tag:blogger.com,1999:blog-124177112024-03-23T22:21:09.871+04:00எதிரொலிஇப்பதிவுகள் இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் தரும் முயற்சி.WAR AGAINST MEDIA TERRORISMநல்லடியார்http://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.comBlogger200125tag:blogger.com,1999:blog-12417711.post-70863413818917394622012-05-17T23:46:00.001+04:002012-05-18T00:40:25.234+04:00குடும்பக் கட்டுப்பாடுக்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையம் ஃபத்வா!!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="mobile-photo" style="text-align: justify;">
</div>
<div class="mobile-photo" style="text-align: justify;">
</div>
<div class="mobile-photo" style="text-align: justify;">
</div>
<div class="mobile-photo" style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
இஸ்லாம் இயற்கைக்கு எதிரான எதையும் வலியுறுத்துவதில்லை. அதேபோல் இஸ்லாம் தடுக்கும் எதுவும் மனித உரிமைக்கு எதிரானதல்ல!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாட்டின் பொருளாதார திட்டமிடலை திறமையாகச் செய்யமுடியாத கையாலாகாத ஆட்சியாளர்களும், பொருளாதார மேதைகளும் மண்டையை கசக்கி கண்டு பிடித்த தீர்வுதான் குடும்பக் கட்டுப்பாடு!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதாவது அதிகமான பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வதால் மக்கள் தொகை பெருகி, பொருளாதாரப் பங்கீட்டில் சமநிலையின்மை ஏற்படுமாம் (பிறக்கும் குழந்தைகளெல்லாம் இவர்களைப்போல் முட்டாள்களாகப் பிறப்பார்களோ?:) </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொருளாதார பங்கீட்டிற்கான வழியாக இவர்கள் பரிந்துரைத்த குடும்பக் கட்டுப்பாடு திட்டம் என்பது அடிப்படை மனித உரிமை மீறல் என்ற ஃபத்வா சவூதியிலோ, ஆப்கானிஸ்தானிலோ, பாகிஸ்தானிலோ கொடுக்கப்பட வில்லை! நமது தேசிய மனித உரிமை ஆணையகம்தான் இந்தக் கருத்தை காலம் கடந்து சொல்லியுள்ளது!</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDtil-jHulbnRdnd5fFERUVQsfJJubsoPPupXSTNRKjJBQyr1imRsPI3NHLXw01K3iLkllb7i2JSIudB5HccmmUVO5z_oMeBucDQFCwmduBk8aZDKE5KLxUvQAvjQyUxZtguifGw/s1600/tri.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDtil-jHulbnRdnd5fFERUVQsfJJubsoPPupXSTNRKjJBQyr1imRsPI3NHLXw01K3iLkllb7i2JSIudB5HccmmUVO5z_oMeBucDQFCwmduBk8aZDKE5KLxUvQAvjQyUxZtguifGw/s640/tri.jpg" width="494" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0WHUxwl65yR4x096LL5BFwgLBQLNomSWUmYAwZhaKVIY-WcVC5JpiSCaNqaRWnGIVn6Q5ETmrjbgmIhbpV7BW_9oxRBetUeXvYOA3iJdtj1kfpP31pc4bxPMAlv6jK-5fm57QVw/s1600/tri+%282%29.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0WHUxwl65yR4x096LL5BFwgLBQLNomSWUmYAwZhaKVIY-WcVC5JpiSCaNqaRWnGIVn6Q5ETmrjbgmIhbpV7BW_9oxRBetUeXvYOA3iJdtj1kfpP31pc4bxPMAlv6jK-5fm57QVw/s640/tri+%282%29.jpg" width="494" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVea1DHV6EZMYsNatYya7DcLv8-v1fBVodhTzQZIgx3Z4ZATSD9cextAGcOSwXEhBAfNYuNaLDFnnc5zMlDt4AVfAcEA0rCx3jsP0uTOvbp6Rmsrf_mreVahVoJeIVFy_cWkaQmA/s1600/tri+%283%29.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVea1DHV6EZMYsNatYya7DcLv8-v1fBVodhTzQZIgx3Z4ZATSD9cextAGcOSwXEhBAfNYuNaLDFnnc5zMlDt4AVfAcEA0rCx3jsP0uTOvbp6Rmsrf_mreVahVoJeIVFy_cWkaQmA/s640/tri+%283%29.jpg" width="494" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-0N4WWi6PfCwPMvKw1J_Nugsi0dOXXzScz6D6pCbDJl3cJGyAgvAm1JV2iiAOgAq_wo1b55j1C3M_JKBElQhOtIPy4SI59NSfnL_ZD8OM44JekWAYcQ6VVvDsfR6VqeO1B3rsMQ/s1600/tri+%284%29.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-0N4WWi6PfCwPMvKw1J_Nugsi0dOXXzScz6D6pCbDJl3cJGyAgvAm1JV2iiAOgAq_wo1b55j1C3M_JKBElQhOtIPy4SI59NSfnL_ZD8OM44JekWAYcQ6VVvDsfR6VqeO1B3rsMQ/s640/tri+%284%29.jpg" width="494" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: 85%;"></span></div>
<blockquote class="tr_bq" style="color: red;">
<span style="font-size: 85%;"><b> நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்.
அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்)
அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்.(அல் குர்ஆன் </b></span><span style="font-size: 85%;"><b>17:31)</b></span></blockquote>
<br />
நன்றி : குங்குமம் (21-05-2012) </div>நல்லடியார்http://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12417711.post-76336203340129232082012-05-09T19:47:00.001+04:002012-05-09T22:10:35.584+04:00தடம் மாறும் தமிழ்மணம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGGm-xJ4BKuzqgb0j7QFQjcTxNYpPpG8WF0BHVBbybZGE5H9wzE3IQZDN9FlSIv3bxX5UX9Ihb9cgiJNpAlRu3JnDY3BEsFtSe61IkD9QFqyvkKDBtoZvtdy26Z5xTEwwoYJD0OQ/s1600/tm.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGGm-xJ4BKuzqgb0j7QFQjcTxNYpPpG8WF0BHVBbybZGE5H9wzE3IQZDN9FlSIv3bxX5UX9Ihb9cgiJNpAlRu3JnDY3BEsFtSe61IkD9QFqyvkKDBtoZvtdy26Z5xTEwwoYJD0OQ/s320/tm.png" width="291" /></a></div>
<div style="text-align: justify;">
ஒரு பாமர வாசகனாக இணையத்தில் நுனிப்புல் மேய்ந்துகொண்டு இருந்த என்னையும் வலைப்பதிவு <a href="http://athusari.blogspot.com/2007/12/blog-post.html" target="_blank">எழுதத் தூண்டிய வகையில்</a> தமிழ்மணம் திரட்டி மீது எனக்கு நன்மதிப்பு உண்டு. இஸ்லாத்திற்கு எதிராகவும்,முஹம்மது நபியை இழிவுபடுத்தியும் நேசகுமார், ஆரோக்கியம், நீலகண்டன்,கால்கரி சிவா, தருமி போன்றோர் பதிவுகள் எழுதியபோது, அவர்களின் அவதூறுகளுக்கான எதிர்வினையாகவே எனது பதிவுகள் இருந்தன.<br />
<br />
ஒருகட்டத்தில் இவர்களின் அலப்பரைகளால் வன்மக் கருத்துக்களைக் கொண்ட பதிவுகள் மிகைத்திருந்தபோது, அவர்களைத் திரட்டியிலிருந்து நீக்கியதால், தமிழ்மணத்தையும் தூற்றியதையும், சிலரின் சாதிய அடக்குமுறைக் கருத்துகளால் பாதிக்கப்பட்ட 'போலி' டோண்டுமூலம் மாற்றுக்கருத்துக் கொண்ட தமிழ் வலைப்பதிவர்கள் பாதிக்கப்பட்டபோதும், பின்னூட்ட மட்டுறுத்தல் இல்லாத பதிவுகள் திரட்டப்படாது என்ற முடிவின்போதும் எம்போன்றோர் தமிழ்மணம் கொள்கை முடிவுகளுடன் உடன்பட்டு, அதன்படி மட்டுறுத்தலும் செய்து ஒத்துழைத்தோம் என்பதைத் தற்போதைய தமிழ்மணம் நிர்வாகிகள் அறிவரா என்று தெரியவில்லை! தமிழ்மணத்திற்கு ஆதரவாக தங்களது வலைப்பூவில் ஒட்டிக்கொண்டதே இணைப்பிலுள்ள படம்.<br />
<br />
மதவெறியர்கள் தவிர்த்து நடுநிலை கருத்துக் கொண்ட <a href="http://athusari.blogspot.com/2006/07/vs.html" target="_blank">சக தமிழர்களுடன் உரையாடும்</a> களமாகவும் தமிழ்மணம் விளங்கியதால் அவ்வப்போது பொதுவான தலைப்புகளிலும் பதிவிட்டுள்ளதோடு <a href="http://athusari.blogspot.com/2007/12/blog-post_24.html" target="_blank">தமிழ்மணம் நட்சத்திர வாரத்தின் எனது பதிவுகளில்</a> மதம் சார்ந்த ஒருபதிவுகூட இல்லை என்பதையும் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். <a href="http://athusari.blogspot.com/2007/01/blog-post_14.html" target="_blank">பொங்கல் </a>மற்றும் <a href="http://athusari.blogspot.com/2006/08/kaafir.html" target="_blank">காஃபீர்</a>கள் குறித்த பதிவுகள் பலருக்கு இருந்த தவறான புரிதலைக் களைந்து தெளிவு நல்கியதாக பின்னூட்டங்களும், தனிமடல்களும் தெரிவித்தன. <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D" target="_blank">விக்கிபீடியாவில் பொங்கல் குறித்த இஸ்லாமியர்களின் கண்ணோட்டமாக</a> எனது பதிவு இன்றும் தொடுப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.<br />
<br />
தரமான கருத்துக்களடங்கிய பதிவுகளைத் தொகுக்கும் களமாக மூத்த/முன்னோடி வலைத்திரட்டியான தமிழ்மணம் விளங்க வேண்டும் என்பதே எமது எண்ணமும்கூட, நண்பர் காசி மற்றும் மதிகந்தசாமி ஆகியோருக்குப் பின்னர் நிர்வாகிகளாகப் பொறுப்பேற்றவர்களிடம் சகிப்புத்தன்மை இருப்பதாகத் தெரியவில்லை. <a href="http://pinnoottavaathi.blogspot.com/2011/10/blog-post_17.html" target="_blank">சகோ. ஆஷிக்கின் பதிவில் முஸ்லிம்களின் "ஸலாம்" குறித்து கிண்டலடித்தவர் தமிழ்மணம் நிர்வாகிகளுள் ஒருவராக இருந்ததையும்</a>, இதனால் சவூதி அரேபியாவில் தமிழ்மணம் தடைசெய்யப்பட்டதையும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.<br />
<br />
<a href="http://blog.thamizmanam.com/archives/391" target="_blank">தமிழ்மணம் சாதி, முற்றிலும் ?! மதம், அரசியல் கட்சிகள் சார்ந்த பதிவுகள், வர்த்தகப் பதிவுகள், பாலியல் வன்மம் உள்ளிட்ட பதிவுகள் ஆகியவற்றைத் திரட்டுவதில்லை என்ற முடிவு வரவேற்கத்ததே என்றபோதிலும், அது பூசிமெழுகும் யுக்தியன்றி வேறில்லை</a>. ஏனெனில், இந்த முடிவுக்குப் பிறகும் தருமியின் இஸ்லாத்திற்கு எதிரான விஷமப் பதிவு தமிழ்மணத்தில் பட்டியலில் உள்ளது. சுட்டியுடன் சுட்டியபிறகும், அந்தப் பின்னூட்டத்தை அனுமதிக்காமல் நிர்வாகி தடுத்து வைத்துள்ளதிலிருந்து இவர்களின் கூட்டுக்களவானித்தனம் தெரியவருகிறது.<br />
<br />
தமிழ்மணம் திரட்டும் பதிவுகளில் இவற்றைக் கழித்துவிட்டுத் தேடினால் சினிமா, ஜோதிடம், அரட்டைகளே மிஞ்சும். பாலியல் வன்மம் கொண்ட பதிவுகள் நீக்கப்பட வேண்டியதே என்பதில் மாற்றுக் கருத்தில்லை.சாதி,மதம், அரசியல் சார்ந்த பதிவுகள் அனைத்தும் ஒதுக்கப்பட வேண்டியதல்ல;பலரின் வாழ்க்கையுடன் தொடர்புடையவை என்பதால் இவைகுறித்த நாகரிக கருத்துப்பரிமாற்றங்கள் சகதமிழர்களிடையேயான புரிதலை வளர்ப்பதற்கு உதவும் ன்பதை தமிழ்மணம் நிர்வாகி உணர்ந்ததாகத் தெரியவில்லை.<br />
<br />
பேசும் மொழியாலும் பிறந்த பகுதியினாலும் தமிழர்களாக அடையாளம் காணப்படும் நாம், சாதி/மதம்/அரசியல் என ஏதேனும் ஒரு பிரிவினுள் அடங்குகிறோம் எனும்போது,அவைகுறித்த பதிவுகளைத் திரட்டுவதில்லை என்ற முடிவு கருத்துரிமை மறுக்கப்பட்டவர்களை வேறுதளம் நோக்கி திருப்பும் என்பதோடு, முஸ்லிம்களுக்காகவும் நடுநிலை பதிவர்களுக்காகவும் தனித்திரட்டி உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தத்தையும், தமிழ்மணத்தின் பாரபட்ச நடவடிக்கை ஏற்படுத்துகிறது.<br />
<br />
எம்மைப் பொருத்தவரை இஸ்லாம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட மார்க்கல்ல; ஆனால், அவற்றுக்கான தக்க விளக்கங்கள் கிடைக்கும்போது நேர்மையாக ஏற்றுக்கொள்ளும் வகையிலான விமர்சனங்கள் வரவேற்கப்பட வேண்டியவையே! வலைப்பூவிலோ இணையத்திலோ எழுதுவதல்ல எம் பணி.சகதமிழர்களுடன் எழுத்து வன்மம் விதைப்பவர்களுக்கெதிரான எழுத்தாயுதமே, எம்போன்றோர் இன்னும் எழுதிக்கொண்டிருக்கக் காரணம்.<br />
<br />
நட்சத்திரப் பதிவர், பின்னூட்ட மகுடம்/ எண்ணிக்கை இவையெல்லாம் எமது இலக்கல்ல.இஸ்லாத்திற்கு எதிரான அவதூறு பதிவுகளைத் தேடிப்பிடித்து அவர்களுக்கு விளக்கமளிப்பதற்காகச் செலவிடும்,நேரமும் சிந்தனையும் ஈடுசெய்ய முடியாதவை. இதற்கான நற்கூலியை எம்மைப் படைத்த அல்லாஹ் வழங்குவான் என்ற எண்ணத்துடனும், அநியாயத்துக்கு எதிராகக் கைகளால் தடுப்பதும் இறைநம்பிக்கையின் (ஈமான்) ஒருபகுதி என்பதாலேயே எழுதிக்கொண்டிருக்கிறோம்.<br />
<br />
சாதி,மதம்,அரசியல் மட்டுமின்றி சினிமா, விளையாட்டு, மொழியியல்,கருத்தியல் ரீதிகளிலும் தமிழர்கள் பிரிந்துள்ளனர் எனும்போது சிலவற்றை மட்டும் ஒதுக்குவது அல்லது இன்னதுதான் எழுதவேண்டும் என்று வரம்புவிதிப்பதும் கருத்துரிமை பேணுபவர்களது செயலல்ல. நமது அரசியல் அமைப்பு முறையே இவற்றை அங்கீகரித்துள்ளபோது, தமிழ்மணம் தடுப்பது சரியல்ல என்பதால் இந்தமுடிவை மறுபரிசீலனை செய்வதே அதன் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு உதவும் என்பதை சமூக அக்கரையுள்ள பதிவர்களுள் ஒருவனாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மதம் சார்ந்த பதிவுகள் மட்டுமின்றி பொதுவான <a href="http://athusari.blogspot.com/2007/01/blog-post_08.html" target="_blank">பிறவிசயங்கள்</a> குறித்து எழுதத்தெரியாதவனல்லன். முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குறித்தும், உலகில் ஐந்தில் இரண்டுபங்கு மக்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டிருக்கும் இஸ்லாம் பற்றியும் சில அரைகுறைகள் அவதுறாக எழுதும்போது, அதற்கு விளக்கம் அளிப்பதிலேயே எமது முழுகவனமும் திசை திரும்புவதால்தான், பிறதலைப்புகளில் கவனம் செலுத்த முடியவில்லை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குறிப்பிட்ட சாதியினரின் ஊதுகுழலாகத் தினமலர் விளங்குவதுபோல், தமிழ்மணமும் இஸ்லாத்திற்கு எதிராக எழுதுபவர்களின் தோரண வாயில் என்ற முத்திரைகுத்தப் பட்டுவிடக்கூடாது.</div>
<div style="background-color: #fff2cc; text-align: justify;">
<blockquote class="tr_bq">
சகபதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் அன்பான வேண்டுகோள்:<br />
<br />
தமிழ்மணத்தில் தற்போது எனது பதிவுகள் தடுக்கப்பட்டுள்ளதால் இந்தப் பதிவு பலரையும் சென்றடையும் வாய்ப்பு குறைவு. இப்பதிவில் நியாயம் இருப்பதாகக் கருதினால், தயவுசெய்து இதை உங்கள் தளங்களில் மேற்கோளிட்டோ,மீள்பதிவிட்டோ, அல்லது முகநூல் (Facebook) பக்கத்தில் தொடுப்பு கொடுத்தோ அல்லது பலரும் அறிவதற்கு உதவி செய்யுங்கள். </blockquote>
<blockquote class="tr_bq">
(இதனால் உங்கள் பதிவும்கூட தமிழ்மணத்திலிருந்து நீக்கப்படலாம். எனினும், உண்மைக்காகவும், ஒப்பில்லாத இறைதிருப்திக்காகவும் செயல்படும் உங்களில் ஒரு சகோதரனுக்குச்செய்த உதவியாகக் கருதி,நேர்மையான கருத்துரிமையில் நம்பிக்கையுள்ளவர்களுள் நீங்களும் ஒருவரென்று உரத்துச் சொல்லுங்கள்.) </blockquote>
</div>
<div style="background-color: #fff2cc; text-align: justify;">
</div>
<div style="color: #134f5c; text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: center;">
<b><span style="color: #134f5c;">இஸ்லாம் எங்கள் வழி! இன்பத்தமிழ் எங்கள் மொழி!!என்பதில் இன்ஷா அல்லாஹ் என்றும் உறுதியாக இருப்போம்.</span></b></div>
<div style="text-align: center;">
</div>
<div style="text-align: justify;">
<br />
நன்றி.<br />
<br />
அன்புடன்,<br />
நல்லடியார்<br />
nalladiyar@gmail.com</div>
</div>நல்லடியார்http://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-12417711.post-1159262617287249562012-05-08T21:00:00.000+04:002012-05-08T21:19:50.205+04:00ஹஜ் மானியமும் வெட்கமும்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
மக்காவுக்கு புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் இந்திய முஸ்லிம்களுக்கு வழங்கப் படுவதாகச் சொல்லப்பட்ட "ஹஜ் மானியம் ரத்து" என்பது குறித்த பதிவை 'என்றும் அன்புடன்' பாலா என்பவர் பதிவிட்டிருந்ததர். அதில் ஹஜ் யாத்திரை வசதியுள்ளவர்களுக்கு மட்டுமே கடமை என்று சொல்லப்படுவது பற்றி முஸ்லிம்கள் விளக்க வேண்டி இருந்தார். <br />
<br />
பாலாவின் (என்றும்?) அன்பான அழைப்பை ஏற்று, இந்திய ஹாஜிகளுக்கு வழங்கப்படும் ஹஜ் மானியம், ரிசிகேஷ் செல்லும் இந்து யாத்திரிகர்களுக்கு வழங்கப் படுவது போல் 'இலவசமாக' கொடுக்கப் படவில்லை; மாறாக ஹாஜிகள் முன்பணமாக செலுத்தியதில் விமான சேவைகளால் கிடைக்கும் இலாபத்தில் சிறிதளவை திரும்ப கொடுக்கிறார்கள்.<br />
<br />
இது ரிசிகேஷ் யாத்ரிகர்களுக்குக் கொடுக்கப்படும் மானியத்தை விட சதவீத அளவில் மிகக்குறைவு. எப்படியெனில், இந்திய ஹஜ் கமிட்டியின் மூலம் பயணம் மேற்கொள்ள சுமார் 80,000 ரூபாயிலிருந்து ஒரு இலட்சம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப் படுகிறது. இதில் விமானக் கட்டனமாக வசூலிக்கப்படும் ரூ.32,000 இல் ரூ.20,000 ஐ ஏர் இந்தியா விமானச் சேவைக்கு, ஹாஜிகளின் சார்பில் செலுத்துகிறது. இவ்வாறாக செலுத்தப்படும் மானியம் 2001 ஆம் ஆண்டு ஏறத்தாழ 150 கோடி ரூபாயாக இருந்து 2005 ஆம் ஆண்டு ரூ.225 கோடியாக உயர்ந்துள்ளது. <br />
<br />
இவ்வாறு மத்திய அரசால் ஏர்-இந்தியாவிற்கு வழங்கப்படும் மானியத்தைத்தான் இந்திய ஹாஜிகளுக்கு மானியமாகக் கொடுக்கப்படுவதாகச் சொல்லிக் கூக்குரலிடுகிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் சாதாரணமாக பிற விமானச்சேவைகளில் சவூதிக்கு ரூ.25,000 கட்டணமாக இருக்கும் போது, ஏர்-இந்தியா விமானச்சேவை ரூ.35,000 வசூலிக்கிறது. ஆக, மத்திய அரசால் ஹாஜிகள் சார்பில் கொடுக்கப்படும் மான்யம் ரூ.12,000 மட்டுமே. <br />
<br />
இஸ்லாமிய சகோதரர்கள் விளக்குவார்களா என்று (என்றும் அன்புடன்) அழைத்திருந்தன் பேரில் பின்னூட்டமிட்டிருந்தேன். சகோதரர் சலாஹுத்தீனும் நாகரிகமாகப் பின்னூட்டமிட்டு கருத்துப் பரிமாறி இருந்தார். அதிலிருந்த நியாயங்களை பாலாவும் ஏற்றுக் கொண்டிருந்தார். பொறுக்குமா வந்தேறி பார்ப்பனக் கும்பலுக்கு? வழக்கம்போல் இஸ்லாமியர்களை வசை பாடுவதைத் தங்கள் குலத்தொழிலாகக் கொண்ட இக்கும்பல் இப்பதிவையும் தங்கள் அரிப்பை சொரிந்து கொள்ள பயன்படுத்திக் கொண்டது. <br />
<br />
<b>//வந்தே மாதரம் பாடினால் அல்லா கோபிச்சுப்பார் என்று சொல்லும் துலுக்கர்கள் இந்த மானியம் ஷரீய்யாவுக்கு விரோதம் என்றால் ஏன் வெட்கம் கெட்டு வாங்கிக்கொள்ளுகிறார்கள்......மானங்கெட்டவர்கள்!!நன்றி// </b><br />
Comment by ஜயராமன் at 6:00 PM, September 25, 2006 <br />
<br />
ஜயராமன் மற்றும் டோண்டு ராகவன் என்ற இரு வெட்கம் கெடாத பார்ப்பனர்கள், இந்திய முஸ்லிம்கள் ஹஜ் மானியத்தை வெட்கமின்றி பெறுவதவதாக திருவாய் மலர்ந்துள்ளார்கள். ஜயராமன் என்ற பெயரில் மேதாவித்தனமாக எழுதும் நபர் ஆரோக்கியம் என்பது அவரின் எழுத்து நடையிலிருந்து யூகிக்க முடிகிறது. அவரின் உள றல்களை பல பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் கண்டிருப்பதால் அதைப் பற்றி கருத்துச் சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் டோண்டு ராகவனுக்கு என்ன நேர்ந்தது? <br />
<br />
<b>//வெட்கமே இல்லாத போது வெட்கம் கெட்டு என்று ஏன் அவதூறாகக் கூறுகிறீர்கள்? இருந்தால்தானே கெடுவதற்கு?// </b><br />
Comment by dondu(#4800161) at 11:11 PM, September 25, 2006 <br />
<br />
வெட்கத்தைப் பற்றி பேச தனக்கு கொஞ்சமும் அருகதை உண்டா என 'இளம் பெண்கள் மாட்டிக் கொள்ளாமல் விபச்சராம் செய்வது எப்படி?" என்று தொடர் பதிவெழுதி சக வலைப்பதிவர்களின் கண்டனத்திற்கு ஆளாகியும், தன் தவறை வெட்கமின்றி திருத்திக் கொள்ளாமல் இன் றும் சப்பைக் கட்டி வரும் டோண்டு ராகவன் சிந்திக்க வேண்டும்.<br />
<br />
இந்திய சுதந்திரத்திற்கு எந்த தியாகமும் செய்யாமல் 'வெட்கமின்றி' உயர் பதவிகளை ஆக்கிரமித்திருக்கும் பார்ப்பன சமூகத்தை சார்ந்த டோண்டு ராகவனுக்கும் ஜயராமனுக்கும் இந்திய முஸ்லிம்களின் வெட்கத்தை பற்றி பேச அருகதை இல்லை. <br />
<br />
இந்திய முஸ்லிம்களாவது கொடுத்த பணத்தில் மான்யம் என்ற பெயரில் சொற்பத் தொகையை திரும்பப் பெறுகிறார்கள். வெறும் மணியை ஆட்டிவிட்டு பெறப்படும் 'காணிக்கை' மானியங்களைப் பெற்றதோடு, தாங்கள் மட்டுமே உயர் பிறப்பு என்று சொல்லி மற்றவர்களின் காணிக்கையில் உண்டு கொழுக்கும் பார்ப்பனர்களின் வெட்கம் பற்றி என்ன சொல்கிறார் திருவாளர் டோண்டு? கொலைக் குற்றவாளியே ஆனாலும் வெட்கமின்றி அருளாசி வழங்கும் ஜகத்குரு பற்றியும் விளக்க வேண்டும். <br />
<br />
ஒவ்வொரு வருடமும் கும்பமேளாவுக்கு பாதுகாப்பிற்காக நிறுத்தப்படும் 40,000 காவல் துறையினர் மற்றும் இராணுவத்தினரின் சம்பளத்தில் இந்திய முஸ்லிம்களின் வரிப்பணமும் இருக்கிறது என்பதை வெட்கம் கெடாத ஜென்மங்கள் உணர வேண்டும். <br />
<br />
பாகிஸ்தானிலிருக்கும் கோவில்களை தரிசிக்க பாகிஸ்தான் வசூலிக்கும் கட்டணத்தை விட சீனாவிலிருக்கும் கைலாச மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்திய யாத்ரிகர்களிடம் அதிகம் வசூலிக்கப்படுகிறது. 'வெட்கமின்றி' இரண்டு முறை இந்தியாவை ஆளும் வாய்ப்புப் பெற்ற சங்பரிவாரக் கும்பல், சீனாவுடன் பேசி அக்கட்டணத்தைக் குறைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. <br />
<br />
இன்னுமும் வெட்கம்/சூடு சுரணை இருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் ஜயராமன் & டோண்டு ராகவன் கும்பல் இதனைக் கண்டித்து விட்டு, முஸ்லிம்களின் வெட்கம் பற்றி பேசட்டும். <br />
<br />
திரு.பாலா, பதிவுக்குப் பொருந்தாத முஸ்லீம் சமுதாயத்தைப் புண்படுத்தும் வாசகங்கள் கொண்ட இந்தப் பின்னூட்டங்களை அனுமதித்ததன் மூலம் நீங்கள் என்ன சொல்லிக் கொள்ள விரும்புகிறீர்கள்? <br />
<br />
நீங்கள் வைத்த வேண்டுகோளுக்காகவே மானியம் தொடர்பான எனது கருத்துக்களை பின்னூட்டமிட்டேன். அதற்கு வந்த எதிர்வினைகள், குறிப்பாக ஜயராமன், டோண்டு ராகவன் ஆகியோரின் பின்னூட்டங்கள் நாகரீக எல்லையை கடந்து சென்றிருப்பதும் அவற்றை நீங்கள் எடிட் செய்யாமல் அனுமதித்திருப்பதும் என் போன்ற முஸ்லிம் பதிவர்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது. மெத்தப் படித்தவர்களாக காட்டிக் கொள்பவர்கள் உள்மனதில் இவ்வளவு வக்கிரங்களா? சக வலைப்பதிவர்களுடன் நாகரீகமான முறையில் உரையாட உங்களை எது தடுக்கிறது? <br />
<br />
ச்சே......!<br />
<br />
<div class="post-header-line-1">
<h2 class="date-header">
Tuesday, September 26, 2006 அன்று எழுதிய பதிவு. மீள்பதிவு செய்யப்படுகிறது.</h2>
</div>
</div>நல்லடியார்http://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-12417711.post-10267003416886361702012-05-08T00:24:00.000+04:002012-05-08T00:40:21.539+04:00கல்லெறியலாம்; ஆனால் சலனப்படக்கூடாது?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiby4peYw3HnQA2EgwJx542GvwlvrD9Km2-v9MT2oQjyrG9chpKDlxW1lgw2B7ny7JbOX2VUxeHi2g_5-fyhqRLm782AzlLGdQum77uNMHxKxKGojVLRzLa1DNZQxtQY-vMnfu-WQ/s1600/vibrate.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="245" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiby4peYw3HnQA2EgwJx542GvwlvrD9Km2-v9MT2oQjyrG9chpKDlxW1lgw2B7ny7JbOX2VUxeHi2g_5-fyhqRLm782AzlLGdQum77uNMHxKxKGojVLRzLa1DNZQxtQY-vMnfu-WQ/s400/vibrate.JPG" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு, இறை-அமைதி நிலவட்டுமாக.<br />
