Tuesday, September 26, 2006

ஹஜ் மானியமும் வெட்கமும்!

மக்காவுக்கு புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் இந்திய முஸ்லிம்களுக்கு வழங்கப் படுவதாகச் சொல்லப்பட்ட "ஹஜ் மானியம் ரத்து" என்பது குறித்த பதிவை 'என்றும் அன்புடன்' பாலா என்பவர் பதிவிட்டிருந்ததர். அதில் ஹஜ் யாத்திரை வசதியுள்ளவர்களுக்கு மட்டுமே கடமை என்று சொல்லப்படுவது பற்றி முஸ்லிம்கள் விளக்க வேண்டி இருந்தார்.

பாலாவின் (என்றும்?) அன்பான அழைப்பை ஏற்று, இந்திய ஹாஜிகளுக்கு வழங்கப்படும் ஹஜ் மானியம், ரிசிகேஷ் செல்லும் இந்து யாத்திரிகர்களுக்கு வழங்கப் படுவது போல் 'இலவசமாக' கொடுக்கப் படவில்லை; மாறாக ஹாஜிகள் முன்பணமாக செலுத்தியதில் விமான சேவைகளால் கிடைக்கும் இலாபத்தில் சிறிதளவை திரும்ப கொடுக்கிறார்கள்.

இது ரிசிகேஷ் யாத்ரிகர்களுக்குக் கொடுக்கப்படும் மானியத்தை விட சதவீத அளவில் மிகக்குறைவு. எப்படியெனில், இந்திய ஹஜ் கமிட்டியின் மூலம் பயணம் மேற்கொள்ள சுமார் 80,000 ரூபாயிலிருந்து ஒரு இலட்சம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப் படுகிறது. இதில் விமானக் கட்டனமாக வசூலிக்கப்படும் ரூ.32,000 இல் ரூ.20,000 ஐ ஏர் இந்தியா விமானச் சேவைக்கு, ஹாஜிகளின் சார்பில் செலுத்துகிறது. இவ்வாறாக செலுத்தப்படும் மானியம் 2001 ஆம் ஆண்டு ஏறத்தாழ 150 கோடி ரூபாயாக இருந்து 2005 ஆம் ஆண்டு ரூ.225 கோடியாக உயர்ந்துள்ளது.

இவ்வாறு மத்திய அரசால் ஏர்-இந்தியாவிற்கு வழங்கப்படும் மானியத்தைத்தான் இந்திய ஹாஜிகளுக்கு மானியமாகக் கொடுக்கப்படுவதாகச் சொல்லிக் கூக்குரலிடுகிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் சாதாரணமாக பிற விமானச்சேவைகளில் சவூதிக்கு ரூ.25,000 கட்டணமாக இருக்கும் போது, ஏர்-இந்தியா விமானச்சேவை ரூ.35,000 வசூலிக்கிறது. ஆக, மத்திய அரசால் ஹாஜிகள் சார்பில் கொடுக்கப்படும் மான்யம் ரூ.12,000 மட்டுமே.

இஸ்லாமிய சகோதரர்கள் விளக்குவார்களா என்று (என்றும் அன்புடன்) அழைத்திருந்தன் பேரில் பின்னூட்டமிட்டிருந்தேன். சகோதரர் சலாஹுத்தீனும் நாகரிகமாகப் பின்னூட்டமிட்டு கருத்துப் பரிமாறி இருந்தார். அதிலிருந்த நியாயங்களை பாலாவும் ஏற்றுக் கொண்டிருந்தார். பொறுக்குமா வந்தேறி பார்ப்பனக் கும்பலுக்கு? வழக்கம்போல் இஸ்லாமியர்களை வசை பாடுவதைத் தங்கள் குலத்தொழிலாகக் கொண்ட இக்கும்பல் இப்பதிவையும் தங்கள் அரிப்பை சொரிந்து கொள்ள பயன்படுத்திக் கொண்டது.

