-1

இன்றைய ஊடகங்களில் பெண்ணுரிமை பற்றிய விவாதங்கள் எழும் போதெல்லாம் இஸ்லாமும் விவாதிக்கப்படுகிறது. பெண்ணுரிமைக்கு பேசுகிறோம் என சந்தடி சாக்கில் பெண்களுக்கு 'பர்தா' என்ற போர்வையிட்டு அவர்களின் உரிமையில் தலையிடுவதாக இஸ்லாத்தை பற்றியும் விமரிசிக்கப் படுகிறது.
கடவுள் நம்பிக்கையே தவறென 'நம்புபவர்கள்' கூட இஸ்லாம் பெண்களை பாரபட்சம் காட்டுகிறது என தீவிரமாக நம்புகிறார்கள். அகில உலகத்தார்க்கும் அருட்கொடையாக அன்றி , இம்மார்க்கத்தை நாம் அனுப்பவில்லை என்று சொன்ன இறைவன், பெண்களை கைவிட்டு விட்டானா?
அல்லாஹ் எப்பொதெல்லாம் ஆண்களை பற்றி குறிப்பிடுகிறானோ அபோதெல்லாம் பெண்களையும் சேர்த்துதான் சொல்கிறான். எனில், அல்லாஹ்வால் படைக்கப்பட்ட (முஸ்லிம்)பெண்கள் அடக்கு முறைக்கு ஆளாவது ஏன்? சமத்துவம் பேசும் இஸ்லாத்தில் பெண்களுக்கு சமத்துவம் இல்லையா? ஏனைய மதங்களில் அல்லது கொள்கைகளில் பெண்களின் நிலை என்ன என ஒரு ஒப்பீட்டு ஆய்வு செய்வது அவசியமாகிறது.
கிரேக்கர்கள் பெண்களை வியாபாரப் பொருளாகவே கருதினர். அவர்களுக்கென எந்த உரிமையும் கிடையாது. ஆண்களுக்கே ஏகபோக உரிமயுள்ளது என்றனர்.
ரோமானியர்கள் பெண்களை உயிருள்ள படைப்பாகவே கருதவில்லை. அவர்களிடம் பெண்களுக்கு எந்த மதிப்பும் மரியாதையும் உரிமையும் இருந்ததில்லை.
கன்ஃபூசிய சீனர்கள் கணவன் இறந்த பெண்களை மகனுக்கும், தந்தைக்கும் கீழ்படியச் சொன்னார்கள். இதர சீனர்காள் பெண்களை நற்பாக்கியத்தையும், செல்வத்ததயும் அழித்துவிடும் தண்ணீருக்கு ஒப்பாக கருதினர். அவர்களை உயிருடன் எரிக்கவும், புதைக்கவும் உரிமை உள்ளது என்றார்கள்.
கிறிஸ்தவர்களின் மேதாவிகள் சபை, பெண்கள் ஒரு மனிதப் படைப்பே அல்ல என்று முடிவுக்கு வந்தது. முதல் பாவம் செய்யத் தூண்டிய பெண் (ஏவாள்) சாத்தானின் வாசல் என யூதர்கள் கருதுகிறார்கள்.
இந்தியர்கள் (இந்துக்கள்) இன்னும் ஒரு படி மேலே போய் கணவன் இறந்தவுடன் அவளை சிதையிலிட்டு உயிருடன் (சதி) எரித்து வந்தனர்.
பெளத்தர்கள், அனைத்து ஆசையை தூண்டும் பாவங்களுக்கும் காரணமான சாத்தானின் மறு உருவம் என்று நம்பினர்.
யூதர்கள், பெண்களை சாபத்திற்குறியவர்கள், ஏனெனில் ஏவாளின் தூண்டுதலால்தான் ஆதாம் தவறு செய்து கடவுளின் சாபத்திற்கு ஆளானார் என்று கருதுகின்றனர். மாதவிடாயும், பிரசவ வேதனையும் அதற்கான் இறைத் தண்டனைகள் என நம்பினர்.
மேலும் கி.பி. 586 ஆம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள், பெண்கள் மனித இனத்தை சார்ந்தவர்களா இல்லையா என ஆராய ஒரு கமிட்டியை அமைத்தனர்.
கி.பி.1567 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து நாடாளுமன்றம் பெண்களுக்கு எந்த உரிமையும் கொடுக்ககூடாது என சட்டம் இயற்றியது.
கி.பி.1805 ஆம் ஆண்டுவரை ஒரு கணவன் தன் மணைவியை விற்பது கூடும் (விலை ஆறு பென்னிகள்) என ஆங்கிலேய சட்டங்களில் இருந்தது.
கடந்த 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை ஆங்கிலேய பொதுச்சட்டபடி பெண்கள் பிரஜா உரிமை இன்றி இருந்தனர்.
இஸ்லாத்திற்கு முன்புவரை அராபிய பெண்கள் ஆண்களிடம் இழி பிறவிகளாகவே இருந்தனர். அவர்களுக்கு எந்த உரிமையும் கொடுக்கப் படவில்லை. பெண் குழந்தைகள் உயிருடன் புதைக்கப்பட்டனர். பெண்களை அடிமையாக வரை முறையின்றி இன்பம் பெறும் பண்டமாகவே கருதப்பட்டு வந்தனர்.
இவ்வாறு மதங்களாலும், இசங்களாலும், கொள்கைகளாலும் நாகரிகங்களாலும் புறக்கணிப்பட்ட பெண்களுக்கு, இவ்வுலகில் என்னதான் உரிமையுண்டு? தாயாய், தாரமாய், தோழியாய், உடன் பிறப்பாய், மகளாய் கலந்து விட்ட பெண்களுக்கு உரிமை மறுக்கப்படுவதில் என்ன நியாயம்?
அதெல்லாம் அந்த காலம். இன்றைய தகவல் உலகில் ஆணும் பெண்ணும் உரிமைகளை அடைந்து கொண்டிருக்கிறார்கள். இனி கேட்டுப்பெற எந்த உரிமையும் இல்லை எல்லா உரிமைகளையும் அடைந்து விட்டதாக மார் தட்டிக் கொள்ளும் மேலை நாடுகளின் பார்வையில் உண்மையில் 'பெண்ணுரிமை' என்றால் என்ன?

