Monday, August 29, 2005

மனிதாபிமானம்

ஈமெயிலில் வந்த செய்தி. சுவாரசியமாகவும் மனதைத் தொடும்படியும் இருந்தது. எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.

செயற்கைக்கோள் ராக்கெட்டுகளை ஏவும் 'தும்பா' ஏவுதளத்தில் பணி செய்யும் விஞ்ஞானிகள் நாளொன்றுக்கு 12-18 மணி நேரங்கள் வேலை செய்வது வழக்கமாக இருந்தது. சுமார் எழுபது விஞ்ஞானிகள் ஒரு முக்கிய பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஓய்வற்ற ஆராய்ச்சிகளாலும் தங்கள் பாஸின் வற்புறுத்தலாலும் அங்கு பணியிலிருக்கும் விஞ்ஞானிகள் மிகுந்த விரக்தியில் இருந்தனர். எனினும் அங்கு வேலை பார்த்தவர்கள் விசுவாசமாகவும் 'அந்த' பாஸுடன் பணி செய்யவும் விரும்பினர். வேலையை விட்டு விட வேண்டும் என்ற எண்ணம் ஒரு போதும் ஏற்பட்டதில்லை.

ஒருநாள், விஞ்ஞானிகளில் ஒருவர் 'அந்த' பாஸிடம் வந்து, "சார்! நான் என் குழந்தைகளை இன்று மாலை நகரில் நடக்கும் பொருட்காட்சிக்கு அழைத்துச் செல்வதாக உறுதியளித்துள்ளேன். அதனால் மாலை 5:30 மணிக்கு ஆய்வுக்கூடத்தை விட்டுச் செல்ல அனுமதிக்க வேண்டும்" என்றார்.

'அந்த' பாஸும் "OK" சொல்லிவிட்டார்.

அனுமதி கிடைத்த மகிழ்ச்சியுடன் விஞ்ஞானியும் வேலையைத் தொடர்ந்தார். மதிய உணவுக்குப் பின்னும் கொடுக்கப்பட்ட வேலையைத் தொடர்ந்தார். வழக்கம் போல வேலையில் இலயித்து எப்படியும் கொடுக்கப்பட்ட பணியை முடித்து விடவேண்டும் என்ற மனநிலையில் ஆழ்ந்து ஈடுபட்டார். கிட்டத்தட்ட தன் பணியை முடிக்கும் தருவாய்க்கு வந்து விட்டதும் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். இரவு 8:30 மணியாகி இருந்தது.

அப்போதுதான் குழந்தைகளிடம் கொடுத்த வாக்குறுதியும் நினைவில் வந்தது. தன் பாஸைத் தேடினார். அவரும் வீட்டுக்குச் சென்றிருந்தார். தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை வெற்றிகரமாக முடித்தாலும், தன் குழந்தைகளிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லையே என்ற வருத்ததுடனும், என்ன காரணம் சொல்லி குழந்தைகளை சமாதானப் படுத்துவது என்ற ஆழ்ந்த சிந்தனையுடனும் மெளனமாக வீட்டிற்கு வந்தார்.

அமைதியாக வீட்டிற்குள் நுழைந்தார். மணைவி மட்டும் தனியாக ஷோபாவில் எதிர்ப்பட்டாள். வழக்கம் போல மெளனப் புன்னகை புரிந்து விட்டு குழந்தைகளைத் தேடினார். அவர்களைக் காணவில்லை. நிலைமையை உணர்ந்து கொண்டார். எது கேட்டாலும், அவருக்கு எதிரான சூழல் இருப்பதை அனுமானித்தவராக மணைவியை மெளனமாக நோக்கினார்.

சற்று நேர அமைதிக்குப்பின் மணைவி " காப்பி வேண்டுமா அல்லது ஒரேடியாக இரவுச் சாப்பாட்டை தரட்டுமா?" என்றாள்.

"உனக்கும் காப்பி வேண்டுமென்றால் சேர்த்து செய். இருவரும் சாப்பிடலாம். ஆமாம், குழந்தைகள் எங்கே?" என்றார்.

நிமிர்ந்த மணைவி, "உங்கள் பாஸ் மாலை 5:15 மணியளவில் நம் வீட்டிற்கு வந்து, குழந்தைகளை பொருட்காட்சிக்கு அழைத்துச் சென்றாரே! உங்களுக்குத் தெரியாதா?" என்றாள். விஞ்ஞானிக்கு வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

உண்மையில் என்ன நடந்தது? மாலை 5:00 மணிப்போல் ஆய்வுக்கூடத்தை பார்வையிட்ட பாஸ், தன்னிடம் 5:30 மணிக்கு வீட்டிற்குச் செல்ல அனுமதி வாங்கிய சக விஞ்ஞானி தீவிரமாக தனது பணியில் ஈடுபட்டிருப்பதை கவனித்தார். வேலையின் போக்கை அவதானித்தவர், நிச்சயம் அந்த விஞ்ஞானியால் மாலை 5:30 மணிக்குள் கொடுக்கப்பட்ட வேலையை முடிக்க முடியாது என்பதை உணர்ந்தார்.

விசுவாசமாக பணியில் ஈடுபடும் தன் சக விஞ்ஞானியின் குழந்தைகள், வாக்குறுதியளித்தபடி சரியான நேரத்தில் பொருட்காட்சிக்குச் சென்று மகிழ வேண்டும் என விரும்பினார். ஆகவே தானே அவரின் வீட்டிற்குச் சென்று குழந்தைகளை பொருட்காட்சிக்கு அழைத்துச் சென்றார்.

'அந்த' பாஸ் இதைச் செய்ய வேண்டுமென்ற நிர்ப்பந்தம் எதுவும் இல்லை. எனினும் சக பணியாளரின் மனநிலையை உணர்ந்து செயல் பட்டதால், அவர் மீதான சக விஞ்ஞானிகளுக்கு மேலும் மரியாதை ஏற்பட்டது. ஆகவேதான் தும்பா ஏவுதளத்தில் பணி புரியும் விஞ்ஞானிகள் அதிக வேலைப்பழு, மன அழுத்தம் இருந்த போதிலும் 'அந்த' பாஸுடன் வேலை செய்வதை நேசித்தார்கள்.

எல்லாம் சரி. யார் 'அந்த' பாஸ் என்று யூகிக்க முடிந்ததா? தெரிந்தால் நன்று. விடையை மறைத்துள்ளேன் தெரியாதவர்கள் மெளசால் (Mouse) இரண்டு சிகப்பு நட்சத்திரங்களையும் (*) தேர்வு செய்தால் விடை கிடைக்கும்.

*(நமது ஜனாதிபதி மாண்புமிகு. A.P.J.அப்துல் கலாம்!!!) *

Thursday, August 25, 2005

பெண் குழந்தையும் குர்ஆனும்


குழந்தைகளை நரபலியிட்டும், வதைத்தும் வழிபடச்சொல்லும் மதங்கள் ஒரு பக்கம். வறுமையாலும், சமூக கண்ணோட்டத்தினாலும் உயிருடன் புதைக்கப் படும் குழந்தைகள் இன்னொரு பக்கம். இப்படி எத்தனை சட்டங்கள், தொட்டில் குழந்தை திட்டங்கள் வந்த போதிலும் சிசுக் கொலைகள் குறைந்த பாடில்லை. குறைந்த பட்சம் மக்களின் மனநிலையைக் கூட மாற்ற முடியவில்லை.

கீழுள்ள செய்தியை அறிந்ததும் இதயம் மறுத்துப் போகிறது. என்று ஒழியும் இந்த அவலங்கள்?