//வந்தே மாதரம் பாடினால் அல்லா கோபிச்சுப்பார் என்று சொல்லும் துலுக்கர்கள் இந்த மானியம் ஷரீய்யாவுக்கு விரோதம் என்றால் ஏன் வெட்கம் கெட்டு வாங்கிக்கொள்ளுகிறார்கள்......மானங்கெட்டவர்கள்!!நன்றி//
Comment by ஜயராமன் at 6:00 PM, September 25, 2006

ஜயராமன் மற்றும் டோண்டு ராகவன் என்ற இரு வெட்கம் கெடாத பார்ப்பனர்கள், இந்திய முஸ்லிம்கள் ஹஜ் மானியத்தை வெட்கமின்றி பெறுவதவதாக திருவாய் மலர்ந்துள்ளார்கள். ஜயராமன் என்ற பெயரில் மேதாவித்தனமாக எழுதும் நபர் ஆரோக்கியம் என்பது அவரின் எழுத்து நடையிலிருந்து யூகிக்க முடிகிறது. அவரின் உள றல்களை பல பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் கண்டிருப்பதால் அதைப் பற்றி கருத்துச் சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் டோண்டு ராகவனுக்கு என்ன நேர்ந்தது?

//வெட்கமே இல்லாத போது வெட்கம் கெட்டு என்று ஏன் அவதூறாகக் கூறுகிறீர்கள்? இருந்தால்தானே கெடுவதற்கு?//
Comment by dondu(#4800161) at 11:11 PM, September 25, 2006

வெட்கத்தைப் பற்றி பேச தனக்கு கொஞ்சமும் அருகதை உண்டா என 'இளம் பெண்கள் மாட்டிக் கொள்ளாமல் விபச்சராம் செய்வது எப்படி?" என்று தொடர் பதிவெழுதி சக வலைப்பதிவர்களின் கண்டனத்திற்கு ஆளாகியும், தன் தவறை வெட்கமின்றி திருத்திக் கொள்ளாமல் இன் றும் சப்பைக் கட்டி வரும் டோண்டு ராகவன் சிந்திக்க வேண்டும்.

இந்திய சுதந்திரத்திற்கு எந்த தியாகமும் செய்யாமல் 'வெட்கமின்றி' உயர் பதவிகளை ஆக்கிரமித்திருக்கும் பார்ப்பன சமூகத்தை சார்ந்த டோண்டு ராகவனுக்கும் ஜயராமனுக்கும் இந்திய முஸ்லிம்களின் வெட்கத்தை பற்றி பேச அருகதை இல்லை.

இந்திய முஸ்லிம்களாவது கொடுத்த பணத்தில் மான்யம் என்ற பெயரில் சொற்பத் தொகையை திரும்பப் பெறுகிறார்கள். வெறும் மணியை ஆட்டிவிட்டு பெறப்படும் 'காணிக்கை' மானியங்களைப் பெற்றதோடு, தாங்கள் மட்டுமே உயர் பிறப்பு என்று சொல்லி மற்றவர்களின் காணிக்கையில் உண்டு கொழுக்கும் பார்ப்பனர்களின் வெட்கம் பற்றி என்ன சொல்கிறார் திருவாளர் டோண்டு? கொலைக் குற்றவாளியே ஆனாலும் வெட்கமின்றி அருளாசி வழங்கும் ஜகத்குரு பற்றியும் விளக்க வேண்டும்.

ஒவ்வொரு வருடமும் கும்பமேளாவுக்கு பாதுகாப்பிற்காக நிறுத்தப்படும் 40,000 காவல் துறையினர் மற்றும் இராணுவத்தினரின் சம்பளத்தில் இந்திய முஸ்லிம்களின் வரிப்பணமும் இருக்கிறது என்பதை வெட்கம் கெடாத ஜென்மங்கள் உணர வேண்டும்.

பாகிஸ்தானிலிருக்கும் கோவில்களை தரிசிக்க பாகிஸ்தான் வசூலிக்கும் கட்டணத்தை விட சீனாவிலிருக்கும் கைலாச மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்திய யாத்ரிகர்களிடம் அதிகம் வசூலிக்கப்படுகிறது. 'வெட்கமின்றி' இரண்டு முறை இந்தியாவை ஆளும் வாய்ப்புப் பெற்ற சங்பரிவாரக் கும்பல், சீனாவுடன் பேசி அக்கட்டணத்தைக் குறைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை.

இன்னுமும் வெட்கம்/சூடு சுரணை இருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் ஜயராமன் & டோண்டு ராகவன் கும்பல் இதனைக் கண்டித்து விட்டு, முஸ்லிம்களின் வெட்கம் பற்றி பேசட்டும்.

திரு.பாலா, பதிவுக்குப் பொருந்தாத முஸ்லீம் சமுதாயத்தைப் புண்படுத்தும் வாசகங்கள் கொண்ட இந்தப் பின்னூட்டங்களை அனுமதித்ததன் மூலம் நீங்கள் என்ன சொல்லிக் கொள்ள விரும்புகிறீர்கள்?

