Sunday, May 21, 2006

மூத்த இந்தியர் - ஹபீப் மியான்



ஜெய்ப்பூரில் பிறந்த ஹபீப் மியான் என்ற முதியவர் தனது 137 ஆவது பிறந்த நாளை நேற்று கொண்டாடியுள்ளார்! இவர் பிறந்தது மே-20,1878 ஆம் ஆண்டு. இந்தியாவின் மூத்த குடிமகன் என்ற சிறப்பால் ஏற்கனவே 2005 ஆம் ஆண்டு லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இவர் பெயர் இடம் பெற்றுள்ளது. தற்போது கின்னஸிலும் இவரை அங்கீகரிக்கப் போவதாக இவரின் 65 வயது பேரன் சோட்டா மியான் கூறியுள்ளார்.



ஹபீப் மியான் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளதை கெளரவிக்கும் வகையில் ஜெய்ப்பூர் நகர மேயர் நேற்று விருந்து கொடுத்து உபசரித்துள்ளார். இந்தியாவில் ராஜஸ்தான் மாநில பேண்டு வாத்திய கோஷ்டியில் பணி புரிந்துள்ள ஹபீப் மியான் 2004 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து மக்காவுக்கு புனிதப்பயணம் மேற்கொண்டு ஹஜ்ஜுக் கடமையையும் முடித்துள்ளார் என்பது உற்சாகமான கூடுதல் தகவல்.

இந்த தாத்தாக்களின் தாத்தாவாகிய ஹபீப் மியானின் உண்மையான பிறந்த நாள் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் முதியோர் பெண்சன் ஆவணங்களின் மூலம் நிரூபனமாகியுள்ளது. அதுவும் கடந்த அறுபத்து ஐந்து வருடங்களாக பென்சன் வாங்கி வருகிறாராம்.

ஆறு தலைமுறைகளைக் கண்ட இந்த இந்தியக் குடிமகனை நாமும் வாழ்த்துவோமே!

Wednesday, May 17, 2006

மதங்களும் பெண்ணியமும்.

விண்ஸ்டன் சர்ச்சிலிடம் ஒருவர், "பெண்கள் சம உரிமை பெறுவதற்கு என்ன வழி? என்று கேட்டதற்கு, "பெண்கள் தங்களிடமுள்ள உரிமைகளில் பாதியை ஆண்களுக்குக் கொடுத்து விட்டாலே போதும்! என்றாராம்.

பெண்ணியம்/ பெண்ணுரிமை பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் இஸ்லாத்தையும் புழுதிவாரித் தூற்றுவது நவீன பெண்ணியவாதிகளின் (?) அடிப்படைத் தகுதியாகி விட்டது . யார் இந்த பெண்ணியவாதிகள்? அது என்ன பெண்ணியம்? பெண்ணியம் பற்றி வாய்கிழியப் பேசும் இவர்களின் உண்மையான தகுதிதான் என்ன? இஸ்லாம் பெண்ணியத்திற்கு எதிரானதா? பெண்ணியம் பேசுபவர்கள் உண்மையில் பெண்ணியம் / பெண்ணுரிமை பற்றித்தான் பேசுகிறார்களா? என்று சீர்தூக்கி ஆராய்ந்தால் இவர்களின் அளவிட முடியா அறியாமையும் இஸ்லாத்தின் மீதான ஒருபக்கச் சார்பு விமர்சன இலட்சணமும் சந்திக்கு வந்து நாறும் ; இஸ்லாமியக் குரோதம் பல்லிளிக்கும்.

கிறிஸ்தவர்களின் வேதமான பைபிளில் முதல் மனிதன் ஆதாம் (ஆதம் அலை…) தவறிழைக்கக் காராணமானவள் ஏவாள் (ஹவ்வா அலைஹி…) என்று சொல்லப்பட்டு பெண்கள் அடக்கி வைக்கப் பட்டார்கள். (முன்னாள் கிறிஸ்தவர் என்று தன்னைக் குறிப்பிட்டுக் கொண்ட ஒரு பெண்ணியவாதி என்று கூறிக் கொண்டவர், முதல் பெண்ணுக்கு இஸ்லாத்தில் பெயரே இல்லை என்று தனது உயர்ந்த (?) தரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டார்.)

கி.பி. 586 ஆம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள், பெண்கள் மனித இனத்தை சார்ந்தவர்களா இல்லையா என ஆராய ஒரு கமிட்டியை அமைத்தனர். கி.பி.1567 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து நாடாளுமன்றம் பெண்களுக்கு எந்த உரிமையும் கொடுக்ககூடாது என சட்டம் இயற்றியது. கி .பி.1805 ஆம் ஆண்டுவரை ஒரு கணவன் தன் மனைவியை விற்பது கூடும் (விலை ஆறு பென்னிகள்) என ஆங்கிலேய சட்டங்களில் இருந்தது. கடந்த 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை ஆங்கிலேய பொதுச் சட்டபடி பெண்கள் பிரஜா உரிமையின்றி இருந்தனர்.

இராமாயணக் கதாநாயகி சீதை மாயமானுக்கு ஆசைப் பட்டிருக்காவிட்டால் இராமாயணமே இல்லை. அவள் தன் கற்பை நிரூபிக்கத் தீக்குளிக்க வேண்டியிருந்தது தனிக்கதை.

கணவன் துர்ப்பழக்கமுள்ளவனாக இருந்தாலும் அந்நிய ஸ்திரீ லோலனாக இருந்தாலும், நற்குணம் இல்லாதவனாக இருந்தாலும் பதிவிரதையான ஸ்திரீயானவள் அவனைத் தெய்வத்தைப் போல பூசிக்க வேண்டியது. (அத் .5. சு .154) (புள்ளிராஜா வியாக்கியானம் பேசிய பெண் கற்பு புகழ் ஸ்ரீமான் கவனிக்க)

பெண்களையும், பிராமணரல்லாதாரையும் கொல்லுதல் பாதகமாகாது.(அத் .11. சு .65)

இப்படிப் பொதுவான /இயல்பான தவறுகளுக்கும் கூட பெண்களே காரணம் என்று ஆதி காலந்தொட்டே பெண்ணினம் ஏதோ ஒரு வகையான அடக்கு முறைக்கு ஆளாகிக் கொண்டே வந்துள்ளது. இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் மனித வரலாற்றைப் பார்த்தோமென்றால் எப்போதெல்லாம் சத்திய நன்னெறி பின் தள்ளப்பட்டு அசத்தியக் கோட்பாடுகள் தலையெடுத்தனவோ அப்போதெல்லாம் ஏறக்குறைய எல்லா சமூக அவலங்களும் அரங்கேறியுள்ளன . அவற்றுள் முன் வரிசையில் பெண் அடக்கு முறை இடம் பிடிக்கின்றது.