Friday, May 27, 2005

இரண்டு பெண்கள் ஒரு ஆணுக்கு சமமா?

குர்ஆன் வசனத்தில் ‘’இருஆண்களை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள். இரு ஆண்கள் இல்லையெனில், ஒரு ஆணையும் இரு பெண்களையும் சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்’’ என்ற வரிகளை வைத்து இஸ்லாம், இரண்டு பெண்களை ஒரு ஆணுக்கு சமமாக கருதுகிறது என்ற குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது.

இறை நம்பிக்கியாளர்களே! ஒரு குறிப்பிட்ட தவணையை நிர்ணயித்து நீங்கள் உங்களுக்குள் கடன் கொடுக்கல், வாங்கல் மேற்கொண்டால் அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள் (அதாவது) உங்களுக்கிடையில் ஒரு எழுத்தர் நீதியோடு எழுத வேண்டும்; எழுதவும் படிக்கவும் உள்ள ஆற்றலை அல்லாஹ் யாருக்கு வழங்கியுள்ளானோ அவர் அதனை எழுத மறுக்கக் கூடாது.

அவர் எழுத வேண்டும்; எவர்மீது கடனைச் செலுத்தும் பொறுப்பு இருக்கிறதோ அவர், (எழுதுவதற்கு) வாசகம் சொல்லிக் கொடுக்க வேண்டும். (அப்போது) அவருடைய அதிபதியாகிய அல்லாஹ்வுக்கு அவர் அஞ்சிக் கொள்ள வேண்டும்.

மேலும் கடன் சம்பந்தமாக தீர்மானிக்கப்பட்டதிலிருந்து எதையும் அவர் கூட்டவோ குறைக்கவோ வேண்டாம். ஆனால் எவர் மீது (கடனைச் செலுத்தும்) பொறுப்பு இருக்கிறதோ அவர் (போதிய) அறிவு இல்லாதவராகவோ, இயலாதவராகவோ தானே வாசகம் சொல்ல ஆற்றல் இல்லாதவராகவோ இருப்பின், அப்போது அவரின் பொறுப்பாளர் நீதியான முறையில் வாசகம் சொல்ல வேண்டும்.

மற்றும் உங்களில் இரு ஆண்களை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள். இரு ஆண்கள் இல்லையென்றால், ஓர் ஆணையும் இரு பெண்களையும் சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள். (ஏனெனில்) அவ்விருவரில் ஒருத்தி (பிறழ்ந்து) மறந்து விட்டால், மற்றொருத்தி அவளுக்கு நினைவூட்டுவாள் என்பதற்காக! இந்த சாட்சிகள் உங்களால் ஏற்றுக்கொள்ளத்தக்கவர்களாய் இருக்க வேண்டும்.

சாட்சி சொல்ல வேண்டியவர்கள் (சாட்சியத்துக்காக) அழைக்கப் படும்போது மறுக்கக் கூடாது. (தவிர கடன் ஒப்பந்தம்) சிறிதாயினும் சரி, பெரிதாயினும் சரி தவணை குறிப்பிட்டு அதை எழுதி வைப்பதில் அலட்சியமாய் இருந்து விடாதீர்கள்! இதுவே அல்லாஹ்விடத்தில் உங்களுக்கு மிக நீதியான முறையாகும்; மேலும் சாட்சியத்தை மிக (இலகுவாக) உறுதிப்படுத்தக் கூட்டியதும் உங்கள் சந்தேகங்களைக் குறைக்கக் கூடியதுமாகும்.