பிறந்த 3 நாட்களே ஆன பெண் குழந்தையை உயிருடன் புதைத்து கொல்ல முயன்ற தாயையும் பாட்டியையும் போலீசார் கைது செய்தனர். மண்ணில் புதைக்கப்பட்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்த அந்தக் குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப் பட்டுள்ளது. இந்தக் கொடூரமான சம்பவம் மதுரையில் நடந்தது.

ஈஸ்வரி என்ற 25 வயது பெண்ணுக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கடந்த 21ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இரண்டாவது குழந்தையும் பெண் குழந்தையாகப் பிறந்ததால் அதைக் கொல்ல முடிவு செய்தனர் ஈஸ்வரியும் அவரது தாயாரும்.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன ஈஸ்வரி குழந்தையை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டுக் கொண்டு வைகை ஆற்றங்கரைக்குச் சென்றார்.. கூடவே அவரது தாயாரும் சென்றார். அப் பகுதியில் ரோந்து சென்ற போலீசார், குழந்தையை உயிருடன் பிளாஸ்டிக் பையில் போட்டுக் கொண்டு சென்ற பெண்களைப் பார்த்து சந்தேகமடைந்தனர். இருவரையும் அழைத்து விசாரித்தனர்.

குழந்தையை மருத்துவர்கள் தான் பிளாஸ்டிக் பையில் போட்டு பத்திரமாக எடுத்துச் செல்லும்படி கூறியதாக அவர்கள் கதைவிட்டனர். ஆனால் அவர்களைத் திட்டிய போலீசார் குழந்தையை கையில் எடுத்துச் செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர். இதையடுத்து இரு பெண்களும் குழந்தையை கையில் எடுத்துக் கொண்டு ஆற்றுக்குள் இறங்கினர். ஆனாலும் இருவர் மீதும் சந்தேகம் இருந்ததால், அவர்களை பின் தொடர முடிவு செய்தனர்.

ஆனால், இயற்கை உபாதைக்காக இருவரும் ஆற்றுக்குச் செல்வதாகக் கூறவே அவர்களை போலீசார் உடனே பின் தொடரவில்லை. இரு பெண்களும் தொடர்ந்து ஆற்றுக்குள்ளேயே இருக்கவே, சந்தேகமடைந்த போலீசார் அங்கு விரைந்தனர்.அப்போது அவர்கள் கண்ட காட்சி உயிர் உறைய வைத்தது.

இரு பெண்களும் கையாலேயே ஆற்று மணலில் குழி தோண்டு குழந்தையை புதைத்துவிட்டு மூடிக் கொண்டிருந்தனர். இதையடுத்து ஓடி வந்த போலீசார் குழந்தையை உடனடியாக மண்ணில் இருந்து மீட்டனர். பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டு மண்ணுக்குள் புதைக்கப்பட்ட குழந்தை மயங்கிப் போய் இருந்தது.

உடனடியாக குழந்தையைத் தூக்கிக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு போலீசார் ஓடி வந்தனர். மருத்துவர்கள் உடனே குழந்தையை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து சிகிச்சையை ஆரம்பித்தனர்.குழந்தையைப் புதைத்த தாய் ஈஸ்வரியையும் அவரது தாயாரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அந்தக் குழந்தைக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து போலீசார் கூறுகையில், ஈஸ்வரியின் கணவர் ஒரு கூலித் தொழிலாளி.

தனக்கு பையன் தான் வேண்டும் என அவரது கணவர் கூறியுள்ளார். பெண் குழந்தை பிறந்ததால் ஈஸ்வரியிடம் அவர் பேசக் கூட இல்லை என்று தெரிகிறது. இதனால் வெறுத்துப் போய் குழந்தையை புதைத்துக் கொல்ல முடிவு செய்ததாக ஈஸ்வரி விசாரணையின்போது கூறினார் என்றனர்.

குழந்தையை வளர்க்க முடியாதவர்களுக்கு உதவவே தொட்டில் குழந்தைத் திட்டம் என்ற திட்டத்தை அரசு நடத்தி வருகிறது. குழந்தையை வளர்க்க முடியாமல் சிரமப்படுபவர்கள் அதை அரசிடம் ஒப்படைக்கலாம் என்ற நிலை உள்ளது.

அதைக் கூட செய்யாமல், குழந்தையை கொன்றுவிட முடிவு செய்த ஈஸ்வரியை என்னவென்று சொல்வது? பெண் குழந்தை பிறந்ததால் மனைவியிடம் பேசுவதையே நிறுத்திவிட்ட கணவரை என்ன செய்வது? நன்றி: தட்ஸ்தமிழ்

6:140 எவர்கள் அறிவில்லாமல் மூடத்தனமாக தம் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ¢ இன்னும் தங்களுக்கு அல்லாஹ் உண்ண அனுமதித்திருந்ததை அல்லாஹ்வின் மீது பொய் கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொண்டார்களோ, அவர்கள் வழிகெட்டு விட்டனர், நேர்வழி பெற்றவர்களாக இல்லை.

6:151 'வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன். எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள். பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள். வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம். வெளிப்டையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள். அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்.

8:28 'நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு" என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.

17:31 நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்.

Tuesday, August 23, 2005

மூளைக்கு வேலை!!!

இந்தப்படத்தில் சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை வைத்து அதனோடு தொடர்புடைய ஆங்கில வார்த்தைகளைக் கண்டுபிடியுங்கள். நீங்கள் கண்டுபிடித்த விடைகளை படத்தின் நம்பரைக் குறிப்பிட்டு பின்னூட்டமிடவும்.

Concept புரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஒன்றுமே அறியாத அப்பாவிகளுக்காக சில விடைகள். கீழுள்ள எண்களை உங்கள் Mouse (எலிக்குட்டி) கொண்டு தேர்வு செய்தால் விடை தெரியும்.

1) Seven Seas [ C ] என்ற எழுத்துக்கள் ஏழு உள்ளன.

15) Cross Roads

20) Broken Promise

இந்த படம் Excell File ஆக இருக்கிறது தேவையானவர்கள் ஈமெயில் முகவரியை பின்னூட்டமிட்டால் அனுப்பி வைக்கிறேன். அல்லது கீழ்கண்ட இணைய முகவரியிலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Link : http://tinypic.com/ayt7he.jpg

URL : http://tinypic.com/view/?pic=ayt7he

எனக்கும் பெரும்பாலான விடை தெரியாது :-))

அன்புடன்,

நல்லடியார்

nalladiyar@gmail.com

Monday, August 15, 2005

தீவிர ஜனநாயகவாதிகள்

உங்கள் கைகளில் ஏதேனும் செய்திப் பத்திரிக்கை இருக்கின்றதா? சற்று அதன் பக்கங்களைப் புரட்டிப் பாருங்கள் அல்லது சர்வதேச ஊடகங்கள் உள்ளனவா?. ஏதாவது ஒரு பக்கத்திலாவது, சேனலிலாவது ஜனநாயகம், தீவிரவாதம்,இஸ்லாம் என்ற சொல்லாட்சிகளையும் குறித்ததொரு தகவல் அல்லது விவாதம் அல்லது செய்தி இல்லாமல் இருக்காது.

இந்த வார்த்தைகளைக் கேட்டுக் கேட்டு இப்பொழுது அந்த வார்த்தைகளைக் கேட்டால் எந்த அதிர்ச்சியும் வருவதில்லை. காலப் போக்கில் அவை நமது வாழ்வில் ஒரு அங்கம் என்ற அளவில் நம்மை அது பக்குவப்படுத்தி விட்டது, அல்லது மரத்து விட்டது என்று தான் அர்த்தம்.