இறைத்தூதர்கள் வழியாக இடையிடையே இஸ்லாமிய நன்னெறி புத்துயிர் பெற்ற போதெல்லாம் பெண்ணுக்கு அவளுடைய இயல்பான உரிமை வழங்கப்பட்டு வந்துள்ளது.

வரலாற்றில் ஆணித்தரமாகப் பதிவாகியுள்ள செய்திகளின் அடிப்படையில் பார்த்தோமென்றால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெண்ணியக் கொள்கை தலையெடுத்தது. பெண் விடுதலைக்கான வாசல் திறந்தது, என்பதைப் படிக்கலாம். ஆனால், உண்மை நிகழ்வுகளை அலசிப் பார்த்தோமென்றால் பெண்ணுக்கான உண்மையான சுதந்திரம் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இஸ்லாமின் மூலமாகத்தான் கிடைத்துள்ளது என்பதை நியாயச் சிந்தனையுள்ள எவரும் மறுக்க மாட்டார்கள் .

சமவுரிமை, சமத்துவம் என்றெல்லாம் பேசும் இன்றைய பெண்ணியச் சிந்தனை பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறப்பெடுத்தது . கற்பனைச் சமூகவியலாளரான சார்லஸ் ப்யூரியே என்பவர் தாம் முதலில் பெண்ணியம் (Feminism) என்ற சொல்லை 1837 இல் கையாண்டார். அதன் பின்பு அது தொடர்ந்து வளர்ச்சியடைந்து கொண்டே சென்று இன்று விமர்சனங்களின் விளிம்பில் வந்து நிற்கின்றது.

பெண்களின் உரிமைகளாக வெவ்வேறு பெண்ணியக் குழுக்கள் முன் வைக்கும் சம உரிமை, ஆண்களுக்கு நிகரான வேலைவாய்ப்புகள் , தனித்துவம், பாலியல் சுதந்திரம், ஓரினச் சேர்க்கை, போன்றவற்றைப் பற்றி இஸ்வாம் என்ன கருதுகின்றது என்பதையும் பிறமதங்கள் வழங்கியுள்ள பெண்ணுரிமைகளையும் நாம் பார்த்தாக வேண்டியிருக்கிறது .

பெண்ணுரிமை /பெண்ணியம் பற்றிய விவாதங்களில் இஸ்லாம் பெண்ணுக்கு இன்னென்ன உரிமைகளை வழங்கி இருக்கின்றது என்று பட்டியலிட்டால், அவையொன்றும் புதிதல்ல எங்கள் மதமும் இன்னென்ன உரிமைகளை வழங்கியுள்ளன என்று எதிர்விவாதம் செய்ய வக்கில்லாதவர்கள் இஸ்லாத்தில் பர்தா, தலாக் போன்றவற்றைச் சொல்லி இஸ்லாம் வழங்கி இருக்கும் பெண்ணுரிமைகளை பின் தள்ளுவதிலேயே குறிக்கோளாயுள்ளனர் .

அதே போல் முஸ்லிம்களிலேயும் சிலர் , மாற்று மதத்தார் வைக்கும் குற்றச்சாட்டுகளைத் தெளிவுபடுத்த முனையாமல் இந்து மதத்திலும் தோசங்கள் , உடன்கட்டை ஏறுதல், மறுமண உரிமையின்மை , சொத்துரிமையின்மை போன்றவற்றைச் சொல்லி அவற்றில் உள்ளதை விட இஸ்லாத்திலும் பெண்ணுக்கு எதிரான அடக்குமுறைகள் உள்ளன என்பது போல் சொல்லி பெண்ணுரிமை பற்றிய விவாதங்கள் முடிவற்று செல்கின்றன .

இஸ்லாம் வழங்கி இருக்கும் பெண்ணுரிமைகளைப் பின்னுக்கு வைப்போம். குர்ஆனில் உள்ள கட்டளைகளை ஆண்களை முன்னோக்கிச் சொல்லப்படும் இடங்களில் ஆணாதிக்க மனப்பான்மை இருப்பதாகவே வைத்துக் கொள்வோம் . இதன் மூலம் இவரகள் சொல்ல வருவதுதான் என்ன?

இஸ்லாம் அல்லாத மதங்கள் பெண்ணுரிமையை வழங்கி விட்டன என்றோ அல்லது இஸ்லாத்தைப் பின்பற்றாத மேற்குலகில் பெண்களெல்லாம் சமத்துவம் பெற்று விட்டார்கள் என்றோ என்றால் அதுவும் இல்லை. மாறாக, "இஸ்லாத்தில் பெண்ணுரிமை இல்லை" என்ற (Stereo-type) கூக்குரல் மட்டுமே மிகைக்கிறது . இதுவா விமர்சன நியாயம் ?

இந்திய அரசியல் சட்டத்தின் படி மதநம்பிக்கையின் பெயராலோ அல்லது வேறு எந்த காரணத்துக்காகவும் ஒரு உயிரைக் கொல்வது தண்டனைக்குரிய குற்றம். சதி என்ற உடன்கட்டை இந்து மதத்தில் இல்லை என்பவர்கள் தங்கள் நால்வகை வேதங்களிலிருந்து நிரூபிப்பதில்லை. மாறாக இந்திய அரசியல் சட்டத்தையோ அல்லது உலகச் சட்டத்தையோ முன் வைப்பார்கள். இவற்றிகும் இந்துமத வேதங்களுக்கும் என்ன சம்பந்தம்?