ஆனால் அந்த ஒப்பந்தம் உங்களுக்கிடையே நீங்கள் நிறைவேற்றிக் கொள்கின்ற உடனடி ரொக்கக் கொள்முதலாக இருந்தால், அதை நீங்கள் எழுதி வைக்காமலிருப்பதில் உங்கள் மீது எந்த குற்றமும் இல்லை. ஆயினும் வியாபார ஒப்பந்தங்களைத் தீர்மானித்து விட்டீர்களாயின், அவற்றிற்கு சாட்சியை வைத்துக் கொள்ளுங்கள்.

எழுத்தரும், சாட்சிகளும் துன்புறுத்தப்படக் கூடாது. அவ்வாறு நீங்கள் துன்புறுத்தினால் அது நிச்சயமாக உங்களுக்குப் பெரும் பாவமாகும். அல்லாஹ்வின் சினத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள். மேலும் அவன் உங்களுக்கு (நேரான வழிமுறையைக்) கற்றுக் கொடுக்கிறான்; மேலும் அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் நன்கறிபவனாய் இருக்கிறான்.குர்ஆன் 2:282

என்ன கொடுமை! சாதாரண ‘சாட்சி’ விஷயத்தில் கூட பாரபட்சம் காட்டும் குர்ஆன் எப்படி சமத்துவ வேதமாகும்? உலகெங்கும் பெண்கள், ஆணுக்கு நிகராக எல்லாத் துறைகளிலும் போட்டி போட்டு முன்னேறிக் கொண்டிருக்கும் இக்காலத்தில் இரண்டு பெண்களை ஒரு ஆணுக்கு சமம் என குர்ஆன் சொல்லுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, இந்தோனேசியா பிரதமர்கள் மற்றும் கல்பனா சாவ்லா, வீனஸ் வில்லியம், ஸ்டெபி கிராப், P.T.உஷா, மல்லேசுவரி, சானியா மிர்ஷா etc என பெண் சாதனையாளர்கள்.

மேலும் பொதுத் தேர்வுகளிலும் ஆண்களை விட பெண்களே முன்னிலை பெறுகிறார்கள். இப்படி அனைத்து துறைகளிலும் பெண்கள் கொடிகட்டி பறக்கும் போது இரண்டு பெண்களுக்கு ஒரு ஆண் என்ற வீதம் அநீதியானது என்று கூக்குரலிடுவதில் நியாயம் இருக்கிறது.

நன்றாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், மேற்கண்ட குர்ஆன் வசனத்தில் எந்த இடத்திலும் ஆண் பெண்ணை விட சிறந்தவன் என்றோ அல்லது பெண் ஆணைவிட தாழ்ந்தவள் என்றோ சொல்லவில்லை. எனில் 2:1 என்பதன் அர்த்தம்தான் என்ன?

ஆணும் பெண்ணும் சமம் என்பது கேட்பதற்குத்தான் இனிமையான சித்தாந்தம். ஆணும் பெண்ணும் சமம் என்பதை பல இடங்களில் ஒப்புக்கொள்ளும் குர்ஆன், இருவரும் ஒன்றல்ல என திட்டவட்டமாக சொல்கிறது.

இயற்கை நியதிப்படி ஆண் பெண்ணை விட சில இடங்களில் சிறந்தும், பெண் சில அம்சங்களில் சிறந்தும் இருக்கிறாள். எங்கெல்லாம் இயற்கையிலேயே ஆண் சிறந்தவனாக இருக்கிறானோ அங்கு ஆணை சிறப்பித்தும், பெண் சிறந்தவளாக இருக்கும் இடங்களில் பெண்ணை சிறப்பித்தும். இருவருக்கும் பொதுவானவற்றில் இருவரும் சமம் என்றும் இஸ்லாம் அறிவுப்பூர்வமாக சொல்கிறது.

இஸ்லாம், வர்த்தகம் மற்றும் பண நடவடிக்கைகளில் ஆண்களுக்கே அதிக பொறுப்பை சுமத்துகிறது. சாட்சிகள் விஷயத்தில் இரண்டு பெண்களை வலியுறுத்துவது, கடன் கொடுத்தவரின் நம்பிக்கையை உறுதி செய்வதற்காகவே. கொடுக்கல் வாங்கல் போன்ற நீண்டகால வர்த்தக உடன்படிக்கைகளுக்கான சாட்சிகளுக்கு மட்டுமே இரண்டு 2:1 என்ற வீதத்தை வலியுறுத்துகிறது. ஏனைய சாட்சி சம்பந்தப்பட்ட சந்தர்ப்பங்களில் 1:1 என்றோ அல்லது ஆண்-பெண் இருவரில் ஒருவரோ என்ற வீதத்தில் வரையறுக்கிறது.

பெண் என்பவள் பெண்களுக்கு மட்டுமேயுறிய (மாதவிடாய், பேறுகாலம், பாலூட்டல் போன்ற) இயற்கைத் தடைகளால் சூழப்பட்டுள்ளாள். இயற்கை உபாதைக்கு ஆளாகும் நாட்களில் பெண்களின் மனநிலையில் (Premenstrual Syndrome) படபடப்பு, மன அழுத்தம், அச்சம் போன்ற தடுமாற்றங்கள் இருக்கும். மேலும் பரிதாபம், இரக்க சுபாவம் போன்ற குணங்கள் ஆணைவிட பெண்ணுக்கு அதிகம் என்பது அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டவை.