<br />
மதம் சார்ந்த பதிவுகளை பட்டியலிடாதிருப்பதற்கு சிலரின் தவறான அணுகுமுறையே காரணம் எனில் சம்பந்தப்பட்டவர் பதிவராக இருக்கும் பட்சத்தில் தகுந்த காரணங்களைச் சுட்டி பதிவையோ அல்லது பதிவரையோ நீக்குவதே சரியான முடிவாக இருக்கும். அவதூறுகளின் தொகுப்பாக தமிழ்மணம் இருக்க வேண்டியதில்லை. ஆனால், தமிழ்மணம் திரட்டிமூலமாக கடைவிரிக்கப்பட்ட குறிப்பிட்ட மதத்தின்மீதான அவதூறுகளுக்கு எதிர்வினையாக இல்லாவிட்டாலும் தன்னிலை விளக்கமாக எழுதப்படும் பதிவுகளை தடைசெய்வது சரியல்ல என்பது என் அன்பான கருத்து.<br />
<br />
இதன் நடத்துனர்கள் மதநம்பிக்கையற்றவர்களாக இருக்கலாம். அதேபோன்றுதான் பதிவர்களும் இருக்க வேண்டுமா? மதங்கள் தவிர்த்து சினிமா, அரசியல் மற்றும் ஒன்றுக்கும் உதவாத இன்னும் எத்தனையோ மொக்கை பதிவுகளும், பதிவர்களும் உளரே. இதற்கு ஏதேனும் திட்டமுண்டா? :)<br />
<br />
தன்கருத்தைச் சொல்வதற்கு எப்படி ஒருவனுக்கு உரிமையுண்டோ அதுபோல் தான் சார்ந்த மதத்தையும் சொல்லும் உரிமையுண்டு. துரதிஷ்டவசமாக, தம் மதக்கொள்கையின் சிறப்பைச் சொல்லும் பதிவர்களைவிட, அடுத்தவர் நம்பிக்கைமீது உமிழும் பதிவர்களே மிகைத்துள்ளனர்.<br />
<br />
என்னுடைய பதிவுகளில் <a href="http://athusari.blogspot.com/2012/05/blog-post.html" target="_blank">அவதூறுகளுக்கான எதிர்வினைகளே இடம்பெற்றுள்ளன</a> என்பதையும் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இதற்குமேலும் உங்கள் முடிவு சரியே என்றால் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. நன்றி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
-<a href="http://blog.thamizmanam.com/archives/391#comment-17183" target="_blank">மதம் சார்ந்த பதிவுகள் நீக்கபடுவதாக வெளியான தமிழ்மணம் அறிவிப்பு </a>பதிவில் நானிட்ட பின்னூட்டம்.</div>
</div>நல்லடியார்http://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12417711.post-1667441454751836992012-05-07T20:06:00.002+04:002012-05-07T20:06:16.393+04:00முஹம்மது நபியின் திருமணம் (அன்னை ஜைனப் ரலி)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5elFQ235e5CymfTpCb-2ZylBQ-6yqiCJLB1qWGaFDJNWxOSVMspwk4fdJOUbYh0qNuDVesce8jqNbpzYpYiYZhsCNUOX8VV3HxcRfqnv4Qicu9ockZJF8oxu6NhAQrzESxxfP_w/s1600/Muhammad-Peace-be-upon-him.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5elFQ235e5CymfTpCb-2ZylBQ-6yqiCJLB1qWGaFDJNWxOSVMspwk4fdJOUbYh0qNuDVesce8jqNbpzYpYiYZhsCNUOX8VV3HxcRfqnv4Qicu9ockZJF8oxu6NhAQrzESxxfP_w/s320/Muhammad-Peace-be-upon-him.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
சதித்திட்டங்களால் முஹம்மது நபியைக் கொல்ல முடியாமல் தோற்றவர்கள், ஹிஜ்ராவுக்குப் பிறகு முஹம்மது நபி அடுத்தடுத்து அடைந்த வெற்றிகளால் மீளெழுச்சிபெற்று, எல்லாச் சூழ்ச்சிகளையும் தகர்த்தெறிந்து புத்துணர்வு பெற்று இஸ்லாம் வீறுகொண்டு வளர்ந்ததால், சோர்வுற்ற எதிரிகள், இனி இஸ்லாத்தின் வளர்ச்சியைப் போர்கள் மூலம் தடுக்க முடியாது என்பதை மனதளவில் உணர்ந்து,முஹம்மது நபியின் தனிப்பட்ட வாழ்க்கைமீது போர்தொடுக்கும் சதித்திட்டத்துடன் பரப்பிய அவதூறுகளுள் ஒன்றே அன்னை ஜைனப் ரலி..அவர்களுடனான முஹம்மது நபியின் திருமண உறவு.<br />
<br />
எத்தகைய நபரையும் பாலியல் குற்றச்சாட்டுகள்மூலம் களங்கப்படுத்திவிடலாம் என்ற துர்எண்ணம் பிடித்தவர்கள் அன்றும் இருந்தனர். அவ்வகையில் முஹம்மது நபியைக் களங்கப்படுத்தத் தக்க தருணம் பார்த்துக் காத்திருந்த எதிரிகள், அன்னை ஜைனப் ரலி.. அவர்களுடனான திருமண உறவைக் கொச்சப் படுத்திக் கொஞ்சம் சொறிந்து கொண்டு ஆறுதல் அடைந்தனர். எனினும், உண்மையின் வெளிச்சத்தில் இந்தத் திருமண உறவை அலசும்போது, நபி ஸல்... மீதான குற்றச்சாட்டு முழுக்க முழுக்க அவதூறு என்பதைக் காணலாம்.<br />
<br />
1) முஹம்மது நபியின் அத்தை மகள் அன்னை ஜைனப் ரலி..அவர்கள்,முஹம்மது நபியைத் திருமணம் செய்ய விரும்பினாலும், பல்வேறு சூழல்களால் அது கைகூடவில்லை.<br />
<br />
2) அடிமையாக இருந்த ஜைத் இப்னு ஹாரிதா ரலி...அவர்களை முஹம்மது நபி ஸல்.. அவர்கள் வளர்ப்பு மகனாகத் தத்தெடுத்ததோடு, ஜைனப் ரலி..அவர்களை ஜைதுக்குத் திருமணமும் முடித்து வைக்கிறார்கள். ஜைனப் ரலி.. மற்றும் குடும்பத்தாருக்கு இவர்களின் திருமணத்தில் உடன்பாடில்லை. குரைஷிப் பெண்ணுக்கு ஓர் முன்னாள் அடிமையை மணம் முடிப்பதா என்ற குலப்பெருமையே பின்னணிக் காரணமாக இருந்தது. எனினும், இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் நீடித்ததால் ஜைனப்-ஜைத் தம்பதிகள் விவாகரத்துபெற்றுப் பிரிந்துவிடுவது என்று முடிவெடுத்தபோது, முஹம்மது நபி ஸல்..அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி மணவாழ்க்கையைத் தொடரச் செய்கிறார்கள்.<br />
<br />
3) ஓரிறைக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்ட அரபிகளால், காலங்காலமாக நடைமுறையிலிருந்த அறியாமைக்கால பழக்கங்களைக் கைவிட முடியவில்லை. அன்றைய காலகட்டத்தில் தத்துப் பிள்ளையை சொந்தப் பிள்ளையாகவே கருதும் மனப்போக்கு அரபிகளிடம் இருந்ததால்,பெற்ற பிள்ளைகளின் உரிமைகளுக்கு இழப்பு ஏற்பட்டது. வாழ்வியல் புரட்சி நெறியாக இஸ்லாம் வளர்ந்து கொண்டிருந்தபோது, வாரிசு, சொத்துரிமை,விவாகரத்து,திருமணம் ஆகியவற்றில் மிகுந்த குழப்பங்கள் இருந்தன. இவற்றிற்குத் தீர்வுகாண வேண்டிய சமூகப் பொறுப்பும் முஹம்மது நபிக்கு இருந்தது.<br />
<br />
***********<br />
வேறொரு தாய்-தந்தைக்குப்பிறந்த குழந்தையை தத்து/சுவீகாரம் என்றெல்லாம் மகவாக ஏற்றாலும் நடைமுறையில் பெற்ற பிள்ளைக்கும்-தத்துப் பிள்ளைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. சொல் அளவில்கூட இருஉறவுகளும் ஒன்றல்ல என்பதை இதற்கான தனித்தனியான சொற்பிரயோகங்கள் உணர்த்துகின்றன. இரண்டும் ஒன்றே எனில் தத்து/சுவீகாரம் என்ற தனி அடையாளப்படுத்தும் சொற்களுக்கு அவசியமில்லை.<br />
<br />
குழந்தை இருந்தாலும், இல்லாவிட்டாலும் தத்து எடுக்கப்பட்ட குழந்தைக்கும் பெற்ற பிள்ளைக்கும் சம உரிமைகள் என்பது பேச்சளவில் மனிதாபிமானம் என்று சொல்லப்பட்டாலும், உண்மையில் சொந்தப்பிள்ளைகளுக்கு அநீதியே இழைக்கப்படுகிறது.நடைமுறையில் வளர்ப்புப் பிள்ளைகளின் சகோதரர்களிடம் இதை உறுதி செய்து கொள்ளலாம்!<br />
<br />
தத்தெடுப்பது உண்மையான உறவு முறைகளில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதை அறிவுப்பூர்வமாக அணுகுவதாலேயே தத்துப் பிள்ளை,பெற்ற பிள்ளையாக முடியாது என்று இஸ்லாம் ஆணித்தரமாகப் பிரகடனம் செய்கிறது.இதை நடைமுறைப்படுத்துவதற்காக வளர்ப்பு மகன் ஜைத் ரலி..தமது மனைவி ஜைனப் ரலி அவர்களை விவாகரத்துச் செய்தபிறகு முஹம்மது நபி ஸல்... அவர்கள் ஐந்தாவது மனைவியாக திருமனம் முடிக்கிறார்கள்.<br />
<br />
வளர்ப்பு மகனின் முன்னாள் மனைவியை மணம் செய்தால் அரபிகள் தம்மைக்கேவலமாகப் பேசுவார்களே என்ற அச்சம் கலந்த மனத்தடை முஹம்மது நபியிடமும் இருந்ததால்தான் ஜைத் ரலி அவர்கள்,ஜைனப் ரலி. அவர்களை விவாகரத்துச் செய்வது குறித்து ஆலோசித்தபோது,முஹம்மது நபி ஸல். அதைத் தடுத்ததாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இதையே அல்லாஹ்வும், தனது அருள்மறையில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறான்:<br />
</div>
<blockquote style="color: blue;">
"எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர்மீது அருள் புரிந்தவரிடம்,'அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக ரத்து செய்துவிடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக்கொள்' என்று சொன்னபோது,அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடையை மனத்தினுள் மறைத்து வைத்தீர்;ஆனால், அல்லாஹ்தான் நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்...(033:03) </blockquote>
<div style="text-align: justify;">
<br />
என்றதோடு, ஜைனப் ரலி..அவர்களை முஹம்மது நபி ஸல்..அவர்கள் மீண்டும் மணம் செய்யவேண்டும் என்பதே அல்லாஹ்வின் ஏற்பாடாகவும் இருந்தது. ஆக, முஹம்மது நபி ஸல். அவர்களின் ஒவ்வொரு திருமணமும் சமூக நலன் சார்ந்தது என்பதோடு அப்பழுக்கற்ற இல்லற வாழ்வுக்குச் சொந்தக்காரராகவே நபிகளார் இருந்துள்ளார்கள்.<br />
*******<br />
வளர்ப்பு மகன் ஜைதின் மனைவி ஜைனபை,ஆடை கலைந்திருந்த கோலத்தில் முஹம்மது நபி காண நேர்ந்ததால், ஜைனபின் பேரழகில் காதல் கொண்டு மனைவியாக அடைய எண்ணம் கொண்டதாகவும் சிலர் கட்டுக்கதையைப் பரப்பியுள்ளனர். இப்படியொரு நிகழ்வு நடக்கவே இல்லை என்பதை விளக்கி சகோ.<a href="http://abumuhai.blogspot.com/2004/12/blog-post_08.html" target="_blank">அபூமுஹை</a>,<a href="http://islamanswers.blogspot.com/2005/02/2.html" target="_blank">சலாஹுத்தீன்</a> ஆகிய பதிவர்கள் தனிப்பதிவிட்டுள்ளார்கள்.<br />
<br />
முஹம்மது நபியின் தந்தையின் சகோதரி (அத்தை) மகளான ஜைனப் அவர்களும் முகம்மது நபியும் ஒரே வீட்டில் தாம் வசித்தார்கள் என்பதோடு, ஜைனப் அவர்களைச் சிறுவயது முதலே எந்தத் தடையும் இல்லாமல் (பர்தா குறித்த தடை அப்போது இல்லை) பார்க்கவும் முஹம்மது நபி வாய்ப்புப் பெற்றிருந்தார்கள் உண்மை இவ்வாறிருக்க ஜைனபின் அழகைப்பார்த்த பிறகு முஹம்மது நபி, மனைவியாக்க எண்ணம் கொண்டதாக கதைப்பது அறியாமை அல்லது அவதூறாகவே கருதப்பட வேண்டும்.<br />
<br />
மேலும்,முஹம்மது நபி அவர்கள் ஜைனப் அவர்களை ஐந்தாவது மனைவியாக மணந்தபோது, முஸ்லிம் ஆண்கள் அதிகபட்சம் நான்கு பெண்களை மணக்கலாம் என்ற உச்சவரம்பு நடைமுறைக்கு வரவில்லை. உண்மையிலேயே முஹம்மது நபிக்கு அத்தகைய எண்ணம் இருந்திருந்தால்,தம்வசதிக்காக இந்த வரம்பை அதிகமாக்கியிருக்கலாமே!<br />
<br />
ஒரு வாதத்திற்காக, ஜைனபின் பேரழகில் மயங்கியதாகச் சொல்லப்படுவது உண்மையெனில், மனம் கவர்ந்தவரை இன்னொருவருக்கு மணம் செய்துவைத்து, பிறகு விவாகரத்துச் செய்ய வைத்து, நான்கு மாதங்களுக்கு மேலாகக் காத்திருந்து மறுமண முடிக்க வேண்டிய அவசியமில்லாமல் உடனடியாகவே மணமுடித்திருக்கலாமே!<br />
<br />
தமது மகளிருக்கும்போது மருமகன் இன்னொரு பெண்ணை மறுமணம் செய்வதை எந்தத் தந்தையும் விரும்ப மாட்டர்.அபூபக்கர் ரலி அவர்களின் மகள் ஆயிஷா,உமர் ரலி அவர்களின் மகள் ஹப்ஸா ஆகியோரின் கணவனாக இருந்த முஹம்மது நபி, ஐந்தாவதாக ஜைனப் அவர்களை மணந்தபோது அபூபக்கர் ரலி எதிர்ப்பைக் காட்டியிருக்கலாம். ஆனால், இவர்களிடையேயான நட்பும் புரிதலும் மென்மேலும் வளர்ந்ததேயன்றி மனதில் சிறுசஞ்சலம்கூட ஏற்படவில்லை!<br />
<br />
ஜைத்-ஜைனப் தம்பதிகள் விவாகம் ரத்தானபோது, முஹம்மது நபி 'பனூ குறைளா' யூதர்களை முற்றுகையிட்டு இருந்தார்கள். அழகில் மயங்கியதாகச் சொல்லப்படுவது உண்மையெனில் போர்க்களத்திற்குத் தோழர்களை மட்டும் அனுப்பி இருக்கலாமே!<br />
<br />
எல்லாவற்றையும்விட, இந்தத் திருமண உறவில் குறைகாண்பதாக இருந்தால் நான்கு மனைவிகளுள் ஒருவரேனும் குறைகண்டிருக்கக்கூடும். ஆனால், அத்தகைய நிகழ்வுகள் எதுவும் நடக்கவில்லை. சக்களத்திகளே விரும்பிச் சகித்துக் கொண்டிருந்த உத்தம நபியின் உன்னத இல்லற வாழ்வைக் குறைசொல்லும் தகுதி யாருக்கும் இல்லை.<br />
==========<br />
தொடர்புடைய வெளிச்சுட்டிகள்:<br />
<br />
1) <a href="http://abumuhai.blogspot.com/2004/12/blog-post_08.html" target="_blank">மாற்றாரால் காமுகராகச் சித்தரித்த நபி - ஸைனப் திருமணம்.</a><br />
2) <a href="http://islamanswers.blogspot.com/2005/02/2.html" target="_blank">ஹதீஸ் ஒரு சிறு விளக்கம் - 2: தபகாத் இப்னு ஸஃது</a><br />
</div>
</div>நல்லடியார்http://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-12417711.post-78938909156028740702010-10-12T11:49:00.002+04:002010-10-12T11:54:21.857+04:00பாபர் மசூதி தீர்ப்பு - சீதையின் சமையலறையில் கருகிய நீதி!பாபர் மஸ்ஜித் உரிமை குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி நடுநிலையாளர்களுக்கும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஆவணங்கள் மற்றும் சாட்சிகளின்படி சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய நீதிபதிகள், ஒரு சாராரின் நம்பிக்கையை மட்டும் நிலைநாட்டியுள்ளமை உலக அரங்கில் இந்திய நீதிமுறையின் லட்சணத்தைக் கேலிக்கூத்தாக்கி உள்ளது!<br /><br />நான்கரை நூற்றாண்டுகள் அனுபவ பாத்தியதையுள்ள பாபர் மசூதியை 1992, டிசம்பர் 6 அன்று சங்பரிவாரங்கள் வன்முறையாக ஆக்கிரமித்து இடித்துத் தகர்த்தனர். ஒருவரின் சொத்தை ஆக்கிரமிப்பதும், அவர் உடமைக்குச் சேதம் விளைவிப்பதும் சட்டவிரோதம். இதனைத்தொடர்ந்து மதக்கலவரங்களால் ஆயிரக்கணக்கில் முஸ்லிம்களைக் கொன்று குவித்தது அதைவிடக்கொடிய கிரிமினல் குற்றம்.<br /><br />இதற்கெல்லாம் காரணமானவர்களை விசாரித்துத் தண்டிக்க முயற்சி எடுக்காத நீதிமன்றங்கள், பாபர் மசூதி உரிமை குறித்த வழக்கில் வழங்கியுள்ள தீர்ப்பு தேசிய ஒருமைப்பாட்டிற்கு வேட்டுவைக்கும் என்பதோடு மக்களுக்கு இருக்கும் சட்டத்தின் மீதான நம்பிக்கையையும் தகர்க்கக்கூடியதாக அமைந்துள்ளது. சட்டப்படியல்லாத இத்தீர்ப்பு(கட்டப்பஞ்சாயத்து), ஏற்கனவே ராமர் பெயரால் முடக்கி வைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் சேதுக்கால்வாய் திட்டத்தையும் இதே நம்பிக்கையின் அடிப்படையில் நிரந்தரமாக முடக்கி வைக்க வழிகோலும்.<br /><br />கடந்த 24-09-2010 அன்று வெளியாக இருந்த தீர்ப்பு, உச்சநீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட மனுவின் மீது இடைக்காலத்தடையாணை பெறப்பட்டு 6 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. இறுதியாக, உச்ச நீதிமன்றத்தால் அப்புகார் மனு தள்ளுபடி செய்யப்பட, கடந்த 30-09-2010 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் இம்முறையற்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.<br /><br />இத்தீர்ப்பு வெளியாவதற்கு முன்னர், பாபர் மசூதி நிலம் யாருக்குச் சொந்தம் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம் என்றும் அதில் நீதிமன்றங்களால் தீர்ப்பு கூற இயலாது என்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் சங்பரிவாரங்கள் அறிவித்திருந்தன. எனினும் பொதுஅமைதிக்கு ஊறு விளைவிப்பவர்களை முன்கூட்டியே கைது செய்து சிறையிலடைக்கும் "குண்டர் தடுப்புச் சட்டம்", தீர்ப்பு வெளியாகும் சமயம் சங்பரிவாரங்கள் மீது பாயவில்லை. இதனால் சங்பரிவாரங்களில் குண்டர்களே இல்லை என்பது அர்த்தம் அல்ல என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் நன்றாகத் தெரியும். சுதந்திர, குடியரசு தினங்களுக்கு முன்னரும் ஒவ்வொரு டிசம்பர் 6 க்கு முன்னரும் சந்தேகத்தின்பேரிலும் பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரிலும் முஸ்லிம்களைக் கைது செய்யும் சட்டம், நாட்டில் திட்டமிட்டே கலவரம் உருவாக்கிக் கொண்டிருக்கும் சங்பரிவாரங்களை இத்தீர்ப்பு வெளியாவதற்கு முன்பு சந்தேகிக்கவோ முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் கூட கைது செய்யவோ முன்வரவில்லை!<br /><br />உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒப்புக்குத்தான்; உண்மையான தீர்ப்பு உச்ச நீதிமன்றம் வழங்குவதுதான் என்றும், இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம் என்றும் சமாதானம் சொல்லப்படுகிறது. ஒன்றுக்கும் உதவாத தீர்ப்புக்கு ஏன் 60 ஆண்டுகால தாமதம் என்ற கேள்விக்கு யாரிடம் பதில் பெறுவது? தாமதமாக வழங்கப்படும் நீதிகூட அநீதியே என்று கருதப்படும் போது முஸ்லிம்களின் உடமை விசயத்தில் 60 ஆண்டுகள் தாமதப்படுத்தி அலகாபாத் நீதிமன்றம் அநீதி வழங்கியுள்ளது!<br /><br />24-09-2010 வரை எந்த நீதிமன்றத் தீர்ப்பும் எங்களைக் கட்டுப்படுத்தாது என்று சொல்லிவந்த சங்பரிவாரங்கள் 30-09-2010 தேதியிட்ட தீர்ப்பைத் தலையில் வைத்துக் கொண்டாடுவதிலிருந்தே இதன் லட்சணம் விளங்குகிறது. தீர்ப்பு எப்படி இருப்பினும் "மேல்முறையீடு செய்வது உறுதி" என்ற அத்வானிக்கும் செலக்டிவ் அம்னீஸியா என்று நினைக்குமளவு தீர்ப்பை வரவேற்றுள்ளார். மூன்றில் இருபங்கு உரிமையைப் பெற்றுள்ளபோதும் "இந்துக்கள்" அமைதி காக்க வேண்டும் என்று ரஸ் தலைவர் வேண்டுகோள் வைக்கிறார்! யாரை ஏமாற்ற இந்தக் கபட நாடகங்கள்!<br /><br />செப்டம்பர் 24 -30 க்கு இடைப்பட்ட ஆறுநாட்களில் என்ன நடந்தது? சட்டம் எங்களைக் கட்டுப்படுத்தாது என்று முழங்கிய சங்பரிவாரங்கள் மகுடிப் பாம்பாய் சட்டத்திற்குக் கட்டுப்பட்ட அதிசயம் எப்படி நிகழ்ந்தது? என்ற கேள்விகளுக்கு விடைதேட அலைய வேண்டியதில்லை. சட்டமாவது மண்ணாங்கட்டியாவது என்பது சங்பரிவாரங்களின் இயல்பெனில், நீதியாவது மண்ணாங்கட்டியாவது என்று காங்கிரஸும் நடந்து கொண்டுள்ளது.<br /><br />உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாலும்கூட நியாயமான தீர்ப்பை உடனடியாக எதிர்பார்க்க முடியாதளவுக்கு நம்நாட்டு சட்டத்தின் ஓட்டைகள் பல்லிளிக்கின்றன. காஞ்சி சங்கராச்சாரியாருக்கு எதிரான குற்றச்சாட்டை விசாரிக்க முடியாதளவு 'பக்தி'முற்றிப்போன நீதிபதிகளும், லவ் ஜிஹாத், இஸ்லாமிய தீவிரவாதம் என்றெல்லாம் வெளிப்படையாகவே விஷம்கக்கிய காவியுடை தரிக்காத நீதிபதிகளும் நம் நாட்டு நீதிமன்றங்களில் உள்ளதை நினைவில் கொள்ளவும்.<br /><br />பாபர் மசூதி நடுவில்தான் ராமன் பிறந்தான் என்று இரு நீதிபதிகள் கூறியுள்ளனர். இன்னொரு நீதிபதியோ, பாபர் மசூதி கோவிலை இடித்துக் கட்டப்பட்டதல்ல என்கிறார். இடிக்கப்படாத கோவிலில் முஸ்லிம்கள் தொழமாட்டார்கள் என்று தன் பங்குக்கு இன்னொரு நீதிபதி குழப்புகிறார். 1949 வரை முஸ்லிம்கள் அங்கு தொழுது வந்துள்ளதால் அங்கு கோவில் இருந்திருக்கவில்லை என்றுதானே அர்த்தமாகும்!<br /><br />ராமர் பிறந்ததாக நீதிபதிகளால் சொல்லப்பட்டுள்ள (சங்பரிவாரங்களும் இதையேதான் சொல்லி வருகிறார்கள்) இடம் இந்துக்களுக்கு உரியதாம்! அதாவது சிலைகளை வணங்காத முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலத்தின் நடுவில் இந்துக்கடவுளின் உருவச்சிலை! என்னே ஒரு வக்கிரம் பாருங்கள்! அயோத்தியில் பிறந்ததாக எவ்வித ஆதாரங்களும் இன்றி 'நம்ப'ப்படும் ராமன், பாபர் மசூதிக்குச் சற்று தள்ளி பிறந்ததாக 'நம்பி'னால் குடியா மூழ்கி விடும்?<br /><br />பாபர்மசூதி, ராமர் கோவிலை இடித்துக் கட்டப்பட்டதல்ல என்ற நீதிபதி கான் அவர்களின் தீர்ப்பை கருத்தில் கொண்டாலே போதும், சங்பரிவாரங்களின் ஐம்பதாண்டுகால மோசடிகள் முடிவுக்கு வந்துவிடும். ஏனெனில் இதுவரை ராமன் பிறந்த இடத்தில் கோயிலை இடித்து மசூதி கட்டப்பட்டுள்ளது என்பதே பரிவாரங்களின் நம்பிக்கை. தீர்ப்பை ஏற்றுக்கொண்ட சங்பரிவாரங்கள் இதையும் ஏற்றுதானே ஆகவேண்டும்! ஆனால் ஏற்பார்களா?<br /><br />மொத்ததில் மூன்று நீதிபதிகளும் வழங்கிய தீர்ப்பில் நீதி நிலைநாட்டப்பட வில்லை. ஒரு சாராருக்கு இழைக்கப்பட்ட அநீதி, இன்னொரு சாராருக்கான நீதியாகக்கருத முடியாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மென்மேலும் பாதிப்பை ஏற்படுத்துவதை ஒருபோதும் நீதியான தீர்ப்பாகக் கருத முடியாது. இனிமேல் எந்த ஆட்சியிலும் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை என்று இந்திய முஸ்லிம்கள் நம்பிக்கை இழக்கும்முன்னதாக, சட்டம் கடமையைச் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் வாய்மையே வெல்லும் என்பதெல்லாம் வெறும் வார்த்தை ஜாலம்தான்!<br /><br /><strong><span style="color:#ff0000;"><a href="http://www.inneram.com/2010100611026/babri-judgement-destroyed-justice-in-seethas-kitchen">இந்நேரம்.காம் வாசகர் எண்ணம்</a> பகுதியில் வெளியானது. மீள்பதிவு செய்யப்படுகிறது.</span></strong>நல்லடியார்http://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-12417711.post-68620515090741606082010-09-20T13:49:00.003+04:002010-09-20T13:54:54.249+04:00கூட்டுக்களவானிகளின் கூட்டு மனசாட்சிஆடு,மாடு,கோழித்திருடர்களுக்குக்கூட நமது இந்திய குற்றவியல் சட்டப்படி குறைந்தபட்ச சிறைத்தண்டனை வழங்க முடியும். ஆனால் முஸ்லிம்களின் 450 ஆண்டுகால உடமையான பாப்ரி மஸ்ஜிதைத் திருடியவர்களை எந்தச் சட்டத்தினாலும் உள்ளே தள்ளமுடியவில்லை.<br /><br />ஆடுதிருடனும் கோழிகளவானியும் தமது நம்பிக்கையின் அடிப்படையில்தான் அவற்றை திருடினோம் என்றாலோ அல்லது அவ்வாறு திருடியத தேசபக்தி என்று நியாயப்படுத்தினாலோ 'சும்மா' விடுவோமா? பாபர் மசூதியைக் களவாடி இடித்தவர்கள் இப்படிச் சொல்லித்தானே நம்மை ஆண்டார்கள் எனும்போது சுரணையுள்ளவர்களுக்கு ரத்தம் கொதிக்காதா? <br /><br />ஆடுகளவானிக்குப் பிரதமர் பதவியும்,கோழி களவானிக்கு துணைப் பிரதமர் பதவியும், ஜேப்படி திருடனுக்கு மத்திய அமைச்சர் பதவி அல்லது மாநில முதலமைச்சர் பதவிகளைக் கொடுத்தால் சகித்துக் கொள்வோமா? ஆனால் நமது முன்னாள் பிரதமர்,துணைப்பிரதமர் மற்றும் பல முன்னாள் மத்திய அமைச்சர்கள் பாபர் மசூதி இடிப்பில் கூட்டுக்களவானிகளாக இருந்தவர்களே எனும்போது நடுநிலையாளர்களுக்கு நாக்கைப் பிடுங்கிக் கொள்ளலாம்போல் உள்ளது. <br /><br />காஷ்மீரை மண்ணின் மைந்தர்களான காஷ்மீரிகளுக்கு விட்டுத்தரமாட்டோம் என்று சர்வபுஜ பலம் காட்டி அடக்கி ஒடுக்கிவரும் இந்திய ராணுவத்தினரால் பாபர் மசூதியை இடித்தபோது கைகட்டி நின்று வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்தது. அதைத்தொடர்ந்து மும்பையிலும் குஜராத்தில் கொத்து கொத்தாக முஸ்லிம்கள் கொல்லப்பட்டபோது நமது ராணுவத்தினால் ஒரு சங்பரிவார பயங்கரவாதியைக்கூட தடுத்து நிறுத்த முடியவில்லையே!<br /><br />ஓரிரு நாட்களில் பாபர் மஸ்ஜித் உடமைகுறித்த வழக்கில் தீர்ப்பு வெளியாக இருப்பதால் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.வழக்கின் தீர்ப்பு எதுவாக இருப்பினும் ஏற்கப் போவதில்லை என நீதிமன்றத்தையும் சட்டத்தையும் முன்கூட்டியே அவமதிக்கும் கும்பலின் குடுமியை பிடித்து நிறுத்த சட்டத்தால் முடியாதா?<br /><br />சுதந்திர,குடியரசு தினங்களுக்கு சில மாதங்கள் முன்பிலிருந்தே முஸ்லிம்களை சந்தேக வளையத்தில் வைத்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரால் சிறைவைக்கும் காவல்துறையினரால் ஒருயொரு சங்பரிவாரக் குண்டனைக்கூட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணம் சொல்லி குண்டர் தடுப்புச் சட்டத்தில்'உள்ளே'தள்ளமுடியாதா?கொலைக் குற்றஞ்சாட்டப்பட்ட சங்கராச்சாரியாருக்கு மலம் கழிக்க வாழை இலை விரித்தவர்கள் அல்லவா நம் காவலர்கள்!