இந்தியாவில் பெண்ணுரிமைக்காக வாதிட்ட சிந்தனையாளர்களில் எத்தனைபேர் இந்து மதத்தை முன்னிறுத்தி பேசினார்கள்? அம்பேத்கர் , பெரியார் போன்றோர் இந்து மதத்தை கைவிட்டுதானே அப்படிப் பேச முடிந்தது!

தீவிர இந்துத்துவவாதியாகவோ அல்லது ஆன்மீகக் குரு என்று சொல்லப்படும் சங்கராச்சாரியாராகவோ இருந்தாலும் சரி, அவர்களால் இந்து மதத்தில் பெண்ணுரிமை உள்ளது என உண்மையாகச் சொல்ல முடியாது .

மாறாக அத்தகைய பெண்ணடிமைத்தனத்திற்கும் அடக்குமுறைக்கும் சார்பாக நியாயம்தான் கற்பிக்க முடியும் என்பதற்கு அவர்களின் பல்வேறு உபதேசங்களே சான்றாக இருக்கின்றன . உடன்கட்டை ஏறுவதைத் தடுத்தால் தன் உயிரைக் கொடுத்தாகிலும் அதை நிலை நிறுத்துவேன் என்றார் வடநாட்டு சங்கராச்சாரியார்.


இஸ்லாத்தில் பெண்களெல்லாம் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்றால் இன்னும் ஏன் தலாக், வரதட்சணை , அடக்கு முறை, பாலியல் துன்புறுத்தல்கள், சிறைக் கொடுமைகள் போன்று எத்தனை எத்தனையோ தளைகளை அவர்கள் தங்கள் கழுத்துக்களில் சுமந்து கொண்டுள்ளார்கள் எனக் கேட்கலாம் . இவற்றையெல்லாம் எதிர்க்க வீறு கொண்டு நாம் போராடுவோம். பெண்ணியம் என்கிற பேனரின் கீழ் அல்ல!

மேலும் இத்தகைய சமூக அவலங்களுக்கு இஸ்லாத்தை அரைகுறையாகப் பின்பற்றும் முஸ்லிகளே காரணமின்றி இஸ்லாம் அல்ல என்ற உண்மையை விளங்கிக் கொண்டால், பெண்ணுரிமைக்கும் ஆண் -பெண் சமத்துவத்திற்கும் ஏற்ற மார்க்கம் இஸ்லாமே என்பது நியாய உணர்வுள்ள எவருக்கும் விளங்கும் .

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

Tuesday, May 09, 2006

இதனால் சகலமானவர்களுக்கும்...

சம்மர் ஹாலிடேஸ் மற்றும் தேர்தல் களேபரங்களுக்கிடையில் சிக்குண்டு சற்று இடைவெளியிட்டு வலைப்பூக்கள் பக்கம் வந்து பார்த்தபோது ‘நேச’மான சிலரால் எனக்கு “கொ.ப.செ.” பதவி வழங்கப்பட்டிருந்தது. அவ்வப்போது என் பதிவுகளில் அனானிமஸாக வந்து என்னை பாகிஸ்தான் அபிமானி, தாலிபான் அனுதாபி, தீவிரவாத ஆதரவாளன் என்ற பன்முனை தாக்குதல் தொடுத்து என் இந்திய தேசபக்தி தீவிரவமாகத் தாக்கப்பட்டுள்ளது.

இவை என் பதிவுகளுடன் தொடர்பில்லாததால் முடிந்தவரை பதில் கொடுப்பதை தவிர்த்துள்ளேன். எனினும் மீண்டும் மீண்டும் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து நான் பார்வையிடாத பல வலைப்பூகளில் சேறு வாரி இறைப்பவர்களுக்காகவும், என்னிடம் பதில் வேண்டி பின்னூட்டம் இட்டவர்களுக்காகவும் இப்பதிவு.

என் வலைப்பூ பிரவேசத்தின் நோக்கம் ஒன்றும் பிரம்மாதமானது இல்லை. இன்றைய உலகக் கல்வியிலும் இணைய/கணினி அறிவிலும் பின் தங்கிய நிலையிலேயே பெரும்பாலான இஸ்லாமியர்கள் இருந்து வரும் நிலையில், சல்மான் ருஷ்டிக்குப் பிறகு இஸ்லாத்தை அநாகரிகமாகவும் வக்கிரமாகவும் தமிழ் வலைப்பூக்களில் விமர்சித்து வந்ததைக் கண்டு அதிர்ந்தே, இரண்டிலும் ஓரளவு அறிமுகமுள்ளதால் இஸ்லாத்தின் மீது இஸ்லாம் அல்லாதவரால் வைக்கப்படும் இணைய அவதூறுகளுக்கு நான் விளங்கிய வரையிலான விளக்கங்களை கொடுப்பதற்காகவே தமிழ் வலைப்பூவாசியானேன்.

என் பதிவுகளுக்கான தகவல்களை இணையத்திலிருந்தே மேற்கோலிடுகிறேன். தனிப்பட்ட முறையில் எனக்கு யார் மீதும் வெருப்பில்லை. பொதுவான உண்மையைக் கூட பொய்யும் அவதூறும் கலந்து எழுதும் எழுத்துத் தீவிரவாதிகள் மீது மட்டும் சில நேரங்களில் தற்காலிக கோபமுண்டு. பிறருக்கு விளக்கம் கொடுப்பதற்கான தேடலில் இருக்கும் போது நம் தேடல்களுக்கும் மறைமுகமான விடை கிடைக்கும் சந்தோசத்தாலேயே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வலைப்பூவில் சுற்றி வருகிறேன்.

சில நாட்கள் இடைவெளியில் மீண்டும் வலைப்பூக்கள் பக்கம் வந்த போது என் பழைய பதிவுகளுக்கான பின்னூட்டங்கள் கேள்விகளாக நிறைந்திருக்கின்றன. அவை எல்லாவற்றிற்கும் சம்பந்தப்பட்ட பதிவுகளுக்குச் சென்று பின்னூட்டமிடும் அளவுக்கு பொறுமையும் நேரமும் இல்லையாதலால் இதுவரை பதில் சொல்லாமல் இருக்கும் பல பின்னூட்டக் கேள்விகளுக்கு விளக்கமாக இப்பதிவை எடுத்துக் கொள்ளும் படி சம்பந்தப்பட்டவர்களை வேண்டுகிறேன்.