நமது அரசியலமிப்பிலும் பெண்களை பலகீனமானவர்களாக கருதுவதால்தான் தேர்தல் தொகுதிகளில் கூட பெண்களுக்கு என ஒதுக்கீட்டு முறை உள்ளது. மேலும் பேரூந்து, இரயில்,விமானப் பயணங்களில் பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்குவது ஆண்களைவிட பெண் பலகீனமானவள் என கருதப் படுவதால்தான். சாதாரண பிரயாணத்தில் பலகீனப்படும் பெண்கள், வழக்கு, பஞ்சாயத்து என அலைக்கழிக்கப்படும் உடன்படிக்கைகளில் எப்படி பலகீனமின்றி இருக்க முடியும்? பெண்களை பலகீனமானவர்கள் என்பது ஆணாதிக்கவாதமாகது. மாறாக மனிதாபிமானம் என்றே பார்க்கப்படும்.

மேலும், சாட்சி சொல்வதால் பாதிக்கப்படுவரின் அச்சுறுத்தலால் சாட்சியை மாற்றிச் சொல்லுதல் (உதாரணம் குஜராத் பெஸ்ட் பேக்கரி வழக்கின் சாட்சி ஜாகிரா ஷேக்கின் தடுமாற்றமான வாக்கு மூலங்கள்), அல்லது பாதிக்கப்படுபரின் மீதான பரிவு, அனுதாபம் ஆகியவை இயற்கையிலேயே இரக்கம் கொண்ட பெண்களுக்கு அதிகம். சாட்சி சொல்பவர் எத்தகைய உணர்வுகளுக்கும் கட்டுப்படாதவராக இருக்க வேண்டும். இத்தகைய தடுமாற்றங்கள் சாட்சி சொல்லும் விஷயத்தில் பணம் கொடுத்தவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது நிதர்சன உண்மை.

சரி, மாதவிடாய் நின்ற பெண்ணுக்காவது அத்தகைய சலுகை காட்டலாமே எனக்கேட்கலாம். அவர்களுக்கும் வேறு சில பலகீனங்கள் இருக்கின்றன என மருத்துவவியலாளர்கள் சொல்கிறார்கள். இருவகை பெண்களிலும் சில விதி விலக்குகள் இருக்கலாம்.

ஆக சாட்சி சொல்பவர் பலகீனமற்றவராக, தடுமாற்றங்களற்றவராக இருந்தால்தான் கடன் கொடுப்பவருக்கு கடன் பெறுபவர் மீது நம்பிக்கை வலுக்கும். எனில், பலகீனமான சுபாவம் உடைய இரண்டு பெண்கள் ஒரு சாதாரண ஆணுக்கு சமம் என்றே சாதாரனமாக கருதப்படும்.

'இந்த சாட்சிகள் உங்களால் ஏற்றுக் கொள்ளத் தக்கவர்களாய் இருக்க வேண்டும்'. என்ற குறிப்பை கவனித்தால், பணம் கொடுப்பவரின் திருப்தியை கருத்தில் கொண்டே 1:2 என்ற அள்வீடு சொல்லப்பட்டுள்ளது. இதில் கடன் கொடுப்பவர் ஆண் அல்லது பெண் என்ற பாகுபாடு சொல்லப்படவில்லை.

இருவரில் ஒருத்தி பிறழ்ந்து (மறந்து) விட்டால் எனும் போது ஆணுக்கு இத்தகைய குறை இல்லையா? என வாதிடலாம். மேற்கண்ட மருத்துவ காரணங்களால் ஆணைவிட பெண்ணுக்கு இத்தகைய தடுமாற்றங்களுக்கு வாய்ப்பு அதிகம் என இஸ்லாம் கருதுகிறது. இதில் விதிவிலக்கான பெண்களைப் பற்றி விவாதிக்க வேண்டியதில்லை. தற்கால வழக்குகளில், குற்றவாளிகளுக்கு எதிரான வாக்குமூலங்களில் பெண்களின் பலவீனம், இயலாமை ஆகியவையும் கருத்தில் கொள்ளப்படுகின்றன.

சாட்சி சொல்லும் பட்சத்தில் மேற்கண்ட காரணங்கள் கடன் கொடுத்தவரின் உரிமையை எந்த விதத்திலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் இஸ்லாம் உறுதியாக இருக்கிறது. மேலும் பணம் கொடுக்கல் வாங்கள் சம்பந்தப்பட்ட சாட்சிகளில்தான் இஸ்லாம் இரண்டு பெண்களை ஒரு ஆணுக்கு நிகராக வைத்துக் கொள்ளச் சொல்கிறது. இதர உரிமைகளிலும் கடமைகளிலும் ஆண்-பெண் என்ற பாகுபாடு பார்ப்பதில்லை.