சரி..! இந்த மூன்று அம்சங்கள் குறித்தும் விளக்கம் எதுவும் இருக்கின்றதா? ஆம்..! இஸ்லாம் என்ற சொல்லுக்கு கட்டுப்படுதல், அமைதி என்ற பல அர்த்தங்கள் உண்டு. பின் எப்படி அதனுடன் மேலும் இரண்டு வார்த்தைகளை இணைக்க முடிகின்றது. இணைத்துப் பேச முடிகின்றது? ஏன் அந்த வார்த்தைகளுக்கு புது அர்த்தம் எதுவும் கண்டு பிடித்தாகி விட்டதா? அல்லது இஸ்லாம் என்ற பதத்திற்கும் அந்தக் கொள்கையைப் பின்பற்றுகின்றவர்களுக்கும் முரண்பாடுகள் மிகைத்து விட்டதா? எது சரி..?

இதெல்லாம் எங்களுக்கு எதற்கு என்று சோம்பல் முறிக்கின்றீர்களா? முடியாது..! சமூகப் பொறுப்பு என்ற ஒன்று அனைவருக்கும் உண்டு. ஏனெனில் ஜனநாயகம், தீவிரவாதம் என்ற சொல்லாட்சிக்குப் பின்னால் தான் ஹிரோஷிமாவில், நாகசாகியில் அணுகுண்டுகள் போடப்பட்டன.

தீவிரவாதம், ஜனநாயகம் என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தித்தான் ஈராக்கின் மக்கள் அபூகிரைப் சித்ரவதைக் கூடத்தில் அலங்கோலப்படுத்தப்பட்டனர். தீவிரவாதம், ஜனநாயகம் என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தித் தான் குவாண்டனாமோவில் சித்ரவதைக் கூண்டுகளுக்கு உள்ளே மிருகங்களை விடவும் கேவலமாக மனிதன் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றான். இஸ்லாமிய தீவிரவாதம் என்ற பெயரில் தான் குஜராத்தில் இந்து பயங்கர அரங்கேற்றப்பட்டது.

தீவிரவாதம்..! என்றால் என்ன? இதுவரை எந்த அரசாவது அது பற்றிய விளக்கத்தைக் கொடுத்துள்ளதா? சரி..! குஜராத்.., சபர்மதி எக்ஸ்பிரஸ்.., சரி இதற்கு மேல் விளக்கத் தேவையில்லை, கிட்டத்தட்ட 2000 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அந்த படுகொலைக்குக் காரணமாகச் சொல்லப்பட்ட 'சபர்மதி எக்ஸ்பிரஸை பெட்ரோல் ஊற்றி முஸ்லிம்கள் கொளுத்தினார்கள்" என்பதை இன்றைய விசாரணைக் கமிஷன்கள் மறுக்கின்றது.

ஆனால், அந்த ஜனநாயக மோடி அரசு முன்னின்று நடத்திய அந்த இனப்படுகொலைக்குப் பின்னர், மேலும் முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டார்கள், இன்னும் தடா, பொடா என்ற கொடுஞ் சட்டத்தின் கீழ் இன்றும் கொட்டடிகளில் கிடக்கின்றார்கள். சரி..!

அவர்கள் தீவிரவாதிகள்., அவர்கள் செய்த தவறு தான் என்ன? தங்களது இளவல்களை, பெண்களை, குழந்தைகளை, தாய்மார்களை, தந்தைமார்களை, உற்றார் உறவினர்கள் என்று சங்க பரிவாரக் கும்பல்களின் கொலை பாதகச் செயலுக்கு இரையாக்கினார்கள். அதனால் அவர்கள் மீது தீவிரவாதப் பட்டம். முஸ்லிம்..! தீவிரவாதிகள்.

சரி..! சற்று வெளியில் வருவோம்..! ஈராக்..! அவர்களும் தீவிரவாதிகள்.., எப்படி..? அங்கே ஒரு ஆட்சியாளர், அவர் தான் சதாம் உசேன்.., அமெரிக்காவின் சொல்லுக்கு ஆட மறுத்தார். எண்ணெய் வளங்களை அமெரிக்காவுக்குத் தாரை வார்ப்பதற்குப் பதிலாக தன்னை வளப்படுத்திக் கொள்ளப் பார்த்தார், இன்னும் அரபுக்களின் வளங்களை அரபுக்கள் தான் அனுபவிக்க வேண்டும் என்றார்.

இஸ்ரேல் என்ன வளைகுடாப் பகுதிக்கு என்ன தாதாவா? என்றார். பிடித்தது சனியன். தீவிரவாதிகளுக்குப் பயிற்சி.., இராசயன ஆயுத உற்பத்தி என்ற பிரச்சாரம்..! சரி.., போர் நடந்தது. தீவிரவாதிகளைக் காணோம், அவர்களை விட்டாகி விட்டது, இரசாயன ஆயுதத்தையும் காணோம்.., ஈராக்கில் நுழைந்ததற்கான காரணமே இன்னும் பிடிபடவில்லை. சரி.., விட்டு விட்டுப் போக வேண்டியது தானே..! அபூ கிரைப்பில் ஏன் அந்த சித்ரவதை..! அமெரிக்கப் படைகள் நிரந்தரமாக இருப்பதற்கான படைத்தளங்கள் கட்டமைக்கப்படுகின்றன. காரணம், தீவிரவாதம்.., ஜனநாயக விரோதம்!

யுக்ரைனில் ஜனநாயம் என்ற போர்வையில் ரஷ்யா ஒரு அணியிலும், மேற்கத்திய நாடுகள் ஒரு அணியிலும் ஒரு நாட்டின் இறையாண்மையை, மக்களை துண்டாக்கி பண பலமும், படை பலமும், மீடியா பலமும் பொருந்திய மேற்கத்திய நாடுகள் தனது ஆதிக்கத்தில் என்றும் போல் தக்கவைத்துக் கொண்டது.

ஆக, நாம் தீவிரவாதம் என்ற சொல்லுக்கு அர்த்தம் தேடினால் எங்கெங்கோ அலைகின்றீர்களே என்று கேட்கின்றீர்களா..?! மேலே உள்ள ஆதாரங்களின் மீது சற்று கவனத்தைத் திருப்பினால், அதிகாரத் தோரணையுடன் ஆட்சியில் வீற்றிருக்கும்.., சுருங்கச் சொன்னால் நாட்டின் உயர்அந்தஸ்தில் இருந்து கொண்டு தடி எடுத்தால் அது நிர்வாக யுக்தி, அரசியல் சாணக்கியம். அதேநேரத்தில் அதிகாரம் இல்லாத.., ஏன்.., தனிநபர் ஆயுதம் எடுத்தால் தான் என்றில்லை.., வீட்டில் ஆடு அறுக்க கத்தி வைத்திருந்தாலும் அது தீவிரவாதம்.

புழுப் பூச்சியை குச்சியால் நிமிண்டினால் கூட சற்று அது உணர்ச்சியைக் காட்டும், ஆனால், மனிதன், காட்டக் கூடாது. அதிலும் முஸ்லிம் காட்டவே கூடாது.

ஆப்கானில், பாலஸ்தீனில், ஈராக்கில், செசன்யாவில்.., காஷ்மீரில்.., தாய்லாந்து, என்று நீங்கள் எங்கு திரும்பினாலும் முஸ்லிம்கள் மீது சொல்லொண்ணா படுகொலைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட போதிலும், அந்த சமூகம் உணர்ச்சியற்ற ஜடமாக உலா வர வேண்டும் என்பது விபரீதமானதொரு எதிர்பார்ப்பு.

ஆப்கானில் தேர்தல் நடந்தன. வாக்குப் பெட்டிகள் பாக்கிஸ்தானில் இருந்து, வாக்குச் சீட்டுகள் முத்திரையிடப்பட்டபடி ஆப்கான் வந்து சேர்ந்தன. என்ன ஆச்சரியம்..! ஜனநாயகத் தேர்தலில் கர்சாய் வெற்றி பெற்று விட்டார். மிக நீண்ட நாட்கள் கழித்து ஈராக்கில் ஜனநாயக அடிப்படையில் தேர்தல். வேட்பாளரே முன் வந்து நான் தேர்தலில் நிற்கவில்லை என்று அறிவித்த அதிசயம் அங்கு நிகழ்ந்தது.