1) சூரிய நாரயணன் படுகொலை பற்றி…

நான் தனியாக பதிவு எழுதவில்லை. அதற்காக அதை ஆதரிக்கிறேன் என்பதுபோல் குற்றம் சாட்டுவது உலக மகா அபத்தம். சூரிய நாராயணாவின் படுகொலை குறித்து கண்டித்துள்ள ஒரு சில பதிவுகளில், தாலிபான்கள் பற்றிய எழுதியதை முடிச்சுப்போட்டு இதுதான் வாய்ப்பென்று என்னையும் கண்டிக்கச் சொல்லி சில நல்லெண்ணம் படைத்த வலைப்பூவாசிகள் குறிப்பாக நேசகுமார், ரோசாவசந்த் போன்றவர்கள் வேண்டியிருந்தார்கள். முக்கியக் காரணம் யாதெனில் மதரஸாக்கள் தீவிரவாதப்பட்டரைகளா? என்ற பதிவில் ஏழைக்குழந்தைகளுக்கு (பெரும்பாலும் அநாதைகள்) கல்வி கற்பிக்கும் மதரஸாக்களையும் அவற்றில் படிப்பவர்களையும் தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கிற்கு எதிராக, உண்மையில் மதரஸா என்றால் என்ன? அதன் செயல்பாடுகள், படிப்புகள், நோக்கங்களைச் சொன்னேன்.

இஸ்லாமிய மதரஸாக்கள் எவ்வாறு மற்ற கல்வி நிலையங்களிலிருந்து வேறுபடுகின்றன எனச் சொல்ல மதரஸா மாணவர்களின் புரட்சியால் உருவான 'தாலிபான்'கள் பற்றியும் சொல்லி இருந்தேன். பாமியான் சிலை இடிப்பு பற்றிய ஒருவரின் பதிவில் இஸ்லாம் பிற மத வழிபாட்டுத்தளங்களை இடிக்கச் சொல்கிறது. ஆகவேதான் தாலிபான்கள் புத்த விகாரங்களை இடித்தார்கள் என்பது போல் ஒருவர் சொன்னபோது, தாலிபான்களின் பாமியான் சிலை இடிப்பிற்கான காரணத்தை இணைய தளங்களிலிருந்து எடுத்து விளக்கினேன்.

2) இஸ்லாம் உண்மையில் தீவிரவாதத்தை எதிர்க்கிறதா? ஆதரிக்கிறதா? இதில் என் நிலை என்ன?

இறைவன் வழிகாட்டியக் கொள்கையில் விடாப்பிடியாக இருந்த ஒரே காரணத்துக்காக அடக்குமுறைக்கும் அநியாயத்திற்கும் ஆளாக்கப்பட்ட சாமான்ய மனிதரான முஹம்மது நபி மற்றும் அவரின் தோழர்களின் சோகத்தால் எழுதப்பட்டதே இஸ்லாமிய வெற்றி வரலாறு.

அடக்கப்பட்டவர் வெகுண்டெழும்போது பாதிக்கப்படும் கொடுங்கோளர்களால் சொல்லப்படும் பொய்க்காரணமே தீவிரவாதம். ஆங்கிலேய ஆக்கிரமிப்புக்கு எதிராக போரிட்ட இந்தியர்களும், இலங்கை அரசின் பாரபட்ச அடக்குமுறைக்கு எதிராக போரிடும் ஈழர்களும் எப்படி தீவிரவாதிகளில்லையோ அதே போல்தான் எல்லாவகை அடக்குமுறைக்கும் ஆக்கிரமிப்பிற்கும் எதிராக போரிடுபவர்களும் போராளிகளேயன்றி தீவிரவாதிகளல்ல.

அடக்கப்பட்டவர் வெகுண்டெழுவதில் நியாயம் இருப்பினும் அவர் யாருக்கு எதிராக போரிட வேண்டும் என்று வரைமுறைகளையும் இஸ்லாம் வகுக்கத் தவறவில்லை. அத்தகைய வரைமுறைகளை விட்டு அநியாயமாக அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்தும் எவரும் அவர் எம் தேசத்தவாகிலும், மதத்தவராகிலும் தீவிரவாதியே. இவர்கள் குர்ஆனைக் கற்ற/கற்காத தாலிபான்களாயினும் சரி; இஸ்லாத்தின் போர்வாள் எனச் சொல்லிக் கொள்லும் எந்தக் கொம்பனாக இருந்தாலும் சரியே. இதே அணுகுமுறையே மற்ற மத/கொள்கைத் தீவிரவாதிகளுக்கும் பொருந்தும். இதுவே என் நிலைப்பாடு.

மற்றபடி அஹிம்சை பற்றியும் இஸ்லாத்தின் உணவுக்கட்டுப்பாடுகள் பற்றியும் சிலர் கேள்வி கேட்டிருந்தார்கள். இன்ஷா அல்லாஹ் அவர்களுக்கும் முடிந்தவரை விரைவில் பதிலிடுகிறேன்.

Sunday, May 07, 2006

எரிகிற வீட்டில் பீடிக்கு நெருப்பு தேடுபவர்கள் - 2

தமிழ்மணம் திரட்டியின் தளக்கட்டுப்பாடுகளால் சிறிது காலம் அடங்கி இருந்த மதத் துவேசப் பதிவுகள் அவ்வப்போது தலை தூக்கவே செய்கின்றன. இக்கட்டுப்பாடுகள் மத/தனி மனிதத் தாக்குதல் நோக்கத்தோடு எழுதும் தனிப்பதிவுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் குறைந்த பட்சம் பின்னூட்டங்களிலாவது முஸ்லிம் வலைப்பதிவர்களை வம்புக்கு இழுக்காவிட்டால் சிலருக்குத் தூக்கமே வராது போலும்!