<br /><br />அப்சல் குருவுக்கான மரண தண்டனைக்கு நாட்டுமக்களின் கூட்டுமனசாட்சி என்ற விநோத காரணம் கண்டுபிடித்து தீர்ப்பெழுதிய உச்சநீதி மன்றத்தால், முஸ்லிம்களை அச்சுருத்தி வரும் காவிக்கயவர்களின் நரைமுடியைக்கூட தண்டிக்க வக்கில்லை.எனினும் வெட்கமின்றி 'சத்தியமேவ ஜயதே' என்போம்!<br /><br />முஸ்லிம்கள் விசயத்தில் மட்டும் ஆட்சியாளர்கள், ராணுவம், நீதிமன்றம் என அனைத்துமே இந்துமயமாகி ஒருவருக்கொருவர் கூட்டுக்களவானியாகத்தான் செயல்பட்டு வருகின்றனர். முஸ்லிம்களைத் தண்டிக்க விழித்துக் கொள்ளும் கூட்டுமனசாட்சி சங்பரிவாரங்கள் விசயத்தில் கும்பகர்ண தூக்கம் போடுவதை நடுநிலையாளர்கள் உணர வேண்டும்.நல்லடியார்http://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-12417711.post-68371516386171195212010-08-29T09:32:00.003+04:002010-08-29T09:40:55.892+04:00அப்துல் நாசர் மதானி - அதிகாரத்தின் இரை (மீள்பதிவு)இந்திய தேசத்தின் விடுதலைக்காக, தன் தேகத்தையே அர்பணித்த காந்தியடிகள் கொடூரமாக கொல்லப்பட்ட நிகழ்வுதான, விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பயங்கரவாத நிகழ்வு. மூச்சுக்கு ஒரு முறை ''ஹே ராம்'' என்று உச்சரித்து, கடைசி வரை தீவிர இந்து மதப் பற்றாளராக வாழ்ந்த காந்தியடிகளை கொன்றொழித்த பயங்கரவாதத்தை செய்தது முஸ்லிம்கள் அல்ல.. ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!<br /><br />பன்மைத் தன்மை உடைய இந்தியத் திருநாட்டில், சமயச்சார்பின்மை என்னும் தத்துவம் தளைக்க தன் இறுதி மூச்சு உள்ள வரைப் போராடிய ஜவஹர்லால் நேருவின், அரசியல் வாரிசான இந்திரா காந்தியை சுட்டுப் பொசுக்கிய பயங்கரவாதத்தில் முஸ்லிம்களுக்குத் தொடர்பில்லை., ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!<br /><br />இந்திரா காந்தியின் அருமைப் புதல்வரும், இந்தியாவின் இளம் பிரதமருமான ராஜீவ் காந்தியை சிதறடித்த பயங்கரவாதத்திலும் முஸ்லிம்களுக்கு சம்மந்தமில்லை. ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!<br /><br />இந்துக்களின், கிறிஸ்தவர்களின், சீக்கியர்களின், பௌத்தர்களின் இன்ன பிற சமூகங்களின் வழிபாட்டுத் தலங்களையோ, வரலாற்றுச் சின்னங்களையோ, இடித்துத் தகர்த்த பயங்கரவாதத்தை, இந்தியாவின் எந்த ஒரு மூலையிலும் எந்த ஒரு முஸ்லிமும் செய்ததில்லை., ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!<br /><br />சுதந்திர இந்தியாவில் நடை பெற்ற மிகப்பெரும் வகுப்புக் கலவரங்கள், இனப்படுகொலைகள் எல்லாவற்றிலும் உயிரை இழந்து, உடைமை இழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளாய் அல்லல்பட்டபோதும், உணர்வை இழக்காமல் உரிமை கேட்டதனால்., முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!<br /><br />இரத்தமும் சதையுமாக இந்திய மண்ணை நேசித்த முஸ்லிம்களின், இரத்தம் குடித்து தன் சதை வளர்க்கும் இழி செயலை, இந்தியாவின் அதிகார வர்க்கமும், ஊடகங்களும் வெளிப்படையாக செய்து வருகின்றன. முஸ்லிம்களை குதறுவதையே முழு நேர செயல் திட்டமாகக் கொண்டு இயங்கும் இந்துத்துவ சக்திகளுக்கு, ஜனநாயகத்தின் அத்தனைத் தூண்களும் அரணாய் நிற்கின்றன. நாடு முழுவதும் தொடரும் இந்த அக்கிரமத்திற்கு இரையாகிப் போன இரத்த சாட்சியாக இப்போது பெங்களூர் சிறைக் கொட்டடியில் அடைபட்டுக் கிடக்கிறார் அப்துல் நாசர் மதானி.<br /><br />நாம் வாழும் காலத்தில், நம் கண் முன்னாலேயே ஒரு மிகப்பெரும் அக்கிரமம் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது. சட்டம் அதன் கயமையைச் செய்கிறது. நீதிக்கு கல்லறை கட்டப்படுகிறது, எளிய மனிதர்களைச் சூறையாடும் அரச பயங்கரவாதம் தலை விரித்தாடுகிறது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இருபது சதவீதத்துக்கும் அதிகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் எழுச்சிக்காகவும், மறு மலர்ச்சிக்காகவும் போராடிய ஒற்றைக் காரணத்திற்காக ஒரு அப்பாவி மனிதரை வேட்டையாடிக் கொண்டிருக்கின்றன இந்தியாவின் அரசுகள்.<br /><br />சட்டம், நீதி, ஜனநாயகம், இறையாண்மை என்றெல்லாம் வாய்கிழியப் பேசப்படுகின்ற ஒரு மண்ணில், அப்பட்டமாக மீறப் படுகின்றன மனித உரிமைகள். மாந்த நேயத்திற்கான அத்தனை இலக்கணங்களும் குழி தோண்டிப் புதைக்கப் படுகின்றன. ஜனநாயகத்தின் தூண்கள் அனைத்தும் ஈரமற்றப் பாறையாய் மாறி வருகின்றன. இதற்குப் பிறகும் சட்டம் பற்றியும், நீதி பற்றியும், ஜனநாயகத்தின் மாண்பைப் பற்றியும் பிதற்றுபவர்களை காணும்போது கடும் எரிச்சலும், கோபமும் தான் வருகிறது.<br /><br />1992 டிசம்பர் 6 - இல் பாபர் மஸ்ஜிதை இடித்தார்கள். 450 ஆண்டு கால வரலாற்றுச் சின்னத்தை, முஸ்லிம்களின் புனிதமிக்க வழிபாட்டுத் தலத்தை அநீதியான முறையில் தகர்த்து எறிந்தார்கள். எப்படியாவது தங்களின் பள்ளிவாசல் காப்பாற்றப்பட்டு விடும் என்று கடைசி வரை நம்பியிருந்த முஸ்லிம்கள் கருவறுக்கப்பட்டார்கள். இந்த நாட்டின் மதிப்பு மிகுந்த நீதிமன்றத்தையும், ராணுவத்தையும், போலீசையும், ஓட்டுப் பொறுக்கி அரசியல் வாதிகளையும் நம்பி, நம்பி ஏமாந்து போனது முஸ்லிம் சமூகம்.<br /><br />அவநம்பிக்கை மிகுந்த நிலையில், தமது இருப்பு குறித்த பாதுகாப்பின்மையும், எதிர்காலம் குறித்த அச்சமும் முஸ்லிம்களை வாட்டத் தொடங்கியது. தமக்கான பாதுகாப்பை தாமே உறுதி செய்து கொள்ளும் வகையில் முஸ்லிம் சமூகத்தின் உள்ளிருந்து உரிமைக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. அப்படி நாடு முழுவதும், ஜனநாயகப் பாதையில் நின்று உரிமை கேட்பதற்காக வெடித்து முளைத்த விதைகளில் ஒருவர்தான் அப்துல் நாசர் மதானி.<br /><br />அடக்குமுறைகளுக்கு எதிரான கர்ஜனை, எவருக்கும் எதற்கும் அடங்காத கம்பீரம், நெருப்பை உமிழும் உரை வீச்சு, சமுதாய மறுமலர்ச்சியே உயிர் மூச்சு என்று தனிப்பெரும் அடையாளத்துடன் கேரள அரசியல் வானில் வலம் வந்தவர் அவர். அதிகாரத்தை நோக்கிய உண்மையின் குரலாக, ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரலாக ஓங்கி ஒலித்தவர் அவர். கொள்கைச் சமரசமற்ற அவரது அரசியல் நிலைப்பாடுகளும், இந்துத்துவ எதிர்ப்பில் அவர் காட்டிய உறுதிப்பாடும்தான் அவரை இன்று இந்த நிலைக்குத் தள்ளி இருக்கிறது.<br /><br />கேரளாவின் கொல்லம் மாவட்டம் சாஸ்தான் கோட்டையைச் சார்ந்த அப்துஸ் சமத் மாஸ்டர், அஸ்மா பீவி தம்பதியருக்கு 1965 ஜனவரி 18 - இல், மூத்த மகனாக பிறந்தார் மதானி. பள்ளித் தலைமை ஆசிரியரான மதானியின் தந்தை, அவரை மார்க்க அறிவும் நல்லொழுக்கமும் உடைய பிள்ளையாக வளர்த்து எடுத்தார். பள்ளிக் கல்விக்குப் பின் கொல்லத்தில் உள்ள 'மஅதனுல் உலூம்' அரபிக் கல்லூரியில் இணைந்து இஸ்லாமிய மார்க்க அறிஞராக பரிணாமம் பெற்றார் மதானி. அந்தக் கல்லூரியில் வழங்கப்பட்ட 'மஅதனி' என்ற பட்டமே பின்னாளில் அவரது அடையாளத்துக்குரிய பெயராக மாறிப் போனது.<br /><br />இளம் மார்க்கப் பிரச்சாரகராக தன் பயணத்தைத் தொடங்கிய மதானி, அனல் பறக்கும் உரை வீச்சுக்களால் அனைவரையும் ஈர்த்தார். அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலை மோதியது. கேரளாவின் சொற்பொழிவு மேடைகளில் தவிர்க்க முடியாத தனிப்பெரும் பேச்சாளர் ஆனார் மதானி. 1990 களில் இந்திய அளவில் நடைபெற்ற பல்வேறு அரசியல் நிகழ்வுகள் மதானியைப் பாதித்தது. மண்டல் கமிசன் அறிக்கைக்கு நேர்ந்த கதியும், அத்வானியின் தலைமையில் அரங்கேறிய இந்துத்துவ எழுச்சியும், முஸ்லிம்களை அச்சுறுத்தும் ஆர். எஸ்.எஸ் கும்பலின் தீவிரவாத நடவடிக்கையும் கண்டு கொதித்து எழுந்தார் மதானி.<br /><br />ஆர்.எஸ்.எஸ்.க்கு அரசியல் தளத்தில் நின்று பதிலடி கொடுக்க ஐ.எஸ்.எஸ். [இஸ்லாமிக் சேவா சங்] என்ற அமைப்பை, 1990 ஆம் ஆண்டு தொடங்கினார். 1992 டிசம்பர் 6 - இல் பாபர் மஸ்ஜித் இடிக்கப் பட்டபோது மதானியின் ஐ.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் இந்திய அரசின் இத்தகைய நடவடிக்கையைக் கண்டித்து சூறாவளியாய் சுழன்றார் மதானி. பாபர் மஸ்ஜிதை இடித்த பயங்கரவாதிகளையும், அதற்குத் துணை நின்ற காங்கிரசையும் நெருப்பு உரைகளால் காய்ச்சி எடுத்தார்.<br /><br />மதானியின் உரை வீச்சில் பொசுங்கிப்போன இந்துத்துவ சக்திகள், அவரை நேர்மையாக எதிர்கொள்ள முடியாமல் தீர்த்துக்கட்டும் சதியில் இறங்கினர். ஆதரவற்ற அனாதைக் குழந்தைகளை அரவணைக்கும் வகையில் அன்வார்சேரியில் மதானி உருவாக்கிய ஜாமியா அன்வார் என்னும் கலாசாலையில் இருந்து இரவு அவர் வெளியே வரும்போது, ஆர். எஸ்.எஸ் கும்பல் அவர் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியது. 1992 இல் நடைபெற்ற அந்த தாக்குதலில் தனது ஒற்றைக் காலை இழந்து ஊனமுற்ற மதானி, அதன் பின்னர் சக்கர நாற்காலியில் தவழ்ந்து கொண்டே சரித்திரம் படைத்தார்.<br /><br />இந்தியச் சூழலில் முஸ்லிம்கள் தனித்து நின்று போராடுவதன் மூலம் இலக்கை அடைய முடியாது என்ற உண்மையை உணrந்து தெளிந்த மதானி, 1993 இல் மக்கள் ஜனநாயகக் கட்சி [PDP] என்னும் அரசியல் கட்சியைத் தொடங்கினார். தாழ்த்தப்பட்ட தலித் மக்களும், ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களும் ஓரணியில் ஒன்றிணைந்து அரசியல் சக்தியாக எழுச்சி பெறும் வியூகத்தை வகுத்தார். தலித் சமூகத்தை சார்ந்த ஒருவரை கேரளாவின் முதலமைச்சராக மாற்றியே தீருவேன் என்று சூளுரைத்தார். குருவாயூர், ஒற்றப்பாலம், திரூரங்காடி இடைத்தேர்தல்களில் போட்டியிட்டு கேரளாவின் mainstream அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்தார்.<br /><br />முஸ்லிம்களோடு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களையும் அணி திரட்டும் மதானியின் தொலை நோக்குப் பார்வையைக் கண்டு கேரளாவின் அரசியல் கட்சிகளுக்கு நடுக்கம் வந்தது. அரசியல் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திக் கொண்டு முன்னேறிக் கொண்டிருந்த மதானி 1998 மார்ச் 31 - அன்றுகோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.<br /><br />மதானி கோவை சிறையில் இருந்தபோது அவர் அனுபவித்த ரணங்கள் வார்த்தைகளில் அடங்காதவை. விசாரணைக் கைதியாக சிறையில் பூட்டப்பட்டு கசக்கி எறியப்பட்டார். 105 கிலோ எடை கொண்ட கனத்த தேகத்துடன், 33 வயதே நிரம்பிய துடிப்பு மிக்க இளைஞராக சிறைக்குச் சென்ற அவர் அதிகாரத்தின் கொடும் பசிக்கு இரையானார். நாளாக நாளாக அவரது உடல் எடை குறைந்து இறுதியில் 45 கிலோ ஆனது. உலகத்தில் உள்ள அத்தனை வியாதிகளும் குடியிருக்கும் நோய்களின் கூடாரமாக மாறி அவரது உடல் நலியுற்றது. ஒரு விசாரணைக் கைதிக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச உரிமைகள் கூட மதானிக்கு மறுக்கப்பட்டன. <br /><br />1200 க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டு ஒருவர்கூட அவருக்கு எதிராக சாட்சி சொல்லாத நிலையிலும் அவரது ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டன. அவரது பாட்டி இறந்தபோது பரோலில் சென்று பட்டியின் உடலை பார்த்து வருவதற்கு கூட அவருக்கு அனுமதி தரப்படவில்லை. நீண்ட நாள் ஆகிவிட்டதால் பழுதடைந்த தனது செயற்கை காலை புதுப்பிக்கவும், சிகிச்சைக்காகவும் வேண்டி மதானி அனுப்பிய மனுக்கள் குப்பைக் கூடையில் எறியப்பட்டன. அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா மதானி விசயத்தில் மிக மூர்கத்தனமாக நடந்து கொண்டார்.<br /><br />மதானியை விடுதலை செய்யக் கோரி தமிழகத்திலும், கேரளத்திலும் மிகப்பெரும் மக்கள் இயக்கங்கள் நடைபெற்றன. 2006 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும், அப்பாவி சிறைவாசிகளின் விடுதலையை முன்னிலைப்படுத்தி த.மு.மு.க போன்ற தமிழக முஸ்லிம் அமைப்புகள் தேர்தலை எதிர்கொண்ட விதமும், மதானி உள்ளிட்ட அப்பாவிகளின் விடுதலைக்கு வழிவகுத்தது.<br /><br />கலைஞர் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற உடன் அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள் குறித்த கோரிக்கைகள் கனிவோடு பரிசீலிக்கப்பட்டன. மதானிக்கு மருத்துவ சிகிச்சை கிடைத்தது. பின்னர் குற்றம் நிரூபிக்கப்படாமல் ஒன்பதரை ஆண்டுகால சிறை வாழ்கையை முடித்துக் கொண்டு 2007 ஆகஸ்ட் 1 - இல் விடுதலையாகி வெளியே வந்தார் மதானி. பரபரப்பான அவரது அரசியல் பயணத்தை முடக்கி, கம்பீரமான அவரது தோற்றத்தை ஒடுக்கி, இயங்க முடியாத நிலைக்கு அவரைத் தள்ளிய பிறகு குற்றமற்றவர் என்று விடுதலை செய்தது நீதிமன்றம்.<br /><br />விடுதலைக்குப் பின் மதானியைத் தவிர வேறு யாராக இருந்தாலும், நலிந்த தன் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு பொது வாழ்வுக்கு ஓய்வு கொடுத்திருப்பார்கள். வெகு மக்களிடம் தன் மீது ஏற்பட்டிருக்கும் அனுதாபத்தை அரசியல் லாபத்திற்கான அறுவடையாகக் கருதி காங்கிரசோடு பேரம் நடத்தி இருப்பார்கள். முஸ்லிம்களுக்கான பிரச்சனைகளைப் பேசியதனால் தானே வம்பு ; பேசாமல் 'பதவி அரசியல்' நடத்துவோம் என்று கொள்கை அரசியலை கை கழுவி இருப்பார்கள்.<br /><br />ஆனால் அப்படி எந்த முடிவுக்கும் வரவில்லை மதானி. முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் அரசியல் எழுச்சிக்கான தனது பயணத்தை முன்பை விடவும் வேகமாகக் கூர் தீட்டினார். பேச்சில் இருந்த வீச்சைக் குறைத்து அதை செயலில் காட்டினார். தன் உடல் நிலையைப் புறம் தள்ளி விட்டு கேரளா முழுவதும் வலம் வந்தார். ஒன்பதரை ஆண்டுகாலம் முடங்கிக் கிடந்த தனது தொண்டர்களை மீண்டும் தட்டி எழுப்பினார்.<br /><br />மதானியின் கதை முடிந்து விட்டது என்று கணக்குப் போட்டு காய் நகர்த்தியவர்களுக்கு, அவரது இத்தகைய மீள் எழுச்சி எரிச்சலைத் தந்தது. ஏற்கனவே கோவைக் குண்டுவெடிப்பு வழக்கில் அவரைச் சிக்கவைத்து குளிர் காய்ந்தவர்கள் மீண்டும் அதே பாணியில் அவரைக் குதறத் தொடக்கி உள்ளனர்.<br /><br />****<br /><br />2008 ஆம் ஆண்டு ஜூலை 25 - ஆம் நாள் பெங்களூரில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் மதானி 31- ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, கர்நாடக மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் மதானி சேர்க்கப்பட்டுள்ள விதத்தையும், வழக்கின் போக்கையும் பார்க்கின்ற போது , மதானியை ஒரேயடியாக ஒழித்துக்கட்ட மிகப்பெரிய சதி வலைகள் பின்னப்படுவதை அறிய முடிகின்றது.<br /><br />கேரளாவைச் சார்ந்த 'தடியன்டவிட' நசீர் என்பவர் 2009 ஆம் ஆண்டு, பங்களாதேசத்தில் வைத்து அங்குள்ள ரைபிள் படையினரால் கைது செய்யப் பட்டார். லஷ்கரே தொய்பா தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்ட நசீர், கொடுத்ததாக சொல்லப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் இப்போது மதானி வேட்டையாடப்படுகிறார்.<br /><br />2005 ஆம் ஆண்டு கேரள மாநிலம் கலமச்சேரியில், தமிழக அரசுப் பேருந்து எரிக்கப்பட்ட வழக்கில், 'தடியண்டவிட' நசீரிடம் கேரள போலீசார் விசாரித்ததாகவும், விசாரணையில், ''தமிழக அரசுப் பேருந்தை எரிக்கச் சொன்னது மதானியின் மனைவி சூஃபியாதான் '' என்று நசீர் சொன்னதாகவும் கூறி 2009 டிசம்பரில் சூஃபியா கைது செய்யப்பட்டு எர்ணாகுளம் சிறையில் அடைக்கப்பட்டார். அது தனிக் கதை.<br /><br />பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில், பெங்களூர் மாஜிஸ்த்ரேட் நீதிமன்றத்தில் மதானி மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி, மதானியின் சார்பில் அவரது வழக்கறிஞர் கர்நாடக உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவுக்கு எதிராக கர்நாடக காவல் துறையினர் பதில் மனுத் தாக்கல் செய்தனர். <br /><br /> 57 பக்கங்கள் கொண்ட அந்த பதில் மனுவில் காவல்துறை கையாண்டிருக்கும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் விஷம் தோய்ந்தவையாக இருக்கின்றன. மதானிக்கு எதிரான சதியின் முழுப் பரிணாமமும், முஸ்லிம்கள் மீதான அதிகார வர்க்கத்தின் வெறுப்புணர்வும் அதில் அப்பட்டமாகத் தெரிகிறது.<br /><br />'' பெங்களூரில் குண்டுவெடிப்பு நடப்பதற்கு முன் மதானியும், கைது செய்யப்பட்ட நசீர் உள்பட 22 குற்றவாளிகளும், கேரள மற்றும் கர்நாடக எல்லையில் உள்ள குடகு நகரில் ஒன்று கூடி, அங்குள்ள தேயிலைத் தோட்டத்தில் வைத்து சதித்திட்டம் வகுத்ததாகவும், இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என்பது அவர்களது திட்டம் என்றும், இதற்காக இந்தியாவில் வன்முறையைத் தூண்டி விட்டு, மத்திய மாநில அரசுகளுக்கு இடையூறு செய்வதே அவர்களின் நோக்கம் என்றும் போலீஸ் கூறியுள்ளது.<br /><br />மேலும், நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து வெடி பொருட்களை ரகசியமாக கேரளத்துக்கு கடத்தி, அங்கு வெடிகுண்டைத் தயாரித்துள்ளனர் என்றும், இவ்வாறு தயாரிக்கப்பட்ட குண்டுகளை மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிக்க வைத்து மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளார்'' என்றும் நீளுகிறது போலீஸ் அறிக்கை.<br /><br />கோவை குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து மதானி குற்றமற்றவராக விடுவிக்கப் பட்டாலும், மதானியை தீவிரவாதியாக சித்தரிக்கும் ஆளும் வர்க்கத்தின் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதையே போலீசின் இந்த அறிக்கை எடுத்துக் காட்டுகிறது.<br /><br />சிறையிலிருந்து வெளி வந்த பின்னர் மதானியின் முழு செயல்பாடுகளும், நடவடிக்கைகளும் மத்திய மாநில புலனாய்வுக் குழுவினரால் கண்காணிக்கப்படுகிறது. அவரது சுற்றுப்பயணம் குறித்த முழு தகவலும் கேரள காவல் துறையிடம் இருக்கிறது.அப்படிப்பட்ட சூழ்நிலையில், 24 மணி நேரமும் கண்காணிப்பு வளையத்துக்குள் இருக்கும் ஒருவர், எப்படி குண்டு வெடிப்புச் சதியில் ஈடுபட முடியும்? குடகு நகரில் ரகசியமாகக் கூடி திட்டம் தீட்ட முடியும்? என்றெல்லாம் கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் ஜனநாயக நாட்டில் விடை இல்லை.<br /><br />நசீர் கைது செய்யப்பட்டு சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு, '''மதானிக்கும் குண்டுவெடிப்பில் பங்குண்டு'' என்று அவர் வாக்குமூலம் அளித்ததாகக் கூறி மதானி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் காவல் துறையின் இந்த மோசடித்தனத்தை, கொச்சி உயர் நீதி மன்றத்தில் இருந்து வெளியே வரும் போது பத்திரிகையாளர்களை சந்தித்த நசீர் பகிரங்கமாக அம்பலப் படுத்தினார். ''பெங்களூர் குண்டுவெடிப்பில் மதானிக்கு தொடர்பு உண்டு என்று தான் கூறவே இல்லை'' என்று உறுதியாக மறுத்தார். ஆனாலும் காவல் துறையும், நீதி மன்றமும் அதை எல்லாம் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. மதானியை சூறையாட வேண்டும் என்று அதிகார வர்க்கம் முடிவு செய்து விட்ட பிறகு எந்த உண்மையைத் தான் அவர்களால் ஏற்க முடியும்?<br /><br />இந்தியாவை இஸ்லாமிய நாடாக்க சதி நடக்கிறது என்று கர்நாடக பாஜக அரசின் காவல்துறை சொன்னதைப் போலவே, கேரளாவின் கம்யூனிஸ்ட் முதல்வர் அச்சுதானந்தனும் வாந்தி எடுத்தார். முஸ்லிம்களை ஒடுக்குவதில் இந்துத்துவத்திற்கும், இடதுசாரிகளுக்கும் இடையே இருக்கும் கள்ள உறவு இதன் மூலம் அம்பலத்திற்கு வருகிறது.<br /><br />குற்றமே செய்யாமல், விசாரணைக் கைதியாக கோவை சிறையில் மதானி இழந்த ஒன்பதரை ஆண்டுகளுக்கு, பதில் சொல்ல வக்கற்றவர்கள், தற்போது மதானி விசயத்தில் 'சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும், அவர் குற்றவாளியா இல்லையா என்பதை சட்டம் முடிவு செய்யட்டும்' என்றும் கூறி தப்பிக்க முயலுகின்றனர்.<br /><br />மதானி கைது செய்யப்பட்டுள்ள 'அன்லாஃபுல் ஆக்டிவிட்டீஸ் பிரிவென்சன் நடைமுறைச் சட்டம் - 2008 ' என்ற சட்டம் எந்த வகையிலும் நீதி வழங்காது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. இதே போன்ற கறுப்புச் சட்டங்களால் ஏற்கனவே முஸ்லிம்கள் பட்ட காயங்களும், அதனால் ஏற்பட்ட ரணங்களும் இன்னும் ஆறாத வடுவாய் இருக்கிறது. இந்தக் கொடுஞ்சட்டத்தின் படி, சப் இன்ஸ்பெக்டர் ரேன்கிலுள்ள எந்த ஒரு அதிகாரியும், நாட்டில் யாரையும் சந்தேகத்தின் பேரில் குற்றவாளியாக்க முடியும். அதன் பின்னர் 150 நாட்கள் வரை ஜாமீனில்லாமல் சிறையில் அடைக்கலாம். குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீன் கோரி விண்ணப்பித்தால் நீதி மன்றமும் எதுவும் செய்ய இயலாது. ஏனெனில் நீதிமன்றத்தின் எந்த ஒரு அனுமதியும் இன்றி 150 நாட்கள் வரை சிறையில் அடைக்க காவல்துறைக்கு சட்ட ரீதியான அதிகாரமுண்டு.<br /><br />வழக்கமான சட்ட நடைமுறைகளின்படி, சாதாரண நிலையில் ஒருவரை கைது செய்தால், அவரை 24 மணி நேரத்துக்குள் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும். நீதி மன்றம் அவரை 14 நாட்கள் ரிமாண்ட் செய்யலாம். தொடர்ந்து பொறுப்பில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றால் 15 ஆம் நாள் மீண்டும் நீதி மன்றத்தை அணுக வேண்டும்.<br /><br />குற்றவாளி என்று நிறுவப்படும் வரை, ஒரு குடிமகனுக்கு உரிய அடிப்படை உரிமைகளைக் கருத்தில் கொண்டே சட்டத்தில் இவ்வாறெல்லாம் வழி வகை செய்யப் பட்டுள்ளது. ஆனால், மக்களுக்கு சட்டம் வழங்கியுள்ள இத்தகைய உரிமைகளை காலி செய்து அநீதி இழைக்கவே, அரசு அதிகாரம் புதிய கறுப்புச் சட்டங்களை இயற்றி வைத்துள்ளது. அப்படி என்றால் சட்டம் யாருடைய வழியில் செல்கிறது?<br /><br />வழக்கு விசாரணை எல்லாம் முடிந்து, குற்றம் சற்றப்பட்டவர் நிரபராதி என்று விடுவிக்கப் பட்டால், சட்டம் போனது எந்த வழியில் என்று மானமுள்ள எவராவது விடையளிப்பார்களா?<br /><br />அச்சுதானந்தனும், பிரணாய் விஜயனும், ரமேஷ் சென்னிதாலாவும், குஞ்சாலிக் குட்டியும் கூறுகின்ற, சட்டத்தின் யோக்கியதை இவ்வளவுதானே.. இவர்களுக்கெல்லாம் கொஞ்சமேனும் மானமும், சூடு உணர்ச்சியும் இருந்தால் ''சட்டம் சட்டத்தின் பாதையில் செல்லட்டும்'' என்று கூச்சமின்றி கூறுவார்களா?<br /><br />மதானி விசயத்தில் யாரைக் கேட்டாலும் 'சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்' என்று கூறி சட்டத்தைக் கை காட்டி விட்டு பதுங்கி விடுகின்றனர். இந்தச் சட்டம் என்றைக்குத்தான் முஸ்லிம்களுக்கு நீதியை வழங்கி இருக்கிறது? முஸ்லிம்கள் என்றாலே சட்டம் ஒரு வழியிலும், நீதி வேறு வழியிலும் அல்லவா செல்கிறது... இங்கே சங்கராச்சாரிக்கும், அப்துல் நாசர் மதானிக்கும் ஒரே சட்டம்தான்... ஆனால் நீதி?<br /><br />சங்கரமடப் பூசாரி சங்கர ராமனை கூலிப்படையை ஏவி கொலை செய்த வழக்கில் சங்கராச்சாரிக்கு, குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பே, சதிக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என பிணை கொடுக்கிறது நீதி மன்றம். விடுமுறை நாளில் கூட சங்கராசாரிக்காக திறந்தன நீதிமன்றத்தின் கதவுகள். சுவாமிகளை சிறையில் அடைக்காமல் நீதிபதிகளின் குடியிருப்பிலேயே காவலில் வைக்கலாமே என்று யோசனை சொன்னார் ஒரு நீதிபதி. சிறையில் மலம் கழிக்க வாழை இலை கொடுக்கும் அளவுக்கு சங்கராசாரிக்காக வளைந்து கொடுக்கிறது சட்டம். ஒரு குற்றவாளிக்கு வழங்கப்பட்டது நீதி... ஆனால் குற்றமற்ற மதானிக்கு?