சரி, மற்ற நாடுகளாக இருந்தால் அங்கு சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் தேர்தல் நடக்கும். கண்காணிப்பு இருக்கும். ஆனால், ஈராக்கில் அவர்களுக்கு அனுமதி இல்லை. அதிகம் பேசிய அல் ஜஸீரா தொலைக்காட்சி நிலையம் பூட்டப்பட்டது, ஏன்..? நிருபர்களும் கூட நிரந்தரமாக உலகத்தை விட்டே அனுப்பப்பட்டு விட்டார்கள். காரணம்.., அங்கு ஜனநாயகம் இல்லை.

எண்ணெய் முதலாளிகளின் வியாபாரப் பரவலுக்கு ஒத்துப் போக மறத்த தாலிபான்கள் தீவிரவாதிகளாக்கப்பட்டார்கள். வளைகுடாவில் எடுக்கப்படும் எண்ணெய் அரபுக்களுக்கு உரியது, அந்நிய சக்திகளுக்கு என்ன வேலை என்று கேட்ட சதாம் தீவிரவாதியாக்கப்பட்டார். அந்த எண்ணெய் முதலாளிகளின் குழுமத்தில் உள்ளவர்களில் முக்கியமானவர் அப்பன் புஷ்.

அன்றைய தினம் சோவியத் கம்யூனிஸத்திற்கு எதிரான கொள்கையாக இஸ்லாம் மத்திய ஆசியாவில் கருதப்பட்டதன் விளைவு.., சைபீரியாவில் உள்ள மரண முகாம்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

பின்னர் ஏன் அவர்கள் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கப்படுகின்றார்கள். அது தான் மிகப் பெரிய சூட்சுமம். எந்தக் கொள்கையையும் உறுதியோடு எதிர்க்கும் உள வலிமை அதனிடம் உண்டு. எனவே, எப்பொழுது எந்தக் கொள்கை அரியணை ஏறினாலும் அதன் அடக்குமுறைக்கு முதல் எதிர்ப்பு முஸ்லிம்களிடத்திலிருந்து தான் வரும்.

அதனை இஸ்லாம் என்ற கொள்கை அவர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் என்ற உண்மை முஸ்லிம்கள் அறிந்திருக்கின்றார்களோ இல்லையோ, இந்த ஏகாதிபத்தியத் தீவிரவாதிகள் அறிந்தே வைத்திருக்கின்றார்கள்.

இஸ்லாம் தன்னுடைய கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களையும், ஏற்றுக் கொள்ளாதவர்களையும் சமமாகப் பாவிக்கக் கூடியதொரு உண்மையான ஜனநாயகக் கொள்கையைக் கொண்டிருக்கின்றது. அது ஆட்சிக்கு வந்த போதெல்லாம் ஏனைய கொள்கையினர் சுதந்திரமாக வாழ்ந்தனர், சுதந்திரமாக தங்களுடைய வணக்க வழிபாடுகளை நிறைவேற்றிக் கொண்டனர். மூன்றாவதாக, அதனிடம் மற்ற சமுதாயத்தினரை விட நிறைவான மனித வளம் இருக்கின்றது. அந்த மனித வளத்தை முழுமையான முன்னேற்றப் பாதையின் கீழ் கொண்டு செல்வதற்கான பொருளாதாரக் கொள்கையும் அதனிடம் இருக்கின்றது.

ஏனெனில், இறுதி வரைக்கும் அவர்கள் அடிமை வாழ்வு வாழ மாட்டார்கள். அவர்களின் உடலில் உயிர் ஒட்டிக் கொண்டிருக்கும் நிலையிலும் அடக்குமுறைக்கு எதிராகப் போர் தொடுப்பார்கள். அவர்கள் தான் முஸ்லிம்கள். படைத்தவனுக்கு மட்டுமே அடிமைகளாக இருப்பதில் சந்தோஷம் அடைபவர்கள்.

உலகத்தின் பார்வையில் இந்த முஸ்லிம்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்து, அவர்களை உலக சமூக வாழ்விலிருந்து தனிமைப்படுத்தி அவர்களை மக்கள் தொடர்பிலிருந்து முதலில் விடுவித்து, பின்னர் அவர்களை கொள்கையற்றவர்களாக, தங்களது வாழ்க்கைப் போராட்டத்திற்காக கொள்கையை விற்று விடக் கூடியவர்களாக முஸ்லிம்களை ஆக்கி விட வேண்டும் என்று ஏகாதிபத்திய சக்திகள் ஒன்றிணைந்து பாடுபட்டு வருகின்றன. அதற்காக தங்களது அனைத்து வளங்களையும் பயன்படுத்துகின்றன.

ஜனநாயகம் என்ற பெயரில் போலி நாடகம் ஆடுகின்றன. அவர்களது வாயில் ஜனநாயகம் என்று வந்தால், அவர்களது சுய லாபம் எங்கோ பாதிக்கப்பட்டிருக்கின்றது என்று அர்த்தம். அவர்களது வாயில் தீவிரவாதம் என்று வந்தால் எங்கோ அவர்களது சுய லாபம் ஆட்டம் காண்கின்றது என்று அர்த்தம்.

அவர்களது சுயலாபத்திற்காக பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷர்ரப்பிற்கு சிவப்புக் கம்பளம் விரிப்பார்கள். அவர்களது சுயலாபத்திற்காக நேபாள மன்னருக்கு வெஞ்சாமரம் வீசுவார்கள். அவர்களது சுயலாபத்திற்காக பர்மாவின் இராணுவ ஆட்சியாளருக்கு காவல் பூனையாக இருப்பார்கள்.

ஆனால் அவர்கள் சுயலாபம் பாதிக்கப்பட்டால் பிடரல் காஸ்ட்ரோ ஒரு முள்ளாகக் கருதப்படுவார். தாலிபான்கள் கரையான் புற்றுக்களாகச் சித்தரிக்கப்படுவார்கள். ரஷ்யாவை எதிர்க்க ஆயுதமாகப் பயன்பட்ட பின்லாடன் அப்போது விடுதலை வீரர். இப்போது தேடிக் கொல்ல வேண்டியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்.

பாவம் உலகமக்கள், ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய பொறுப்பை தீவிரவாதிகளிடம் கொடுத்து விட்டு ஊடக மாயையில் உறங்கி கொண்டிருக்கிறார்கள்.

நன்றி: ஏ ஒன் ரியலிசம்

அவதூறுகளின் வயது 1426

இஸ்லாமியவாதம்-பழமைவாதம்-பெண்ணடிமைவாதம்-தீவிரவாதம்- என அவதூறுகள் சொல்லி "வாதம்" பிடித்து இன்னும் எத்தனை நாளைக்குத்தான் அலையப் போகிறார்களோ? குர்ஆன்மீதும் நபிகளார்மீதும் சுமத்தப்படும் இத்தகைய அவதூறுகளுக்கு வயது 1426. என்ன ஆச்சரியம்! எத்தனை அவதூறுகள் வீசப்பட்ட போதிலும் வீழாமல் புன்முறுவலுடன் இஸ்லாம் வளர்ந்து வருகிறது.