தமிழ் வலைப்பூவில் இஸ்லாமிய எதிர்ப்பைத் தனிப்பதிவாக பதிவது அல்லது பெயருக்குச் சிலவரிகளை எழுதி விட்டு, சம்பந்தப்பட்டச் செய்தியின் சுட்டியைக் கொடுப்பது அல்லது எதுவும் இல்லாத பட்சத்தில் பின்னூட்டம் வழியாக முஸ்லிம்களை விமர்சித்து நிஜமாகவே பின்னூட்டம் (!) இட்டுச் செல்வது . இவையே சில தமிழ் வலைப் பதிவர்களின் யுக்தியாக இருந்து வருகின்றது. சுருங்ககக் கூறின் பின்னூட்டமின்றி அல்பாயுசில் காணமல் போகும் வலைப்பதிவுகள், இஸ்லாமிய எதிர்ப்புவாதம் கலந்து எழுதினால் சில நாட்கள்/வாரங்கள் காலம் தள்ள முடியும் அல்லது பிரபலமாக முடியும் என்பது எழுதப் படாத விதியாகி விட்டது.

முன்பெல்லாம் (தற்போதும்கூட) அவதூறாகவும் அநாகரிகமாகவும் முஹம்மது நபியைத் திட்டித் தீர்ப்பதை முழுநேரத் தொழிலாகக் (?!) கொண்டுள்ள நேசகுமார், ஆரோக்கியம் போன்றவர்கள் தவிர்த்து படித்த பண்பாளராகக் சொல்லிக் கொண்ட கால்கேரி சிவா கூட, தான் அரேபிய நாடுகளில் (சவூதி மற்றும் அமீரகம்) பட்ட கஷ்ட நஷ்டங்களாகச் சொன்ன பதிவில் வெகு திறமையாக இஸ்லாத்தையும் இணைத்து விமர்சிக்கத் தவறவில்லை. தனி அனுபவங்களைக் கூட இப்படி காழ்ப்பாக எழுத யார்தான் பயிற்சி கொடுக்கிறார்களோ? (இவ்வளவையும் செய்துவிட்டு தனக்கு இஸ்லாமியர்கள் மீதோ இஸ்லாத்தின் மீதோ கோபமில்லை என்ற டிஸ்க்ளைய்மர் வேறு!)

அவரின் அரேபிய அனுபவ்ங்கள் பதிவில் நான் பின்னூட்டமிட்ட போது என் முகவரியும் முகமும் காட்டச் சொன்னவர், பிறகு அனாணிமஸ் பெயரில் துவேசமாகவும், அநாகரிகமாகவும் (முஸ்லிம்களை முக்கால்!? பசங்க, துளுக்கன்கள் என்ற வசைகளுடன்) ஏளனப் பின்னுட்டங்களை அனுமதித்தது அவரின் பெருந்தன்மையா அல்லது சம்பந்தப்பட்டவர்களின் முகவரியும் முகமும் அறிந்தவரா என்பது அவருக்கே வெளிச்சம்!

இஸ்லாமிய எதிர்ப்புவாதங்களில் அடிக்கடி விவாதிக்கப்படும் விடயங்களில் முக்கியமானவையாகத் தீவிரவாதம், தலாக், பெண்ணுரிமை ,பலதாரமணம் ஆகியவற்றைச் சொல்லலாம். இவற்றில் தீவிரவாதம் தவிர்த்து மற்றவற்றால் பிற மதத்தவருக்கு இஸ்லாமிய வழிகாட்டல்கள்/கலாச்சாரம் எந்தவிதத்தில் தீங்காக இருக்கின்றன என்பதை அறிவார்ந்தச் சான்றுகளுடன் விவாதிக்க யாரும் முன் வருவதில்லை.

தீவிரவாதத்தை மட்டும் முஸ்லிம்களுடன் இணைத்துச் சொல்வதில் அப்படி என்ன சுகம் காண்கிறார்களோ தெரியவில்லை! தீவிரவாதம் என்பது முஸ்லிம்களின் குலச்சொத்தா என்ன ? தீவிரவாதத்திற்கு அளவுகோல் அதனைச் செய்பவன் முஸ்லிம் பெயர் தாங்கியாக இருக்க வேண்டும் என்ற வரைமுறை வகுத்த மனிதநேயக் காவலர்கள் எவரோ? இவர்களால் எங்காவது முஸ்லிம் அல்லாத எவராவது ஒருவர் கொல்லப்பட்டால் அதற்கு இஸ்லாமிய மதத் தீவிரவாதம் என்று குதிப்பவர்கள், உலகின் பிற பகுதிகளில் அமெரிக்க-பிரிட்டன் இராணுவத்தால் கும்பல் கும்பலாகக் கொல்லப் படுவதற்கும் குஜராத்தில் முதலமைச்சரின் பூரண ஆசியுடன் இனச் சுத்திகரிப்பு செய்யப்படுவதற்கும் என்னவகைத் தீவிரவாதம் என்று விளக்கினால் நன்றாக இருக்கும்!

பெரும்பாலும் நேர்மையாக எழுதும் சிலரின் பின்னூட்டங்களில் கூட ஒட்டு மொத்த முஸ்லிம் வலைப்பதிவர்களும் இப்படுகொலையை கண்டிக்கவில்லை என்பது போல் ஒரு குற்றச்சாட்டு இருந்தது. இதுபோன்ற சம்பவங்களின் போழ்து முஸ்லிம்களில் பலர் மவுனம் காப்பது அதனை ஆதரிப்பதாக அர்த்தமாகுமா? பின்னூட்டமிட்ட சிலர் தவிர்த்து மற்றவர்கள் எல்லாம் அச்செயலை ஆதரிக்கிறார்கள் என்று அர்த்தமா? எப்படியாவது முஸ்லிம் வலைப்பதிவர்களைத் தனிமைப்படுத்தி தீவிரவாதத்துடன் இணைத்து அழகு பார்த்து விட வேண்டும் என்ற சிலரின் நப்பாசையின் வெளிப்பாடே அவ்வகைப் பின்னூட்டங்கள்!