<br /><br />கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆயுள் தண்டனை; அல் உம்மாவுக்குத் தடை.. ஆனால் குண்டுவெடிப்புக்கு காரணமாக அமைந்த, 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட கோவை கலவரத்தை, முன்னின்று நிகழ்த்திய இந்துத்துவக் குண்டர்களுக்கும், முஸ்லிம்களை சுட்டுத்தள்ளிய காவல் துறையினருக்கும் தடையுமில்லை, தண்டனையுமில்லை!<br /><br />பழனி பாபாவின் ஜிகாத் கமிட்டிக்குத் தடை.. பழனி பாபாவைக் கொன்றவர்களுக்கோ விடுதலை!<br /><br />இஸ்லாமிய மாணவர் அமைப்பான 'சிமி' க்குத் தடை.. ஆனால் சிமியின் பெயரால் இந்தியா முழுவதும் மிகப்பெரிய குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய ஆர் எஸ் எஸ்ஸுக்கு சகல சுதந்திரம்!<br /><br />மாலேகான், புனே, அஜ்மீர், ஹைதராபாத், கோவா என நாட்டின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட அபினவ் பாரத், சனாதன் சன்ஸ்தான், இந்து ஜாக்ருதி சமிதி ஆகிய இந்துத்துவ தீவிரவாதஅமைப்புகளையும், அவற்றை பல்வேறு பெயர்களில் இயக்கிக் கொண்டிருக்கும் மூல அமைப்பான ஆர் எஸ் எஸ்ஸையும் தடை செய்ய அரசுக்குத் துணிவில்லை.<br /><br />குண்டுவெடிப்புகளில் ஆர் எஸ் எஸ்ஸுக்கு தொடர்பு இருப்பதற்கான அனைத்து வகையான ஆதாரங்களும், வீடியோ காட்சிகளும் கிடைத்த பிறகும், ஹெட்லைன்ஸ் டுடே , தெஹல்கா போன்ற பெரிய ஊடகங்கள் அதை அம்பலப் படுத்திய பிறகும், ஆர் எஸ் எஸ் தலைமையகத்தை சோதனை செய்யவோ, ஆர் எஸ் எஸ் தலைவர்களை விசாரணைக்கு அழைக்கவோ துப்பில்லாத தொடை நடுங்கி அரசுகள், மதானியைக் குதறுவதில் முனைப்புக் காட்டுகின்றன.<br /><br />நந்திகத்தில் உள்ள ஆர் எஸ் எஸ் ஊழியர் வீட்டில் குண்டு வெடிப்பு; கான்பூரில் பஜ்ரங்தள் நிர்வாகி வீட்டில் குண்டு வெடிப்பு; தென்காசி ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் குண்டு வெடிப்பு, என... ஆர் எஸ் எஸ் காரர்கள், குண்டுகளை தயாரித்துக் கொண்டிருக்கும் போதே வெடித்து சிதறிய குண்டுகள் ஏராளம், தாராளம்... இப்படி, பட்டவர்த்தனமாக ஆர் எஸ் எஸ்ஸின் பயங்கரவாதம் அம்பலப்பட்ட பிறகும், மதானி வெடிகுண்டு தயாரித்து சப்ளை செய்தார் என்று கதை விடுகிறது காவல்துறை.<br /><br />2006 - லிருந்து நடைபெற்றுவரும் ஏழு மிகப்பெரிய குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஆர் எஸ் எஸ்ஸின் கள்ளக் குழந்தையான அபினவ் பாரத்துடன், உறவு வைத்துள்ள பல ராணுவ அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரைப் பற்றிய விபரங்கள், புலன் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த பிறகும், அவர்களில் எவரும் விசாரணைக்கு அழைக்கப் படுவதில்லை. 'தடியன்டவிட' நசீரை தேடிப்பிடித்து, நோண்டி நொங்கெடுத்தவர்களுக்கு, இந்த இந்துத்துவ அதிகாரிகளெல்லாம் கண்ணில் தெரிவதில்லை.<br /><br />பெங்களூர் குண்டுவெடிப்பில் ஒருவர் பலியான வழக்கில், மதானியை சிக்க வைத்து சிறை பிடித்துள்ளவர்கள், குஜராத்தில் மூவாயிரம் முஸ்லிம்களைக் கொன்று நர வேட்டையாடிய நரேந்திர மோடியை, அதிகாரத்தில் அமர்த்தி அழகு பார்க்கின்றனர்.<br /><br />போபாலில் பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்த அமெரிக்கப் பயங்கரவாதி ஆண்டர்சனை விமானத்தில் ஏற்றி தப்பி ஓடச் செய்து விட்டு, செத்துப் போன நரசிம்ம ராவ் மீது பழிபோடுகின்றனர். மதானியை விரைவாக ஒப்படைக்காத கேரள அரசின் மீது, கர்நாடக காவல்துறைக்கு வந்த கோபம், ஆண்டர்சனை ஒப்படைக்காத அமெரிக்கா மீது வருவதில்லை.<br /><br />பாபர் மஸ்ஜித் இடிப்பில் மிக முக்கிய குற்றவாளிகளாக லிபரான் கமிஷனால் அடையாளப்படுத்தப்பட்ட அத்வானி, வாஜ்பாய், முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி போன்ற 68 குற்றவாளிகளில் எவர் மீதும் நடவடிக்கை இல்லை. 8 கோடி ரூபாய் மக்கள் வரிப் பணத்தை வாரி இறைத்து, 17 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரிக்கப்பட்டு , 1000 பக்கங்களில் சமர்பிக்கப் பட்ட லிபரான் அறிக்கை, இப்போது எந்தக் குப்பைத் தொட்டியில் கிடக்கிறதோ தெரியவில்லை.<br /><br /> பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப் பின், மும்பையில் நடைபெற்ற மிகப்பெரும் வகுப்புக் கலவரங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை இனப்படுகொலை செய்த குற்றவாளி என, நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா கமிஷனால் அறிவிக்கப்பட்ட, மும்பை பயங்கரவாதி பால்தாக்கரே மீது இதுவரை எந்தச் சட்டமும் பாயவில்லை.<br /><br />சந்தேகத்தின் அடிப்படையிலும், புனையப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையிலும் முஸ்லிம்களை வேட்டையாடும் காவல் துறைக்கு, அரசால் நியமிக்கப் பட்ட விசாரணை ஆணையத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவர்களை கைது செய்ய துணிவில்லை.<br /><br />பன்முகத் தன்மை உடைய இந்தியாவின் அரசியல் சாசன சட்டத்திற்கும், மதச் சார்பின்மைக்கும் எதிராக, மும்பையில் வட இந்தியர்களை, குறிப்பாக பீகார் மாநில எளிய மக்களை விரட்டி விரட்டி வேட்டையாடுகிறது நவ நிர்மான் சேனா. 'என்னை கைது செய்தால் மும்பையே பற்றி எரியும்' என்று பகிரங்கமாக கொக்கரிக்கும் ராஜ் தாக்கரேக்களெல்லாம் இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்களாகக் கருதப்படுவதில்லை.<br /><br />48 கிருமினல் வழக்குகளில் தொடர்புடைய்ய ஆகப் பெரிய குற்றவாளி ஸ்ரீ ராம்சேனா பிரமோத் முத்தலிக் மீது தடாவும் இல்லை, பொடாவும் இல்லை.பெரும் தொகையை பேரம் பேசி கலவரம் செய்யும் புது வகை பயங்கரவாதியான முத்தலிக் மீது இந்தியாவின் பாதுகாப்புச் சட்டங்கள் பாய்வதில்லை.<br /><br />ஸ்ரீராம் சேனாவைத் தொடங்குவதற்கு முன் முதாலிக் பஜ்ரங்தளத்தில் இருக்கும்போதே பல்வேறு வழக்குகளில் சிக்கிய பின்னணி கொண்டவன்.அப்படி இருந்தும் அவர்களால் எந்தத் தடையும் இன்றி அமைப்பு நிறுவ முடிகிறது; சுதந்திரமாக இயங்க முடிகிறது. பெங்களூர் குண்டுவெடிப்பில் ஸ்ரீராம் சேனாவின் கூலிப் படைக்குத் தொடர்பு உண்டு என்று ஊடகங்கள் உண்மையை உரைத்த பிறகும், அந்தக் கோணத்தில் விசாரணையை முடுக்கி விடாமல், கேரளாவுக்குச் சென்று மதானியைக் கொத்தி வந்துள்ளது கர்நாடக பாஜக அரசு...<br /><br />***<br /><br />மதானியின் விசயத்தில் நடப்பவை அனைத்தும் அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பது நன்கு தெரிந்த பிறகும், அவர் குற்றம் புரியாத அப்பாவி என்பது புரிந்த பிறகும், கேரளாவின் அரசியல் கட்சிகள் அவரை வெறுப்பது ஏன் என்ற கேள்வி எழாமல் இல்லை. மதானியின் கைது விவகாரத்தில் கேரளாவில் பாஜகவும், காங்கிரசும், கம்யுனிஸ்ட்டும், முஸ்லிம் லீக்கும் ஓரணியில் நின்று முழங்குகின்றன. மதானி ஒழிக்கப்பட்டால் தான் தாங்கள் நிம்மதியாக அரசியல் நடத்த முடியும் என்று எல்லா கட்சிகளும் எண்ணுகின்றன.<br /><br />மதானியை உலவ விட்டால் அவர் முஸ்லிம்களை அணி திரட்டுவார்; கேள்வி கேட்கும் படி உசுப்பி விடுவார்; அடிமை அரசியலுக்கு சாவு மணி அடித்து விடுவார் என்று, மதானியின் வலிமை குறித்த பயம் கேரள அரசியல் கட்சிகளை பிடித்தாட்டுகிறது. அதிகார ருசி கண்ட முஸ்லிம் லீக், பதவியை இழக்கவோ அல்லது வேறு ஒருவர் அந்த இடத்திற்கு வரவோ சிறிதும் அனுமதிக்காது. பதவி இல்லாமல் இருக்கவே முடியாது என்ற வெறி முற்றிய பிறகு எந்த இலக்கணங்களுக்கும் கட்டுப்பட மனம் வராது.<br /><br />பாபர் மஸ்ஜித் இடிப்பில் இந்துத்துவ சக்திகளுக்கு பக்கத் துணையாக நின்ற, காங்கிரஸ் கட்சியின் நயவஞ்சகத்தனத்தைக் கண்டித்து, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்று, முதுபெரும் முஸ்லிம் லீக் தலைவர் இப்ராகிம் சுலைமான் சேட் கர்ஜித்தபோது, முஸ்லிம் லீக்கின் பதவி வெறி பிடித்த கேரள தலைவர்கள்தான் அதற்கு முட்டுக் கட்டையாக நின்றனர். மனம் வெறுத்துப் போன சுலைமான் சேட், கொள்கை காக்கும் போராளியாக முஸ்லிம் லீக்கில் இருந்து வெளியேறி தேசிய லீக்கைத் தொடங்கும் நிலை வந்தது.<br /><br />மதானி ஒழிந்தால் பாஜக வை விட அதிகமாக மகிழ்ச்சி அடையும் கட்சியாக முஸ்லிம் லீக் திகழ்கிறது. மதானியின் மீதான அடக்குமுறை அரங்கேறிக் கொண்டிருக்கும் போதே, கேரளாவில் பிற முஸ்லிம் அமைப்புகளான பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மீதும், ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த் மீதும் அரச மற்றும் ஊடக பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது.<br /><br />நியாயமான வழியில் நின்று, சமரசமற்ற முறையில், உயிரோட்டமான அரசியலை முன்னெடுக்க முனையும் முஸ்லிம் அமைப்புகளை முடக்கிப் போடுவதில் அதிகார வர்க்கம் குறியாய் இருக்கிறது. முஸ்லிம்களுக்கான தனித்த அரசியல் எழுச்சியை ஊடகங்கள் விரும்புவதுமில்லை, கண்டுகொள்வதுமில்லை.<br /><br /> முஸ்லிம்களின் பிரச்சனைகளை முன்வைத்து ஜனநாயக வழியில் அரசியல் நடத்துகிறவர்களை அடிப்படைவாதிகளாகவும், தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும், மதவெறியர்களாகவும் சித்தரிக்கின்ற போக்கு, நாடு விடுதலை பெற்ற நாள் முதல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது .<br /><br />இநதிய முஸ்லிம்களுக்கான தனித்த அரசியல் இயக்கமான முஸ்லிம் லீக், பிரிவினைக்குப் பின் பாகிஸ்தானின் கட்சி என்றாகிவிட்ட நிலையில், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்ற பெயரில், இநதிய முஸ்லிம்கள் தமது தனித்த அடையாளத்தோடு மீண்டும் அரசியல் நடத்தப் புறப்பட்டதை, அன்றைய ஆளும் காங்கிரசால் சகித்துக் கொள்ள முடியவில்லை.<br /><br />இநதிய முஸ்லிம்களுக்கு தலைமை ஏற்க காயிதே மில்லத் துணிந்த போது, அவரை முடக்கிப் போடுவதற்கான எல்லா ஆயுதங்களையும் காங்கிரஸ் கட்சி கையில் எடுத்தது.<br /><br />முதலில், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்றொரு அமைப்பு உருவாகி விடாமல் தடுப்பதில் கவனம் செலுத்தியது; முஸ்லிம் லீக்கின் முதுபெரும் தலைவர்களின் வாயாலேயே ''முஸ்லிம் லீக் இனி நமக்கு வேண்டாம்'' என்று சொல்ல வைத்தது; முஸ்லிம் லீக்கை விட்டு வெளியேறி எங்களோடு இணைந்தால், உயர் பதவிகளைத் தருகிறோம் என்று ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியது; காயிதே மில்லத் மசிய மாட்டார் என்று தெரிந்ததும், அபுல் கலாம் ஆசாத்தை முன்னிறுத்தி முஸ்லிம்களை வளைக்கப் பார்த்தது; காங்கிரசின் இத்தகைய எல்லா தந்திரங்களையும் தவிடு பொடியாக்கி விட்டு, இந்திய முஸ்லிம்களுக்குத் துணிச்சலாக தலைமை ஏற்றார் காயிதே மில்லத்.<br /><br />அதன் பிறகு அவரை கண்காணிக்கத் தொடங்கியது இந்திய அரசு. தேச விரோத செயலில் அவரை சிக்க வைக்க ஏதேனும் வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கித் தவித்தது அரசு. காயிதே மில்லத் வெளிநாடு சென்ற போது, அவரது நடவடிக்கைகளை உளவு பார்க்க காங்கிரஸ் அரசு காமராஜரை அனுப்பி வைத்ததாக வரலாற்றுக் குறிப்புகளில் இருந்து அறிய முடிகிறது.<br /><br />ஆனால், இன்றைக்கு முஸ்லிம் லீக்கையோ அல்லது முஸ்லிம் லீக் தலைவர்களையோ, ஆளும் வர்க்கம் அப்படிப் பார்ப்பது இல்லை. முஸ்லிம்களின் பிரச்சனைகளைப் பற்றி இன்றைய முஸ்லிம் லீக், காயிதே மில்லத்தைப் போல் பேசுவதில்லை. வகுப்பு வாதத்துக்கு எதிராக வீச்சோடு களமாடுவதில்லை.<br /><br />அவர் தவறாக நினைத்து விடுவாரோ, இவர் தவறாக நினைத்து விடுவாரோ...அல்லது கூட்டணித் தலைமை கோபித்துக் கொள்ளுமோ என்று பல கணக்குப் போட்டு மென்மையான முறையில் அரசிய நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அது வெறுமனே பதவியை தக்க வைத்துக்கொள்கிற சுயநல அரசியல். ஆகையினால் இன்றைய முஸ்லிம் லீக்கை, ஆளும் வர்க்கமோ அல்லது ஊடகங்களோ கண்காணிப்பதுமில்லை; பிரச்சனைக்கு உரியவர்களாக கருதுவதுமில்லை.<br /><br />அன்றைக்கு காயிதே மில்லத்தைப் போல், இன்றைக்கு கொள்கை சமரசமற்ற முறையில் யார் யாரெல்லாம் அரசியலை முன்னெடுக்கின்றர்களோ; போர்குணத்தோடு அமைப்பு நடத்துகிறார்களோ அவர்களின் மீதே, ஆளும் வர்க்கத்தின் பார்வையும் , ஊடகங்களின் பார்வையும் ஒரு சேரக் குவிகிறது. காயிதே மில்லத்தை தேச துரோகி என்றார்கள்; கண்காணித்தார்கள்; அவரது சகாக்களை அவரிடமிருந்து பிரித்து, அவரை பலவீனப் படுத்த முயன்றார்கள்; மிதமான அணுகுமுறை உள்ள மாற்றுத் தலைமையை முன்னிறுத்தினார்கள்.... இன்றைக்கும் அதே வழிமுறையை, அதே நடைமுறையை ஆளும் வர்க்கம் பின் பற்றி வருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.<br /><br />அன்றைக்கு அரசோடு கூட்டுச் சேர்ந்து, காயிதே மில்லத்தை விமர்சித்த, சுயநலம் கொண்ட முஸ்லிம்களின் இடத்தை, இன்றைக்கு முஸ்லிம் லீக் பிடித்துக் கொண்டிருப்பது தான் காலத்தின் கோலம்.<br /><br />மதானியையும், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவையும், ஜமாத்தே இஸ்லாமியையும் கேரளாவில் முடக்கிப் போடுவதற்கு, ஆளும் தரப்பு கையாளுகின்ற அத்தனை வழிமுறைகளையும் முஸ்லிம் லீக் ஆதரிக்கிறது. போர்க் குணமிக்க முஸ்லிம் அமைப்புகள் விசயத்தில் அரசும், காவல் துறையும், ஊடகங்களும் என்ன சொல்கிறார்களோ, அதை ஒரு வரி விடாமல் வார்த்தை விடாமல் அப்படியே ஏற்றுக் கொள்ளுகிற மனநிலைக்கு, பாரம்பரிய முஸ்லிம் தலைமை தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளது.<br /><br />***<br /><br />மதானி கைது செய்யப் பட்ட போது, ஊடகங்கள் அதைக்கையாண்ட விதம் மிகவும் அருவருப்பானது. ஒரு குற்றவாளியை கர்நாடக அரசுக்கு கை மாற்றுவதில், கேரள அரசு தேவையற்ற தாமதத்தை ஏற்படுத்தி விட்டதாக கேரள ஊடகங்கள் விஷத்தைக் கக்கின. தமிழ் நாட்டின் பிரதான ஊடகமான சன் தொலைக்காட்சியின் செய்தி சேனலில், மதானியைக் கொச்சைப் படுத்தும் வகையில் செய்தி வாசிக்கப் பட்டது.<br /><br />தான் குற்றவாளி அல்ல என்ற போதும் இறைவனுக்கு அடுத்த படியாக நீதி மன்றத்தின் மீது தான் வைத்துள்ள மரியாதையின் காரணமாக, சரணடைய விரும்புவதாக அறிவித்தவர் மதானி. அப்படிப்பட்ட ஒருவரை, ''ஆம்புலன்ஸ் மூலம் தப்பி ஓட முயன்ற போது பிடிபட்டதாக'' சன் டிவி தலைப்புச் செய்தி சொன்னது. செய்தியின் உள்ளீடாக, ''மதானி கோவை குண்டு வெடிப்பு வழக்கில் எட்டு ஆண்டுகள் தண்டனைப் பெற்றவர்'' என்று சொல்லி வரலாற்றுத் திரிபு செய்தது. விசாரணை கைதியாக கோவை சிறையில் ஒன்பதரை ஆண்டுகளை இழந்து, குற்றமற்றவர் என்று விடுதலையான மதானியின் உண்மை முகத்தைக் காட்டுவதற்கு ஊடகங்களுக்கு மனமில்லை. மதானியைக் கொச்சைப்படுத்தும் போர்வையில், முஸ்லிம்களின் உணர்வுகளைக் காயப்படுத்திய சன் டிவிக்கு தமிழக முஸ்லிம்கள் உடனடி பதிலடி கொடுத்தனர். தமிழகம் முழுவதும் இருந்து கிளம்பிய எதிர்ப்பு அலைக்குப் பணிந்து, தனது தவறை உணர்ந்ததாக வருந்தியது சன் டிவி.<br /><br />இணைய தளங்களில் ஜெயமோகன் போன்ற இந்துத்துவ சிந்தனை உடைய இலக்கிய பயங்கரவாதிகள், மதானியை தீவிரவாதத்தின் ஊற்றாக சித்தரித்துக் கொண்டிருக்கின்றனர். இளம் தலை முறையினரின் களமாகத் திகழும் இணைய தளத்தில், முஸ்லிம் சமூகத்தின் போராளிகளை கொடூரமானவர்களாகவும், மனித குல விரோதிகளாகவும் காட்டுவதன் மூலம், முஸ்லிம்கள் மீதான வெறுப்பு வெகு மக்களிடம் பற்றிப் பரவுவதற்கு திட்டமிட்டு வேலை செய்கின்றனர்.<br /><br />அறியாமையில் சிக்கி உழலும் முஸ்லிம் சமூகத்திற்கு, ஜெயமோகனையும் தெரியாது; இணைய தளமும் புரியாது என்பதுதான், உச்சக்கட்ட பரிதாபம்.<br /><br />கருத்துருவாக்கம் செய்யக் கூடிய வலிமை மிகுந்த களமான ஊடகத்தில் முஸ்லிம்கள் இல்லை என்பதுதான், இத்தகைய அவலங்களுக்கு காரணமாக இருக்கிறது.<br /><br />முஸ்லிம்கள் ஊடகத்தில் மட்டுமா இல்லை? அரசியலில் இல்லை; அதிகாரத்தில் இல்லை; கலை இலக்கியத்தில் இல்லை; பண்பாட்டுத் தளத்திலும் இல்லை...... இல்லை, இல்லை, இல்லவே இல்லை... இருப்பதெல்லாம் உள் முரண்பாடுகளும், குழுச் சண்டையும், கொள்கை மோதலும் தான்...<br /><br />முஸ்லிம்களே! இனியும் இழப்பதற்கு எதுவுமில்லை; மீட்பதற்கோ ஆயிரம் இருக்கிறது.<br /><br />[நன்றி: சமநிலைச் சமுதாயம்] <br /><br />-ஆளூர் ஷாநவாஸ் ( mediasteps@gmail.com)<br /><br />இவரது மற்ற படைப்புகளைக் காண <a href="http://keetru.com/index.php?option=com_content&view=article&id=10687:2010-08-27-01-12-58&catid=901:2009-08-16-09-44-24&Itemid=139">இங்கே</a> அழுத்தவும்நல்லடியார்http://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12417711.post-79596420506573473312010-04-11T09:20:00.003+04:002010-04-11T10:00:13.896+04:00அடப்பாவிகளா! இந்த அநியாயத்தைக் கேட்க யாருமில்லையா?<a href="http://2.bp.blogspot.com/_RBFWivjFcZY/Ss8JWSifzwI/AAAAAAAAAHw/3moLOJqokjk/s400/sania+111.JPG"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 250px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_RBFWivjFcZY/Ss8JWSifzwI/AAAAAAAAAHw/3moLOJqokjk/s400/sania+111.JPG" border="0" alt="" /></a>சில வருடங்களுக்குமுன் சானியா மிர்ஸா டென்னிஸ் விளையாடும்போது அணியும் குட்டைப் பாவடை குறித்து முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது "எந்த ஆடையணிந்து விளையாடுவது என்று முடிவெடுக்க வேண்டியது சானியாவே தவிர மற்றவர்களல்லர்" என்று வியாக்கியானம் பேசப்பட்டது. தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட்வீரர் சோயப் மாலிக்கை திருமணம்செய்ய முடிவெடுத்திருப்பதற்கு அப்போது பெண்ணுரிமைபேசிய கழிசடைகள்தான் தற்போது எதிர்ப்பு தெரிவிக்கின்றன(ர்).<br /><br />சானியாவுக்கு வழங்கப்பட்ட விருதுகளை திரும்பப்பெற வேண்டுமாம்.சானியா இந்தியாவுக்காக இனி விளையாடக் கூடாதாம்! சானியாவை நாடுகடத்த வேண்டுமாம்!அதெல்லாம் சரி! போனமாதம்வரை வாய்கிழியக்கூக்குரலிட்ட பெண்ணுரிமை என்னானது? யாருடைய விந்தை தன் கருப்பையில் சுமக்க வேண்டுமென்று முடிவுசெய்ய வேண்டிய உரிமைகோரிய தஸ்லிமாவுக்கு இந்தியாவில் இருக்கும் உரிமையை விடவா சானியா மோசமான உரிமை கோரிவிட்டார்?<br /><br />இருவர் மனம்விரும்பி முறையற்ற உறவு கொள்வதே தவறல்ல என்று நமது உச்சநீதிமன்றம் சொல்லியுள்ளபோது முறையாகத் திருமணம் செய்வதைத் தடுப்பது சட்டப்படியும் சானியாபடியும் உரிமைமீறலே!!<br /><br />*************<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHECjxKJqiqPBwoO05z_W-TU5b_5WHVpv1LGMud0LNjDFbaj03oNTFZHtsJGeEqvIRhispInYrcJEcq4Z26Z118sNfcPf1cu8sReYEzc7DfgTfQP_7n-8Yu0KW3LpJuu6kp0QESw/s1600/Kushboo-hot-pictures-photos-images-stills.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 250px; height: 250px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHECjxKJqiqPBwoO05z_W-TU5b_5WHVpv1LGMud0LNjDFbaj03oNTFZHtsJGeEqvIRhispInYrcJEcq4Z26Z118sNfcPf1cu8sReYEzc7DfgTfQP_7n-8Yu0KW3LpJuu6kp0QESw/s1600/Kushboo-hot-pictures-photos-images-stills.jpg" border="0" alt="" /></a>நடிகை குஷ்பு பேசிய கற்பு விவகாரத்தில் கருத்துச்சொன்ன உச்சநீதிமன்ற நீதிபதிகள், இருவர் விரும்பி தவறான உறவு வைத்துக் கொண்டால் சட்டப்படி குற்றமில்லை.அதைத் தடுப்பதற்கு இந்திய குற்றவியல் சட்டத்தின் எந்தப் பிரிவிலும் வழியில்லை" என்றதோடு குஷ்புவுக்கு எதிராக வழக்காடிய வக்கீலைப் பார்த்து,"குஷ்புவின் கருத்தால் நீங்கள் எப்படி நேரடியாகப் பாதிக்கப்பட்டீர்கள்? உங்களுக்கு மகள் இருக்கிறாரா?" என்றெல்லாம் கேட்டுள்ளனர்.<br /><br />நமது விபச்சாரத் தடுப்புச் சட்டத்திலுள்ள ஓட்டைகளைச் சொல்லி,அவற்றை அடைக்கும்படி அரசுக்கு பரிந்துரை செய்திருந்தால் நீதிபதியின் சமூக அக்கரை பாராட்டப் பட்டிருக்கும். பொது நலனுக்காக வழக்கிட்டவரை நேரடியாக எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதன் மூலம்,நேரடி பாதிப்பு ஏற்படாதவரை எந்தக் குற்றமும் சட்டப்படி தவறல்ல என்று சொல்கிறார்களோ?<br /><br />இனிமேல் விபச்சார வழக்குகளில் பிடிபடுபவர்களெல்லாம் இதே காரணத்தை போலீஸாரிடம் திருப்பிக்கேட்டால் சமூக ஒழுங்கு,கலாச்சாரம் என்னாவது? இருவர் மனம்விரும்பி விபச்சாரம் செய்வதைப்போல்,விரும்பி போதை மருந்து சாப்பிட்டாலும் இதே லாஜிக் பொருந்தும்தானே!மேலும் அதனால் நீதிபதி நேரடியாகப் பாதிக்கப்படவில்லையே! நித்தியானந்தாவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 'நியாயம்' கிடைக்காவிட்டால் உச்சநீதிமன்றம் செல்லலாம்!<br /><br />***************<br /><br />ரஞ்சிதாவுடன் படுக்கையறையில் ஆனந்தக்கூத்தாடிய நித்தியானந்தாவை போலீஸார் எப்போது பிடித்து சட்டத்தின் முன் கொண்டுவருவார்கள் என்று தெரியவில்லை. கும்பமேளாவிலிருந்து வீடியோ விளக்கங்கள் கொடுத்து வரும் இவனைப்பிடிப்பதில் போலீசுக்கு என்ன சிரமமோ தெரியவில்லை. சங்கராச்சாரியாருக்குக் கிடைத்ததுபோல் பல்டியடிக்கும் சாட்சிகளுக்காகக் காத்திருக்கிறார்களோ என்னவோ?<br /><br />****************<br /><br />காஞ்சி சங்கராச்சாரியார் ஆண்டவனின் அணுக்கிரகத்தால் இன்னும் சில நாட்களில் விடுதலை அடைந்து புதுப்பொழிவுடன் காஞ்சிமடத்திலிருந்து அருளாசி வழங்குவார் என்றே தெரிகிறது. அவருக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்த சாட்சிகள்பலர் அடுத்தடுத்து அந்தர்பல்டி அடித்துள்ள நிலையில் இனிமேலும் மகா அப்பாவி சங்கராச்சாரியாரை கோர்ட்டு வழக்கு என்று நீதிமன்றப் படியேறச் செய்வது தர்மமல்ல! துறவிகள் பாவம் பொல்லாதது!நல்லடியார்http://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-12417711.post-68814968285354396592010-01-31T14:27:00.003+04:002010-01-31T14:32:34.982+04:00பின்லேடனும் இத்துப்போன ஆடியோ கேஸட்டுகளும்<a href="http://www.foxnews.com/images/439884/0_61_binladentapes1.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 252px;" src="http://www.foxnews.com/images/439884/0_61_binladentapes1.jpg" border="0" alt="" /></a><br /><br />ஒசாமா பின்லேடனின் சமீபத்திய வீடியோ டேப், இதுவரை அவரிடமிருந்து வந்த அனைத்து வீடியோ டேப்களையும் விடவும் காமெடியாக உள்ளது. பெரும்பாலும் அமெரிக்க மற்றும் நேட்டோ கூட்டுப் படைகளுக்கு எதிராக வீடியோ டேப் எச்சரிக்கை விடுத்து வந்த திருவாளர் பின்லேடன், தற்போது புவி வெப்பநிலை உயர்வுக்கும் அமெரிக்காவே காரணம் என்று வீடியோ டேப்பில் பேசி அனுப்பியுள்ளார்.