செப்டம்பர்-11, 2001 அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் வீழ்ந்தபோதே அமெரிக்காவில் வீழ்ந்திருக்க வேண்டிய இஸ்லாம் தான் அமெரிக்காவில் இன்று வேகமாகப் பரவும் மதம்! உலகின் அதிவேகமாக வளரும் மதம் இஸ்லாம். உலகில் அதிகமான மக்களால் 90%க்கும் மேல் முழுமையாக வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட மதம் இஸ்லாம். கிறிஸ்தவ ஐரோப்பாவின் இரண்டாவது மதம் இஸ்லாம்!

வல்லரசுகளுக்கு என்னவாயிற்று? முஸ்லிம்களெல்லாம் வாளை எடுத்துக் கொண்டு போர் செய்து இஸ்லாத்தை பரப்ப ஆரம்பித்து விட்டார்களா? அணு குண்டுகளுக்குக் கூட அஞ்சாத அமெரிக்கா இன்று இஸ்லாத்திற்கு அஞ்சுவது ஏன்?

உலகிலுள்ள அனைவரும் அமைதியாகவும், அன்பாகவும் இருக்கிறர்களா? முஸ்லிம் அல்லாத பெண்கள் எல்லாம் சுதந்திரம் என்ற பெயரில் கண்ணியமாக இருக்கிறார்களா? இஸ்லாம் தவிர உலகில் ஏனைய பிரச்சினைகளே இல்லையா?

உலக மக்களுக்கு எதிராக அப்படி என்னதான் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது? சக மனிதனை கொல்லச் சொல்வதாக அவதூறு செய்யப்படும் ஒரு கொள்கையை நோக்கி குடும்பம் குடும்பமாக ஏன் இந்த படையெடுப்பு? அடக்குமுறை செய்யப்படுகிறது என்று சொல்லப் படும் ஒரு கொள்கையை நோக்கி அணியணியாக பெண்கள். உண்மையில் என்னதான் நடக்கிறது?

இஸ்லாத்தின் மீது சேற்றை அள்ளிப் பூசிக் கொண்டிருப்போர் நியாயமான விமர்சனங்களை மேற்கொள்வதில்லை. தங்களின் மூடத்தனமும் குற்றங்களும் இஸ்லாத்திற்கு எதிராக இருப்பதால் நியாய உணர்வுகளை அவர்களால் மதிக்க முடிவதில்லை. இஸ்லாமியக் கோட்பாடுகளும் கட்டுப்பாடுகளும் மனித இனத்திற்கு நலம் சேர்ப்பதை இவர்கள் சரியாகப் புரிந்து கொள்வதில்லை அல்லது புரியாதது போன்று நடிக்கிறார்கள்.

இஸ்லாத்தில் பெண்கள் கொடுமைப்படுத்தப் படுகிறார்கள் எனச் சொல்லுவோர்தான் பெண்களை உயிருடன் 'சதி' செய்து எரிக்கிறார்கள். பெண்கள் மீதான கட்டுபாடுகள் அதிகம் என்போர் தங்கள் பெண்களை தேவதாசிகளாக்குவதில்லை. கணவன் இறந்து விட்டால் இனி வாழ்நாளெல்லாம் விதவைக் கோலம்தான். பர்தா போட்டு மூடச்சொல்கிறார்கள் என்போர் 'தோசம்' எனச்சொல்லி அடக்கி வைக்கிறார்கள்.

இவர்களால் இஸ்லாத்தை தூற்றத்தான் முடிகிறதே தவிர மாற்றாக ஒரு சிறந்த கொள்கையை அல்லது தங்கள் மதத்தின் நல்ல பக்கங்களைக்கூடச் சொல்ல முடிவதில்லை. ஐயகோ, என்னே இவர்களின் கரிசனம்?

எல்லாம் சரி, குர்ஆனில் போரிடச் சொல்லவில்லையா? போரிடச் சொன்னது உண்மைதான். ஆனால் அப்பாவிகள் மீதல்ல. அநியாயக்காரகள் மீது! சுவாசத்தை தடுப்பவர்கள் மீது! தங்கள் கடவுள்களை நம்ப மறுத்தார்கள் என்பதற்காக ஊரையும் நாட்டையும் விட்டு வெளியேற்றியவர்கள் மீது!

2:190 உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள். ஆனால் வரம்பு மீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.

4:75 பலஹீனமான ஆண்களையும் பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது? (அவர்களோ) 'எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக. எங்களுக்காக உன்னிடமிருந்து தக்க ஒரு பாதுகாவாலனை அளித்தருள்வாயாக. இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக" என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.

22:39 போர் தொடுக்கப்பட்டோருக்கு - அவர்கள் அநியாயம் செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதனால் (அவ்வாறு போர் தொடுத்த காஃபிர்களை எதிர்த்துப் போரிடுவதற்கு) அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. நிச்சயமாக அவர்களுக்கு உதவி செய்ய அல்லாஹ் பேராற்றலுடையவன்.

மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். உங்கள் மீது அடக்குமுறை அவிழ்த்து விடப்பட்டால் அமைதியாகப் போவீர்களா? உங்கள் குழந்தைகளும், பெண்மக்களும் அநியாயமாக வெளியேற்றப்பட்டால், எதிரிகளின் கைகளை முத்தமிடுவீர்களா? உலகில் எத்தனை முஸ்லிம் நாடுகள் போரிட்டுக் கொண்டிருக்கின்றன? உங்கள் அண்டை வீட்டுக்காரன், உங்களை குண்டு வைத்து கொல்ல வந்தானா? எத்தனை முஸ்லிம்கள் கூட்டமாக வந்து கற்பழித்தார்கள்?

Sunday, August 14, 2005

சுதந்திர தின வாழ்த்துக்கள்

நம் நாட்டின் சுதந்திர தினம் (15-ஆகஸ்ட்-2005) கொண்டாடப் படுகிறது. சென்ற வருடங்களின் சுதந்திர தின வாழ்த்திற்கும் இந்த வருட சுதந்திர தின வாழ்த்திற்கும் ஒரு வித்தியாசம். அது என்னவென்று கண்டு பிடித்தால் பின்னூட்டமிடுங்கள். (யாரும் சொல்லாத பட்சத்தில் பின்னூட்டத்தில் சொல்கிறேன்)

தமிழ்மணம் வாசகர்கள், சக வலைப்பூவர்கள், வலைப்பூவையர் மற்றும் (+) அல்லது (-) ஓட்டுப் போட்ட அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.



மனிதனாக மாறுவது எப்போது?

மனிதக்கருவின் வளர்ச்சி நிலைகளை (Trimester) மூன்று கட்டங்களாகப் பிரிக்கிறார்கள். கருவாகி சில நாட்கள் வரை பிற உயிரினங்களின் கருவிற்கும் மனிதக் கருவிற்கும் வித்தியாசம் இருக்காது.

அதாவது Embryo என்ற நிலையிலிருந்து Foetus என்ற நிலைக்கு வந்த பிறகுதான் அந்த வித்தியாசம் அறியமுடியும். அதுவரை ஊர்வன,பறப்பன மற்றும் விலங்குகளின் கருவிற்கும் மனிதக் கருவிற்கும் வித்தியாசத்தை அறிய முடியாது. கீழ்கண்ட படத்தில் இதனை அறியலாம்.




ஆக, மனிதக் கரு வளர்ச்சியின் முதல் நிலைக்கும் அடுத்த நிலைக்கும் மிகுந்த வித்தியாசம் உள்ளதை நவீன அறிவியல் சொல்லுகிறது. இந்த உருமாற்றத்தை குர்ஆன் மிக அழகாக சொல்லுகிறது.

23:14 (பின்னர்) அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம். பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம். பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம். பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம். பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் - (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்.