சமீபத்தில் ஆந்திரப் பொறியாளர் சூரியநாராயணாவை ஆப்கான் தீவிரவாதிகள் படுகொலை செய்தததைக் கண்டித்து நண்பர் ஆசிப் மீரான் எழுதிய பதிவின் பின்னூட்டங்களில் விசித்திரமான சிலவற்றைக் காண நேர்ந்தது. அதில் சூரிய நாராயனாவின் படுகொலையைக் கண்டிப்பதோடு முந்தைய தாலிபான் அரசினால் ஆப்கன் மக்களுக்குத் தேவையில்லை என்று இடிக்கப்பட்ட பாமியான் சிலை இடிப்பையும் இணைத்து அதுபற்றி எழுதிய என்னையும் கண்டிக்க வேண்டி இருந்தார் ஒருமுற்போக்குச் சிந்தனை கொண்ட வலைப்பதிவர்! (பாமியான் சிலை இடிப்புக்கும் சூரிய நாராயணாவின் படுகொலைக்கும் என்ன சம்பந்தம் என்று அவருக்கே வெளிச்சம். இது பற்றி எழுதியது கூட இஸ்லாம் பிற மத வழிபாட்டுத் தளங்களை இடிக்கச் சொல்வதாக அவதூறாக ஒருவர் எழுதியதற்கு பதிலாகத்தான் என்று நினைக்கிறேன்.)

சூரிய நாராயனாவைக் கொல்வதால் தாலிபான்களுக்கு என்ன இலாபம்? ஆப்கனில் பல்வேறு நாட்டுப் பணியாளர்களும் வாழும்போது இந்தியர்களை மட்டும் குறிவைத்துத் தாக்குவதன் நோக்கம் என்னவாக இருக்கும் என்பதை ஆராயாமல் அரைகுறைச் செய்திகளை வைத்துக் கொண்டு ஒருதலைப் பட்சமாகவும் இஸ்லாத்தை விமர்சிப்பதும் எந்த வகை நியாயம்?

சகோதரர் ஆசிப் மீரான் இப்படுகொலையைக் கண்டித்து எழுதிய பதிவில் பின்னூட்டமிட்ட நேசகுமார்,

"ஒரு அனானிமஸ் முஸ்லிம் இங்கு எழுதியுள்ளார், சூரிய நாராயணன் ஒரு சி.ஐ.ஏ ஏஜன்ட் என்று. எவ்வளவு நாட்கள் தான் இப்படிப்பட்ட ஊகங்களைப் பரப்பி, மக்களை முட்டாளாக்குவீர்கள் சகோதரர்களே? ஒவ்வொரு முறை படுபாதகச் செயல்களில் ஈடுபடும் போதும், அதற்குப் பின்னால் யூதச் சதி இருக்கிறது, அவர்கள் தாங்களே குண்டு வைத்துக் கொண்டார்கள், இது கிறித்துவ - அமெரிக்க சதி என்றெல்லாம் வதந்திகளை பரப்பி, பாதகர்களுக்கு வக்காலத்து வாங்காதீர்கள்!"

("அனாணிமஸ்" பெயரில் பின்னூட்டமிட்டவர் முஸ்லிம் என்பதை அவர் மட்டுமே குறிப்பிட்டுள்ளார். தனது வாதத்திற்கு வலு சேர்க்க ஏன் அவரே கூட அனாணிமஸாக எழுதி இருக்கலாம்! ) அனானிமஸ் யாராகவாவது இருந்து விட்டுப் போகட்டும். இதே யூகத்தைச் சொல்லியுள்ள செய்திகளைச் சில தமிழ் ஊடகங்களில் வெளியானவற்றை இங்குக் குறிப்பிட்டாக வேண்டும்.

குமுதம் ரிப்போர்ட்டரில் ( 07-05-2006) "தலையை வெட்டிய தாலிபான்கள்!" என்ற கட்டுரையில்,

"சூரியநாராயணாவை ஓர் அறையில் அடைத்து வைத்திருந்தோம். அவர் காவலாளியைத் தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றார். அப்போது அவரைச் சுட்டுவிட்டோம் '' என்று தாலிபான் சார்பாக பேசிய ஒருவர் கூறினாலும் சூரியநாராயணாவின் தலையை வெட்டியது யார் என்பதற்கோ, அவர் உடலில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தற்கான அறிகுறியே இல்லை என்பதற்கோ விளக்கங்கள் இல்லை.

ஏன் இந்தியர்களைக் குறிவைத்து 'எல்லோரும் வெளியேறுங்கள் ' என்று தாலிபான் தீவிரவாதிகள் சொல்கிறார்கள்? இதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களை ஓடஓட விரட்டி அவர்களின் பிடியிலிருந்து அந்த நாட்டை மீட்ட அமெரிக்காவைப் பழிவாங்கத் தாலிபான்கள் துடிக்கிறார்கள் . அந்நாட்டுடன் இந்தியா நட்பு பாராட்டுவது தாங்க முடியாமல்தான் இந்தியர்களைக் குறிவைக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் போருக்குப் பிறகு அந்நாட்டைச் சீரமைக்க இந்தியா பல்வேறு விதங்களில் உதவி வருகிறது. சுமார் 55 கோடி அமெரிக்க டாலர்கள் பண உதவியும், அங்கே சாலைகளைச் சீரமைப்பது போன்ற பணிகளையும் செய்த இந்தியாதான், அந்நாட்டுக்கே புதிய பாராளுமன்றக் கட்டடத்தையும் கட்டிக் கொடுத்தது . அங்கு ஜாஹிர்ஷா பள்ளிவாசலைச் சீரமைத்து சுமார் 12000 மாணவர்கள் படிக்க வழி செய்தது. சுமார் 8000 பேர் பயன்பெறும் வகையில் இந்திரா காந்தி பெயரில் குழந்தைகள் மருத்துவமனை ஒன்றைக் கட்டிக் கொடுத்தது, 400 பேருந்துகள், தொலைத்தொடர்புத் துறைக்கு சாட்டிலைட்டுகள் என்று நிறைய ஆக்கப்பணிகளை இந்தியா செய்துவருகிறது.

