Monday, October 09, 2006

அத்வானியைக் கொல்ல ஐ.எஸ்.ஐ. சதி!!!

மும்பை ரயில் குண்டுவெடிப்பு தொடர்பாக சிலரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களில் பைசல் என்பவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், ஷேக் என்பவர் தான் எங்களை ஒருங்கிணைத்து மும்பை தொடர் குண்டுவெடிப்புத் திட்டத்தைத் தீட்டிக் கொடுத்தார்.

2002ம் ஆண்டு ஷேக் ஏற்பாட்டின் பேரில் நாங்கள் பாகிஸ்தான் சென்றோம். அங்கு ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளை சந்தித்தோம். அப்போது அத்வானி குறித்த தகவல்களை தங்களுக்குத் திரட்டித் தருமாறு ஐஎஸ்ஐ அதிகாரிகள் கூறினர். அத்வானியை கொலை செய்யத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும் இத்தகவல்களைத் தெரிவிப்பதற்காக சில தொலைபேசி எண்களையும், இ மெயில் முகவரிகளையும் அவர்கள் எங்களுக்குக் கொடுத்தனர் என்று பைசல் தெரிவித்துள்ளார்.

பைசல் அத்வானி குறித்துத் தெரிவித்துள்ள தகவல்கள் குற்றப் பிரிவு போலீஸாரிடம் கொடுக்கப்பட்டு மேல் விசாரணைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்வானியைக் கொலை செய்ய ஐ.எஸ்.ஐ. திட்டமிட்ட தகவல் வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
==================
நன்றி

மேற்கண்ட செய்தியின் மூலம் அறிந்து கொள்வது யாதெனில்,

1) அத்வானியைப் பற்றிய தகவல்களை ஓரிருவர் மூலம் அறிந்து கொள்ளும் நிலையில் ISI இருக்கிறது.

2) மும்பை குண்டு வெடிப்பு நடந்திருக்காவிட்டால் இந்தச் சதி வெளிவந்திருக்காது.

3) தீவிரவாதிகள் உளவு சொல்ல ஈமெயில், தொலைபேசி வசதிகளைப் பயன்படுத்துகிறார்கள்.

4) தங்கள் திட்டத்தை வெளிப்படையாகச் சொல்லியே ISI உளவு பார்க்கச் சொல்கிறது.

வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அறிந்தவர்கள் பின்னூட்டமாகப் பகிர்ந்து கொள்ளலாம்.

Saturday, October 07, 2006

தேசிய ஒருமைப்பாட்டிற்கு தீங்கிழைத்தவர்களுக்கு...

கடந்த 2001 ஆண்டு நமது நாடாளு மன்றத்தில் ஆயுத தாக்குதல் நடந்த போது பாதுகாப்புப் படைவீரர்கள் பதினொரு பேர் கொல்லப் பட்டார்கள். தாக்குதல் நடத்தியவர்களும் அப்போதே சுட்டுக் கொல்லப் பட்டார்கள். இத்தாக்குதலுக்கு பின்னனியில் உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட முஹம்மது அப்ஷல் குரு என்பவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதி மன்றம் உறுதி செய்துள்ளது.

இதற்கிடையில் அப்ஷலின் மனைவி, குடியரசுத் தலைவருக்கு தன் கணவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க கருணை மனு செய்துள்ளதை குடியரசு தலைவர் ஏற்றுக் கொண்டுள்ளார். அதேபோல் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், தண்டனையை குறைக்கக் கூடாது என்று வலியுறுத்திய மனுவையும் குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இப்பிரச்சினையில் இந்திய முஸ்லிம்களின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள சிலர் ஆர்வமாக இருக்கிறார்கள். குற்றவாளி முஸ்லிமாக இருப்பதால் அவன் எத்தகைய குற்றம் செய்தாலும், மன்னிக்கப்பட வேண்டும் என முஸ்லிம்கள் விரும்பவது போலவும், ஓட்டுக்காக அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற மத்திஅய் மாநில அரசுகள் எவ்வித சமரசத்திற்கும் தயாராக இருப்பது போன்ற பாவனையை உருவாக்கி, மீண்டும் இந்திய முஸ்லிம்களை தேசத்திற்கு எதிராகச் சித்தரித்து தனிமை படுத்தி அரசியல் ஆதாயம் பெற விரும்பும் சிலருக்காக இப்பதிவு.