நீங்கள் வைத்த வேண்டுகோளுக்காகவே மானியம் தொடர்பான எனது கருத்துக்களை பின்னூட்டமிட்டேன். அதற்கு வந்த எதிர்வினைகள், குறிப்பாக ஜயராமன், டோண்டு ராகவன் ஆகியோரின் பின்னூட்டங்கள் நாகரீக எல்லையை கடந்து சென்றிருப்பதும் அவற்றை நீங்கள் எடிட் செய்யாமல் அனுமதித்திருப்பதும் என் போன்ற முஸ்லிம் பதிவர்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது. மெத்தப் படித்தவர்களாக காட்டிக் கொள்பவர்கள் உள்மனதில் இவ்வளவு வக்கிரங்களா? சக வலைப்பதிவர்களுடன் நாகரீகமான முறையில் உரையாட உங்களை எது தடுக்கிறது?

ச்சே......!

Thursday, September 21, 2006

கிறிஸ்தவர்களின் பார்வையில் இஸ்லாம்

கத்தோலிக்க மதகுரு புனிதபோப் பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் கடந்த செப்டம்பர்-12 அன்று ஜெர்மனியில் ஒரு பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் போது, பதினான்காம் நூற்றாண்டில் துருக்கியை ஆண்ட பைசாந்திய மன்னன் மானுவேல் இரண்டாம் பாலியோலோகஸ் (Manuel II Paleologus)க்கும்,மன்னனுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொன்ன ஒரு பார்ஸிய அறிஞருக்கும் நடந்த உரையாடலின் ஒரு பகுதியை மேற்கோள் காட்டிப் பேசியதால் பெரும் கண்டனத்திற்கு ஆளாகி மன்னிப்புக் கேட்டுள்ளார் .

பதினான்காம் நூற்றாண்டு உரையாடலை மேற்கோள் காட்டிய போப், பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த இருவேறு உரையாடல்களைக் கருத்தில் கொண்டால், இஸ்லாம் வாளால்-வன்முறையால் பரவிய மார்க்கமல்ல என்பதைப் புரிந்து கொண்டிருப்பார் .



ரோமச் சக்கரவர்த்தி ஹிராக்ளியசுக்கு முஹம்மது நபியின் முத்திரையிட்ட கடிதம்

முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்த வரலாற்று ஆய்வாளர்களின் பார்வையில், ரோம சாம்ராஜ்ஜியத்தின் பைசாந்திய மன்னர் ஹிராகிளியஸ் (கிபி . 610) அவர்களுக்கு முஹம்மது நபி அனுப்பிய கடிதம் ஒப்பற்ற பொக்கிஷமாகக் கருதப்படுகிறது. மன்னர் ஹிராகிளியஸ், முஹம்மது நபியைப் பற்றி அறிந்து கொள்ள , தனது ராஜ்ஜியத்தின் வழியாக சிரியாவுக்குப் பயணித்த குரைஷி வணிகர்களில், முஹம்மது நபியின் உறவினரும் பரம எதிரியுமாகத் திழந்த அபூசுஃப்யானிடம் பல கேள்விகளைக் கேட்டார். பின்னர் முஹம்மது நபி பற்றிய அவருடைய புரிதல்களைக் கூறத் தொடங்கினார்:

"எல்லா இறைத் தூதுவர்களும் உயர் குடியிலிருந்தே வந்துள்ளனர். முஹம்மதுக்கு முன்பாக உமது கோத்திரத்தாரில் எவரேனும் தன்னை இறைத்தூதராகச் சொல்லி இருக்கிறார்களா?" என்று நான் கேட்டேன். "இல்லை" என்றீர். உமது பதில் "ஆம்" என்று இருந்திருப்பின், முன்னோர்களின் தாக்கம் முஹம்மதுக்கும் ஏற்பட்டு, தானும் அவ்வாறு அவர்களைப் போலக் என்று கருதுகிறார் என்றிருப்பேன்.

"உங்கள் கோத்திரத்தாரில் எவரேனும் மன்னராக இருந்திருக்கிறார்களா?" என்று கேட்டேன். " இல்லை" என்றீர். "ஆம் " என்றிருப்பின் முஹம்மது, அவர்களின் மரபுவழி மன்னர் பாரம்பரியப் பெருமையை நிறுவ முயல்கிறார் என்றிருப்பேன் .