இவ்வளவும் மனிதாபிமானமுறையில் செய்யப்படுவதாகச் சொல்லப் பட்டாலும்,பக்கத்து நாடான பாகிஸ்தானுக்கு செக் வைக்கவே இப்படி இந்தியா செயல்படுகிறது என்ற கருத்தும் உள்ளது. பாகிஸ்தானிலோ தன் நாட்டுக்குள் தீவிரவாதத்தை விதைக்கவே இந்திய அரசு ஆப்கானிஸ்தான் மூலம் முயல்கிறது என்ற எண்ணம் உண்டு . ஆகவே இந்தியாவுக்கு எதிராக தாலிபான்களை மறைமுகமாக பாகிஸ்தானின் உளவு அமைப்பே தூண்டிவிடலாம் என்ற கருத்தும் உள்ளது."

மேலும் ஜூனியர் விகடனில் ( 07-05-2006) "தாலி அறுக்கும் தலிபான்கள்" என்ற கட்டுரையில்,

"இந்தக் கடத்தலின் பின்னணியில் பல்வேறு ஊகங்கள் இருக்கின்றன . இந்தியாவுகு எதிராக உள்ள பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஆப்கான் எல்லையில் உள்ள தலிபான்களுடன் சேர்ந்து நடத்தும் நாடகம் இது என்பது ஒரு யூகம். அடுத்ததாக 'நாட்டை நவீனப்படுத்தினால் அடிப்படைவாதம் தகர்ந்துவிடும் (!) என்ற கொள்கையுடைய தலிபான்கள், நவீனத்துவத்தைக் கொண்டுவரும் இந்தியப் பணியாளர்களைக் குறிவைக்கிறார்கள் என்றும் யூகிக்கப்படுகிறது.

இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான யூகம் 'இந்தியர்கள் பலர் அமெரிக்காவின் கைக்கூலிகளாகப் பணி புரிகிறார்கள். அவர்கள் வந்த வேலையை விட்டுவிட்டு உளவு பார்க்கிறார்கள் ' என்று தாலிபான்கள் உறுதியாக நம்புகிறார்கள் என்பதுதான்.

தலிபான்கள் எப்படியாவது இருந்து விட்டுப் போகட்டும். உயிருக்கு உத்திரவாதமில்லாத நாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்களை நாம் ஏன் திரும்பப் பெறக்கூடாது? என்ற கோஷம் தற்போது வலுப்பெற ஆரம்பித்துள்ளது. ஏனென்றால் சூரிய நாராணயனன் முதல் பலி அல்லர். கடந்த நவம்பர் மாதம் கேரளாவைச் சேர்ந்த மணியப்பன் குட்டி என்பவர் இதே மாதிரி கடத்தப்பட்டுக் கோரமாகக் கொ ல்லள்ளப்பட்டார் . அப்போதும் இந்தியாவிடம் தலிபான்கள் வைத்த கோரிக்கை 'உடனடியாக இந்தியர்கள் வெளியேற வேண்டும் ' என்பதுதான் . இந்த விஷயத்தில் நம் அரசு தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறது.

'தலிபான்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கொள்வது, அவர்களை அங்கீகாரம் செய்வதாக மாறிவிடும்' என அமெரிக்கா நிர்ப்பந்தம் தருவதால்தான் இந்தியா தொடர்ந்து வாய்மூடிக் கிடப்பதாகப் பேச்சுக்கள் கிளம்பி விட்டன . இந்நிலை தொடர்ந்தால் 'பாகிஸ்தானைப்போல அமெரிக்காவின் அடிமையாக மாறிக் கொண்டிருக்கிறது இந்தியா ' என்ற இழிசொல் தவிர்க்க முடியாதாத ஆகி விடும், ஜாக்கிரதை! "

தீவிரவாதத்தை வேதக் கட்டளையிட்டு தீவிரமாக எதிர்ப்பதோடு மட்டுமின்றி அதனால் பாதிக்கப் பட்டவருக்குத் தகுந்த பரிகாரத்தையும் வழங்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டும்தான்! இதைத் தெரிந்தும் இன்னும் ஏன் பிதற்றி வருகிறார்கள் இவர்கள்? சகமனிதனைக் அநியாயமாகக் கொலை செய்பவனை ஷரீஅத் சட்ட ரீதியில் தண்டிக்கச் சொல்லும் போது (பார்க்க குர்ஆன் வசனங்கள் 2:178-179)

வரிந்து கட்டிக் கொண்டுக் கொண்டு குற்றவாளிக்குப் பரிந்து மனிதநேயம் பேசுபவ்ர்களும் ஒருவகையில் மனிதகுல எதிரிகளே ! பாதிக்கப்பட்டவனின் வலியை உணராமல் மேதாவித்தனமாகப் பொதுமன்னிப்பு அறிக்கை விடும் இவர்கள்தாம் உண்மையில் தீவிரவாதிகள்!

5:32 இதன் காரணமாகவே, ' நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான். மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்"

பொறியாளர் சூரிய நாராயணாவின் படுகொலை மட்டுமல்ல , வேறு எந்தப் படுகொலையையாவது ஆதரித்து எழுதிய ஒரேஒரு முஸ்லிம் வலைப்பதிவரைக் காட்டிவிட்டு இவர்கள் ' எரிகிற வீட்டில் பீடிக்கு நெருப்பு பற்ற வைக்கட்டும்!' (நன்றி: ஆசிப் மீரான்) தீவிரவாதத்தை மதக்கட்டளையிட்டு எதிர்க்கும் தத்தம் வேத வரிகளை முன் வைத்து விட்டு நேசகுமார்களும் ஆரோக்கியங்களும் இஸ்லாத்தை விமர்சிக்கட்டும்.

ஒரு வலைப்பதிவர் சொன்னது போல் 'தீவிரவாதிகளுக்கு மதமில்லை' என்பதே உண்மை!

Saturday, May 06, 2006

எரிகிற வீட்டில் பீடிக்கு நெருப்பு தேடுபவர்கள் - 1

மதரஸாக்கள் தீவிரவாதப் பட்டரைகளா? என்ற என் பதிவை மேற்கோளிட்டு நேசகுமார், என்னை தாலிபான்களின் கொ.ப.செ ஆக்கியுள்ளார். நல்லவேளை அல்காயிதாவின் தமிழ் வலைப்பூ பொறுப்பாளர் ரேஞ்சுக்கு கொண்டு செல்லாமல் இருந்தவரை நன்றி சொல்ல வேண்டும்.