எல்லாவகைக் கொலைக் குற்றவாளிக்கும் சட்டப்படி விதிக்கப்பட்ட தண்டனையில் கருணை காட்டக் கூடாது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. குறிப்பாக குற்றவாளியை தண்டிப்பதன் மூலம் அத்தகைய குற்றங்களை எவரும் செய்யத் தயங்கும் வகையில் கடுமையாகத் தண்டிக்கப் பட வேண்டும். குற்றவாளியை மன்னிக்கும் உரிமை நேரடியாக பாதிக்கப்பட்டவருக்கே உண்டு என்பதே எமது நிலைப்பாடு

அதேசமயம் அப்ஷலுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை பரிசீலனை செய்ய வேண்டும் என்று பெரும்பாலான காஷ்மீரிகளும், பாஜக தவிர்த்த அரசியல்வாதிகள் சிலரும் கோரியுள்ளனர். மகாக் குற்றம் செய்த ஒருவனுக்காக ஒரு காஷ்மீரின் அனைத்துப் பிரிவினரும் (பண்டிட்கள் தவிர) ஜனாதிபதியின் கருணையைக் கோருவது அனேகமாக இதுவேயாகும்.

இந்திய அரசியல் சாசணம் வகுத்துள்ள குடியர்சுத் தலைவருக்கான அதிகாரங்களின்படி, மரண தண்டனைக் குற்றவாளிகளை மன்னிக்கும் உரிமையை அரசியல் சட்டத்தின் 72 (1)(c), ஆவது பிரிவு குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ளது. குற்றத்தின் தன்மை,குற்றவாளியின் வயது, தண்டனையின் பின் விளைவுகளைக் கருத்தில் கொண்டு,கருணை மனு பரிசீலிக்கப் படலாம் அல்லது நிராகரிக்கப் படலாம். இதுபோல் சுமார் இருபதுக்கும் அதிகமான கருணை மனுக்கள் முந்தைய குடியரசுத் தலைவர்களால் நிலுவையில் வைக்கப்பட்டு தற்போது ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பரிசீலனைக்காகக் காத்திருக்கின்றன.

இது ஒருபக்கம் இருக்க பா.ஜ.க. போன்ற மதவாத அரசியல் கட்சிகள் வழக்கம் போல் இப்பிரச்சினையில் அரசியல் நடத்தத் தொடங்கியுள்ளனர். குற்றவாளி அப்ஷல் தூக்கிலிடப்பட வேண்டும்; நாட்டின் தன்மானத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு கருணை காட்டக் கூடாது என்று வலியுறுத்துகின்றனர்.

சில வருடங்களுக்கு முன் தனஞ்சய் சட்டர்ஜி என்ற காமக் கொடூரனுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டபோது,மனித உரிமை அமைப்புகள் குற்றங்களுக்கு மரண தண்டனை தேவையில்லை; அதிகபட்சம் ஆயுள் தண்டனையே போதும் என்று குரலெழுப்பினார்கள். ஆனால், அப்ஷல் விசயத்தில் அவர்கள் மெளனம் காப்பதாகவே அறிய முடிகிறது. இதில் யாரெல்லாம் குற்றவாளிக்கு ஆதரவாகவோ அல்லது நியாயமாகவோ குரல் கொடுக்கிறார்களோ அவர்களுக்கும் தேசத் துரோகப் பட்டம் வழங்கப்படும் என்பதால் அனேகமாக மெளனம் காக்கிறார்கள்.

அப்ஷலின் சொந்த மாநிலமான காஷ்மீரில் காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவையும், கம்ப்யூனிஸ்ட்களும் அப்ஷலின் தண்டனை அவசர கோலத்தில் அரைகுறையாக விசாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக கருதுகின்றனர். அதே போல் காஷ்மீரிகளும் அப்ஷலுக்கு எதிரான குற்றச் சாட்டில் பல சாட்சிகள் சரிவர விசாரிக்கப்படாமல் தண்டனை உறுதி செய்யப்பட்டதாகக் கருதுகின்றனர்.

இதனால் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் படுகின்றன. சிலர் அப்ஷலின் தண்டனையால் காஷ்மீர் பிரச்சினை இன்னும் மோசமடைந்து, பாகிஸ்தானுடனான பேச்சு வார்த்தை பலவீனம் அடையுமென்று சிலர் கருத்து தெரிவித்துள்ளார்கள். ஒரு குற்றவாளியின் தண்டனையால் ஏறத்தாழ காஷ்மீரின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றினைத்துள்ளன.அப்ஷல் துக்கிலிடப்படுவதன் மூலம், இந்தியாவுக்கு எதிராக காஷ்மீரிகளை திருப்ப பாகிஸ்தானுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்பதாலும் இத்தீர்ப்பு நிதானமான பரிசீலனைக்கு உட்பட்டது என்பதை இந்திய நலனை விரும்பும் எவரும் மறுக்கக் கூடாது.