வேறு ஒரு படைப்பாக என்ற பதம் இந்த உருமாற்றத்தையே குறிக்கிறது. இதுவரை கருவின் வளர்ச்சி நிலைகளைப் பற்றி குர்ஆனிலும் நபிமொழிகளிலும் பார்த்தோம். எந்தவித உபகரணமும், அறிவியல் அறிவும் இல்லாமல் எப்படி இவ்வளவு நுணுக்கமான அறிவியல் உண்மையை ஒருவரால் சொல்ல முடிந்தது?

படைப்பின் ரகசியம் அறிந்தவரால் மட்டுமே இது சாத்தியமாகும் என்பதை ஏற்க மறுப்பது பகுத்தறிவுக்கு செய்யும் துரோகம் அல்லவா?

4:82 அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.

2:269 தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான். (இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ, அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார். எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

6:98 உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப்பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து, (பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே. சிந்தித்து விளங்கிக் கொள்ளக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்களை விவரித்துள்ளோம்.

17:41 இன்னும் அவர்கள் (சிந்தித்துப்) படிப்பினைகள் பெறுவதற்காக இந்த குர்ஆனில் திட்டமாக(ப் பல்வேறு) விளக்கங்களைக் கூறியுள்ளோம். எனினும், (இவை யாவும்) அவர்களுக்கு (உண்மையிலிருந்து) வெறுப்பைத் தவிர (வேறெதையும்) அதிகப்படுத்தவில்லை! (குர்ஆன்)

Thursday, August 11, 2005

கருவளர்ச்சி - விஞ்ஞானிகளுக்கு ஆரோக்கியம் மறுப்பு!!!

கருவின் பாலினம், கருவுற்ற ஆறு வாரங்களுக்குப் பிறகே நிர்ணயிக்கப்படுகிறது என்ற அறிவியல் கூற்றை ஆரோக்கியம் மறுத்துள்ளார். "மனிதக் கரு என்று உருவான அந்த கணமே அது ஆணா பெண்ணா என்று முடிவு செய்யப்பட்டு விடுகிறது. " என்று சொல்லி தன் அறியாமையை வெளிப்படுத்தியுள்ளார்.

"இப்படி இருக்கும்போது, 42 நாட்கள் கழித்துத்தான் குழந்தை ஆணா பெண்ணா என்று அல்லா முடிவு செய்கிறாராம்.. ரீல் விடுகிறான் முகம்மது. அதனை ஆ என்று பார்த்துக்கொண்டு இருந்த அந்த கால அரபிக்கூட்டத்துக்கு இணையாக, இந்த காலத்தில் ஒரு மட(த)க்கூட்டத்தை உருவாக்க பேராசிரியர்களுக்கு டாலர் கொடுத்து ஆச்சரியப்பட வைக்கிறார்கள் முஸ்லீம் முல்லாக்களும் (பின்லாடனும்)

கேக்கறவன் கேனையன் என்றால்...."

எனச்சொல்லி தான் மட்டுமே உண்மையான கேனையன் என ஒப்புக் கொண்டுள்ளார்.

கருவின் வளர்ச்சி நிலைகளை நவீன மருத்துவம் சொல்வதை

"At this time and until the seventh week, the genital ridge is similar in both males and females"

"At this time male and female gonads appear identical"

"A crucial event that determines whether the embryo will develop into a male or female occurs in the second half of week six."

1400 வருடங்களுக்கு முன்பே எழுதப் படிக்கத் தெரிந்திராத முஹம்மது நபிகள் 42 நாட்களுக்குப் பின்னரே கருவில் வளரும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என நிர்ணயம் செய்யப்படுகிறது என்று சொல்லியுள்ளார்கள். இதனை வியந்த மேலை நாட்டு விஞ்ஞானிகளை பெட்ரோ-டாலருக்கு விலை போய் விட்டார்கள் என்று வசைபாடி, தனக்கு துவேசமாக மட்டும்தான் சிந்திக்கத் தெரியும் எனவும் ஆரோக்கியம் நிரூபித்துள்ளார்.

குர்ஆனிலலும் ஹதீஸிலும் மனிதக்கருவாக்கம் பற்றி மிகத்தெளிவாக சொல்லப்பட்டுள்ளன.

86:5 மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.

86:6 குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான்.

86:7 முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.

76:2 (பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.

சஹீஹ் முஸ்லிமில் பதியப்பட்டுள்ள கீழ்கண்ட ஹதீஸில், யூத அறிஞருக்கும் நபிகளாருக்கும் நடந்த உரையாடலில் ஒரு பகுதி:

He then said: I have come to ask you about the child.

He (the Holy Prophet) said: The reproductive substance of man is white and that of woman (i. e. ovum central portion) yellow, and when they have sexual intercourse and the male's substance (chromosomes and genes) prevails upon the female's substance (chromosomes and genes), it is the male child that is created by Allah's Decree, and when the substance of the female prevails upon the substance contributed by the male, a female child is formed by the Decree of Allah.

The Jew said: What you have said is true; verily you are an Apostle. He then returned and went away.

The Messenger of Allah (may peace be upon him) said: He asked me about such and such things of which I have had no knowledge till Allah gave me that.

(Translation of Sahih Muslim, The Book of Menstruation (Kitab Al-Haid), Book 003, Number 0614)"

என்று தெள்ளத் தெளிவாக பகன்றதை, இன்றைய அறிவியல் ஒப்புக்கொள்கிறது.

  • கிறிஸ்த்துவராக தன்னைக் காட்டிக் கொண்டு எழுதிவரும் ஆரோக்கியம், கருவளர்ச்சி பற்றி பைபிளில் எவ்வாறு சொல்லப்பட்டுள்ளது என விளக்கினால் நன்றாக இருக்கும். விளக்கத் தயாரா?
  • படியுங்கள், சிரியுங்கள் என அசாதாரண விஞ்ஞான உண்மைகளை விவாதிக்க மறுத்து சன்னியாசத்தின் மகிமையைச் சொல்லி, தன்னை இந்து பகுத்தறிவாளராகக் காட்டிக் கொண்ட விசிதா அவர்கள், தங்கள் வேதங்களில் கருவின் படிநிலைகள் பற்றியும், மனிதனின் தோற்றம் பற்றியும் என்ன சொல்லியுள்ளது என விளக்கிவிட்டு சிரிப்பாரா?
  • குர்ஆன் ஒரு மனோநிலை பாதிப்பின் வெளிப்பாடு என்று டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட் ஐ துணைக்கழைத்து குதர்க்கம் பேசிய நேசகுமார், இதுவரை சொல்லப்பட்ட விஞ்ஞான உண்மைகளைகயும் கூட ஒரு எழுதப்படிக்க அறிந்திராத மனநோயாளியால் 1400 வருடங்களுக்கு முன் சொல்லியிருக்க முடியுமா என்று கேட்டுச் சொல்வாரா?

பின்குறிப்பு: இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகள் அமெரிக்காவின் கிறிஸ்தவர்களால் நடத்தப்படும் இணைய தொலைக்காட்சி தளத்திலும், யாஹூ கல்வி தளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.

இவர்களுக்கும் பெட்ரோ-டாலர் கைமாறியுள்ளதா என ஆரோக்கியம், கேட்டு சொல்வாரா?

Tuesday, August 09, 2005

குர்ஆனும் கருவியலும் (Embryology in Quran) - விஞ்ஞானிகள் ஒப்புதல்

மதமும் அறிவியலும் சந்திக்கும் ஒரு இடம் இருக்கின்றது என்ற உண்மையை ஏற்றுக் கொள்வது என்பது மேற்கத்திய சிந்தனையாளர்களுக்கும் இறைமறுப்பாளர்களுக்கும் ஏறக்குறைய சாத்தியமற்ற ஒன்றாகும்.