<br /><br />அல்ஜஸீரா தொலைக்காட்சி ஒளிபரப்பிய வீடியோ செய்தியில் பின்லேடன் கூறுகையில்,அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் நெருக்கடிக்கும் புவி வெப்ப மயத்துக்கும் அமெரிக்காவும்,மேற்கத்திய நாடுகளுமே காரணமென குற்றம் சாட்டியுள்ளதோடு மூன்றாம் உலக நாடுகளின் வெள்ளம்,பட்டினி,பஞ்சம், காடுகள் அழிப்புக்கும் அமெரிக்காவே காரணம் என்று சாடியுள்ளது காமெடி. மனிதர்களை மட்டும் துல்லியமாகக் குறிவைத்து அழிக்கும் அசைவ தேசம் அமெரிக்காவை,காடுகள் அழிப்புகளைச் சொல்லி சைவமாக்கும் சதித்திட்டம் இருக்குமோ என்னவோ!<br /><br />நியூயார்க் வர்த்தக மையங்களைத் தகர்த்த பெருமை கொண்ட பின்லேடன், வெடிக்காத வெடிகுண்டுகளை வைத்து மிரட்டுமளவுக்கு தரம்தாழ்ந்து வந்து இருப்பதிலிருந்து அல்காயிதா நெட்வொர்க்கை செயலிழந்து முடக்கப்பட்டு விட்டதும் வெட்டவெளிச்சமாகி உள்ளது. கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று டெட்ராய்ட் விமானத்தில் இத்துப்போன குண்டைக் கடத்தியதை, வழக்கம் போல் அல்காயிதா நேர்மையாகப் பொறுப்பேற்றுக் கொண்டதோடு, அதிபர் ஒபாமாவுக்கு கிறிஸ்துமஸ் போனஸாக எச்சரிக்கைகளையும் வழங்கியது.<br /><br />பின்லேடன் பேசியதாகச் சொல்லப்படும் இத்தகைய அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஆடியோ-வீடியோ டேப்கள் எல்லாமே வழக்கொழிந்து போய்விட்ட பழையவகை ஆடியோ கேசட்டில் பேசிப் பதிவு செய்தே அனுப்பப்படுகிறது. இதுகுறித்து எந்தப் புலணாய்வு அமைப்புக்கும் எவ்வித சந்தேகமும் எழாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.<br /><br />சந்தையில் கிடைக்காத புத்தம் புதிய கேஸட்டுகள் பின்லாடனுக்கு மட்டும் யார் சப்ளை செய்கிறார்களோ தெரியாது! பின்னணியில் சீனா அல்லது ரஷ்யா இருக்கக்கூடும்?<br /><br />அமெரிக்காவை கலங்கடிக்கும் ஓர் உலக மகா தீவிரவாதி இன்னும் பழைய ஆடியோ டேப் ரெக்கார்டரை வைத்துக் கொண்டு மிரட்டுவது மனசுக்குக் கஷ்டமாக உள்ளது. ;-))) FLASH DRIVE அல்லது MP3 வாய்ஸ் ரெக்கார்டரை, அல்ஜஸீராவுக்கு அனுப்ப வேண்டிய கேசட்டுகளைப்போடும் அதே குப்பைத் தொட்டியில் போட்டுவைத்தால்,இனி MP3, MPEG 4 ஃபார்மட்டில் நிறைய காமெடிகளை பேசி அனுப்பி வைப்பார்.<br /><br />இதுகுறித்த மேலதிக காமெடியை <a href="http://www.veteranstoday.com/2010/01/24/israel-please-no-more-bin-laden-tapes-nobody-is-buying-it/">இந்தச் சுட்டியில்</a> வாசிக்கவும்.நல்லடியார்http://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-12417711.post-875303517844954092010-01-14T10:12:00.002+04:002010-01-14T10:24:23.533+04:00பர்தா, பெண்ணுரிமை & பொதுக்கழிப்பிடம்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEb1204rPaSF-aaIJYK2pLEk6obV8gWuP9_N_g0Urxsx6ySn25fc85IYnUMrluljgKdpJa0FM0o30ZAmOvOIHZPoVyTGL1Qpse_aL3UM_YaA7rbNTgtExeTby-GNj1BiV6g7egbw/s320/vlcsnap-1413484.png"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 252px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEb1204rPaSF-aaIJYK2pLEk6obV8gWuP9_N_g0Urxsx6ySn25fc85IYnUMrluljgKdpJa0FM0o30ZAmOvOIHZPoVyTGL1Qpse_aL3UM_YaA7rbNTgtExeTby-GNj1BiV6g7egbw/s320/vlcsnap-1413484.png" border="0" alt="" /></a>கோவில் சிலைகளில் பெண்கடவுள் சிலைகளுக்கு உயர்ரகப் பட்டுத் துணி போர்த்தியிருப்பார்கள். அம்மண கோலத்தில் செதுக்கப்பட்ட சிலைகளுக்கு பட்டுத்துணி போர்த்தி, அம்மன் என்று மரியாதை செய்கிறார்கள். கடவுளை வழிபடும்போது மனம் அலைபாய்வதைத் தடுக்கவே சிலைகளுக்கும் ஆடை அணிவிக்கிறார்கள். சிலையே ஆனாலும் அங்கிருக்கும் சிற்பத்தில் கடவுள் தெரிவதைவிட அதன் பாலினமும் அங்கத்திரட்சியுமே கண்ணில்படுகிறது. தீவிர தெய்வ பக்தனுக்கும் சபலமுண்டு!<br /><br />களைத்துத் திரும்பும் கணவனுக்காக தலைசீவி காத்திருக்கும் மனைவியால் கணவன் புத்துணர்வு பெறுகிறான். ஆபாசப் படங்களில் அங்கம் தெரியக் காட்சிப்படுத்தப்படுபவர்கள் பெண்களே! துரிதமாக பாலியல் வசப்படுத்தும் ரசாயன மாற்றம் பெண்ணைவிட ஆணுக்கே அதிகம் என்று மருத்துவம் சொல்கிறது. கன்னிப் பெண்களின் அங்கக் கவர்ச்சியில் தன்னிலை மறந்து தாடிவைத்தலையும் காதலர்களே இதற்குச் சான்று! <br /><br />ஆணுக்குப் பெண் கவர்ச்சி - பெண்ணுக்கு ஆண் கவர்ச்சி என்றாலும் இறுதி வீழ்ச்சி ஆண்களுக்கே! இடுப்புச்சேலை மடிப்புல நான் கிறங்கிப்போனேனே! என்பதிலிருந்து பெண்ணின் சிறு அங்கமும் ஆணுக்கு பாலியல் உணர்வை தூண்டுகிறது என்பது மறைக்கமுடியாத உண்மை!<br /><br />முஸ்லிம் பெண்கள் பர்தா எனும் மேலங்கி அணிவதை பெண்ணடிமைத் தனத்தின் வெளிப்பாடாகக் குற்றம்சொல்கிறார்கள். பள்ளிகளில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணியக்கூடாதென்ற தடை பிரான்ஸ்,ஜெர்மனி போன்ற நாடுகளில் சட்டமாக்கப்பட்டுள்ளது. பிரிட்டனிலும் பர்தா தடைசெய்யப்பட வேண்டுமா என்ற கருத்துக்கணிப்பை பிரபல பிபிசி நிறுவனம் நடத்துகிறது. தமிழ் வலைப்பதிவுகளிலும்கூட பர்தா குறித்த விமர்சனங்கள் அவ்வப்போது வைக்கப்படுகிறது.<br /><br />முஸ்லிம் பெண்கள் தங்கள் புறஅழகை கணவன், மாமனார், தந்தை,மகன் சகோதரன் உறவுமுறை தவிர்த்த யாரிடமும் வெளிப்படுத்தக்கூடாதென்ற கட்டுப்பாடு உள்ளது. மேற்சொன்ன உறவுமுறையற்ற ஆண்களின் பார்வை முஸ்லிமல்லாத பெண்களுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும். இஸ்லாம் தவிர யூத, கிறிஸ்தவ,சீக்கியப் பெண்களும்கூட தமது உடலழகை மற்றவர்களிடம் மறைக்கவே விரும்பிகின்றனர்.<br /><br />நம் இந்தியாவிலும் வடமாநிலப் பெண்கள் பர்தாவையொத்த மேலங்கியை அணிகிறார்கள். பெண்களின் அங்கங்களை மறைப்பது மத மற்றும் கலாச்சார ரீதியில் சரியென்று ஒப்புக்கொள்பவர்கள்,முஸ்லிம்கள் விசயத்தில் மட்டும் குறைகாண்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?<br /><br />ஜனாதிபதியாக பதவியேற்கும் சில நாட்களுக்கு முன்பு பர்தாவைப் பற்றி விமர்சித்த திருமதி.பிரதீபா பாட்டீல் இன்றுவரை முக்காடிட்டு, கைகளை மறைக்கும் பர்தாவுக்கிணையான உடையணிகிறார். முஸ்லிம் பெண்களை பர்தா அணியச்செய்து அவர்களின் உரிமையை இஸ்லாம் பறிக்கிறதெனில் இந்திராகாந்தி முதல் ப்ரதீபா பாட்டீல்வரை முக்காடுடிட்டுக்கொள்வதற்கும் இஸ்லாம்தான் காரணமா?<br /><br />விஜய் டிவியில் நீயா- நானா? என்ற நிகழ்ச்சியில் பர்தா குறித்த கருத்தாடல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.பர்தா அவசியமே என்று ஒரு பிரிவினரும் தேவையில்லை என்று இன்னொரு பிரிவினரும் வாதிடுவார்களாம்! நிகழ்ச்சி நடத்துபவர் இறுதியில் தீர்ப்பளிப்பாராம்! தீர்ப்பு என்னவாக இருக்குமென்று சொல்ல வேண்டியதில்லை. கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல்லெறிந்தால் யாருக்கு நஷ்டம்? <br /><br />இஸ்லாம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டமார்க்கமல்ல என்கிறீர்கள்?ஆனால் அத்தகைய விமர்சனங்களை எதிர்கொள்ளாமல் முற்றுகைப் போராட்டம், ஆர்ப்பாடம் நடத்தி இதுபோன்ற சுதந்திரமான கருத்தாடலை தடுக்கிறீர்களே என்று சிலர் கேட்கலாம். எது சார் சுதந்திரம்? ஒருபக்கம் ஆபாச போஸ்டரை கிழிக்கும் போராட்டங்களை நடத்திக்கொண்டு இன்னொரு பக்கம் பர்தாவை விமர்சிப்பது நேர்மையான கருத்தாடலா? பர்தா தேவையில்லை என்போர் பிகினி அல்லது டூ பீஸில் வாதிடுவதுதானே நேர்மையான விவாதமாகும்?<br /><br />ஆணும் பெண்ணும் சமம் என்பவர்கள் போராட்டம் நடத்த வேண்டிய இடம் பொதுக் கழிப்பிடங்கள்தான். ஏனென்றால் அங்குதான் ஆண்கள்-பெண்கள் என தனித்தனி படம்போட்டு பாகுபாட்டை வலியுறுத்துகிறார்கள். என்ன கொடுமைசார் இது!<br /><br />*******<br /><a href="http://athusari.blogspot.com/2006/11/blog-post_29.html">பர்தாவும் பைபிளும்</a> <br /><a href="http://athusari.blogspot.com/2007/06/blog-post_20.html">பர்தாவைப் பிடித்திழுக்கும் பிரதிபா படீல் </a><br /><br /><a href="http://athusari.blogspot.com/2007_03_01_archive.html">பழமைவாத,ஆணாதிக்கத் திருவள்ளுவர் !?!</a> <br /><br /><a href="http://athusari.blogspot.com/2008/01/blog-post.html">துப்பட்டாவுக்கு வெளியேதான் பெண்ணியமா? </a>நல்லடியார்http://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-12417711.post-60161073404521632922009-12-13T16:08:00.006+04:002009-12-15T12:56:25.147+04:00வீரியம் இழந்த வாதங்கள்....!திருக்குர்ஆனை முஹம்மது நபி (ஸல்...) அவர்கள் மக்கள் முன் எடுத்துச் சொன்ன கால கட்டத்திலேயே அதனை எப்படியாவது பொய்ப்படுத்திட வேண்டும் அல்லது குறைந்தபட்சம் குறையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று அபூஜஹ்ல் காலந்தொட்டு தொடரும் அத்தகைய முயற்சிகள் இன்றுவரை நின்ற பாடில்லை.<br /><br /><br />"மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்று சிந்திக்க வேண்டாமா? முதுகுத் தண்டுக்கும் விலா எலும்புக்கும் இடையிலிருந்து குதித்து வெளிப்படும் திரவத்திலிருந்து படைக்கப் பட்டான்" என்ற குர்ஆனின் கூற்றில் அறிவியல் முரண்பாடுகள் இருப்பதாக தருமி <a href="http://dharumi.blogspot.com/2009/11/354-2.html">குற்றச்சாட்டுக்களை</a> அடுக்கி இருந்தார். <br /><br /><a href="http://knol.google.com/k/-/-/UGi0XsR9/wPq4rA/Sciatic%20nerve.bmp"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 301px; height: 392px;" src="http://knol.google.com/k/-/-/UGi0XsR9/wPq4rA/Sciatic%20nerve.bmp" border="0" alt="" /></a>"ஆணின் விரையிலிருந்து வெளிப்படும் விந்திலிருந்துதான் கரு உருவாகிறது. குர்ஆன் சொல்வதுபோல் (?!) முதுகுத் தண்டுக்கும் விலா எலும்புக்கும் இடையிலில்லை" என்ற நவீன கண்டுபிடிப்பை(!) தருமி முன்வைத்திருந்தார். அதற்குப் பின்னூட்டம் இட்டிருந்த கல்வெட்டு என்பார்,ஆதிமனிதனிலிருந்து இதுவரைக்கும் யாருக்கும் தெரியாத(!) ஆண்குறியிலிருந்து விந்து வெளிப்படுவதை, குடும்பக்கட்டுப்பாடு (வாஸக்டமி) அறுவைச் சிகிச்சையைப் படம் காட்டி நிரூபித்திருந்தார். <br /><br />முன்னதாக, குர்ஆனின் மூலமொழியான அரபியில் நேரடியாகச் சொல்லப்பட்டவற்றுக்கு கூடுதல் விளக்கத்துக்காக மொழியாக்கத்தில் பிறைக்குறிக்குள் (BRACKET) மொழிபெயர்ப்பாளர்களால் குறிப்பிடப் படுவனவற்றைச் சுட்டி, "குர் ஆனுக்குத் தன்னிச்சையாக விளக்கம் கொடுத்துள்ளார்கள்" என்று கல்வெட்டு தனது ஆட்சேபனையை வெளிப்படுத்தி இருக்கிறார். <br /><br />மொழியியலில் பிறைக்குறிக்குள் சொல்லப்படுபவை மொழிபெயர்ப்பாளரின் கருத்துகள்;இது எல்லா மொழியாக்கத்திற்கும் பொருந்தும் என்ற அடிப்படை கூடத் தெரியாமல் குர்ஆனில் குறைகாணப் புறப்பட்ட இவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது. பிறைக்குறிக்குள் விளக்கம் இல்லாமலும் மூலப்பொருள் மாறாது என்று சொன்னதைத் தொடர்ந்து EMIT / வெளிப்படுதல் என்ற சொல்லைப் பிடித்துக்கொண்டு, "விந்து EMIT ஆகுமிடம் ஆண்குறி" என்ற இன்னொரு அரிய கண்டுபிடிப்பைச் சொன்னார் திருவாளர் கல்வெட்டு. <br /><br /><object width="445" height="364"><param name="movie" value="http://www.youtube.com/v/AsXjFRa4tUQ&hl=en_US&fs=1&rel=0&color1=0x234900&color2=0x4e9e00&border=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/AsXjFRa4tUQ&hl=en_US&fs=1&rel=0&color1=0x234900&color2=0x4e9e00&border=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="445" height="364"></embed></object><br /><br />கருவறைக்குள் செலுத்தப்படும் விந்து விரையிலிருந்து மட்டும் உருவானதல்ல; மொத்த விந்தில் சுமார் 5%க்கும் குறைவான அளவே விரையில் உருவாகிறது. இவ்வாறு வெளியாகும் விந்தில் சுமார் 200-300 மில்லியன் உயிரணுக்கள் விரையிலிருந்து வெளியாகி PROSTATE GLAND தாதுச்சுரப்பிகளுடன் கலந்து, பிறகு அங்கிருந்து வெளியாகி SEMINAL VASICLE தாதுக் கலவையுடன் கலந்து இறுதியாக ஆண்குறியிலிருந்து வெளியாகி கருவறையைச் சென்றடைகிறது. <strong>இடையில் மூன்று வெளியேற்றங்கள் (EMIT/EMISSION) நடந்த பிறகே ஆண்குறியிலிருந்து விந்து வெளியேற்றப்பட்டுக் கருவறை சென்றடைகிறது.</strong><br /><br />ஆணின் விந்தானது 1-21 நாட்களில் படிப்படியாகச் சுரந்து இனவிருத்திக்குத் தயாராக வைக்கப்படுகிறது. இடைப்பட்ட நாளில் உடலுறவு மூலம் வெளியேற்றப் படாவிட்டால் தானாக வெளியேற்றப்படுகிறது. விரைகளில் சுரந்த விந்து நேரடியாக வெளியாகாமல், உடலில் நெடும்பயணம் செய்து தாதுச் சுரப்பிகளுடன் கலந்து வெளியாகிறது. விரையிலிருந்து நிதானப் பயணமாகத் தொடங்கி PROSTATE GLAND தாதுச் சுரப்பிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு துள்ளிக் குதித்து வெளியேறி SEMINAL VASICLE சுரப்பிகளுடன் மீண்டும் கலந்து வீரியமடைந்து இறுதியில் ஆண்குறி வழியாக இடம் பெயருகிறது. <br /> <br />கல்வெட்டு குறிப்பிட்டுள்ள சுட்டியிலும் இது சொல்லப்பட்டுள்ளது:<br /> *Sperm do not mature in the testes. They must first pass into the epididymis, a C-shaped storage chamber adjoining the testes composed of a 20-foot coiled tube. The sperms' journey through the epididymis takes about 2 - 3 weeks. They are held here until sexual activity forces them to move on. http://www.clarian.org/ADAM/doc/In-DepthReports/10/000037.htm<br /><br />உணர்வுக்கும் உடலுக்கும் நடக்கும் இன்பப் போராட்டத்தில் (TESTICLE-SEMINAL VASICLE-PROSTATE GLAND என) மூன்று வெளியேற்றங்கள் நடந்து ஆண்குறியிலிருந்து இறுதி வெளியேற்றம் நிகழ்கிறது. இந்த இறுதி வெளியேற்றத்தை மட்டும் பிடித்துத் தொங்கி,:-)<br /><br />"<a href="http://dharumi.blogspot.com/2009/11/354-2.html?showComment=1260281552517#c104336788893241749 ">மனிதன் drop emitted ல் இருந்து வந்தவன் என்றால் அந்த drop emitted ஆகும் இடம் ஆண்குறியின் முனைதான். அதற்கு முன் அது எமிட் ஆகவில்லை. உற்பத்தி வேறு வெளியேற்றம் (எமிட்) வேறு. எனவே backbone and the ribs ல் இருந்து எமிட் ஆகிறது என்று நீங்கள் சொல்லியிருந்தால் அது முற்றிலும் தவறு</a>" என்று அரைகுறையாகப் பொருள் கொண்டுள்ளார். <br /><br />உடலிருந்து விந்து இறுதியாக வெளியேற்றப்படுவதைக் குறிக்கும் மிகச்சரியான ஆங்கிலச்சொல் EJACULATION (விந்து வெளியேற்றல்). அப்படி இருக்கும்போது குர்ஆன் சொல்லாத EJACULATION ஐ EMIT என்று சொல்லப்பட்ட இடத்தில் தவறாகப் பொருள் கொண்டுள்ளார். <br /> <br /><br /><a href="http://www.answers.com/topic/ejaculation"># The expulsion of seminal fluid from the urethra of the penis during orgasm.</a><br /><br /><a href="http://www.merriam-webster.com/dictionary/EJACULATE">to eject from a living body; specifically : to eject (semen) in orgasm</a><br /><br /><blockquote>086.006 خُلِقَ مِنْ مَاءٍ دَافِقٍ<br /><br />086.006 He is created from a drop emitted-<br /><br /> <br /><br />086.007 يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ<br /><br />086.007 Proceeding from between the backbone and the ribs:</blockquote><br /><br /> <br /><br />இவ்விரு வசனங்களையும் வெளியேற்றப்பட்ட (EMITTED) துளியிலிருந்து (86:006) முதுகுத்தண்டுக்கும் விலா எலும்புக்கும் இடையிலிருந்து (PROCEEDING FROM) (086:007) என்று தொடர் வெளியேற்றத்தைச் சொல்கிறது. <br /><br />நவீன அறிவியலும் இதையே சொல்கிறது. விரையிலிருந்து உடல் ஸ்பரிசங்களால் அனுப்பப்படும் (EMIT) விந்து, எபிடிடைமிஸ் (epididymis) என்ற பல்வேறு விரை நரம்புகளைக் கடந்து வாஸா டிபெரெண்டியா (vasa deferentia) என்ற ஒருமித்த குழாய் மூலம் Seminal Vasicle தாதுச் சுரப்பிகளுடன் கலந்து வெளியாகி, பின்னர் Prostate Gland இல் சுரந்த சுரப்பிகளையும் சேர்த்துக் கொண்டு, இறுதியாக ஆண்குறி முனையிலிருந்து வெளியாகிறது. இந்த இறுதி வெளியேற்றத்தைக் குறிக்கும் துல்லியமான ஆங்கிலச் சொல் (EJACUATION).<br /><br /><br />++++++++++++++++++++++++++++++++++++++++++++++<br /><br />குர்ஆனின் நோக்கம் அறிவியல் பாடம் நடத்துவதல்ல.மனித வாழ்க்கைக்குத் தேவையான வாழ்வியல் நெறிகளைச் சொல்லும்போது மேலதிகமாக மனிதப்படைப்பின் ரகசியங்களையும் சொல்லி தானொரு இறைவேதம் என்பதைக் குர்ஆன் மெய்ப்பிக்கிறது. அவற்றைத் தனிநபராக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எடுத்துச் சொன்னபோது மறுத்தவர்களிடமும் இகழ்ந்தவர்களிடமும் இதைவிடச் சரியான ஒன்றைக் கொண்டு வருமாறு சவால் விட்டது. குர்ஆன் அருளப்பட்ட 23 ஆண்டுகளில் இந்தச் சவால்களை எவரும் எதிர்கொள்ளவில்லை.<br /><br />குர்ஆனுக்கு முன்பே கிரேக்கர்களும் ரோமானியர்களும் அறியியலிலும் தலைசிறந்து விளங்கினார்கள்.அவர்களின் பல்வேறு அறிவியல் முடிவுகள் இன்றும் ஆய்வுக்குட்படுத்தப் பட்டு தவறென நிரூபிக்கப்பட்டுள்ளன. அத்தகைய ஆய்வுகளும் பன்னெடுங்காலங்களாக பல்வேறு அறிஞர்களால் ஆய்வு செய்யப்பட்டு மறுக்கப்பட்டுள்ளன. குர்ஆன் கூறியதற்கு எதிராக இதுவரை எந்த அறிஞனும் நிரூபிக்கப்பட்ட அறிவியல் முடிவுகளை முன்வைக்க வில்லை. <br /><br />எத்தனை உதவியாளர்களை துணைக்கழைத்துக் கொண்டாலும், இதுபோன்று உங்களால் ஒன்றைக் கொண்டுவர முடியாது என்று 1400 ஆண்டுகளுக்கு முன்வைக்கப்பட்ட சவால் இன்றுவரை எதிர்கொள்வாரின்றி நிலுவையில் உள்ளது. இனியும் எதிர்கொள்ளப் படப்போவதில்லை, இன்ஷா அல்லாஹ்!நல்லடியார்http://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-12417711.post-79189808015416039332009-12-06T12:45:00.003+04:002009-12-06T12:53:40.650+04:00அப்சல் குருவுக்கு ஒரு நீதி - அத்வானிக்கு ஒரு நீதியா?பாகிஸ்தான் தீவிரவாதிகள் நமது நாடாளுமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்தியபோது நமது பாதுகாப்பு வீரர்கள் உட்பட தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர். ஆளும் கட்சியாக பாஜகவும் காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையிலும் இருந்தபோது 'நாட்டையே உலுக்கிய' இச்செயல் பரபரப்பாகப் பேசப்பட்டது.<br /><br />தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதால் அநீதியிழைக்கப்பட்ட பாதுகாப்புப் படையினர் குடும்பத்திற்கு நீதிவழங்கவும் வழக்கை மேற்கொண்டு நடத்தக் குற்றவாளி தேவை என்பதால் முன்னாள் காஷ்மீர் போராளிகளின் கூட்டாளியும் பிற்கால ராணுவ உளவாளியுமான 'அப்சல் குரு' வழக்கின் பிரதானக் குற்றவாளியாக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு நாட்டுமக்களின் கூட்டுமனசாட்சியைக் கருத்தில் கொண்டு மரணதண்டனை விதிக்கப்பட்டார்.<br /><br />உயிர்பிழைப்பதற்கான அத்தனை வாசல்களும் அடைக்கப்பட்ட பிறகு இனி யாரிடமும் மேமுறையீடு செய்யப்போவதில்லை என்று இருந்தாலும், மனித உரிமை ஆர்வலர்களால் அவரின் மரணதண்டனை இந்திய ஜனாதிபதியின் கருணை மணுவுக்காகக் காத்திருக்கிறது.<br /><br />நாடாளுமன்றத் தாக்குதலை நடத்தியவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதிலும், பாதிக்கப்பட்ட பாதுகாப்புப்படையினர் குடும்பத்திற்கு நீதியும் நிவாரணமும் வழங்கப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் ஆட்சேபனை இல்லை.<br /><br />நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் நாட்டு மக்களின் கூட்டு மனசாட்சியைத் திருப்தி செய்வதற்காக அப்சல் குருவுக்கு மரண தண்டனை வழங்குவதாகத் தீர்ப்பளித்தார். ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட போதும், கிரகாம் ஸ்டெயின் உயிருடன் கொளுத்தப்பட்டபோதும், ஒரிசா கந்தன்மால் கிறிஸ்தவர்களின் உடமைகள், உயிர்கள் நாசமாக்கப்பட்ட போதும் விழிக்காத 'கூட்டு மனசாட்சி' அப்சல்குரு விசயத்தில் மட்டும் விழித்துக்கொண்டதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?<br /><br />நாடாளுமன்றம் என்பது அரசியல்வாதிகளின் புனிதத் தளமல்ல. ஜனநாயகப் போர்வையில் சர்வாதிகாரிகள் சட்டம் இயற்றும் சபையாகவோ அல்லது ஆளுங்கட்சியின் அடாவடிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் அவையாகவுமே இருந்து வருகிறது. மக்களுக்குச் சேவையாற்றப்போகிறோம் என்று சொல்லி கேள்விநேரத்தைப் புறக்கணித்த புன்னியவான்கள் புழங்குமிடம்தான் நமது நாடாளுமன்றம்! அம்பானிகளைப் பகைத்துக் கொள்ளாத வரையில் மட்டுமே ஆளுங்கட்சி அல்லது எதிர்கட்சி வரிசையில் அமரமுடியும்.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLisnQOrfxEwmzlxLWB4il6E-wCd6Rj5_nlkRURmApVUaHMB2Ciip5FR44uMjpkz0_xGL5mLeeHb5NS6qnt6drSMizicVVSCdeV-4mW9cb8_JA1wW808AjGwXfCxXzkwSasANk2Q/s1600-h/babri.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 197px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLisnQOrfxEwmzlxLWB4il6E-wCd6Rj5_nlkRURmApVUaHMB2Ciip5FR44uMjpkz0_xGL5mLeeHb5NS6qnt6drSMizicVVSCdeV-4mW9cb8_JA1wW808AjGwXfCxXzkwSasANk2Q/s320/babri.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5412043098472377186" /></a><br />1992 டிசம்பர்-6 அன்று காவிக் கயவர்களால் திட்டமிட்டு தகர்க்கப்பட்ட பாப்ரி மஸ்ஜித் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தளம் என்பதோடு இந்திய வரலாற்றின் பாரம்பர்யச் சின்னமும் ஆகும். பாப்ரி மஸ்ஜிதையும் இடித்து விட்டு நாடு முழுவதும் முஸ்லிம்களைக் கருவருத்தக் கூட்டத்திற்கு முறையே பிரதமர், துணைப் பிரதமர் மற்றும் கேபினட் அமைச்சரகங்களைத் தாரை வார்த்தோம்.<br /><br />தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்குச் சமம் - நூறு குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு அப்பாவி தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதெல்லாம் வெறும் வாய்ஜாலம் தானா? 17 ஆண்டுகளாக கிட்டத்தட்ட 10 கோடி செலவிட்டு, இதைச் சாக்காக வைத்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நாடாளுமன்ற நேரங்களை வீணடித்து, அவையை முடக்கி, ஒத்திவைத்து என பொன்னான நாடாளுமன்ற நேரங்களை வீணடித்து, சென்றவாரம் தாக்கல்செய்யப்பட்ட லிபரான் கமிசன் அறிக்கையையும் ஏனைய கமிசன் அறிக்கைகளைப்போல் கிடப்பில் போடப்படுமென்றே தெரிகிறது.<br /><br />லிபரான் கமிசன் அறிக்கையின்படி யாருக்கும் தண்டனைகள் பரிந்துரை செய்யப்படாத காரணத்தால் 68 குற்றவாளிகளில் எவனையும் தண்டிக்கப் போவதில்லையென சொல்லப்படுகிறது.எனில்,என்ன மயிருக்காக இத்தனை களேபரங்கள் நடத்தினர்? என்று சட்டத்தையும் இறையான்மையையும் மதிக்கும் சாமான்யரின் மனதில் கேள்வி எழுகின்றது.