ஒழுக்கமான பெண்கள் மீது பழி சொல்லும் ஆண், நான்கு சாட்சிகளை காட்டத்தவறினால் என்பது கசையடிகளை தண்டனையாக பழி சொன்னவருக்கு தீர்ப்பளிப்பதோடு அவரின் மேற்கொண்டு எந்த சாட்சிகளையும் ஏற்றுக்கொள்ளாதீர்கள் என பெண்ணின் உரிமையை காப்பதும் இஸ்லாம்.

கணவன், தன் மணைவி மீது (உதாரணம். இல்லற இன்பம் தரவில்லை போன்ற) அவதூறு சொல்லும் பட்சத்தில் அதற்கு மணைவியின் (அல்லது பெண்ணின்) ஒரே சாட்சி போதுமானதாகும். இதில் 1:1 என்ற அளவீடே. மேலும் பிறை பார்த்தல் போன்ற இஸ்லாத்தின் முக்கிய கடமையான நோன்பை நிர்ணயிக்கும் நம்பிக்கைகளில் ஆணோ அல்லது பெண்ணோ யாராவது ஒருவரின் சாட்சி போதும்.

மேலும், உண்மையிலேயே குர்ஆன் மேற்கண்ட வசனத்தில் இரண்டு பெண்களுக்கு ஒருஆண் என பாகுபாடு பார்த்திருப்பின் அல்லது இரண்டு பெண்கள் ஒரு ஆணுக்கு சமமாவர் என குறைத்து மதிப்பிட்டிருப்பின், உங்களில் இரண்டு ஆண்கள் இல்லாத பட்சத்தில் ஒரு ஆணும் இரண்டு பெண்களும் என சொல்லியதுடன் ஒரு ஆண் கூட இல்லாவிட்டால் நான்கு பெண்களை சாட்சியாக வைத்துக்கொள்ளுங்கள் என்று அல்லவா சொல்லியிருக்கவேண்டும்?

சாட்சிகள் விஷயத்தில் பெண்களையும் சாட்சிகளாக வைத்துக்கொள்ளுங்கள் என பொருளாதார, வர்த்தக நடவடிக்கைகளில் பெண்களை ஈடுபடுத்தும் இஸ்லாம் உண்மையில் பெண்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கிறது என்பது தெளிவு. ஆண்கள் மட்டும் சாட்சி சொல்ல தகுதியானவர்கள் என பாரபட்சம் காட்டவில்லை.

பெண்களின் இயல்பை கருத்தில் கொண்டே ஒரு ஆண் சாட்சி சொல்லும் இடத்தில் இரண்டு பெண்கள் சாட்சி சொல்வது கடன் பெறுபவரின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் என்று எதார்த்தமாக இஸ்லாம் சிந்திக்கிறது.

ஆணும் பெண்ணும் இறைவனிடத்தில் உயரிய படைப்பாகவே கருதப்படுகிறார்கள். எனினும் வெவ்வேறு தனித்தன்மையுடன் படைக்கப் பட்டிருக்கிறார்கள் என அறிவு பூர்வமாக சொல்கிறது. ஆணும் பெண்ணும் சரிநிகர் என்பது அனைத்து சூழலிலும் பொருந்தாது. இதுதான் எதார்த்த உண்மை. ஏனெனில் மனித இயல்புக்கு மாறானதை இஸ்லாம் ஒரு போதும் வலியுறுத்துவதில்லை.

Saturday, May 21, 2005

இணைய ஆதாரங்கள் போதுமா?