அறிவியல் நூல் என அறியப்படாத ஒரு வேதநூலாகிய குர்ஆனில் தற்கால அறிவியல் உண்மைகள் அடிக்கோடிடப் பட்டிருக்கின்றன என சம்பந்தப்பட்ட துறை வல்லுநர்களின் வாக்குமூலங்களையே ஆதாரமாக வைத்தபோதும் பெட்ரோ-டாலர் கைமாறி இருக்கிறலாம், ஆணாதிக்கத்தை அறிவியல் உதவியுடன் சொல்கிறார்கள் என ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள். இவ்விதண்டாவாதங்களுக்கு காழ்ப்புணர்ச்சியன்றி வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

கருவின் வளர்ச்சி பற்றிய ஆய்வுகளை குர்ஆன் தான் தொடங்கியது என்று யாரும் சொல்லவில்லை. அதில் சொல்லப்பட்டுள்ள சில குறிப்புகள் இன்றைய அறிவியல் உண்மைகளுடன் பொருந்துகின்றன என்றே சொல்கிறோம். இஸ்லாத்திற்கு முன்பே இது பற்றிய ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. ஆனால் குர்ஆனில் சொல்லப் பட்டுள்ளது போன்று அறிவியல் நுணுக்கமாக சொல்லப்படவில்லை என்பதே நமது வாதம்.

மனிதனின் தோற்றம் பற்றிய ஆய்வு மனித இனம் தோன்றியது முதல் மனிதனுக்கு அவசியமாகி இருக்கிறது. ஒழுங்கான அமைப்புகளுடன் யுகங்களாக பிறந்து வளர்ந்து இறக்கும் மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என சார்லஸ் டார்வின் சொன்னதையும், தலையிலிருந்தும், மார்பிலிருந்தும், இடையிலிருந்தும், காலிலிருந்தும் பிறந்தான் என்பதையும் ஏற்றுக் கொள்பவர்கள், கீழே சொல்லப்பட்டுள்ள விஞ்ஞானிகளின் வாக்குமூலங்களையும் ஏற்க மறுப்பது ஏனோ?

தங்கள் நம்பிக்கையில் தற்கால அறிவியல் உண்மைகளையும் இன்னும் பல வாழ்வியல் உண்மைகளையும் ஒருங்கே கொண்டுள்ள குர்ஆனும் ஹதீஸும், எங்கே தங்கள் நம்பிக்கையில் (பிழைப்பில்?) மண் அள்ளிப் போட்டுவிடுமோ என்ற குறுகிய சிந்தனையால் அறிவுக்கு பொருந்தாத காரணங்களைச் சொல்லி ஒதுக்காமல், ஆதாரங்களுடன் விவாதிக்க தயங்குவது ஏனோ?

கருவியல் பற்றி குர்ஆனுடன் ஒப்பீடு செய்த விஞ்ஞானிகளின் வாக்கு மூலங்களை அப்படியே இங்கு பதிந்து மறுப்பவர்கள் அறிவியல் ஆதாரங்களுடனும், தங்கள் மத வேத ஆதாரங்களுடனும் மறுக்கட்டும். முடிவை நடுநிலையாளர்கள் சொல்லட்டும்.

1) டாக்டர். கீத் மூர்: (Professor Emeritus, Department of Anatomy and Cell Biology, University of Toronto. Distinguished embryologist and the author of several medical textbooks, including Clinically Oriented Anatomy (3rd Edition) and The Developing Human (5th Edition, with T.V.N. Persaud).

டாக்டர். கீத் மூர் அவர்கள் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசும் பொழுது:

"கரு வளர்ச்சியின் நிலைகளைப் பற்றி கோழி முட்டையில் தம் ஆய்வை நிகழ்த்தி, இன்றுள்ள அறிவியல் உலகிற்கு கரு வளர்ச்சி பற்றிய முதன் முதல் அறிவை வழங்கியவர் அரிஸ்டாட்டில் என்ற அறிவியலாளர் தான். ஆனால் அவர் கூட குர்ஆன் கூறிய அளவிற்கு கருவின் பல வளர்நிலைகளைப் பற்றி குறிப்பிடவில்லை.

எனக்குத் தெரிந்த வரை, இந்த 20-ம் நூற்றாண்டில் தான் மனிதனின் கருவின் வளர்நிலைகளைப் பற்றிய அறிவியல் அறிவை சிறிதளவே விஞ்ஞானிகள் பெற்றிருந்தனர்.

இதன் மூலம் குர்ஆனில் கூறப்பட்டுள்ள மனிதனின் கரு வளர்நிலைகளைப் பற்றிய செய்திகள் (குர்ஆனிய வசனங்கள்) யாவும், அது 7-ம் நூற்றாண்டில் வாழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பதிலிருந்து, திருமறைக் குர்ஆன் கொண்டுள்ள மனிதனின் கரு வளர்நிலைகளைப் பற்றிய செய்திகள் யாவும் மனிதனின் அறிவு சார்ந்த அறிவியல் கண்டுபிடிப்புகளாக இருக்க முடியாது என்பதும் தெளிவாகிறது.

மேலும், திருமறைக் குர்ஆனானது இறைவன் அவனது திருத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கிய வேதம் தான் என்ற ஒரே இறுதி முடிவுக்குத் தான் நம்மால் வர இயலுகின்றது. ஏனெனில், ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த எழுதப் படிக்கத் தெரியாத, எந்த அறிவியல் பயிற்சியும் பெற்றிராத முஹம்மது நபி (ஸல்) அவர்கள், இன்றைய அறிவியலுக்கு முரண்படாத கருத்துக்களை பெற்றிருந்திருப்பார்கள் என்பதை நம்மால் கூற இயலாது"

2) டாக்டர். T. V. N பெர்சௌத்: (Dr. T. V. N. Persaud is Professor of Anatomy, Professor of Pediatrics and Child Health, and Professor of Obstetrics, Gynecology, and Reproductive Sciences at the University of Manitoba, Winnipeg, Manitoba, Canada)

இவர் கனடாவின் வின்னிபெக் நகரில் உள்ள, மனிடோபா மருத்துவப் பல்கலைக்கழகத்தில், உடலியல், குழந்தை மற்றும் குழந்தை நலம்: மகப்பேறு மற்றும் மகப்பேறு மருத்துவம்: இனவிருத்தி அறிவியல் ஆகிய துறைகளில் பேராசிரியராகப் பணி புரிகின்றார்.

இந்தப் பல்கலைக்கழகத்தில் 16 வருடங்கள் உடலியல் துறைச் சேர்மனாகப் பணியாற்றியுள்ளார். இங்குள்ள மருத்துவத் துறையில் மிகவும் பிரபலமானவராகவும் இருக்கின்றார். மேலும் மருத்துவத் துறை சம்பந்தமாக 22 நூல்களும், 181 ஆய்வுரைக் கட்டுரைகளையும் எழுதி உள்ளார். 1991 ல் கனடாவின் உடலியல் மருத்துவக் கழகத்தின் மதிப்புமிக்க விருதான J.C.B. விருதை, இவரது உடலியல் துறை ஆய்வுக்காகப் பெற்றார்.

அவரிடம் திருமறைக் குர்ஆனில் கூறப்பட்டிருக்கும் அறிவியல் அற்புதங்கள் பற்றிக் கேட்டபோது, அவரது ஆராய்ச்சிக்குப் பின் கீழ்கண்ட கருத்தை வெளியிட்டார்.

"முஹம்மது அவர்கள் படிக்கத் தெரியாத, எப்படி எழுதுவது என்று கூட அறியாத சாதரண மனிதராகத் தான் எனக்குத் தோன்றுகிறது. சுருங்கச் சொல்லப் போனால் அவர் ஒரு படிப்பறிவில்லாதவர்.