<br /><br />அப்சல் குருவுக்கு மரண தண்டனை வழங்கிய கூட்டு/குருட்டு மனசாட்சி அத்வானி உள்ளிட்ட 68 குற்றவாளிகளுக்காவும் விழித்துக்கொண்டு என்ன தண்டனையை வழங்கப்போகிறது? நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளிடமிருந்து வந்த செல்போன்அழைப்பிற்காக அப்சல் குருவுக்கு மரண தண்டனை வழங்கியது சரியென்றால், பாப்ரி மஸ்ஜிதை இடிக்கும் நோக்கத்துடன் மேடைபோட்டு ஒலிபெருக்கியில் அழைத்த சங்பரிவாரக் கும்பலைச் சர்ந்த 68 பேர் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படும்? யார் வழங்குவார்? என்பதே தொக்கி நிற்கும் கேள்வி!நல்லடியார்http://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-12417711.post-25634905603402367072009-12-04T16:15:00.004+04:002009-12-05T00:53:03.136+04:00'விரை'ப்பான கேள்விகளும் விடாத பதில்களும்...<span style="font-size:100%;">குர்ஆன் - அறிவுக்கும் அறிவியலுக்கும் ஏற்ற எக்காலத்திற்கும் பொருந்தும் ஓர் வாழ்வியல் நெறிநூல்! இது அறிவியல் நூலல்ல; ஆனாலும் அறிவியலையும் உள்ளடக்கியது. குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள அனேகக் குறிப்புகள் தற்கால ஆய்வுகளுடன் / நிரூபனங்களுடன் 100% ஒத்துப்போகிறது. எனவேதான் "இதில் முரண்பாடுகளிருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம்" என்று ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் சவால் விடுகிறது. உலகில் வேறு எந்தநூலும், கொள்கையும் இவ்வாறு சவால் விட்டதாக அல்லது அத்தகைய சவால்களை எதிர்கொண்டு நிலைத்திருப்பதாகவோ அறியமுடியவில்லை.<br /><br />நிற்க,<br /><br />திருவாளர் தருமி <a href="http://dharumi.blogspot.com/2009/11/354-2.html">"மதங்கள்" என்ற தலைப்பில் "இஸ்லாம்-2"</a> குறித்து எழுதி இருந்தார். மனிதவிந்து உற்பத்தியாகுமிடம் குறித்து விந்தையான பதிவு அது! குர்ஆன் வசனம் 86:05-07 ஐ மேற்கோள் காட்டி எழுதி இருந்தார்.<br /><br /><span style="font-style: italic; color: rgb(0, 0, 102);">5. எனவே, மனிதன் எதிலிருந்து தான் படைக்கப்பட்டுள்ளான் என்பதை (நோட்டமிட்டு)ப் பார்ப்பானாக! </span> <span style="font-style: italic; color: rgb(0, 0, 102);">6. குதித்து வெளியாகும் நீரினால் அவன் படைக்கப்பட்டுள்ளான் </span> <span style="font-style: italic; color: rgb(0, 0, 102);">7. (ஆணுடைய) முதுகுத் தண்டிற்கும், (பெண்ணுடைய) நெஞ்செலும்புகளுக்குமிடையில் இருந்து அது வெளியாகிறது.</span><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.magazine.ayurvediccure.com/wp-content/uploads/2009/02/prostatecancer.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 300px; height: 335px;" src="http://www.magazine.ayurvediccure.com/wp-content/uploads/2009/02/prostatecancer.jpg" alt="" border="0" /></a>அவரின் கேள்வி என்னவென்றால், "<span style="font-style: italic;">மனிதன் விந்திலிருந்து படைக்கப் பட்டான்" என்று நேரடியாகச் சொல்லாமல் "முதுகுத் தண்டிற்கும், விலா எழும்புக்கும் இடையில் இருந்து குதித்து வெளியாகும் நீரினால் படைக்கப்பட்டுள்ளான்" என்று ஏன் சொல்ல வேண்டும்? என்றதோடு விந்துக்கும் முதுகுத் தண்டிற்கும் என்ன தொடர்போ? </span>என்று அறிவியல்(!) பூர்வமாகக் கேள்வி கேட்டிருந்தார்! அவரின் பதிவிலிருந்தும் பின்னூட்டங்களிலிருந்தும் திரும்பத் திரும்ப தெரிவது, இஸ்லாம் குறித்த அரைகுறை தகவல்களுடன் அறிவியலைப் பற்றிய அறியாமையும்தான்!<br /><br />இது தருமியின் புதிய ஆய்வொன்றுமில்லை. ஏற்கனவே அவர் வேறொரு வசனத்தை எடுத்தெழுதி, அதற்கு விளக்கம் <a href="http://athusari.blogspot.com/2006/06/blog-post_18.html">சொல்லப் பட்ட</a> கருதான்:<br /><span style="font-style: italic;"> <br />படைப்புக்கொள்கை: இஸ்லாமில் மனிதன் உறைந்த ரத்தத்திலிருந்து உண்டாக்கப் பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அது யாருடைய ரத்தம் ? மனிதன் படைக்கப் படுவதற்கு முன் எங்கிருந்து ரத்தம் வந்தது? ஒருவேளை கடவுளின் ரத்தமாக இருக்குமோ? - தருமி</span> <span> <br /><br />முதல் மனிதனின் படைப்பையும் அவன் சந்ததியினரின் பிறப்பையும் குழப்பிக் கொண்டுள்ளீர்கள் . முதல் மனிதன் இறைவனின் அற்புதங்களால் களி மண்ணின் மூலச்சத்திலிருந்து படைக்கப்பட்டார் (6:2, 7:12, 15:33, 32:7, 35:11, 55:14) என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு. மனித வளர்ச்சி நிலைகளைப் பற்றி எந்த வேத நூலும் விவரிக்காத வகையில் குர் ஆன் விவரிக்கிறது, பார்க்க: 23:12,13 &14).</span> <span> இஸ்லாம் சொல்லும் படைப்புக் கொள்கை தவறு என்பது உங்கள் வாதமானால், நீங்களே சொல்லுங்கள் மனிதன் எதிலிருந்து தோன்றினான்? பகுத்தறிவு பெற்ற குரங்குகள்தான் தற்கால மனிதனின் மூதாதையர் என்றால், இன்னும் சில குரங்குகள் ஏன் பகுத்தறிவடைந்து மனிதனாகவில்லை?</span><br /><br />குர்ஆன் வசனம் 86:07இல் ஒரு குழந்தையின் உருவாக்கத்தில் உள்ள ஒரு பகுதி மட்டும் சொல்லப் படுகிறது. يَخْرُجُ مِن بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ என்பதற்கு விலாஎலும்புகளுக்கும் முதுகுத் தண்டுக்கும் இடையிலிருந்து வெளியேறும் திரவம், கருவுக்கான பகுதி மூலம் என்று சொல்கிறது. இங்குக் கேள்வி என்னவென்றால் விந்து (مَنِيٍّ/SPERM) நேரடியாகச் சொல்லாமல் ஏன் திரவம் (مَاءٍ/FLUID) என்று மறைமுகமாகச் சொல்ல வேண்டும்? என்பதே!<br /><br />குர்ஆனின் இன்னொரு வசனத்தில் (075:037) "கருவறைக்குள் (செலுத்தப்பட்ட) விந்தின் ஒரு துளியாக மனிதன் (مَنِيٍّ) இருக்கவில்லையா?" என்று கேட்கும் குர்ஆன், வசனம் 86:06 இல் திரவம் என்று பொதுமையில் குறிப்பிடுகிறது!<br /><br /><a href="http://www.differencebetween.net/science/health/difference-between-sperm-and-semen/">இரண்டும் வெவ்வேறு வடிவிலானவை / நிலைகளைக் கொண்டவை என்ற வேறுபாடு</a> நன்கு தெரிந்திருப்பதால் வெவ்வேறான சொல்லாடல் கையாளப் பட்டுள்ளது. <a href="http://www.medindia.net/animation/male_reproductive_system.asp">ஆணிடமிருந்து வெளியாகும் தாது (SEMEN) பல்வேறு சுரப்பிகளைக் கடந்து இறுதியில் விந்தாக (SPERM) மாற்றமடைகிறது</a>.<br /><br />கருவாக்கத்திற்கு ஆணின் விந்து (SPERM) பகுதி மூலமாகும். அந்த விந்து ஆணின் விரையிலிருந்து உருவாகிறது என்பதும் பொதுவானது. பொதுவான ஒன்றை குர்ஆன் வெவ்வேறு பதங்களில் குறிப்பிடுவதற்கு வேறுபட்ட காரணம் இருக்க வேண்டும். கர்ப்பத்தில் விந்துத்துளியாக இருக்கவில்லையா? என்று கேட்கும் குர்ஆன், விலா எலும்புகளுக்கும் முதுகுத் தண்டுக்கும் இடையிலிருந்து வெளியேற்றப்பட்ட திரவம் என்று வேறுபடுத்துவது எப்படிச் சாத்தியமாயிற்று?<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.health-res.com/EX/07-29-15/male_torso.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 390px; height: 389px;" src="http://www.health-res.com/EX/07-29-15/male_torso.jpg" alt="" border="0" /></a>தாது (SEMEN) என்ற விந்தின் (SPERM) மூலப்பொருள் பற்றி நவீன மருத்துவம் விளக்குகிறது. குர்ஆன் வசனம் 86:06ம் இதைத்தான் சொல்கிறது. நுண்ணாடி (MICROSCOPE) மருத்துவ உபகரணங்களும் சாத்தியமில்லாத காலகட்டத்தில் எழுதப்படிக்கத் தெரிந்திராத ஒருவரால் ஒரே விசயத்தை துல்லியமான வெவ்வேறு சொற்களால் விளக்க முடிந்தது?<br /><br />விந்து (SPERM) ஆணின் விரையிலிருந்து உருவாகிறது என்று பொதுவாக நம்பப்பட்ட காலத்தில் (சமீபகாலம் வரையிலும்கூட) எல்லோரையும்போல் இருகால்களுக்கு இடைப்பட்ட உறுப்பிலிருந்து விந்து வெளியாகிறது என்று சொல்லாமல் "விலா எலும்புக்கும் முதுகுத் தண்டுக்கும் இடையிருந்து உருவாகும் 'திரவம்' என்று துல்லியமாக வேறுபடுத்திச் சொல்வதன் மூலம் படைப்பின் ரகசியங்களை அறிவித்தவன் படைத்தோன் அல்லாஹ் என்பது இன்னொரு முறை உறுதியாகிறது.<br /><br />***************************************<br /><br />தருமியின் பதிவிலும் பின்னூட்டத்திலும் விந்து உற்பத்தியாகுமிடம் விரை (TESTICLE) என திரும்பத் திரும்ப சொல்கிறார்.அவரது பதிவில் பின்னூட்ட் இட்டுள்ள அறிவுசீவிகளும் "ஆமா, ஆமா" என்கின்றனர். நவீன மருத்துவமும் குர்ஆனும் வெவ்வேறு நிலைகளைச் சொல்கின்றன.<br /><br /><object height="344" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/tOe6l3w1O2c&hl=en_US&fs=1&"><param name="allowFullScreen" value="true"><param name="allowscriptaccess" value="always"><embed src="http://www.youtube.com/v/tOe6l3w1O2c&hl=en_US&fs=1&" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" height="344" width="425"></embed></object></span>தாதுவுடன் (SEMEN) பல்வேறு திரவங்களும், தனிமங்களும் கலந்துள்ளது. SEMINAL VESICLES, PROSTATE GLANDS மற்றும் விரைகளில் சுரக்கும் பிற சுரப்பிகளும் கலந்துதான் விந்தாக (SPERM) வெளியேற்றப்படுகிறது. தாதுவுடன் Citric acid, prostaglandin, flavin, ascorbic acid, ergothioneine, cholesterol, phospholipids, fibrinolysin, zinc, phosphatase acid, phosphase, hyaluronidase ஆகிய தனிமங்களுடன் கலந்து விந்தணு fallopian tube நோக்கி நீந்திச் செல்கிறது. இக்கலவைகள் இல்லாமல் பயணிக்கும் கோடிக்கணக்கான விந்தணுக்களால் மட்டும் ஆரோக்கியமான கருவாக்கம் சாத்தியமில்லை என்று நவீன மருத்துவம் சொல்கிறது.<br /><br />இருதொடைகளுக்கு இடைப்பட்ட உறுப்பிலிருந்து வெளியாகும் விந்தணுவைச் சொல்லாமல், முதுகுத் தண்டுக்கும் விலா எலும்புக்கும் இடைப்பட்ட பல்வேறு சுரப்பிகளிலிருந்து உருவாகும் தாது (SEMEN) குறித்து இவ்வசனத்தில் சொல்லப்பட்டு உள்ளது.<br /><br /><span style="font-style: italic;">"எல்லாம் தெரிந்த" கடவுள் அறிவியல் உண்மைகளைச் சொல்ல வேண்டுமென்றால், 2 + 2 = 4 என்றல்லவா சொல்ல வேண்டும். விந்திலிருந்து மனிதன் பிறக்கிறான் என்று சொல்வதை விட இடுப்பிலிருந்து வரும் திரவத்தால் மனிதன் பிறக்கிறான் என்பது என்ன அறிவியல்?" </span>என்று தருமி கேட்கிறார். தான் விரும்பும் சொல்லை - அது பிழையாக இருந்தாலும் -தான் நம்பாத கடவுள் சொல்ல வேண்டும் என்று கட்டாயப் படுத்துவது அவருக்கே ஓவரா தெரியவில்லை? ;-)<br /><br />மேலும் <span style="font-style: italic;">முதுகுத் தண்டுக்கும் விந்துக்கும் என்ன தொடர்பென்று</span>ம் தருமி கேட்டுள்ளார். <a href="http://www.health.nsw.gov.au/resources/gmct/spinal/pdf/sex_and_fertility.pdf">முதுகுத்தண்டில் ஏற்படும் பாதிப்புகளால் ஆணின் தாது விருத்தி/விந்து செலுத்தும் வீரியம் குறையும் என்று முதுகுத் தண்டுக்கும் விந்துக்கும் உள்ளத் தொடர்பை தற்கால மருத்துவக் குறிப்புகள் சொல்கின்றன</a>. (Spinal Cord Injury (SCI) என்று கூகிலிட்டால் தொடர்புடைய சுட்டிகள் கிடைக்கும்.)<br /><br />கருவின் பல்வேறு நிலைகள் குறித்து விளக்கும்போது வெவ்வேறு சொற்களைக் குர்ஆன் ஆளுகின்றது. காட்டாக,<br /><br />"ஒவ்வொருவனுக்கும் அவன் மனிதனாக (பிறப்பெடுக்கு) முன்னர் ஒரு கால இடைவெளி சென்றுவிடவில்லையா? அக்காலகட்டத்தில் அவன் இன்ன ஒன்றாய் இருந்தான் என்று குறிப்பிட்டுக் கூறவியலா நிலையில் இருக்கவில்லையா?<br /><br />(பின்னர், ஆண்-பெண்ணின்) கலப்பான விந்திலிருந்து மனிதனைத் திண்ணமாக நாமே படைத்தோம் ..." அல் குர்ஆன் 76:1-2.<br /><br />ஆணின் விந்தும் பெண்ணின் சினைமுட்டையும் கலந்துதான் கரு உருவாகிறது என்பது <a href="http://en.wikipedia.org/wiki/Embryology">அண்மைக்காலக்</a> கண்டுபிடிப்புத்தான்.<br />++++++++++++++++++++++++++++++++++++++++++++++<br />இஸ்லாம்-1இல் இவர் எடுத்து வைத்த கேள்விகள் கேலிக்கூத்தானவை.<br /><br /><span style="font-style: italic;">(சில ஐயங்கள்:ஒரே கடவுளால் தரப்பட்ட சட்டங்கள் எப்படி வித்தியாசமாகின?</span><br /><br /><span style="font-style: italic;">பழைய ஏற்பாட்டில் கண்ணுக்கு கண்; பல்லுக்குப் பல் என்ற பழி வாங்குதல் எப்படி கிறித்துவர்களின் - ஈசாவின் - சட்டத்தில் இடது கன்னத்தில் அடித்தால் வலது கன்னத்தைக் காட்டு என்றாயிற்று? பின் எப்படி குரானில் மறுபடியும் பழைய நிலை வந்தது?</span><br /><br /><span style="font-style: italic;">600 வருஷத்துக்கு முன்னால் கடவுள் ஈசா நபியிடம் 'வாளை உன் உறையில் போடு; ஏனெனில் வாளை எடுத்தவன் வாளால் சாவான்' என்று அவரைச் சொல்லும்படி அறிவுறுத்தி விட்டு, அதன் பின் 600 வருஷம் கழித்து பல போர்க்களங்களை தன் நபியைக் காணச் செய்கிறார். ஏனிப்படி 600 வருஷத்தில் ஜெகோவாவிடம் / அல்லாவிடம் ஒரு மாற்றம்?</span><br /><br /><span style="font-style: italic;">"ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைத் திருப்பிக் காட்டு என்று நாம் ஈஸாவுக்குக் கட்டளை இட்டிருந்தோம்" என்றும் "வாளை எடுத்தவன் வாளால் சாவான்" என்றும் குர்ஆனில் இருந்தால்தான் இஸ்லாமியக் கடவுள் மாற்றி மாற்றிப் பேசுகிறார் எனப் பொருள் கொள்ள முடியும். நினைத்த நேரத்தில் நினத்தவர்கள் நிறையப் பேரால் திருத்தப் பட்டு, நடைமுறையில் உள்ள புதிய ஏற்பாடு என்பது அல்லாஹ்வின் வார்த்தைகள் என்று யார் தருமிக்குச் சொல்லிக் கொடுத்தது? என்று புரியவில்லை.</span><br /><br />எல்லாவற்றையும் படிப்பது நல்லதுதான். ஆனால், ஒன்றோடு ஒன்று குழப்பிக் கொள்ளக் கூடாது; குழம்பக் கூடாது; குழப்பம் விளைவிக்கக் கூடாது.<br /><br />இஸ்லாத்தைப் புறந்தள்ளப் புதிதாக ஒரு காரணம் கண்டு பிடித்திருக்கிறார் தருமி:<br /><br /><span style="font-style: italic;">இசையின் ஆரம்பமே கடவுளோடு இணைந்தது என்பார்கள். கோவிலில் பாடப் பட்டு, பின்பு அரசர்களின் அரண்மனைக்குள் நுழைந்து, பின் மக்களிடம் இசை </span><span style="font-weight: bold; font-style: italic;">வந்ததென்பார்கள்</span><span style="font-style: italic;">. Divine music -> Chamber music -> Popular music. ஆனால், இங்கு கடவுளே இசையை மறுக்கிறது; வெறுக்கிறது! பக்தியை இசையால் நிரப்பிய நம் சமூகத்தில் இந்தக் கருத்து ஒரு ஆச்சரியத்தைத்தான் அளிக்கிறது. பாடலும், இசையும், ஒவியமும் இச்சை தூண்டும் கருவிகளா? இது வெறும் ஆச்சரியம் மட்டுமல்ல; நம்ப முடியாத ஒன்று. நிச்சயமாக இது ஒரு தனிமனிதனின் (முகமது) விருப்பு வெறுப்பாக இருக்க முடியுமே ஒழிய சர்வ நிச்சயமாக 'ஒரு கடவுளின்' விருப்பு வெறுப்பாக இருக்கவே முடியாது. இஸ்லாமைப் புறந்தள்ள இந்த ஒரு காரணம்கூட போதும்</span><br /><br />"என்பார்கள்" என்பவர்கள் யார்? என்பதைக் கடைசிவரை தருமி சொல்லவில்லை. இசை என்பது மனிதனைத் தன்னிலை மறக்கச் செய்வது. தன்னிலை மறக்கும் மயக்கும் எதுவும் இஸ்லாத்தில் இடம்பெறவியலாது.மற்றபடி இச்சை தூண்டுவது என்று இஸ்லாம் கூறுவதாக தருமி ஏதோதோ எழுதுகிறார்.<br /><br />தருமிக்கு இஸ்லாம் வெறுத்துப் போனதுக்கு அவர் கூறிய முதல் காரணம் விசித்திரமானது. "<span style="font-style: italic;">இஸ்லாத்தில் முதல் பெண்ணுக்குப் பெயரே இல்லை</span>" என்று தருமி தொடக்கத்தில் வெறுத்துப் போயிருந்தார்.அது தொடர்பாகப் பகுத்தறிவாளன் எனும் பதிவர் 9 கேள்விகளை தருமிக்குப் பின்னூட்டத்தில் வைத்ததாகவும் அந்தப் பின்னூட்டத்தைத் தருமி முடக்கி விட்டதாகவும் பதிவொன்றில் அவர் <a href="http://sitharalkal.blogspot.com/2007/06/blog-post.html">சலித்துக் கொண்டது</a> இப்போது நினைவுக்கு வருகிறது.<br /><br />வெளிச்சுட்டிகள்:<br /><br />http://dharumi.blogspot.com/2009/11/354-2.html<br />http://athusari.blogspot.com/2006/06/blog-post_18.html<br />http://www.differencebetween.net/science/health/difference-between-sperm-and-semen/<br />http://www.medterms.com/script/main/art.asp?articlekey=5073<br />http://medical-dictionary.thefreedictionary.com/Spinal+Cord+Injury<br />http://en.wikipedia.org/wiki/Embryology<br />http://www.medindia.net/animation/male_reproductive_system.aspநல்லடியார்http://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.com29tag:blogger.com,1999:blog-12417711.post-8948744885975346092009-10-04T12:54:00.002+04:002009-10-04T12:58:42.084+04:00காமன்மேனின் திரைப்படத் தீவிரவாதம்<a href="http://www.rediff.com/movies/2000/feb/18hey1.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 344px; height: 350px;" src="http://www.rediff.com/movies/2000/feb/18hey1.jpg" border="0" alt="" /></a><br />உன்னைப்போல் ஒருவன் என்ற தமிழ் திரைப்படத்தில் முஸ்லிம்களைக் குறித்து நச்சுக் கருத்து விதைக்கப்பட்டிருக்கிறது.தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலும், தீவிரவாதிகள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.ஆனால், யாரை யார் தீவிரவாதி என்று சொல்வது என்பதற்கு விவஸ்தை வேண்டாமா? என்று கேட்காமல் இருக்க முடியவில்லை. <br /><br />தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பொதுமனிதன் (காமன்மேன்),சட்டத்தை கையிலெடுக்கும் செயலை நியாயப்படுத்தும் இப்படத்தில் தீவிரவாதிகளில் பெரும்பாலோர் முஸ்லிம்கள்-அவர்களால் பாதிக்கப்படும் அனைவரும் இந்து காமன்மேன் என்ற நச்சுக்கருத்துடன் வெளியாகியுள்ளது. இப்படத்தை அநியாயத்துக்கு விமர்சனம் எழுதி, தேவையற்ற பில்டப் கொடுத்து பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டாக்கி விட்டார்கள்! <br /><br />கமல் விடுவிக்கக்கோரும் நால்வரும் தீவிரவாதிகளாம்! அவர்களில் மூவர் காஃபீர்களைக் கொல்வதற்காக நேர்ந்து விடப்பட்ட முஸ்லிம் தீவிரவாதிகள். ஒரேயொருவர் அப்பாவி தீவிரவாதி! ஆம்! தீவிரவாதிகளென்று தெரியாமல் தெரியாத்தனமாக RDX சப்ளை செய்ததால் அப்பாவி தீவிரவாதி! <br /><br /><strong><blockquote>சினிமாக்களில் தீவிரவாதிகளைத் தட்டிக்கேட்பவர்கள் எல்லோருமே ஓர் அம்பியாகவோ அல்லது முஸ்லிமல்லாத காமன் மேன்களாக இருப்பது நெருடுகிறது. ஒருசமயம் முஸ்லிம்களில் காமன் மேன் (COMMON MAN) இருக்கக்கூடாது என்று எங்காவது சட்டம் உள்ளதோ என்னவோ?! </blockquote></strong><br /><br />பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது தைரியமாகக் கண்டித்தும், இந்திய தேசிய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மூடிமறைக்கப்பட்ட மருதநாயகம் என்ற யூசுப்கான் குறித்து படமெடுக்கப்போவதாக பிலிம்காட்டிய கமல், இடையில் நாத்திகராகி, ரங்கராஜ நம்பியாக தசாதவதாரமெடுத்து ஐம்பதாண்டுகள் திரையுலகில் கொட்டைபோட்டு சேரவேண்டிய இடத்திற்கு சரியாகச் வந்துள்ளார் எனுமளவுக்கு "உன்னைப்போல் ஒருவனில் இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான காவிவசனங்களை மானாவரியாக தூவியுள்ளார்.<br /><br />தீவிரவாதிகளென்றால் பாகிஸ்தானிலிருந்து வந்த ஏதாவது ஒரு 'கான்' ஆக இருக்க வேண்டும் என்ற தமிழ் சினிமா மரபைமீறி, இதில் சொல்லப்படும் தீவிரவாதிகளெல்லாம் இந்திய முஸ்லிம்கள். படம் முக்கால்வாசி எடுத்த பிறகே காமன்மேனின் கோபத்திற்கான காரணம் சொல்லப் படவில்லை என்று உறுத்தியதோ என்னவோ பெஸ்ட் பேக்கரி படுகொலை, கற்பினிப் பெண்ணைக் கருவறுத்தது என குஜராத் பயங்கரவாதத்தையும் சேர்த்து தன்னை நடுநிலையாளராக நடிக்க முயற்சித்துள்ளார் என்றாலும் பரவலான நச்சு வசனங்களால் சாயம் வெளுத்துவிட்டது!<br /><br />காமன்மேனுடன் போனில் கெஞ்சும் போலீஸ் கமிஷனர், நம்நாட்டிலுள்ள எத்தனையோ தீவிரவாதிகளை எப்படி தண்டிப்பாய்? என்று கேட்கும்போது சீட்டுக் குலுக்கிப்போட்டதில் தற்போதைக்கு இந்த நால்வரின் பெயர்களே வந்தன என்று சொல்கிறார். அத்வானி, நரேந்திரமோடி, பால்தாக்கரே, பிரவீன் தொக்காடியா முதல் பிரஞ்யாசிங் வரை நீளும் பட்டியலில் சீட்டுக்குலுக்கிப் போடாமலேயே தேர்வு செய்திருக்கலாமே என்றும் கேட்கத் தோன்றுகிறது.<br /><br />குஜராத்தில் கருவருத்துக் கொல்லப்பபட்ட நான்கு மாதக் கற்பினியைக் காப்பதற்கு நாட்டில் எத்தனையோ கிருஷ்ணன்கள் இருந்தும் ஒரேயொரு கிருஷ்ணன்கூட முன்வரவில்லையே என்று நேர்மையாக ஆதங்கப்படும் காமன்மேன் கமல், தீவிரவாதிகளை முஸ்லிம்களாகவே காட்டியிருப்பது யாருடைய நிர்ப்பந்தமோ தெரியவில்லை! <br /><br />சூத்திரன் கொலை செய்தால் கொன்றவனுக்கு மரணதண்டனை! பார்ப்பனன் கொலைசெய்தால் குடுமிக்கு மட்டுமே மரணதண்டனை என்று ஹேராமில் காட்டிய கமலுக்கு கீழ்கண்ட குர்ஆன் வசனம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை!<br /><br />"..................உயிருக்கு உயிர்,கண்ணுக்குக் கண்,மூக்குக்கு மூக்கு,காதுக்கு காது, பல்லுக்குப் பல்; காயங்களுக்குச் (சமமான) காயங்களாகவும் நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்............................................."(குர்ஆன் 005:045)நல்லடியார்http://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-12417711.post-76978568754675758912009-04-22T15:51:00.003+04:002009-04-22T16:09:29.816+04:00தஜ்ஜாலிடமிருந்து வந்த பின்னூட்டம்!?!<a href="http://athusari.blogspot.com/2009/03/blog-post_29.html#comments">இதயத்தில் (மட்டும்) நிரந்தர இடம்</a> என்ற பதிவில் தஜ்ஜால் என்ற பெயரில் வந்திருந்த பின்னூட்டத்திற்கான பதில்! கேள்விகள் சுவாரஸ்யமாக இருப்பதால் தனிப்பதிவாக இங்கிடுகிறேன்.<br /><br />இறைவன் சர்வசக்திபடைந்தவன் என்றால் அவனால் தூக்கமுடியாத ஓர் கல்லைப் படைக்க முடியுமா? என்ற கேள்வியைப் போன்ற கேள்விகள்! அறிந்து கொள்ளும் ஆவலில் கேட்கப்பட்டிருப்பதால் அவை புறந்தள்ளப் படக்கூடிய கேள்விகளல்ல!! விரிவான அக்கேள்விகளிலிருந்து அடியேன் கிரகித்தவை யாதெனில்,<br /><br /><strong>மனிதப் படைப்பைப் பற்றிய இறைவனின் முடிவு, மலக்குகளின் கணிப்பு அல்லது இப்லீஸின் மோசடி என்பவைகளின் முலம் செய்திகள் ஒன்றுக்கு ஒன்று முரண்படுகின்றனவாம்!. </strong><br /><br />//குர்ஆன் வசனம் 2:30 இன்படி மனிதனைப் படைக்கப் போவதாக இறைவன், மலக்குகளிடம் தன்முடிவை தெரிவிக்க வேண்டிய காரணம் என்ன? //<br /><br />நபிகளார் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதினாவில் தங்கியிருந்தபோது அருளப்பட்ட சூரத்துல் பகராவிலில் இவ்வசனம் உள்ளது. இஸ்லாத்தின் மிக முக்கிய வாழ்வியல் தத்துவங்களும் இதே அத்தியாயத்தில்தான் உள்ளன. <br /><br />அடைக்கலம் கொடுத்த மதினாவாசிகளில் பெரும்பாலோர் யூதர் மற்றும் கிறிஸ்தவர்களாக இருந்ததால் அவர்களின் வேதங்களில் சொல்லப்பட்ட வரலாற்றுச் செய்திகளையும் குறிப்பிட்டு அல்லது மெய்ப்பித்து உண்மை மார்க்கத்தைச் சொல்ல வேண்டியிருந்தது. அதன்படி மலக்குகள்-அல்லாஹ் இடையேயான உரையாடலைக் குறிப்பிட்டபோது மதினாவாசிகள் மறுப்புத் தெரிவிக்காமல் கேட்டதற்குக் காரணம் அவை அவர்களின் வேதத்திலும் சொல்லப்பட்டிருந்தவை என்பதேயாகும்! ஆக, ஓரிறை நம்பிக்கையாளர்கள் இடையே இவ்விசயங்களில் மாற்றுக்கருத்தோ ஐயமோ எழவில்லை.