நேசகுமாரின் பதிவுகளுக்கும் அதிலுள்ள உண்மைக்குமுள்ள தூரம் சங்பரிவாரங்களுக்கும் சமூக நல்லினக்கத்திற்குள்ள தூரத்தை விட அதிகம் என்பது முஹம்மது நபி பற்றிய நேசகுமாரின் வக்கிர பதிவுகளுக்கான பிற முஸ்லிம் வலைஞர்களின் பதி(வு)ல்களில் கண்டோம். இவற்றை நன்கு அறிந்த திரு.ரோசா வசந்த் அவர்கள் கூட நேசகுமாரின் பதிவிலிட்ட பின்னூட்டத்தில் “மற்றபடி நல்லடியாரின் பதிவு, இன்று பல இஸ்லாமியர்களின் சந்தர்ப்ப வேடம் எல்லாம் கண்டிக்க வேண்டியது, வெளிப்படுத்த வேண்டியது என்பதை தவிர சொல்ல எனக்கு அதிகமில்ல” என்று ஜல்லியடித்திருந்தார்! (ஜல்லி-நேசகுமாருக்கு ரோசாவிடம் பிடித்த வார்த்தை என்பதால் :-)

மதரஸா மாணவர்கள் (அரபியில் தாலிபான்கள்) பற்றி நான் எழுதியதில் மேற்கோளிட்டவற்றிலிருந்து நேசகுமார் என்ன சொல்ல வருகிறார்? பொறியாளர். சூரிய நாராணயனை படுகொலையை நியாயப்படுத்தியுள்ளேன் என்கிறாரா? அல்லது தாலிபான் ஆதர்வாளராகச் சொல்லிவிட்டால் நான் முன்பு அவரை சங்பரிவாரின் ஊதுகுழல் என்று சொன்னதற்கு பரிகாரமகி விடும் என்ரு நினைக்கிறாரா? எதுவாக இருந்தால் ஒன்று மட்டும் தெளிவாகிறது. அதாவது, இஸ்லாம் பற்றிய அவரின் அவதூறுகளை என் பதிவுகளிலும் தமிழோவியம் தொடர்களிலும் சுட்டிக் காட்டி அபத்தங்களையும் வக்கிரங்களையும் தோலுரித்துக் காடியதால் எழுந்த கோபமாக இருக்கலாம் என்றே யூகிக்கிறேன்.

சரி விசயத்திற்கு வருவோம். தாலிபான்கள் பற்றியும் அவர்கள் செய்ததாகச் சொன்ன படுகொலைகள் பற்றியும் எங்கு நான் ஆதரவாக எழுதியுள்ளேன்? பொதுவாக இஸ்லாமிய மதரஸா மாணவர்கள் பற்றி சொன்னதில் கொட்டை எழுத்தில் மேற்கோளிட்டுள்ளார். அதாவது,

"குர்ஆனைக் கற்றவர்கள், மற்ற கல்வியைக் கற்றவர்களைப் போலல்லாமல், அதன் நற்போதனைகளை வாழ்க்கையிலும் செயல்படுத்த வேண்டும். அராஜகத்திற்கும் அநியாயத்திற்கும் எதிராக எந்த சமரசமும் செய்யக் கூடாது. படைத்தவனைத் தவிர எவனுக்கும் தலை வணங்கக் கூடாது என்பதே இவர்களின் தாரக மந்திரம்.

இது ஒன்று போதாதா இவர்களை தீவிரவாதிகளாகக் காட்டி அநியாயத்திற்கும் அடக்குமுறைக்கும் எதிரானவர்களை தனிமைப் படுத்த நினைப்பவர்களுக்கு? இவைதான் மதரஸாக்கள் பற்றிய ஐயத்தையும் அச்சத்தையும் மக்கள் மனதில் விதைத்து, மதவெறி நெருப்பு மூட்டி குளிகாய நினைப்பவர்களின் ஊடகத் தந்திரம்.”

இவற்றில் எங்கு ஐயா தீவிரவாத ஆதரவு நிலை கண்டீர்? நீங்கள் குஜராத் இன சுத்திகரிப்பை காஷ்மீருடன் ஒப்பிட்டு நியாயப்படுத்தி இருந்த அளவுக்குக் கூட நான் எழுதியதில்லையே! மதரஸாக்கள் பற்றிய என் பதிவில் இடம் பெற்றுள்ள பல வெளிச்சுட்டிகளிலிருந்தே (http://www.answers.com/) தகவல் திரட்டியுள்ள போது அவற்றைச் சொல்லாமல், என்னை தாலிபான்களின் கொ.ப.செ ஆக்கியது என்மீதான வெருப்பின்றி வேறென்ன?

// நல்லடியார் எழுதியதை வழக்கமாய் படிப்பதில்லை. தாலிபான் பற்றி வெளிப்படையாய்(உள்ளே எப்படி நினைத்துக் கொண்டாலும்) எழுதுவார் என்று நினைக்கவில்லைதான்//

ரோசா வசந்த்,

நீங்கள் என் பதிவுகளை படிப்பதில்லை என்பதையறிந்து மகிழ்சியடைந்தேன். பொதுப்படையாக எழுதி வந்த “நண்பன்” ஷாஜகான் பீர்முஹம்மதுடனான உங்கள் விவாத நேர்மை பற்றி முன்பே படித்திருக்கிறேன்.

நேசகுமாரும் நீங்களும் பரஸ்பரம் முதுகு சொறிந்து கொள்வதில் எனக்கு ஆட்சேபனையுமில்லை. என் பதிவில் நீங்கள் கண்ட சந்தர்ப்பவாதம் மற்றும் கண்டனத்திற்குறியவற்றை சுட்டுங்கள். பிறகு அது பற்றி தேவைப்பட்டால் விவாதிப்போம்.

பி.கு: சூரிய நாராயணாவின் படுகொலையை வைத்து “எரியும் வீட்டில் பீடிக்கு நெருப்பு தேடுபவர்கள்” பற்றி பிறகு எழுதுகிறேன்.

பார்வையாளர்கள்

    சுட்டிகள்

      சத்தியமார்க்கம்.காம்

eXTReMe Tracker