குடியரசு தலைவர் என்ன செய்யப் போகிறார்? குற்றம் சுமத்தப் பட்டவருக்கு கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க பரிந்துரைப்பாரா? அல்லது தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் வலியுறுத்தலை ஏற்று கருணை மனுவை நிராகரிப்பாரா? என்பதே தேசிய விவாதமாக இருக்கிறது.

அப்ஷல் பாராளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்டதற்கான ஆதாரமாக தொலைபேசி உரையாடல் மட்டுமே ஆதாரமாகக் கருதப்பட்டு அதன் அடிப்படையில்தான் விசாரணை நடத்தப் பட்டுள்ளது. இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் நிரபராதி என்று ஜீலாணி என்பவர் விடுவிக்கப் பட்டுள்ளதையும் கவனத்தில் கொண்டு இப்பிரச்சினையை அணுக வேண்டும். தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் அப்ஷல் நேரடியாக எந்த பாதுகாப்பு வீரரையும் தாக்கவில்லை. மேலும் இதற்கு முன் எவ்வித தீவிரவாதச் செயலிலும் ஈடுபடவோ அல்லது தீவிரவாத குழுக்களுன் தொடர்போ கொண்டிருக்கவில்லை.

வெகு அசாதாரண குற்றங்களில் மட்டுமே இந்திய தண்டனைச் சட்டம் மரண தண்டனையை பரிந்துரைக்கிறது. நாடாளுமன்றத் தாக்குதல் ஒரு நாட்டின் இறையாண்மைக்கு எதிரான குற்றம் என்பதால், இதை அசாதாரணக் குற்றமாகவே கருத வேண்டும். இருந்தாலும் இது மரண தண்டனைக் குறிய குற்றமா என்பதிலுள்ள முரண்பாடுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்ஷல் நேரடியாக ஈடுபட்டிருந்தாலும் இதை இந்தியாவுடனான யுத்தமாகக் கொண்டு, அவன் பின்னனியில் இருப்பவர்களையும் போர்குற்றத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும்.

நாடாளுமன்றம் தாக்கப்படுவதால் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு கேடு ஏற்படுவது போலவே ஒரு சாராரின் வழிபாடுத்தலம் மதவாத சக்திகளால் தாக்கப்பட்ட போதும் ஏற்பட்டது. அக்குற்றம் செய்தவர்கள் அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஆட்சியிலிருந்த காலத்தில் புத்திசாலித் தனமாக தங்களை விடுவித்துக் கொண்டார்கள். அவர்களும் சட்டத்தின் முன் கொண்டுவரப்படு பாரபட்சமின்றி விசாரித்து சரியான தண்டனை வழங்கப்பட வேண்டுமென்பதே இந்திய அரசியல் சாசனத்தையும் சட்டத்தையும் மதிக்கும் மக்களின் எதிர்பார்ப்பு.

அவர்கள் எப்போது யாரால் தண்டிக்கப்படுவார்கள்?

வெளிச்சுட்டிகள்:

1) Death of Afzal Guru will not solve anything

2) நாடாளுமன்றத் தாக்குதல் - அஃப்ஸலின் கடிதம்!

Monday, October 02, 2006

பின்லாடன், ஜவாஹிரி வரிசையில் முஷராஃப்!

தீவிரவாத்திற்கு எதிராக' என்ற போலிக் காரணம் சொல்லி கடந்த ஐந்து வருடங்களாக அமெரிக்காவின் கூட்டுக் களவானியாகச் செயல்பட்டு வந்த பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷராஃப், தற்போது தீவிரவாதிகளை உருவாக்குவது அமெரிக்காதான் என்று திருவாய் மலர்ந்துள்ளார். காலம் கடந்த ஞானதோயம்!

முஷராஃப்பின் இந்த திடீர் பல்டியால், ஏற்கனவே மனஉளைச்சலில் நொந்து போயிருக்கும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், இன்னும் சில நாட்களில் உசாமா, ஜவாஹிரி வரிசையில் பாகிஸ்தான் அதிபரையும் வைத்து அழகு படுத்தப்படுவார் என்று நம்புவோமாக!

பாகிஸ்தான் தீவிரவாதிகளை உருவாக்கவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள்தான் தலிபான், அல் கொய்தா உள்ளிட்ட தீவிரவாதிகளை உருவாக்கி, வளர்த்தது என்று பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரப் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

முஷாரப் சமீபத்தில் அமெரிக்க இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், செப்டம்பர் 11 நியூயார்க் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானை குண்டு வீசி அழிக்கப் போவதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஆர்மிடேஜ் மிரட்டியதாக பரபரப்பு தகவலை வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து அல்கொய்தா தீவிரவாதிகளை ஒப்படைப்பதற்காக அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ பல கோடி ரூபாய் பணத்தை பாகிஸ்தானுக்குக் கொடுத்ததாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

முஷாரப்பின் அடுத்தடுத்து இந்த தகவல்கள் பரபரப்பை உருவாக்கியுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தான் உலகத்தில் தீவிரவாதம் பரவ முக்கிய காரணம் என இன்னொரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் முஷாரப்.