<br /><br />****<br /><br />இரத்தம் சிந்தி குழப்பம் விளைவிக்கும் மனிதர்களைக் குறித்து அவற்றை முன்னெப்போதும் அறிந்திராத மலக்குகளால் எப்படிக் கணிக்க முடிந்தது?இதேபோல் ஏற்கனவே என்னேரமும் துதித்துக் கொண்டிருக்க மலக்குகள் இருக்கும்போது எதற்கு தன்னைத் தொழுவதற்காக மனிதர்களைப் படைக்க வேண்டும் என்றும் கேட்கலாம்!<br /><br /><a href="http://www.thewe.cc/thewei/_/images_3/us_terror_state/blood_on_hands.jpe"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 380px; height: 249px;" src="http://www.thewe.cc/thewei/_/images_3/us_terror_state/blood_on_hands.jpe" border="0" alt="" /></a><br /><br />எவ்விதத்திலும் ஒப்புமையற்றவனாகிய இறைவன்,தன்னைவிடத் தகுதியில் குறைந்த படைப்பினத்தைப் படைத்து அவை தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது வல்ல இறைவனுக்குத் தகுதியுடையாதா? மலக்குகளைப் போன்றே சதாதுதிப்பவர்களாக எல்லா மனிதர்களையும் படைத்திருக்கலாமே! இதனால் இறைவனுக்குக் கட்டுப்படாதவர்கள் நரகம் செல்வது தவிர்க்கப்பட்டு இருக்குமே என்றும்கூட பகுத்தறிவுத்தனமாக நிறையக் கேட்கலாம். கேள்வி மட்டும் கேட்பதல்லவே பகுத்தறிவு!<br /><br />திருக்குர்ஆன் வசனம் 2:30லேயே இக்கேள்விகான பதிலும் இருக்கிறது! "நீங்கள் அறியாதவற்றை எல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்". மனிதன் படைக்கப்படுவதற்கு முன்பு இறைவன் உரையாடிய படைப்பினமாக மலக்குகள் இருந்திருக்கிறார்கள். அவர்களுடன் எந்தமொழியில் இறைவன் உரையாடினான், எங்கு உரையாடினான்? ஏன் உரையாடினான் என்பவைகள் குறித்து யாராலும் விளக்க முடியாது. <br /><br /><strong>ஏனென்றால் அவ்வாறு விளக்குபரும் அதை அறிந்திருந்தால் மட்டுமே விளக்க முடியும்! </strong><br /><br />//குழப்பமும், இரத்தங்களை ஓட்டச் செய்யவும் மனிதர்கள் (பன்மை) தேவை. மேலும் மனிதனின் உடலமைப்பு, அவனின் திறமை,குணம், செயல்பாடுகள் மற்ற எல்லா விபரங்களும் இறைவனைத் தவிர யாருக்கும் தெரியாது. இறைவன் மட்டுமே அறிந்த படைப்பின் ரகசியம் மலக்குகளுக்கு தெரிந்தது எப்படி?//<br /><br />மலக்குகளே இதற்கும் பதிலைச் சொல்லியதாக அதே அத்தியாயத்தில் 2:32 உள்ளது. "....(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக் கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை......"<br /><br /><strong>ஆக,மனிதர்கள் குறித்தக் கேள்வியில் மலக்குகளின் கணிப்புகள் சரியல்ல என்பதாலும் அவர்களே "எங்களுக்குக் கற்றுக் கொடுத்தவை தவிர எதைப் பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை" என்று ஒப்புக் கொண்டு விட்டதாலும் அவர்கள் பரமரகசியம் எதையும் அறிந்திருக்கவில்லை!</strong><br /><br />//மலக்குளின் கூற்று மிக மிகச் சரியானது.மலக்குளின் கணிப்பு சிறிதளவும் தவறவில்லை.மனிதனைப்போல சுயமாகசெயல்பட முடியாத மலக்குகளால் எப்படி மனிதனைப்பற்றி மிகத் துள்ளியமாக கணிக்க முடிந்தது?//<br /><br /><strong>மிகத்துல்லியமாக அவர்கள் எங்கே கணித்தார்கள்? மனிதர்கள் எல்லோரும் இரத்தம் சிந்துவார்கள் என்றல்லவா தவறாகக் கணித்திருந்தார்கள்!! காந்தி, தெரஸா போன்று எத்தனையோ ரத்தம் சிந்தாத மனிதர்களும் பிறப்பார்கள் என்பதை மலக்குகள் கணிக்கவில்லை என்பதால் மலக்குகளின் கணிப்பு துல்லியமற்றது!</strong><br /><br />//மனிதர்களை பூமியில் படைப்பதும், மனிதனின் வீழ்சிக்குக் காரணமும் இறைவன் நாட்டமே என்பதை மேற்கண்ட வசனம் உறுதி செய்கிறது. பிறகு ஏன் ஆதாம் தண்டிக்கப்பட வேண்டும்? //<br /><br />அக்கிரமக்காரன் தண்டிக்கப்படத்தானே வேண்டும்! அதேஅத்தியாயம் 2::35 ல் "நீரும் உம்மனைவியும் அச்சுவனத்தில் குடியிருங்கள்; மேலும், நீங்கள் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாகப் புசியுங்கள். ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்" என்று சொன்னபிறகும் கட்டளையைமீறி அக்கிரமம் செய்ததால் தண்டிக்கப்பட்டார்!<br /><br />ஒருசமயம் அவர்கள் இறைக்கட்டளைக்குக் கட்டுப்பட்டிருந்தார்களென்றால் அவர்களின் கோடாணுகோடி சந்ததியினரும் சுவர்க்கத்திலேயே பிறந்து, வளர்ந்திருப்போம்! <strong>கோடாணுகோடி பேரின் சுகபோக வாழ்க்கைக்கு வேட்டு வைத்தவர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவது நியாயம்தானே?!</strong><br />//இன்று மனிதனின் இழிவான வாழ்க்கைக்கு யார் காரணம்? இப்லீஸின் மோசடியா? அல்லது இறைவனின் விதியா?/<br /><br />இறைவனின் விதிக்குக் கட்டுப்படாமல் இப்லீசின் சதிவலைக்கு உடன்பட்ட மனிதனே காரணம்! உ.ம். ஆதாம்!!! (ஆதம் அலைஹி...)<br /><br />****************<br /><br />மற்றக் கேள்விகளையும் முழுமையாக வைத்தபின்னர் பதில் கொடுக்க முயற்சிக்கிறேன்!<br /><br />"தேடுதலின் பொழுது கிடைத்தவைகள் முழுவதும் என் சுயஅறிவில் நான் கண்டவைகள் எனவே இதனால் ஏற்படும் விளைவுகள் நன்மை/தீமைகள் என்னை மட்டுமே சேர வேண்டும்" எல்லாம் அவன் செயல்!நல்லடியார்http://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-12417711.post-21826237538398513832009-03-29T15:49:00.004+04:002009-03-29T16:03:13.031+04:00இதயத்தில் நிரந்த(?) இடம்!!!<a href="http://www.tmpolitics.net/files/tmmk/kovai/chennai.JPG"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 550px; height: 275px;" src="http://www.tmpolitics.net/files/tmmk/kovai/chennai.JPG" border="0" alt="" /></a><br />சென்ற மக்களவைத் தேர்தலில் நாற்பது தொகுதிகளையும் வென்ற மயக்கம் கலைஞருக்கு இன்னும் தெளியவில்லை.இல்லாத 3.5% இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்கியதற்காக கலைஞருக்கு நன்றி தெரிவித்த தமுமுகவை கலைஞர் நம்பவைத்து நன்றாகக் கழுத்தறுத்து உள்ளார்.<br /><br />மக்களவைத் தொகுதிக்கான கூட்டணி குறித்தப் பேச்சுவார்த்தையில் மனிதநேய மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வெளியூரிலும் வெளிநாட்டிலும் இருந்த காரணத்தாலும் அவர்களின் மொபைல் போன் நம்பர்கள் கலைஞருக்குக் கிடைக்காத காரணத்தாலும் மமக கேட்டிருந்த மக்களவைத் தொகுதிகள் அவர்களுக்காக ஒதுக்கப்படவில்லை!<br /><br />மக்களவைத் தேர்தல் முடிந்தபிறகு அதிமுக கூட்டணியினர் திமுக கூட்டணியைவிடக் கூடுதல் இடங்களில் வென்று, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க அதிமுகவின் தயவு தேவைப்படும் பட்சத்தில் மாநிலத்தில் திமுகவை கவிழ்த்துவிட ஜெயலலிதா காய் நகர்த்தக் கூடும். அதிமுக கூட்டணிக்குக் கணிசமான இடங்கள் கிடைக்காவிட்டாலும் தேர்தல் முடிந்த கையோடு மைனாரிட்டி திமுக அரசிற்கு பாமக வழங்கிவரும் ஆதரவை விலக்கிக் கொண்டாலும் கலைஞர் ஆட்சி கவிழும் என்பது நிச்சயம். <br /><br />கலைஞர் ஆட்சி நீடிக்க வேண்டுமென்றால் மத்தியில் பெரும்பான்மையோடு மீண்டும் காங்கிரஸ் ஆட்சி (அதிமுக தயவின்றி) உண்டாக வேண்டும். இதுவரை ஈழத்தமிழருக்காக ஆட்சியைத் துறந்திருப்பதாக உடன்பிறப்புக்களுக்குக் கடிதம் எழுதிவரும் கலைஞர், இம்முறை அதையும் சொல்லியழ முடியாத இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறார்!<br /><br />மனித நேயமக்கள் கட்சிக்கு இதுவே முதல் அரசியல் அனுபவம் என்பதால் கலைஞரின் ராஜ தந்திரம் இவர்களிடம் நன்றாகவே வேலை செய்துள்ளது. மமகவுக்கு அதிகபட்சம் ஒரு தொகுதியை மட்டுமே ஒதுக்க முடியும் என்று ஒற்றைக்காலில் நின்று, நேற்றிரவுவரை முடிவு எட்டப்படாததால் வழக்கத்திற்கு மாற்றம் செய்யாமல் இதயத்தில் இடம் கொடுத்துள்ளார்.<br /><br /><object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/lPUtYLEHaQI&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/lPUtYLEHaQI&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object><br /><br />பேராசிரியர் காதர் முகைதீன் முஸ்லிம் லீக் சார்பில் வைத்த அனைத்துக் கோரிக்கைகளையும் கணிவோடு ஏற்றுக்கொண்டு அவருக்கும் இதயத்தில் இடமும் அத்துடன் வேலூர் நாடாளு மன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடவும் வாய்ப்புக் கொடுத்துள்ளார்.இனி மனிதநேய மக்கள் கட்சி ஏற்கனவே முழங்கியதுபோல் தனித்துப் போட்டியிடுவார்களா? அல்லது கலைஞரின் அன்புக்கு அடிமையாகிப் பணிந்து போவார்களா? அல்லது இரண்டும் வேண்டாம் என்று தமிழ்க்குடி தாங்கியைப்போல் தரமான அரசியல் செய்வதற்கு இரட்டை இலைப் பக்கம் சாய்வார்களா?என்று விரைவில் தெரிந்துவிடும்.'வெறும் அன்பு'க்கு அடிமையாகப் போவதில்லை என்பது மமக தலைவர்களின் அண்மைப் பேச்சுகளிலிருந்து தெளிவாகி விட்டது.<br /><br />எனவே, புதிதாக நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் முன் இருக்கும் தெரிவுகள்:<br /><br />1) அதிமுகவிடம் 2-3 தொகுதிகளைக் கேட்டுப்பெறுவது.<br /> <br />2) விஜயகாந்தின் தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பது. <br /><br />3) முஸ்லிம்களுக்கு வெற்றிவாய்ப்புள்ளத் தொகுதிகளில் மட்டும் சுயமரியாதையுடன் தனித்துப் போட்டியிடுவது.<br /><br />திமுக-காங்கிரஸை வீழ்த்துவதற்காக எதையும் செய்யத் தயாராக உள்ள ஜெயலலிதா, மமகவுக்கு 2-3 சீட்டு வழங்கி கலைஞருக்கு செக் வைக்கலாம்.(இந்நிலையில் தமுமுக வசமுள்ள வக்ப் வாரியப்பதவி பறிபோகும் பட்சத்தில் அதற்கு எதிர்வினையாகத் திருச்சி கலைஞர் அறிவாலயம் கட்ட ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பிரச்சினையை அதிமுக ஆதரவுடன் மமக கிளறக்கூடும் என்பதால் அனேகமாக அதில் கலைஞர் கைவைக்க மாட்டார்).<br /><br />தேமுதிகவை பொருத்தமட்டில் வட/தென்மாவட்டங்களில் மட்டுமே அதற்கு அதிகச் செல்வாக்கு இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு பிற மாவட்டங்களில் தேமுதிகவுடன் மமக கூட்டணி வைத்தால், முஸ்லிம் பெரும்பான்மையுள்ள தஞ்சை, நாகை, ராமநாதபுரம், வட சென்னை பகுதிகளில் திமுக வாக்குவங்கியைத் தேமுதிக ஆதரவுடன் பிரித்தெடுத்து முஸ்லிம்களின் பலத்தை உணர்த்தலாம்.வெற்றி பெறமுடியாவிட்டாலும் நிச்சயம் திமுகவின் தோல்விக்குக் காரணமாக இருந்தால் இதயத்தில் நிரந்தர இடம் ஒதுக்குவது குறித்து அடுத்தடுத்தத் தேர்தல்களில் கலைஞரை இன்னும் கொஞ்சம் யோசிக்க வைக்கலாம்.<br /><br />மமக ஒத்தக்கருத்துடைய சிறுகட்சிகளுடன் கூட்டணி வைத்துத் தனித்துப் போட்டியிட்டாலும் திமுக/அதிமுக கூட்டணியின் வெற்றி/தோல்விக்குக் காரணமாக ஆகிவிடுவர்.எனவே, எதிர் காலத்தில் தமிழக திராவிடக் கட்சிகள் இனிவரும் தேர்தல்களில் கணிசமான இடங்களை முஸ்லிம்கள் கேட்காமலேயே ஒதுக்கக் கூடும்!<br /><br />கூடுதல் விளக்கங்களுக்கு "<a href="http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1184&Itemid=394">அரசியல் கூட்டணியும் முஸ்லிம்களும்</a>" குறித்து சத்தியமார்க்கம்.காம் தளத்தில் 16.3.2009இல் எனது மற்றுமொரு கட்டுரை வெளியாகியுள்ளது : http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1184&Itemid=394<br /><br />(<a href="http://thatstamil.oneindia.in/news/2009/03/29/tn-mnmk-may-join-admk-coalition.html">சற்றுமுன்வரை மமக,அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேசிவருவதாகச் செய்திகள் வந்துள்ளன</a>)நல்லடியார்http://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-12417711.post-30344942406992870802009-03-24T11:13:00.001+04:002009-03-24T11:38:58.115+04:00தேசிய அவமானம் என்றால் என்ன?உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் மக்களவைத் தேர்தலை உலகமே ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது. 10 ஆயிரம் கோடி ரூபாய்களுக்கும் மேலாகச் செலவளித்து ஐந்து கட்டங்களாக நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலில், நாட்டின் முக்கியமான நிகழ்வுகளும் எதிர்காலத் திட்டங்களும் பொதிந்துள்ளன. <br /><br />காங்கிரஸ் கூட்டணி அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக அல்லது ஆதரவாக, எதிர்க்கட்சியான பாஜகவின் மதவாத அரசியலை நிர்ணயிக்கும் அளவுகோளாக விளங்கப்போகும் மக்களவைத் தேர்தல் முடிவுகளைப் பொருத்தே உலகப் பொருளாதார மந்தநிலையின் எதிர்விளைவுகள், அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், சேதுக்கால்வாய் திட்டம், பாபர் மசூதி, சிறுபான்மையினர் இடஒதுக்கீடு, பாகிஸ்தானுடனான அயலுறவுக் கொள்கை போன்ற அதிமுக்கியப் பிரச்சினைகளை எதிர்கொண்டு 2020 இல் வல்லரசு ஆவதற்கு நடைபோட்டுவரும் இந்தியாவின் எதிர்காலம் அடங்கியுள்ளது.<br /><br />இவை எதையும் முக்கியப் படுத்தாமல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் நடத்துவது குறித்த விவாதங்கள் தற்போது நடந்து வருகின்றன. நமது வாழ்க்கைப் பிரச்சினையுடன் தொடர்புடைய தேர்தலைக் கணக்கில் கொள்ளாமல் பணக்கொழுப்பெடுத்த முதலாளிகளும் அவர்களின் எச்சில் துண்டுகளுக்காக நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு அலையும் ஊடகங்களும்கூட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைக் குறித்துக் கவலையாக செய்தி வெளியிட்டு வருகிறார்கள்.<br /><br /><a href="http://www.cricket-india.net/cricket.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 232px;" src="http://www.cricket-india.net/cricket.jpg" border="0" alt="" /></a><br /><br />"ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நம்நாட்டில் தேர்தல் நேரத்தில் நடத்த முடியாமல் போனதற்கு காங்கிரஸ் மற்றும் மாநில அரசுகளே காரணம்" என்று கூறி பாஜக தனது தேசபக்தியைக் காட்டியுள்ளது. குஜராத்தில் நடந்த முஸ்லிம் இனப்படுகொலையில் 3000க்கும் அதிகமான முஸ்லிம் விக்கெட்களை வீழ்த்தியும், இலட்சக் கணக்காணோரை சொந்த பெவிலியனுக்குத் திரும்ப முடியாமல் செய்த குஜராத் இனப்படுகொலை ஆல்ரவுண்டரும் கேப்டனுமான நரேந்திர மோடி, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மாற்றப்பட்டதை "தேசிய அவமானம்" என்று சொன்னதுதான் உலக மகா காமெடி!<br /><br />"தேசிய அவமானம் என்பது குஜராத்தில் நடந்ததுதான்" என்பது மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு இப்போதுதான் நினைவுக்கே வந்திருக்கிறது. இது தேர்தல் நேரமல்லவா?<br />சினிமாவையும் கிரிக்கெட்டையும் பாராளுமன்றத்தில் விவாதித்து, பாராட்டுத் தெரிவிக்கும் கேடுகெட்ட நிலை நமது நாட்டைத் தவிர உலகிலேயே எங்கும் சாத்தியமில்லை. நாட்டின் இளைஞர்களோடு தொடர்புடைய துறைகள் என்றாலும் கிரிக்கெட்டைவிட போற்றுதலுக்குரிய விளையாட்டுக்கள் நிறையவே உள்ளன. அதெற்கெல்லாம் இல்லாத அக்கரை/கரிசனம் கிரிக்கெட் விளையாட்டின்மீது மட்டும் இருக்கிறதென்றால் அதில் பெரும் பணமுதலைகளுக்குத் தொடர்புள்ளது என்பதைத் தவிர வேறென்ன?<br /><br />இலங்கையில் ஈழத்தமிழர்களை சிங்கள அரசு கொன்றொழிக்கும்போது, தமிழகத்தில் ஈழத்தமிழர் ஆதரவு கொளுந்து விட்டு எரிந்தது! அரசியல் கட்சிகளின் பேரணிகளில் இளைஞர்களின் பங்களிப்பு அரசியல்வாதிகளின் வயிற்றில் புளியைக் கரைத்தது! இது மத்திய-மாநில ஆட்சியாளர்களுக்கு எதிராகத் திரும்பி விடக்கூடாது என்பதற்காக இலங்கையில் 20x20 மேட்சுகளை நடத்தி இளைஞர்களின் கவனத்தைத் திசைதிருப்பியதும் இந்தக் கேடுகெட்ட கிரிக்கெட்தான்!<br /><br />மன்னர்களுக்கு எதிராக இளைஞர்கள் சிந்திக்கக்கூடாது என்பதற்காக ஒலிம்பிக் போன்ற விளையாட்டுக்களை நடத்தி இளைஞர்களின் கவனம் விளையாட்டில் மட்டும் வியாபித்திருக்கும்படி சதி செய்து ரோமானிய மன்னர்கள் ஆட்சி சுகம் கண்டார்கள். அரசியல்வாதிகளின் கிரிக்கெட்டின் மீதான அதீத அக்கரையின் பின்னணியும் இதுவாகத்தான் இருக்கும்.<br /><br />நாட்டின் தலைமையையும் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கப்போகும் தேசியக் கடமையான தேர்தலைவிட கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களைப் பார்க்கும்போது அறிஞர் பெர்னாட்ஷா சொன்ன "11பேர் சேர்ந்து 11000 பேரை முட்டாளாக்கும் விளையாட்டே கிரிக்கெட்" என்பது நினைவில் வருகிறது.<br /><br />பாரத மாதகீ ஹேட்ஸ் அப்!நல்லடியார்http://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12417711.post-25900576287211539882009-02-07T15:41:00.005+04:002009-02-07T16:00:00.390+04:00ஈழத்தமிழர் Vs. மலேசியத் தமிழர்ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு வேண்டி தீக்குளித்துத் தற்கொலை செய்த முத்துக் குமாரின் மரணம் குறித்துச்சில பகிர்தல்கள்.இறைவன் படைத்த எவ்வுயிரையும் இயற்கையான மரணமற்ற வேறெந்த வகையிலும் இழப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை. முத்துக்குமாரின் தற்கொலைக்கான காரணம் எவ்வளவு நியாயமானதாக இருந்தாலும் அது கோழைத்தனம் மட்டுமின்றி பொறுப்பற்ற நிலையின் இறுதி வெளிப்பாடு. தற்கொலை என்பது கணநேர முட்டாள்தனம். <br /><br />முத்துக்குமார் கையிலெடுத்த "தற்கொலை" ஆயுதம் ஈழத்தமிழர்களுக்கு எதிரான சிங்கள அரசின் அநீதிகளை எதிர்க்கத் திராணியற்ற மனநிலையில் தனிமனிதனின் இயலாமையாகும்.தீக்குளித்த பின்னரும் உயிர் போகாமல் பிழைத்துக் கொண்டிருந்தால் அவர் இந்நேரம் பல சட்டப் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.ஏனென்றால் இந்தியச் சட்டப்படி தற்கொலை முயற்சி தண்டனைக்குரியக் குற்றம். உயிர் பிழைத்திருந்தாலும் அவரின் உடல் -மன வேதனைகள் அவரைச் சிறுகச்சிறுகச் சித்திரவதைப்படுத்திக் கொண்டே இருக்கும்.<br /><br />தீக்குளித்த முத்துக்குமார் உண்மையிலேயே அநீதிகளுக்கு எதிரானவராக இருந்திருப்பாரேயானால் விடுதலைப்புலிகளால் அநீதியிழைக்கப்பட்ட தமிழ் முஸ்லிம்கள் குறித்தும் பேசியிருக்க வேண்டும். விடுதலைப் புலிகள் அப்பாவி மக்களை அழித்தொழித்து பாதிப்பேற்படுத்திய வேளைகளில் அவற்றைப் தொடர்போராட்டத்தின் பகுதியாகக் கருதிவிட்டு, அவர்கள் பாதிக்கப்படும் போது "இனச்சுத்திகரிப்பு, அரச பயங்கரவாதம்" என்பது ஒருபக்கச் சார்புக் கண்ணோட்டமாகவே தெரிகிறது. <br /><br />அநீதிகளுக்கு எதிராக அனைத்து வகைப் போராட்டங்களையும் இஸ்லாம் ஜிஹாத் என்று போற்றுகிறது. ஜிஹாத் எனும் அநீதிக்கு எதிரானப் போரை தனிமனிதர்கள் கையிலெடுக்கக்கூடாது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளரே ஜிஹாதுக்குத் தலைமை தாங்க வேண்டும். ஜிஹாத் என்ற பெயரால் வரம்பு மீறக்கூடாது என இஸ்லாம் தெளிவான வரைமுறைகளை வகுத்துள்ளது.<br /><br />அநீதிகளுக்கெதிரானப் போராட்டங்களை நாடு, இனம்,மொழி என்று பிரித்துப் பார்ப்பதும் சரியல்ல. உலகில் அநீதி எங்கு இழைக்கப்பட்டாலும் அதற்கு எதிராகக் குரல்கொடுக்க வேண்டியது மனிதாபிமானிகளின் தார்மீகக் கடமை. முஸ்லிம்களுக்கு இது "ஈமானின் கடைநிலை" என்று இஸ்லாம் சொல்கிறது. <br /><br />ஈழத்தமிழர்களுக்காதரவாக தமிழகத்தில் நடக்கும் அனேகப் போராட்டங்கள் அரசியல் பலன்களை எதிர்ப்பார்த்தே நடக்கின்றன. பாம்புக்கு வாலும் மீனுக்குத் தலையும் காட்டும் சந்தப்பவாத மோசடி அரசியல் வியூகம். தீவிரவாதத்தை எதிர்ப்பதாகச் சொல்லிக் கொள்பவர்களும் இப்படித்தான் அவற்றை மதரீதியான கண்ணோட்டத்திலேயே அணுகுகிறார்கள். குஜராத் முஸ்லிம்கள் இனப்படுகொலை குறித்துப் பேசினால் காஷ்மீர் பண்டிட்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்களே என்று நியாயப் படுத்துகிறார்கள்!<br /><br />சிலநாட்கள் முந்தைய தினமலரில் "<a href="http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=2926">கேட்க நாதியற்ற நிலையில் மலேசியத் தமிழர்கள்</a>" என்று செய்தி வந்துள்ளது. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உலகத் தமிழர்கள் குரல் கொடுப்பதைப்போன்று மலேசிய அரசுக்கு எதிராகப் போராடும் இந்துத்துவா அமைப்புக்கும் (HINDRAF) தமிழர்கள் ஆதரவுக்குரல் கொடுக்க வேண்டுமாம்! என்னே ஒரு கேவல அரசியல் எதிர்பார்ப்பு!<br /><br />தமிழர்களைப் பொருத்தவரை சிங்களர்களும் பார்ப்பனர்களும் வந்தேறிகளே. சேதுக்கால்வாய்த் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டதுமுதல் விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டத்தை விமர்சிப்பதுவரை எல்லா விசயத்திலும் இவர்களின் ஒற்றுமையைக் காணமுடிகிறது. தினமலர் போன்ற பார்ப்பன ஊதுகுழல்கள் முடிந்தவரை தமிழர்களின் போராட்டத்தைக் கொச்சைபடுத்தியே வந்துள்ளன.<br /><br />தமிழீழத்துரோகி <a href="http://thakavalgal.blogspot.com/2009/01/1-2-3.html">கருணாவைப் பேட்டி </a>கண்டு எரியும் நெருப்பில் எண்ணை வார்த்ததுமுதல், அப்பாவிகள் மீதான தாக்குதலை நிறுத்தவேண்டிய பாப்பரசர் பதினாறாம் பெனடிக்டின் <a href="http://212.77.1.245/news_services/press/vis/dinamiche/b1_en.htm">வேண்டுகோளை</a> "அப்பாவி மக்களைக் கொல்லாதீர்: புலிகளுக்குப் போப் வேண்டுகோள்" என்று திரிப்பதுமுதல் பலவகையிலும் தனது புத்தியைக் காட்டியே வந்துள்ளது.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrmVAyPTIFsdo1m0Z-jn_nU9BaRxy8RVgJh-hf3Uxx670MyLAJx0PfAd8ZX-1JrUCN9YoWaYcn90bP7go7YoYxe_A8xnZAzoMWSDBKFM9IQ9qJvlZBhGrzNwAPLwGEiXrRyEanAw/s1600-h/dm.gif"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 253px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrmVAyPTIFsdo1m0Z-jn_nU9BaRxy8RVgJh-hf3Uxx670MyLAJx0PfAd8ZX-1JrUCN9YoWaYcn90bP7go7YoYxe_A8xnZAzoMWSDBKFM9IQ9qJvlZBhGrzNwAPLwGEiXrRyEanAw/s320/dm.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5300021284455452914" /></a><br /><br /><br />ஈழத்தமிழர்களைச் சிங்களப் பேரினவாத ஆட்சியாளார்கள் எல்லாவகையான மனிதாபிமான நியதிகளையும் காலில்போட்டு மிதித்து அடக்குமுறை ஆட்சி நடத்தி வருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபடாத அப்பாவித் தமிழர்களையும் இரக்கமின்றிக் கொன்று குவிக்கிறார்கள். ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமை முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளது.ஆனால்,மலேசியத் தமிழர் நிலை இந்தளவுக்கா மோசமடைந்துள்ளது? ஈழப்போராட்டத்தை மலேசிய இந்துத்துவாக்களின் சுயநலப் போராட்டத்துடன் ஒப்பிடுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்!<br /><br />எரியும் வீட்டில் பிடுங்கித் திண்பது இவர்களுக்குப் புதிதல்லவே!நல்லடியார்http://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12417711.post-3000737242527136512009-01-20T10:04:00.003+04:002009-01-20T10:48:14.628+04:00ஒரு ஜோடி போதாது!