"முஹம்மது என்றாவது பொய் சொல்லி இருக்கிறா?" என்றேன். " இல்லை" என்றீர். என்றுமே பொய் சொல்லியிராத ஒருவரால் திடீரென அல்லாஹ்வின் பெயரால் பொய்யுரைக்க முடியாது என்று வியந்தேன் .

முஹம்மதைப் பின்பற்றுபவர்களைப் பற்றிக் கேட்டேன். "அவர்கள் ஏழைகள்" என்றீர். எல்லா இறைத்தூதர்களைப் பின்பற்றியவர்களும் ஏழைகளாகவே இருந்தனர் .

முஹம்மதைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை பற்றிக் கேட்டேன். "அவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது" என்றீர். உண்மையாளர்களின் எண்ணிக்கை வளரும் என்பதே நியதி.

"முஹம்மதைப் பின்பற்றியவர்களில் எவரேனும் மீண்டும் தங்கள் பழைய மார்க்கத்திற்கு திரும்பியுள்ளனரா?" என்றேன் . "இல்லை" என்றீர். ஒரு கொள்கையை மனப்பூர்வமாக ஏற்று உறுதியான நம்பிக்கை கொண்டவர்களின் நிலையில் மாற்றமே வராது.

"உங்களில் எவரேனும் இதற்குமுன் முஹம்மதால் வஞ்சிக்கப்பட்டு ஏமாற்றப் பட்டிருக்கிறீர்களா?" என்று வினவினேன் . "இல்லை" என்றீர் . எவரையும் வஞ்சிக்காத பண்பே முந்தைய இறைத்தூதர்களின் பண்பாகவும் இருந்தது.

முஹம்மது தன்னைப் பின்பற்றுபவர்களுக்குச் சொல்லும் கொள்கைகள் என்னவென்று கேட்டதற்கு, "கஃபாவிலுள்ள சிலைகளை வணங்காமல் அல்லாஹ்வை மட்டும் வணங்கவும் உண்மையாகவும் கற்பு நெறியுடனும் வாழச் சொல்வதாகப் பதிலளித்தீர் . முஹம்மதைப் பற்றி உம்மால் சொல்லப் பட்டவை உண்மையாக இருப்பின், கூடிய விரைவில் இந்த சிம்மாசனத்தை அவர் அலங்கரிப்பார் . முஹம்மதின் வருகையைப் பற்றிச் சொல்லித் தரப்பட்டிருக்கிறேன். ஆனால் அவர் உங்கள் குலத்திலிருந்து வருவார் என்பதை அறிந்திருக்கவில்லை. அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவரது பொற்பாதங்களை நான் கழுவேன்" என்றார்.

கி.பி.ஆறாம் நூற்றாண்டில் எத்தியோப்பியாவை ஆண்ட இன்னொரு கிறிஸ்தவ மன்னர் நஜ்ஜாஷி (Negus) ஆவார். மக்கா காஃபிர்களின் கொடுமைகளிலிருந்து தப்பி,முஹம்மது நபியின் அறிவுரைப்படி முஸ்லிம்கள் அகதிகளாக நாடுகடந்து அங்கு வந்திருந்தனர். இதனை அறிந்த மக்கா குறைஷிகள், அவ்வாறு சென்றவர்களைத் திரும்ப அழைத்துவரும் நோக்கில் அப்துல்லாஹ் பின் அபூ ரபீஆ மற்றும் அம்ரு பின் அல்ஆஸ் ஆகிய இருவரையும் அனுப்பி வைத்தனர் . அகதிகளாக வந்திருந்த 83 முஸ்லிம்களின் சார்பில், ஜாஃபர் பின் அபூதாலிப் அவர்கள் பேசுவதாக முடிவு செய்யப்பட்டது . மன்னர் நஜ்ஜாஷியின் அரசவையில் நடந்த உரையாடல்களைப் பார்ப்போம்.



எத்தியோப்பிய மன்னர் நஜாஷிக்கு முஹம்மது நபியின் முத்திரையிட்ட கடிதம்

"எங்கள் சமூகத்தைச் சார்ந்த சில மூடர்கள், எங்களின் முன்னோர்களின் மார்க்கத்தைக் கைவிட்டு, தங்களிடம் அடைக்கலம் தேடி வந்துள்ளார்கள். இருப்பினும் அவர்கள் உங்கள் மார்க்கத்தையும் இன்னும் ஏற்கவில்லை. ஏனெனில் எங்களுக்கும் உங்களுக்கும் அறிமுகமில்லாத ஒரு புது வழிமுறையை அவர்கள் வகுத்துக் கொண்டுள்ளார்கள். ஆகவே எங்களின் மேலான தலைவர்கள், உங்களிடம் இதை எடுத்துச் சொல்லி இவர்களை மீண்டும் அவர்களிடம் அழைத்துச் செல்வதை விரும்புகிறார்கள்" என்றார் அப்துல்லாஹ்.