லண்டன் சென்றுள்ள முஷாரப் அங்கு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார். அப்போது பேசுகையில், பாகிஸ்தான் தான் தீவிரவாதத்தை உருவாக்கி உலகெங்கும் பரப்புவதைப் போல ஒரு கருத்து உள்ளது. இது மிகவும் தவறானதாகும்.

பாகிஸ்தானுக்கும், தீவிரவாதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த நாட்டில் (பாகிஸ்தானில்) தீவிரவாதத்தை உருவாக்கி, அதை வளர்த்தது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள்தான். தீவிரவாதம் பெரும் பிரச்சினையாக இன்று உருவெடுத்திருப்பதற்கு இவர்களைத்தான் குற்றம் சொல்ல வேண்டும்.

தலிபான்களையும், அல் கொய்தாவையும் ஆரம்பத்தில் ஆதரித்து வளர்த்தது அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் தான். தீவிரவாதம் பாகிஸ்தானுக்கு சொந்தமானதல்ல, இந்த நாட்டுக்கு அது இறக்குமதி செய்யப்பட்ட ஒன்று. (ஆப்கானிஸ்தானில்) சோவியத் யூனியனுக்கு எதிராக போரிட முஜாஹிதீன்களை உருவாக்கி அவர்களுக்கு பண உதவி, ஆயுத உதவியை அளித்தது அமெரிக்கா தான்.

சோவியத் படைகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் முஜாஹிதீன்கள் அல் கொய்தா என்ற புதிய அமைப்பை உருவாக்கினார்கள்.

சோவியத்தின் தோல்விக்குப் பிறகு 30,000க்கும் மேற்பட்ட முஜாஹிதீன்கள், 40 லட்சம் ஆப்கன் அகதிகளை சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது. அப்போது எங்களுக்கு யார் உதவ முன்வந்தார்கள்?

தீவிரவாதத்தை தடுக்கும் முயற்சிகளில் நாங்களும் தீவிரமாகத்தான் இருக்கிறோம். தீவிரவாதத்தை எதிர்க்கும் மேலை நாடுகள், எங்களது நிலையையும் புரிந்து கொள்ள வேண்டும்.

எங்களது நாட்டிலும் தீவிரவாதப் பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. பாகிஸ்தான் மற்றும் எங்களது புலனாய்வு நிறுவனமான ஐ.எஸ்.ஐ ஆகியவற்றின் உதவி இல்லாமல் அமெரிக்காவாக இருந்தாலும் சரி, அல்லது வேறு எந்த நாடானாலும் சரி தீவிரவாதத்தை அழிக்கவே முடியாது. மண்ணைக் கவ்வத்தான் செய்வார்கள். பாகிஸதானின் துணை இல்லாமல் தீவிரவாதத்தை அழிக்க முடியாது என்பதை அமெரிக்காவும், மேலை நாடுகளும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் முஷாரப்.

பாகிஸ்தான் உதவியில்லாமல் அமெரிக்கா தீவிரவாதத்தை ஒழிக்க முயன்றால் மண்ணைக் கவ்வும் என்று முஷாரப் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

7/11: ஐ.எஸ்.ஐ. காரணமல்ல: பாக்.

இதற்கிடையே, மும்பை ரயில் நிலைய தொடர் குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. தான் காரணம் என மும்பை போலீஸார் கூறியிருப்பது அப்பட்டமான பொய் என பாகிஸ்தான் மறுத்துள்ளது.

இதுதொடர்பாக மும்பை காவல்துறை ஆணையர் ராய் நேற்று தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து பாகிஸ்தான் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் தஸ்னீம் அஸ்லம் கூறுகையில், இது முழுக்க முழுக்க பொய்யான குற்றச்சாட்டு. பொறுப்பில்லாத, அடிப்படையில்லாத குற்றச்சாட்டுக்களை மும்பை ஆணையர் வெளியிட்டுள்ளார்.

தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களைக் காத்துக் கொள்ள பாகிஸ்தான் மீது பழியைத் திருப்பும் விதமாக செயல்பட்டிருப்பதாக அறிகிறோம் என்று கூறியுள்ளார் தஸ்னீம்.

நன்றி

பார்வையாளர்கள்

    சுட்டிகள்

      சத்தியமார்க்கம்.காம்

eXTReMe Tracker