தமிழ் மனத்தில் எழுதும் எழுத்தாளர்களில் பலரும் தர்க்க ரீதியான கருத்துக்களுக்கு அவற்றோடு தொடர்புடைய இணைய இணைப்பை கொடுத்து தங்கள் கருத்துக்கு பலம் சேர்ப்பதாக நினைத்து எழுதி வருகிறார்கள்.
குறிப்பாக நேசகுமார், நந்தலாலா, ஆரோக்கியம் போன்றோர் இஸ்லாத்தை விமரிசிக்கும் போது அதற்கு இணைய தளத்திலிருந்தே ஆதாரம் வைக்கிறார்கள். இது சாதாரண வாசகனுக்கு வேண்டுமானால் எழுத்தாளரின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கலாம்.
இன்றைய தகவல் யுகத்தில், ஒரு விஷயத்தை எளிதில் தேடுவதற்கு Search Engine எனப்படும் தேடல் இயந்திரங்களின் சேவை பாராட்டும் படியான அளவுக்கு வளர்ந்துள்ளது என ஒப்புக்கொள்வதில் எவ்வித தயக்கமும் இல்லை.
சமீபத்தில் அரபி மூலத்துடன் ஆரோக்கியம் ஒரு கட்டுரையை எழுதி இருந்தார். சமார்த்தியமாக அதன் ஆங்கில மொழி பெயர்ப்பையும் இணைத்து அதற்கான தமிழ் விளங்கங்களையும் எழுதி மனிதர்களை கொல்ல சொல்லும் குர் ஆனும், அமைதி மார்க்கம் எனும் இஸ்லாமும் தேவையா என்பது போல ஈரானின் முன்னால் அரசியல் தலைவர் ஆயத்துல்லாஹ் கோமேனி 1981 இல் பேசியதை பிரசுரித்திருந்தார்.
முஹம்மது நபிக்கு எதிராக இந்தியாவில் பிறந்து இங்கிலாந்திலிருந்து எழுதிக் கொண்டிருந்த சாலமன் ருஷ்டிக்கு மரண தண்டனை **ஃபத்வா** கொடுத்ததால் பிரபலமாக அறியப் பட்டார். முஹம்மது நபியை இறைதூதராக ஏற்றாலும் முஹம்மது நபிதான் இறைவனின் கடசி தூதர் என்பதில் மாறுபடுவதால் அல்லது முஹம்மது நபியின் மருமகன் முஹம்மது அலீ அவர்களை இறைத்தூதராகக் கருதுவதாலும் கொமேனியின் இஸ்லாமிய தீர்ப்புகள் அனைத்து முஸ்லிம்களாலும் ஏற்றுக் கொள்ளப் பட்டதில்லை.
குர் ஆனில் ::கொல்லுங்கள்::, :: வெட்டுங்கள்:: என இருக்கும் கட்டளைகளில் ஒரு பகுதியை மட்டும் எடுத்து கொண்டு குர்ஆன் வன்முறையை போதிக்கிறது என கூக்குரலிடும் நுனிப்புல் மேயும் கும்பலுக்கு எப்படி புரிய வைப்பது?
குர் ஆனில் பல இடங்களில் அத்தகைய வார்த்தைகள் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. அவையெல்லாம் முஹம்மது நபி மற்றும் அவரின் சக தோழர்களுக்கு எதிராக அல்லது இஸ்லாத்தின் அறிமுகப்படுத்தப் பட்ட அக்கால எதிரிகளுக்கு சொல்லப்பட்ட வசனங்கள். போர் தொடுங்கள், எதிர்த்து நில்லுங்கள் என சொல்லப் படும் வசனங்கள் எல்லாம் அநீதி இழைக்கப்பட்ட போதுதான் என்பதை குர் ஆனின் வசனங்கள் அருளப்பட்ட காலகட்டங்களை அறிந்தவர்களுக்கு புரியும்.
இந்திய தண்டனைச்சட்டத்தில் கூட கடுமையான குற்றங்களுக்கு தூக்குத் தண்டனையும் சில சமயம் ஆயுள் தண்டனையும் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. குற்றங்களையோ அல்லது குற்றம் இழைத்தவனையோ பார்க்காமல் ::மனிதர்களை:: தூக்கிலிடச் சொல்லும் இந்திய சட்டம் தேவை இல்லை என சொன்னால் அறிவுடமையாகுமா?
குர் ஆனிலிருந்து ஆதாரங்களை எடுத்துவைத்து வாதம் செய்பவர்கள், அந்த வசனங்கள் சம்பந்தப்பட்ட முழு அத்தியாயத்தையும் குறிப்பிடாமல் இஸ்லாத்தை குற்றம் சொல்ல தோதான வரிகளை மட்டும் குறிப்பிட்டு எழுதுவது அவர்களின் சூழ்ச்சியல்லாமல் வேறென்ன? பெரும்பாலோர் இவ்வகையிலேயே இசஸ்லாத்திற்கு எதிராக எழுதி வருகின்றனர்.
ஒசாமா பின்லேடனோ கோமேனியோ சொல்லி விட்டால் அது இஸ்லாமிய கட்டளையாகி விடாது. இஸ்லாத்திற்கு எதிரானதை சொல்பவரும் செய்பவரும் அவர் முஸ்லிமாகவே இருந்தாலும் அதற்கு எப்படி இஸ்லாம் பொறுப்பாகும்?
ஆரோக்கியம் மேதாவித்தனமாக எழுதுவதாக நினைத்துக் கொண்டு கோமேனியின் உரையை மொழி பெயர்த்து தனது சொந்த அபிப்ராயத்தையும் பதிந்துள்ளார். இஸ்லாம் எந்த இடங்களில் ::மனிதர்களை:: கொல்லச் சொல்கிறது என குர் ஆனின் வரிகளுடன் சொல்ல முடியுமா?

Wednesday, May 18, 2005

எது விமரிசனம்?