அகதிகளாக வந்த முஸ்லிம்களுக்கு மன்னருடன் பேசும் வாய்ப்புக் கிடைத்து விடக்கூடாது என்பதில் குரைஷிகளின் பிரதிநிதிகள் கவனமாக இருந்தார்கள். எனினும், இயேசுவின் உண்மையான போதனைகளைக் கடைப்பிடித்து நல்லாட்சி செய்து வந்த மன்னர் நஜ்ஜாஷி, முஸ்லிம்களிடம் இது பற்றி விசாரித்து விட்டே முடிவெடுப்பதாகச் சொன்னார். அதன்படி அரசவைக்கு முஸ்லிம்கள் அழைத்து வரப்பட்டு, பல கேள்விகள் கேட்கப்பட்டனர். மன்னர் நஜ்ஜாஷி நேரடியாகவே விசாரணை நடத்தினார். இஸ்லாத்தை ஏற்று முன்னோர்களின் வழிமுறையைக் கைவிடக் காரணம் என்ன என்பது பற்றியும் விசாரித்தார்.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி என்னனென்ன காரணங்களைச் சொன்னார்களோ அவற்றை அப்படியே சொல்வது என்ற முடிவிலிருந்த முஸ்லிம்கள் சார்பில் பேசிய ஜாஃபர் பின் அபூதாலிப், இஸ்லாத்திற்கு முன்னர் தாங்கள் "அறியாமையில் மூழ்கி இருந்ததாகவும் பல வெட்கக் கேடானச் செயல்களைச் சர்வ சாதாரணமாகச் செய்தவர்களாகவும் கஅபாவில் சிலைகளை நிர்வாணமாக வணங்குபவர்களாகவும் சத்தியத்தை காப்பாற்றாமல், உறவினர்களையும் அண்டை வீட்டாரையும் மதியாதவர்களாகவும் பெண் சிசுக் கொலை செய்பவர்களாகவும் அனாதைகளின் சொத்துக்களை அபகரிப்பவர்களாகவும் பெண்கள் மீது அபாண்டமாக பழி சுமத்துபவர்களாகவும் இருந்த பாகன் கலாச்சாரத்தின் அவலங்களைச் சொன்னதோடு, தற்போது அவற்றிலிருந்து விலகி அல்லாஹ்வை மட்டும் நாளொன்றுக்கு ஐந்துமுறை தொழுதும் தர்மம் செய்தும் நோன்பிருந்தும் வருகிறோம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் எங்களை எங்களின் பழைய வழியில் திருப்பச் செய்யும் நிர்ப்பந்தத்துக்கு அஞ்சி எங்களின் சொந்த நாட்டைத் துறந்து உங்கள் ராஜ்ஜியத்தில் அடைக்கலம் தேடி வந்துள்ளோம்" என்று விளக்கினார். பின் , மன்னரின் விருப்பப்படி திருக்குர்ஆனின் 19 ஆவது அத்தியாயமான சூரா மர்யமை ஓதிக் காட்டினார்.

அதில் ஜக்கரியா (JOHN), இப்றாஹிம்(Abraham), யாஃகூப்(Jacob) போன்ற கிறிஸ்தவர்களால் நம்பப்படும் இறைத் தூதுவர்கள் பற்றிய வரலாற்றைக் குர்ஆன் எடுத்துரைக்கும் அழகிய வர்ணனைகளைச் சொன்னார் . இதனைக் கேட்ட மன்னரும் அமைச்சர்களும் சபையிலிருந்த மக்களும் நெகிழ்ந்து விட்டனர். அங்கிருந்த சிலர் தங்கள் தாடி நனையும் அளவுக்கு அழுது விட்டனர் . இதனால் கனிவு கொண்ட மன்னர், அடைக்கலம் தேடி வந்த முஸ்லிம்களைக் குறைஷித் தூதுவர்களுடன் தாம் திரும்ப அனுப்பப் போவதில்லை என்று உறுதியாகச் சொல்லி விட்டார் .