மேலும் நாம் இங்கே பேசிக் கொண்டிருப்பது 14 நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்களைப் பற்றியுமாகும். எழுத்தறிவு, படிப்பறிவே இல்லாத ஒருவர் இன்றைய அறிவியல் உண்மைகளுக்கு மாற்றமில்லாத வகையில், இவ்வளவு ஆழமான அறிவியல் கருத்துக்களை எவ்வாறு கூற முடிந்தது என்பது மிகவும் ஆச்சரியமான ஒன்றே.

சந்தர்ப்பவசமாக நிகழ்ந்தது என்று கூட என்னால் கூற இயலவில்லை. ஏனெனில் ஒன்றல்ல இரண்டல்ல அதிகமான அளவில், மிகச் சரியான அளவில் அல்லவா அதன் அறிவியல் உண்மைகள் அமைந்துள்ளன. டாக்டர் மூர் அவர்களைப் போல எனக்கும், இது இறைவனால் (முஹம்மது (ஸல்) அவர்களுக்கு) அருளப்பட்டது அல்லது வழங்கப்பட்ட (வேதம்) என்பதை ஏற்றுக்கொள்ள எந்த சிரமமும் தோன்றவில்லை"

என்ற அறிக்கையை தனது ஆய்வுகளுக்குப் பின் அவர் வெளியிட்டார்.

மேலும் அவர் ஆய்வு செய்த மேற்கண்ட குர்ஆனிய வசனங்களையும் மற்றும் முஹம்மது (ஸல்) அவர்களின் பொன் மொழிகளையும், தனது ஆய்வு நூற்களில் மேற்கோடிட்டுக் காட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தான் கலந்து கொண்ட பல்வேறு ஆய்வரங்கங்கள், கூட்டங்களில் இது பற்றிப் பேசியும் உள்ளார்.

3) டாக்டர். மார்ஷல் ஜான்ஸன்: (Dr. E. Marshall Johnson is Professor Emeritus of Anatomy and Developmental Biology at Thomas Jefferson University, Philadelphia, Pennsylvania, USA)

இவர் அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாநிலத்தின் பிளடெல்பியா நகரின் தாமஸ் ஜெஃப்ஃபர்ஸன் பல்கலைக்கழகத்தில் உடற்கூறு இயல் மற்றும் உயிரியல் வளர்ச்சி இயல் துறைப் பேராசிரியராகவும் இருக்கின்றார். டேனியல் பாக் கல்வி நிறுவனத்தின் டைரக்டராகவும், அதிலேயே 22 ஆண்டுகள் பேராசிரியராகவும், உடலியல் துறைச் சேர்மனாகவும் பணியாற்றி உள்ளார். 200க்கும் மேற்பட்ட பத்திரிக்கை வெளியீடுகளைச் செய்துள்ளார்.

"திருமறைக் குர்ஆன் கருவின் வளர்நிலைகளின் வெளிஅமைப்பை மட்டும் விவரிக்கவில்லை. கருவின் உள்வளர்நிலைகளின், அவற்றின் படைப்பு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை இன்றைய அறிவியலினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாபெரும் நிகழ்வுகளில் இருந்து பிறழாது தனது கருத்துக்களை தெளிவாவே விவரித்துள்ளது.

நான் ஒரு விஞ்ஞானி என்ற முறையில், நான் தெளிவான முறையில் அறிந்தவற்றை மட்டுமே என்னால் கையாள இயலும். இதில் கருவியலையும், உயிரியல் வளர்நிலை இயல் ((Developmental Biology) ஆகிய துறைகளை நான் நன்கு அறிவேன். எனக்கு மொழிமாற்றம் செய்து கொடுக்கப்பட்ட குர்ஆனின் வசனங்களையும் என்னால் தெளிவாகவே புரிந்து கொள்ள முடிந்தது.

உங்கள் முன் ஒரு உதாரணத்தை சொன்னது போல், இந்த குர்ஆனிய வசனங்கள் வெளிப்பட்ட நாளில் இன்று உயிருடன் இருக்கும் என்னை உட்படுத்திப் பார்ப்பேனேயாகில், இன்று என்னால் அறிந்து கொள்ள முடிந்த விசயங்களையும், விவரிக்கப்பட்டுள்ளவைகளையும், குர்ஆனில் அன்று விவரிக்கப்பட்டது போல் என்னால் விவரிக்க இயலாது.

முஹம்மது என்ற அந்தத் தனி மனிதர் எங்கோ சென்று இந்தத் தகவல்களைப் பெற்றிருக்க வேண்டும் என்ற கருத்திற்கான எந்த ஆதாரத்தையும் என்னால் காண இயலவில்லை. ஆகையால், அன்று முஹம்மது எழுதிய* இந்த எழுத்துக்களை அவர் பெற்றதில் ஏதோ ஒரு தெய்வீக தலையீடு நிகழ்ந்திருக்க வேண்டும் என்று தான் எண்ணத் தோன்றுகின்றது."

என்று குறிப்பிட்டுப் பேசினார்.

*முஹம்மது (ஸல்) அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவராகவே இருந்தார். ஆனால் இறைவனால் அவருக்கு அருளப்பட்ட வசனங்களை தன்னருகில் இருக்கும் தன் தோழர்களுக்கு ஓதிக் காண்பித்து, அதை அவர்கள் மணனமிட்டும், எழுதியும் பாதுகாத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட உரையில் அவர் குறிப்பிட்டதை அப்படியே மொழியாக்கம் செய்து தர வேண்டும் என்பதால், அவரது உரையில் மாற்றம் செய்யாமல், இந்த அடிக்குறிப்பைத் தந்துள்ளோம்.

4) டாக்டர். ஜெரால்ட் C. கோரிங்கர் (Dr. Gerald C. Goeringer is Course Director and Associate Professor of Medical Embryology at the Department of Cell Biology, School of Medicine, Georgetown University, Washington, DC, USA)

இவர் அமெரிக்காவின் வாஷிங்டன் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் செல் உயிரியல் துறையில் கருவியல் பாடத்திட்டப் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார். சௌதி அரேபியவின் தலைநகர் ரியாத்தில் நடைபெற்ற சௌதி மருத்துவக் கருத்தரங்கில் கலந்து கொண்டு அவர் பேசும் போது,

"சில குர்ஆனிய வசனங்கள், மனித கரு வளர்ச்சியின் ஆரம்ப நிலையிலிருந்து, அதாவது ஆணின் விந்தும், பெண்ணின் கரு முட்டையும் சந்தித்து ஒன்று சேர்ந்து கொண்ட நிலையிலிருந்து உறுப்புகளின் வளர்ச்சியினூடாக செல்லும் மனித கரு வளர்ச்சியின் நிலைகளைத் தெளிவாகவே விவரிக்கின்றது.

மேலும் மனித கரு வளர்ச்சியின் நிலைகளைப் பற்றிய அவற்றை வகைப்படுத்துதல், கலைச் சொல்லாக்கம், பட்டியலிடுதல் போன்ற குறிப்பான தகவல்கள் இது வரை முன்பு எங்கும் இருந்ததில்லை.

இன்னும் சொல்லப் போனால், பரம்பரை பரம்பரையாக இலக்கியங்களில் வரக் கூடிய இது போன்ற அறிவியல் தகவல்கள் பல நூற்றாண்டுக் கால ஓட்டத்தில் அவை வழக்கிழந்து போயிருக்க வேண்டும். ஆனால், மனித வளர்ச்சியைப் பற்றி குர்ஆன் கூறியிருக்கும் கருத்துக்கள் இன்னும் காலத்தால் அழியாமல் நிலைத்து நிற்கின்றன"

என்று கூறினார்.

5) பேரா. டிஜாடட் டிஜாசென்:(Professor Tejatat Tejasen is the Chairman of the Department of Anatomy at Chiang Mai University, Chiang Mai, Thailand)

இவர