தமிழ்மனத்தில் தொடர்ந்து எழுதிவரும் எழுத்தாளர்களில் சிலர், அவ்வப்போது தங்கள் கருத்துக்களை எழுதுகிறேன் என்ற போர்வையில் அடிக்கடி இஸ்லாத்தை மாசு கற்பிக்க அல்லது ஏனைய மதங்களைப் போல குறைபாடுகளுள்ள மார்க்கம் என வாதிட்டு வருகின்றனர்.
நேரடியாக அவர்கள் இஸ்லாத்தை குறை சொல்வதற்கு முன் தாங்கள் நடுநிலைவாதிகள் அல்லது முற்போக்கு சிந்தனையாளர்கள் என காட்டுவதற்காக இஸ்லாம் அல்லாத தலைப்புகளிலும் எழுதுகிறார்கள்.
குறிப்பாக நேசகுமாரின் குற்றச் சாட்டுகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அபூமுஹை, அபூஉமர் போன்றோர் விளக்கம் கொடுத்து விடுகின்றார்கள். எனினும், குதர்க்கமாக கேள்வி கேட்டுவரும் பாணி சகோதரர். நேச குமாருடையது. இஸ்லாத்தை விளக்குகிறேன் என்ற பெயரில் தனக்கு தோன்றியதை மிக லாவகமான தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் விமரிசிப்பதில் வல்லவர்.
தெளிவுக்காக கேள்வி கேட்பருக்கும் குழப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் கேள்வி கேட்பவருக்கும் வித்தியாசம் உண்டு. உதாரணமாக இஸ்லாத்தில் பர்தா முறை பற்றியும், விவாகரத்து முறை பற்றியும் சகோதரர் நந்தலாலாவும், நேசகுமாரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதி வருகிறார்கள்.
அதற்கான விளக்கங்களை பதிலுரையில் நான் உடபட சிலர் சொன்னபோதும், தங்கள் குற்றச்சாட்டை கைவிட மனமில்லாமல் பர்தா முறையை நியாயப் படுத்துபவர்களை மத வெறியன் எனவும், பழமைவாதி எனவும் பட்டம் கட்டி தங்கள் ஆதிக்க வெறியை நிலை நாட்டிக் கொள்கின்றனர்.
மற்ற மதங்களைப் போல் விமரிசனத்திற்க்கு அப்பாற்பட்டதா இஸ்லாம் மார்க்கம்? என்று பார்த்தால், இல்லை. என்பதே என் பதில். உலகில் பரவலாக கடை பிடிக்கப் படும் மதங்களில் கடைசியில் தோன்றியதே இஸ்லாம். ஏனைய மதங்களில், அது வேதம் அருளப்பட்ட யூதம், கிறிஸ்த்தமாக இருந்தாலும் சரி அல்லது வருணாசிரம இந்து மதமாக இருந்தாலும் சரி, அவற்றை எல்லாம் மெய்ப்பித்து அவற்றின் பெயரால் வழி தவறியவர்களுக்கு சரியான வழிகாட்டியாக அல்லது வாழ்க்கை முறையாகத்தான் இஸ்லாம் உலகில் அறிமுகமாகியது.
ஆயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள, பண்முக கடவுள்களை வணங்கி வரும் இந்திய தேசத்திலும் இஸ்லாம் பரவியது, அதன் எதார்த்தமான கொள்கைகளால் தானன்றி வேறு காரணம் இல்லை. பணத்திற்கு ஆசைப்பட்டும் வாள் முனைக்கு பயந்தும் இந்திய முஸ்லிம்கள் இஸ்லாத்தை தழுவினார்கள் என்பது வருணா சிரம வரலாற்றாசிரியர்களால் சுமத்தப் பட்ட பழி.
அப்படி எனில் இன்றும் உலகின் பணக்கார நாடுகளிலிருந்தும், வல்லரசு நாடுகளிலிருந்தும் பலர் இஸ்லாத்தை தழுவி வருவது ஏன்?. டாக்டர். ஜாகிர் நாயக் சொல்வது போல், கடந்த சில நூறு வருடங்களில் இஸ்லாம் பல மடங்கு வளர்ந்துள்ளது. இவ்விடைப்பட்ட காலங்களில் இஸ்லாத்தின் பெயரால் எந்த நாட்டின் மீதும் எந்த இஸ்லாமிய நாடும் இதர நாட்டுடன் போரிட்டதில்லை.
பர்தா முறையை எதிர்ப்பவர்களுக்கு அத்தகைய பர்தா முறை இல்லாவிட்டால் பெண்களின் உரிமை காக்கப்படுவதாக நம்புவது எப்படி என்று புரியவில்லை. பர்தா என்றால் மற்றவருக்கு கவர்ச்சியை அல்லது கிளர்ச்சியை தூண்டும் அங்கங்களை மறைப்பதுதான். சில முஸ்லிம்கள் அதை கடுமையாக கடைபிடித்து வருகின்றனர் எனில் அது அவர்களின் அறியாமையா அல்லது இஸ்லாத்தின் குறைபாடா?
எந்த மானமுள்ள ஆண்தான் தன் வீட்டு பெண்ணின் உடல் அங்கங்களை கணவனல்லாத பிறர் ரசிப்பதை விரும்புவான். அவ்வாறு விரும்புபவன் எப்படி பொருப்புள்ள தந்தையாக, கணவணாக அல்லது சகோதரனாக இருக்க முடியும்? இதனை விளக்கி எழுதினால் நந்தலாலா, நேச குமார் போன்றவர்கள் பிற்போக்குவாதியாகவும் பழமைவாதியாகவும் சித்தரிக்க முயல்வது ஏன்? மனசாட்சியுள்ள எந்த ஆணும் தங்கள் வீட்டு பெண்ணுக்கு கண்ணியம் கிடைப்பதையே விரும்புவான்.
"தலாக்" முறை இறைவனால் வெறுக்கப்பட்ட அனுமதிதான். இதில் இறைவன் வெறுப்பதை ஏன் அனுமதிக்க வேண்டும் என கேட்கலாம். இஸ்லாம் எதார்த்தமான மனித வாழ்க்கை நெறி. தனக்கு ஒவ்வாத கணவன் மணைவியை "தலாக்" என்று மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சொல்லியும், தனக்கு ஒவ்வாத கணவனை "குழா" என்ற முறையில் ஒரே தவனையில் விவாக விடுதலை பெறுவதும் எப்படி தவறாகும். இதில் விமரிசிக்க என்ன இருக்கிறது. அங்கங்கு சில முஸ்லிம்கள் இதை துஷ்பிரயோகம் செய்வதற்க்கு இஸ்லாம் எப்படி பொறுப்பாகும்?
இஸ்லாத்தை விமரிசிப்பவர்கள் முதலில் தங்கள் வைக்கும் குற்றச்சாடுகளுக்கு தங்கள் மதங்களில் அல்லது கொள்கைகளில் என்ன தீர்வு சொல்லப்பட்டிருக்கிறது என்று பார்க்காமல், கண்ணை மூடிக்கொண்டு விமரிசிக்க வேண்டாம் என்பதே என் கருத்து. ஏனெனில் இஸ்லாம் மனித நல்வாழ்வுக்கு மாற்றமானதை வலியுருத்துவதில்லை.
இஸ்லாத்தின் மீது வைக்கும் குற்றச் சாட்டுகளுக்கு நானறிந்த வரையில் பதில் சொல்வதுடன், இதர மதங்களின் கொள்கைகள் மீது விமரிசனம் செய்தால் அதற்கு நந்தலாலாவோ அல்லது நேச குமாரோ விளக்கம் தர முடியுமா? முடியும் எனில் எனது அடுத்த பதிவுகளில் விவாதிக்கலாம்.