எனினும் சளைக்காதக் குறைஷித் தூதுவர்கள், மறுநாள் மன்னரிடம் முஸ்லிம்கள் தங்கள் தெய்வங்களை மட்டுமல்ல இயேசுவைப் பற்றியும் எண்ணற்றப் பொய்களைச் சொல்லி அவமதிக்கிறார்கள் என்ற அவதூறுக் குற்றச் சாட்டை அள்ளி வீசினர்.இதையும் முஸ்லிம்களிடமே விசாரித்துவிட முடிவு செய்த மன்னர், மறுநாளே அவையைக் கூட்டினார். அப்போது, இக்குற்றச்சாட்டை முஸ்லிம்களிடம் சொல்லி விளக்கம் கேட்டார்.

அதற்கு ஜாஃப்ர் பின் அபூதாலிப் அவர்கள் சூரா மர்யமிலிருந்து 16-21ஆம் வசனங்களை ஓதிக்காட்டினார். மரியம் (அலைஹி...) அவர்களின் மகனான ஈஸா இறைவனின் அடிமை என்றும் அவனால் அனுப்பப் பட்ட தூதுவர் என்றும் இயேசு என்ற ஈஸா நபியைப் பற்றிய இஸ்லாத்தின் நிலைப் பாட்டை எடுத்துரைத்தார் .

இதனைக் கேட்ட மன்னர், இயேசுவைப் பற்றிக் குர்ஆனில் சொல்லப்பட்டவை முற்றிலும் உண்மையே என்று வழிமொழிந்து குர்ஆனின் கூற்றை ஒப்புக் கொண்டாலும் அரசவையில் பகிரங்கமாக இஸ்லாத்தை முழுமையாகத் தாம் ஏற்றுக் கொண்டதை சொல்லாமல் மறைத்துக் கொண்டார். தன்னளவில் மட்டுமே முஸ்லிமாக மாறி வாழ்ந்த மன்னர் நஜ்ஜாஷி சில வருடங்களில் இறந்தார்.

அவருக்காக மதீனாவில் தொழுகை நடத்திய பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களால் "அபிசீனிய மன்னர் நஜ்ஜாஷிக்கு இறைவன் இரட்டை வெகுமதிகள் கொடுப்பான்; எனெனில் அவர் இரு இறைத்தூதுவர்களை நம்பிக்கை கொண்டவர்" என்ற நற்செய்தியும் சொல்லப்பட்டது .

பைசாந்திய,அபீசீனிய மன்னர்களை ஈர்த்த இஸ்லாம் கத்தியால் பரப்பப்படவில்லை; மாறாக சத்தியத்தால் பரப்பப்பட்டது என்பதே வரலாறு கூறும் உண்மை. அவ்வாறு சத்தியத்தால் மட்டுமே பரவி பேரரசர்களையும் ஈர்த்த இஸ்லாம், ஒருநாள் வாட்டிகன் பாப்பரசரையும் ஈர்க்கும் என்று நம்புவோமாக!

Saturday, September 09, 2006

மகாராஷ்டிரா மசூதி அருகே குண்டு வெடிப்பு - 30 பேர் பலி

மகாராஷ்டிர மாநிலம் மலேகாவ்ன் நகரில் இன்று மசூதிக்கு வெளியே பயங்கர குண்டு வெடித்தது. இதில், 30க்கும் மேற்பட்டவர் பலியாயினர். 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். மதக் கலவரங்களுக்குப் பேர் போன இந்த நகரில் நடந்துள்ள இந்த குண்டு வெடிப்பால் மகாராஷ்டிரா முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகிறது.

படா கபரிஸ்தான் பகுதியில் உள்ள நுரானி மஸ்ஜித் என்ற மசூதிக்கு வெளியே இந்த குண்டு வெடிப்பு நடந்தது. இன்று ஷபாப்ஏராத் (ஷபே பராஅத்) என்ற சிறப்பு தொழுகை நடந்து கொண்டிருந்த நிலையில் இந்த குண்டு வெடிப்பு நடந்தது.

இச் சம்பவத்தையடுத்து நாசிக்கில் இருந்து பாரா மிலிட்டரிப் படைகள் மலேகாவ்ன் நகரில் குவிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் நாடு முழுவதுமே தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் உள்துறை உத்தரவிட்டுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2006/09/08/maharastra.html
http://www.hindu.com/thehindu/holnus/000200609081601.htm

பார்வையாளர்கள்

    சுட்டிகள்

      சத்தியமார்க்கம்.காம்

eXTReMe Tracker