Monday, May 02, 2005

குறுகிய காலத்தில் பிரபலமாவது எப்படி?

இப்போதெல்லாம் யாராவது பிரபலமாக வேண்டுமென்றால் கையாளும் குறுக்கு வழி ஒன்றே ஒன்றுதான். இஸ்லாத்தைப் பற்றி ஏதாவது விமரிசனம் செய்து விட்டால் போதும். உடனே மீடியாவில் பரபரப்பானவராகி விடுவார்.
இஸங்களாலும் இயக்கங்களாலும் செய்ய முடியாத வாழ்வியல் மாற்றத்தை தனது நிலையான எதார்த்தமான வாழ்வியல் தத்துவங்களால் இஸ்லாம் செய்ததை சகிக்க முடியாதவர்களின் வெற்று வாய்க்கு மெல்ல அவள் கிடைத்தது போல உடனே மீடியாக்கள் அவர்களை சமூக சிந்தனையாளர்களாகவும், நடுநிலைவாதியாகவும் முற்போக்கு வாதியாகவும் பிரபலப்படுத்தி விடுகின்றன.
அதே ஒரு முஸ்லிம் ஏனைய மதங்களின் மீதான குற்றச்சாட்டுக்களை சொன்னால் அதே மீடியாவில் அவருக்கு கொடுக்கப் படும் பட்டம் "தீவிரவாதி"
சாத்தானின் கவிதைகள் புகழ் சல்மான் ருஷ்டியும், லஜ்ஜா புகழ் தஸ்லிமா நஸ்ரினும் அவர்கள் எழுதிய ஏனைய படைப்புகளிலிருந்து அறியப் பட்டதை விட, இஸ்லாத்தை விமரிசித்தவுடன் அவர்களுக்கு கிடைத்த மரியாதையே தனி.
காலமெல்லாம் தன் எழுத்துக்களால் முற்போக்குவாதியாகவும் பெண்ணியவாதியாகவும் அறியப் பட்ட "மாதவிக் குட்டி" இஸ்லாத்தை ஏற்றதும் பிற்போக்குவாதியாக சித்தரிக்கப் பட்டு அவர் அடைந்த சோதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல.
விலாசமில்லாதவர் பிரபலமாக கையிலெடுக்கும் ஒரே தந்திரம் இஸ்லாத்தின் மீது சரமாரியாக விமரிசிக்க வேண்டியது உடனே முஸ்லிம்கள் அவருக்கு எதிராக அறிக்கை விடுவது அல்லது போராடங்கள் செய்வது இதுதான். இதைவிட பிரபலமாக வேறு என்ன வேண்டும்?