கடந்த மூன்று வாரங்களாக பாலஸ்தீனர்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இஸ்ரேலின் அடக்குமுறைகள், அநியாயங்கள், அராஜகங்கள், கொடுமைகள், படுகொலைகள், இனச்சுத்திகரிப்பு மற்றும் என்னென்ன மனிதகுலவிரோதச் செயல்கள் உண்டோ அத்தனையையும் செய்துமுடித்துக் களைத்துத்துப்போய், தற்போது <a href="(http://news.bbc.co.uk/go/rss/-/2/hi/middle_east/7836660.stm) ">போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது</a>. <br /><br />இதை உலகநாடுகள் வரவேற்றுள்ளதோடு நிதியுதவிகளும் நிவாரணமும் வழங்க ஆயத்தமாகியுள்ளன. புதிய உலக ரட்சகனாகப் பேசப்படும் ஒபாமா, தன் பங்குக்கு நிவாரணம் அறிவிக்கக்கூடும். <a href="http://archive.gulfnews.com/world/U.S.A/10276241.html ">முதற்கட்டமாகப் போர் நிறுத்த அறிவிப்பை ஒபாமா வரவேற்றுள்ளார்</a>. இதோ கவுண்டவுன் தொடங்கி விட்டது. ஒபாமா பதவியேற்பு இன்னும் சில மணிநேரங்களில் தொடங்கிவிடும். வேறுதலைப்புச் செய்திகள் வந்துவிடும். பாலஸ்தீனப் படுகொலைகளுக்கு எதிரான உலக மக்களின் போராட்டங்கள் புறந்தள்ளப் பட்டுவிடும்.<br /><br />இஸ்ரேலைத் தட்டிக் கேட்க முடியாத ஆண்மையற்ற ஐக்கிய நாடுகள் சபையும் சொரனையற்ற அரபுத் தலைவர்களும் ஒப்புக்கு நிவாரண உதவிகளில் கலந்து கொள்வார்கள். இஸ்ரேலின் போர் நிறுத்த அறிவிப்பை ஏற்க மறுத்த ஹமாஸைக் கண்டித்து அறிக்கைவிட்டு அடங்கிப் போவார்கள். <br /><br /><object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/d8pQjl37aUY&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/d8pQjl37aUY&rel=0&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object><br /><br />பெரும்பாலோர் கவனிக்க மறந்த விசயங்களைப் பார்ப்போம். "போர் நிறுத்தம்" என்றால் போர் என்று ஒன்று நடந்திருக்க வேண்டும். போர்க்களம் என்ற ஒன்று இருந்திருக்க வேண்டும். பொதுமக்கள் குடியிருப்புகளில் பேரழிவு ஆயுதங்களைக் கொண்டு குழந்தைகள்,பெண்கள், முதியோர் என்ற பாகுபாடின்றி கொன்றொழித்துவிட்டு போர்நிறுத்தம் என்று சொல்வது உலகமகா அயோக்கியத்தனம்தானே!<br /><br />எங்கேனும் குண்டு வெடிப்புச் சத்தம் கேட்டாலோ அல்லது அதைச் செய்தது முஸ்லிம் பெயரில் இருந்து விட்டால் 'இஸ்லாமியத் தீவிரவாதம்' குறித்து தலையில் துண்டைபோட்டுக் கொண்டு பத்திபத்தியாக மூக்குச் சிந்தும் ஊடகக் கணவான்கள் இஸ்ரேலின் அப்பட்டமான "யூதத்தீவிரவாதம்" குறித்து வாய் திறக்கவில்லை. நியூயார்க்கிலும், மாட்ரிட்டிலும், லண்டனிலும் மும்பையிலும் அப்பாவிகள் கொல்லப்பட்டால்தானே நமக்கு வலிக்கும்! பாலஸ்தீனாவது மண்ணாங்கட்டியாவது!<br /><br />அரபு தேசங்களிலோ அல்லது ஆப்கானிஸ்தானிலோ, பாகிஸ்தானிலோ பெண்ணுரிமையில்லை, பால்ய விவாகங்கள் என்றெல்லாம் மூக்குச் சிந்தும் பெண்ணுரிமைவாதிகளும் UNICEFவாதிகளும் இப்போது எங்கு சென்றார்களென்றே தெரியவில்லை. தாய் அமைப்பான UN சபையே சுண்டல் சாப்பிட்டுக் கொண்டு இஸ்ரேலைக் கண்டும் காணாமல் இருக்கும்போது பாவம் இவர்கள் என்ன செய்துவிடப் போகிறார்கள்? தாலிபான்கள் செய்தால் மட்டும்தான் இவர்களால் குரலெழுப்ப முடியும்! கூலிக்கேற்ப மாரடிப்பவர்கள்!!<br /><br />பேரழிவு ஆயுதங்கள் வைத்திருப்பதாகச் சொல்லி ஈராக்மீது போர்தொடுத்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் சதாம் ஹுசைனைத் தூக்கிலிட்டு ஈராக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்டியதே செருப்படியையும் மிஞ்சிய தன் வாழ்நாள் சாதனையாகச் சொல்லிச் சென்ற ஜார்ஜ் புஷ், ஜனநாயகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாலஸ்தீன மக்கள் பிரதிநிதிகள் கொல்லப் படுவதைக் கண்டுகளித்து, பிரியாவிடை பெற்றுள்ளார்.<br /><br />முதன் முதலாகப் <a href="http://kalaiy.blogspot.com/2009/01/blog-post_13.html ">போர் நிறுத்தத்தை மீறி</a>, அராஜகம் செய்த தனது கள்ளக் குழந்தையைக் காப்பாறுவதற்காக, "இஸ்ரேலின் எல்லை மீறல்களுக்கு ஹமாஸ்தான் காரணம்" என்று கருத்துச் சொல்லிச் சென்றார் ஜார்ஜ் புஷ்! இஸ்ரேல் மீது ராக்கெட் வீசித் தாக்கியதால் பதிலடியாக இஸ்ரேல் செய்த அனைத்தும் நியாயமாம். ஆப்கன், இராக் நாடுகள்மீது அமெரிக்கா வீசிய குண்டுகளுக்கு அவர்களும் எதிர்வினையாக அமெரிக்காவைத் தாக்கினால் நியாயம்தானே புஷ்? <br /><br />உனக்கு ஒருஜோடி காலணிகள் போதாது!நல்லடியார்http://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-12417711.post-75259913596456661262008-12-03T12:52:00.002+04:002008-12-03T12:58:11.942+04:00மும்பை தாக்குதல் - கேட்கக்கூடாதக் கேள்விகள்!<a href="http://www.presstv.ir/photo/20081127/bageri_d20081127163729546.jpg"><img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 135px" alt="" src="http://www.presstv.ir/photo/20081127/bageri_d20081127163729546.jpg" border="0" /></a>மும்பை தாக்குதல் குறித்து பல்வேறு வகையான யூகங்கள் செய்திகளாகவும் அறிக்கைகளாகவும் உலாவி வருகின்றன. தொலைக்காட்சி ஊடகங்கள் நேரலைக்காட்சியாக "Mumbai Under Attack" "Mumbai in Fire" "Mumbai 26/11" எனத்தலைப்பிட்டு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஒளிபரப்பி ஊடகக் கடமையை நிறைவு செய்தனர்.<br /><br />அடுத்ததாக இத்தாக்குதலுக்குப் பாகிஸ்தான், லஷ்கரே தோய்பா etc காரணம் என்று அத்வானிமுதல் தினமலர்வரை சொன்னதன்பேரில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மாற்றப்பட்டுவிட்டார்கள். அமெரிக்கா முதல் மேற்கத்திய நாடுகள் 'அல்காயிதா' முத்திரைகுத்தி 9/11 இன் இந்தியப் பதிப்பாக கருதி உள்ளார்கள். மாலேகான் நிகழ்வில் முகத்திரை கிழிக்கப்பட்ட பிறகு மறந்து போயிருந்த 'இஸ்லாமிய தீவிரவாதம்' ஒருவழியாக தூசுதட்டப்பட்டுள்ளது!<br /><br />இத்தாக்குதலை நடத்தியது டெக்கான் முஜாஹிதீன்கள் என்று முதற்கட்டச் செய்திகள் வெளியாயின. பிடிபட்டத் தீவிரவாதியின்படி பாகிஸ்தான் தீவிரவாதிகளே இத்தாக்குதலை நடத்தியதாகவும், திசைதிருப்ப டெக்கான் முஜாஹிதீன் என்றபெயரில் ஈமெயில் அனுப்பியதாக ஒப்புக் கொண்டதாகச் செய்திகள் வெளியாயின. (http://thatstamil.oneindia.in/news/2008/11/27/india-terrorists-came-from-pakistan-by-sea.html)<br /><br />உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பாதுகாப்புப் படையினருடன் மரண விளையாட்டு விளையாடிய தீவிரவாதிக்கு, email@deccanmujahideen.com குறித்தும், அது திசைதிருப்புவதற்காக அனுப்பப்பட்டதென்றும் எப்படி தெரிந்திருக்கும்? <strong>என யாரும் கேட்கவில்லை! 'நியாயப்படி, தர்மப்படி கேட்கவும் கூடாது!'</strong><br /><br />முதலில் இருபது தீவிரவாதிகள் வந்தனர். ஒன்பதுபேர் கொல்லப்பட்டனர். ஐவர் பிடிபட்டனர். இருவர் போலீஸ்வேனில் தப்பியோடி விட்டனர். மீதிபேர் ஹோட்டலில் உள்ளனர் என்று செய்தி வந்தது. அடுத்து பத்துபேர், அஜ்மல் எனும் பாகிஸ்தானி பிடிபட்டான் என்றும்.பிறகு பதினாறு பேர், பிடிபட்டவன் ஆஸம் என்றனர்.இடையே, வியாபாரச் சண்டையால் தாவூத் இப்ராஹீமின் கை இதிலுள்ளது என்றும் சொல்லப்பட்டது.சிறைகளிலுள்ள முஸ்லிம்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும்.பிறகு, பாகிஸ்தான் மாரியட் ஹோட்டலைப்போல் மும்பை தாஜ் ஹோட்டலையும் தகர்க்கவே வந்தோம். என்றும் சொன்னதாகச் செய்திகள் வந்தன. பிறகு, ஐயாயிரம் பேரைக் கொல்லவே வந்தோம்.என்றனர். இவற்றில் எது உண்மை <strong>என யாரும் கேட்கவில்லை! 'நியாயப்படி, தர்மப்படி கேட்கவும் கூடாது!'</strong><br /><br />ஐயாயிரம் பேரைக் கொல்வதே நோக்கமென்றால் வடமாநிலங்களில் பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சுட்டிருக்கலாம்.அங்குதான் மோடி, அத்வானி உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தார்கள். மும்பையிலிருந்து அடித்து விரட்டப் பட்ட பிகாரிகள் சிலரை சேர்த்துக்கொண்டு தாக்கரேயை தாக்கியிருக்கலாம். அனாயசயமாக இவ்வளவு ரிஸ்க் எடுத்து, பாதுகாப்பு நிறைத்த நட்சத்திர ஹோட்டலில் அறையறையாகச் சென்று ஐயாயிரம் பேரைக் கொல்லத் திட்டமிட்டது எவ்வளவு முட்டாள்தனமாகப் போய்விட்டது? <strong>என யாரும் கேட்கவில்லை! 'நியாயப்படி, தர்மப்படி கேட்கவும் கூடாது!'<br /></strong><br />கர்கரேயைக் கொன்றுவிட்டு போலீஸ் காரில் தப்பிய தீவிரவாதிகள் எங்கு சென்றனர்? அவர்களை ஏன் எந்தப்போலீஸ்காரரும் பின்தொடர்ந்து விரட்டிப் பிடிக்கவில்லை? என்று யாரும் கேட்கவில்லை! காமா மருத்துவமனையைத் தாக்கியவர்கள் மராட்டியில் பேசியதாகச் சொல்லப்படுகிறது. தீவிரவாதிகள் உர்தூ பேசினால் பாகிஸ்தானிலிருந்து வந்தவர்களென நம்பலாம்! மராட்டி பேசியதால் மராட்டியத் தீவிரவாதிகளோ? <strong>என யாரும் கேட்கவில்லை! 'நியாயப்படி, தர்மப்படி கேட்கவும் கூடாது!'</strong><br /><br />பாகிஸ்தானிலிருந்து அதிவேகப் படகில் கடல்வழியாக ஊடுறுவினார்கள் என்று சொல்லப்படுகிறது. மும்பையை விடக் குஜராத் கடல்பகுதி மிகவும் வசதியாக இருக்கும்போது குஜராத்தை ஏன் தவிர்த்தார்கள்? துறைமுக வர்த்தகத் தலைநகரான மும்பைக்குள் எல்லைதாண்டி தாக்குமளவு மும்பை கடல்பகுதி கேட்பாரற்றுக் கிடக்கவில்லை. சர்வதேசங்களிலிருந்து சரக்குக் கப்பல்கள் வந்துசெல்லும் பிஸியான கடல்பகுதியில் எல்லைதாண்டி மீன் பிடிக்க வந்தாலே பிடிபடும்போது ஆயுதங்களுடன் வந்தார்னார்கள் என்பது நம்பும்படியாக இல்லையே? <strong>என யாரும் கேட்கவில்லை! 'நியாயப்படி, தர்மப்படி கேட்கவும் கூடாது!'<br /></strong><br />சமீப குண்டு வெடிப்புகளுக்குப் பின்னர் முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் சொல்லப்பட்டது.சொல்லி வைத்தாற்போல் அனைத்து ஊடகங்களிலும் ஒரேயொரு தீவிரவாதி கையில் துப்பாக்கியுடன் கொலைவெறியுடன் நிற்கும் புகைப்படம் மட்டுமே வெளியாகியுள்ளது.வேறு தீவிரவாதிகள் எவனும் எந்தக்காமிராவிலும் படம்பிடிக்கப் படவில்லையா? <strong>என யாரும் கேட்கவில்லை! 'நியாயப்படி, தர்மப்படி கேட்கவும் கூடாது!</strong>'<a href="http://images.mirror.co.uk/upl/m4/nov2008/2/9/DCE46722-DFBA-CBDC-53CCD4B52C2D5C32.jpg"><img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 450px; CURSOR: hand; HEIGHT: 291px" alt="" src="http://images.mirror.co.uk/upl/m4/nov2008/2/9/DCE46722-DFBA-CBDC-53CCD4B52C2D5C32.jpg" border="0" /></a><br /><br />சர்வதேசப் பிரமுகர்கள் தங்கியிருந்த நட்சத்திர விடுதிகளிலும் அத்தகைய கேமராக்கள் செயல்பட வில்லையா? செப்டம்பர்-11 தாக்குதலுக்குப் பின்னர் அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாகத் தெரியும் அமெரிக்க, பிரிட்டானியர்களும்கூட அத்தகைய பாதுகாப்பற்ற விடுதிகளிலா தங்கினர்? <strong>என யாரும் கேட்கவில்லை! 'நியாயப்படி, தர்மப்படி கேட்கவும் கூடாது!'</strong><br /><br />மாலேகான் மற்றும்பிற குண்டு வெடிப்புகளில் 'இந்துத்துவா தீவிரவாதம்' சந்திசிரிச்சு, மன்மோகன்சிங் தலைமையிலான அரசு போகிற போக்கில் முஸ்லிம்களுக்கு ஏதாச்சும் நல்லது செய்ய வாய்ப்பிருந்தச் சூழலில், மும்பை தாக்குதலின்மூலம் இந்திய முஸ்லிம்களுக்கு என்ன பயன்? வெண்ணை திரண்டுவரும்போது தாழியை உடைக்க வேண்டிய அவசியம் என்ன? <strong>என யாரும் கேட்கவில்லை! 'நியாயப்படி, தர்மப்படி கேட்கவும் கூடாது!'</strong>நல்லடியார்http://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-12417711.post-9767928625029756612008-11-19T12:43:00.004+04:002008-11-19T12:48:43.162+04:00அழுகிய ஈரல் Vs. அரசியல்வாதி நாக்கு (சட்டக் கல்லூரி சம்பவம்)<ul><li>தமிழகக் காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டது - கலைஞர் கருணாநிதி </li><br /><li>தமிழகக் காவலதுறையின் இதயம் கெட்டுவிட்டது - தா.பாண்டியன் </li><br /><li>தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது - ஜெயலலிதா </li><br /><li>கேவலமான போலீஸ் - சரத்குமார் கண்டனம் </li><br /><li>சட்டக் கல்லூரி: சேவல் சண்டையா நடந்தது? விஜயகாந்த் ஆவேசம் </li></ul><br /><p>சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் கடந்த 12.11.2008 மாலை மாணவர்களிடையே நடந்த உக்கிரப் போரின்போது போலீஸாரின் அலட்சியப் போக்குக் குறித்து பலவித வியாக்கியானங்கள் பேசப்படுகின்றன. </p><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9M52mv1xeUDZ1WDcuY5tCO9F8DCzNkkrC2V45ZssAPUuUNLDhY9_b9GgF6Vk1-8hkoUUuR_qMgVMlu_YmZFtz89EDE8EesMK7eNsC1_aufOjJG9cUkmaC_rFz84GWw0IzLbahug/s1600-h/muslim.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5269593703255011378" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 262px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9M52mv1xeUDZ1WDcuY5tCO9F8DCzNkkrC2V45ZssAPUuUNLDhY9_b9GgF6Vk1-8hkoUUuR_qMgVMlu_YmZFtz89EDE8EesMK7eNsC1_aufOjJG9cUkmaC_rFz84GWw0IzLbahug/s320/muslim.jpg" border="0" /></a><p><br /><br />காவல் துறையைக் கையில் வைத்து,தான் ஆட்சி செய்யும்போது மட்டும் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்தது எனவும்,அடுத்தவர் ஆட்சி செய்யும் போது சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது, ஈரல்/இதயம் செயலிழந்து விட்டது என்றும் வழக்கம்போல் மாண்புமிகு நமது அரசியல்வாதிகள் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க புல்லரிக்கும் வசனம் பேசுகிறார்கள்!<br /><br />தன் சாதியினரையே நம்பி கட்சித் தொடங்கியவர்கள் மட்டுமின்றி நால்வருண / சாதி முறையையும் பேணும் பாஜகவின் இல.கணேசனும்கூட சட்டக்கல்லூரி விவகாரத்தில் சாதிப்பிரச்சினையே முக்கியக் காரணமாக இருந்திருக்கிறது என்று வருத்தப்பட்டிருந்தார்!<br /><br />போலீஸாரின் அலட்சியமும் பாரபட்சமும் புதிதல்ல. விபத்தோ அல்லது கொலையோ நடந்திருந்தால் "தங்கள் சரகத்திற்கு உட்பட்டதல்ல" என்று எல்லை தாண்டாமல் தட்டிக்கழித்த எத்தனையோ சம்பவங்களைக் கூறலாம். கோவை,குஜராத்,ஒரிஸ்ஸாவில் சிறுபான்மையினர் மீது காவிபயங்கரவாதிகள் வன்முறை வெறியாட்டம் போட்டபோது சிறுபான்மையினரை அடிப்பதிலும் அழிப்பதிலும் கூடுதலாக ஈடுபட்டது காவியா? காக்கியா? என்று பட்டிமன்றம் வைத்தால் லியோனிகூட தீர்ப்புச் சொல்ல முடியாமல் திணறுமளவுக்கு காவல் துறையும் காவித்துறையும் வேறுபாடின்றி கைகோர்த்துச் 'செயல்'பட்டனர்.<br /><br /><a href="rtsp://rtsp-youtube.l.google.com/video.3gp?app=blogger&fmt=13&cid=99ac492c21ec75b9" type="video/3gpp"><img class="BLOG_mobile_video_class" id="BLOG_mobile_video-99ac492c21ec75b9" height="266" alt="video" src="http://video.google.com/ThumbnailServer2?app=blogger&contentid=99ac492c21ec75b9&offsetms=5000&itag=w320&sigh=ls0C8Kk0TtaTOEOa2TJ3CWJR4Zw" width="320" /></a><br /><br />முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலங்களருகே விநாயகர் ஊர்வலங்கள் செல்லும் போது,அதில் முஸ்லிம்களுக்கு எதிராக, விநாயகருக்குச் சம்பந்தமில்லாத பாகிஸ்தானுடன் இந்திய முஸ்லிம்களைத் தொடர்புபடுத்தியும்,ஆபாசமான, வன்முறையான முழக்கங்களைத் திட்டமிட்டே எழுப்புவதால் பொது அமைதி கெட்டு, சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படுவதால், அவ்வழியே ஊர்வலம் செல்லக் காவல்துறை முன்னெச்சரிக்கையாக அனுமதி மறுக்கிறது.அதையும் மீறி,தடை செய்யப்பட்ட பகுதிகள்வழியே கலவர நோக்கில் விநாயகர் ஊர்வலங்கள் செல்லும் போது ஆபாச, வன்முறை முழக்கங்கள் எழுப்புவதால் முஸ்லிம்கள் அதை எதிர்த்து அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்தால் மட்டும் போலீஸார் ஒருதலைப்பட்சமாகச் செயல் படுவர் என்பது எழுதப் படாத விதி.<br /><br /><a href="rtsp://rtsp-youtube.l.google.com/video.3gp?app=blogger&fmt=13&cid=bb9c10d2163144be" type="video/3gpp"><img class="BLOG_mobile_video_class" id="BLOG_mobile_video-bb9c10d2163144be" height="266" alt="video" src="http://video.google.com/ThumbnailServer2?app=blogger&contentid=bb9c10d2163144be&offsetms=5000&itag=w320&sigh=be-A-8WVvyVtDtq_Kzj6rRW0qIU" width="320" /></a><br /><br />சில மாதங்களுக்கு முன்பு முஹம்மது நபியை (ஸல்.) அவமதிக்கும் நோக்கில் விஷமத்தனமாகச் செயல்பட்ட தினமலருக்கு எதிராக வேலூரில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் செய்தபோதும் போலீஸாரின் கொலைவெறித் தாக்குலை யாரும் மறக்க முடியாது. [படம்].<br />விழுப்புரம் அருகே கூலிகேட்டு ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்திய ஏழைத் தொழிலாளர்கள்மீது அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகச் சொல்லி, வயதானவர்கள் என்றுகூடப் பார்க்காமல் கொடூரமாகத் தாக்கி சட்டம் - ஒழுங்கைக் காப்பாற்றிய(!) போலீஸ்,<br /><br />ஒரு பக்கம் கண்ணதிரே நடந்த விநாயகர் ஊர்வலம் முதல் சட்டக்கல்லூரி சம்பவம்வரை அக்கிரமங்களைக் கைகட்டி வேடிக்கை பார்க்கும் கைகட்டியக் காவலர்கள்;இன்னொரு பக்கம் ஜனநாயக முறையில் எதிர்ப்புக் காட்டியவர்கள் மீது தடியடி நடத்தும் கடமை தவறாக் காவலர்கள்!<br /><br />மதச்சார்பற்று, பொதுவாகச் செயல்படவேண்டிய காவலர்கள் முஸ்லிம்கள் விசயத்தில் பெரும்பாலும் கடைப்பிடிக்கவில்லை. அப்போதெல்லாம் அசையாத நாக்கு சட்டக்கல்லூரி நடந்த சாதிப்பிரச்சினைக்கு அசைகிறது. காவலர்களின் அலட்சியத்திற்கு மேலிட உத்தரவு உடனடியாகக் கிடைக்காததே நிஜக்காரணம் எனில் வேலூர்,திண்டுக்கல்,விழுப்புரம் மக்களை அடித்து, உதைக்கவும் வழக்கத்திற்கு மாறாக நடுமண்டையில் லத்திசார்ஜ் செய்யவும் உடனடியாக உத்தரவிட்டது யார்? ஏன் என்று எந்த நாக்கும் கேட்கவில்லை.<br /><br />செயல்படாமல் போனது ஈரலும் இதயமும் அல்ல; நாக்கும்தான்!</p>நல்லடியார்http://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12417711.post-8513289391228187952008-11-04T10:57:00.002+04:002008-11-04T11:16:41.302+04:00முஸ்லிம்லீக் மதவாதக் கட்சியா?<a href="http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2a/Flag_of_the_Indian_Union_Muslim_League.svg/180px-Flag_of_the_Indian_Union_Muslim_League.svg.png"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 180px; height: 120px;" src="http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2a/Flag_of_the_Indian_Union_Muslim_League.svg/180px-Flag_of_the_Indian_Union_Muslim_League.svg.png" border="0" alt="" /></a>சமீபத்தில் ஊடகங்களில் தயங்கித் தயங்கி வினாக்குறியுடன் "<a href="http://thatstamil.oneindia.in/news/2008/10/24/india-three-held-in-connection-with-malegaon-blasts.html">மாலேகான் குண்டு வெடிப்புகளுக்கு இந்து அமைப்பு காரணம்?</a>" என்று தலைப்பிட்ட செய்தியைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. அதன் தொடர்ச்சியாகக் கடந்த வருடமும் மாலேகான் மசூதியில் குண்டு வைத்தது "ஹிந்து" ஜாக்ரான் மஞ்ச்சின் இந்துத்துவா 'குண்டர்'கள் என்ற செய்தியைக் குறித்து இவ்வாரக் குமுதத்தில் ஞானி, "பயங்கரவாதத்தின் நிறம் காவி" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். <br /><br /><a href="http://www.kumudam.com/magazine/Kumudam/2008-11-05/imagefolder/pg13.jpg "><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 480px; height: 284px;" src="http://www.kumudam.com/magazine/Kumudam/2008-11-05/imagefolder/pg13.jpg " border="0" alt="" /></a><br /><br />மதரீதியில் மக்களைப் பிளவுபடுத்தி பாமரர்களிடம் மதவெறியூட்டி, அரசியல் இலாபம் கண்ட அமைப்புகளைப் பற்றி விளக்கமாகவே ஞானி எழுதி இருந்தார். அக்கட்டுரை அவரது நியாயமான உள்ளக் குமுறலாக இருப்பினும் "மதவெறி பயங்கரவாதம் பல வருடங்களாக இந்தியாவில் இருந்து வருகிறது. மேலை நாடுகளில் மதவெறி என்பது அரசியல் ஆட்சி நிர்வாக அமைப்பிலிருந்து பிரிக்கப்பட்ட பின்னர்தான் அங்கே இன்று காணப்படும் பொருளாதார, வாழ்வியல் மேம்பாடுகள் ஏற்பட்டன. இந்தியாவில் அரசியலுடன் மதத்தைப் பிணைப்பதையே கோட்பாடாகக் கொண்டு இயங்கிய ஹிந்து மகாசபாவின் தொடர்ச்சியாகவே ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி.முதல் முஸ்லிம் லீக், அல் உம்மா வரை பார்க்க வேண்டும்.<br /><br />தமிழ்நாட்டில் இந்து முன்னணியும் பிள்ளையார் ஊர்வலங்களும் 90களில் வருவதற்கு முன்னால் அல்-உம்மா இல்லை. ஒரு மதத்தில் இயங்கும் மதவெறி அமைப்புதான் இன்னொரு மதத்தின் மதவெறி அமைப்பை போஷித்து வளர்க்கும் சத்துணவு." என்று மிகச் சரியாக ஞானி குறிப்பிட்டிருந்தார்.<br /><br />ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பியுடன் அல்-உம்மாவைச் சேர்த்திருப்பதிலாவது ஓரளவு நியாயமுண்டு. இராம கோபாலனின் துவேஷப் பேச்சுக்களின் விளைவே பழனி பாபா போன்றவர்களைக் கொதிந்தெழச் செய்தது. இவர்களுடன் முஸ்லிம் லீக்கையும் சேர்த்து மதவாத அமைப்பாகச் எழுதியிருப்பது ஏனென்று புரியவில்லை! கட்சியின் பெயரில் "முஸ்லிம்" என்று இருப்பதால் அவ்வாறு எழுதியிருக்கக்கூடும்.எழுத்தாளர் ஞானி, முஸ்லிம் லீக்கின் நூற்றாண்டுச் செயல்பாடுகளை அறியாத "அஞ்ஞானி"அல்லர்; லீக்-வீக் ஆனதை அறியாமல் எழுதி இருப்பதற்கும் வாய்ப்பில்லை. 'அந்தப் பக்கம் ரெண்டு பேரு; இந்தப் பக்கம் ரெண்டு பேரு' என்ற ஜனநாயக-மதசார்பற்ற முத்திரையைத் தக்கவைக்க முஸ்லிம் லீக்கையும் இணைத்திருக்கக் கூடும். <br /><br />முஸ்லிம் லீக்கை பி.மு/பி.பி என்று இரண்டு கட்டங்களாகப் பிரிக்கலாம். அதாவது பிரிவினைக்கு முன், பிரிவினைக்குப்பின் என்று வகைப்படுத்தலாம். பி.மு.வில் இந்தியா சுதந்திரம் பெறுவதையே குறிக்கோளாகக் கொண்டு முஸ்லிம் லீக் செயல்பட்டது. இந்திய தேசியக் காங்கிரஸுடன் இணைந்து, முஸ்லிம்களை ஒருங்கிணைத்து சுதந்திரத்திற்காகப் போராடத் தூண்டியது. பிரிவினைக்கு முந்தைய முஸ்லிம் லீக்கின் சுதந்திரப் போராட்டப் பங்களிப்பு மகத்தானது என்பதை யாரும் மறுக்க முடியாது.<br /><br />சுதந்திரம் பெறுவதற்குச் சிலவருடங்களுக்கு முன்பே, முஸ்லிம்களுக்கெனத் தனிநாடு கோஷம் அவர்கள் மீது திணிக்கப் பட்டு, பிரிவினைவரை தள்ளப்பட்டது. இந்திய தேசியக் காங்கிரஸில் உயர்மட்டத் தலைவர்களாக இருந்த சிலரோடு ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியும் தேசப் பிரிவினைக்கு முக்கியக் காரணங்களாக இருந்தன. <br /><br />பிரிவினைக்குப் பின்னர் தேசப்பற்றுடன்,பிறந்த மண்ணிலேயே தங்கிவிட்ட முஸ்லிம்களுள் குறிப்பிட்ட சிலரே முஸ்லிம் லீக்கைத் தொடந்து நடத்தி வந்தார்கள். காயிதே மில்லத் என்றறியப்பட்ட முஹம்மது இஸ்மாயில் ஸாஹிப் அவர்களுக்குப் பிறகு சுலைமான்சேட், பனாத்வாலா, அப்துல்ஸமது,அப்துல்லத்தீப் ஆகிய நாவன்மையும் திறமையும் கொண்ட தலைவர்கள் பொறுப்பேற்று அமைப்பைக் கொண்டு சென்றபோதும் தனக்கான தனித்தன்மையை நிலைநிறுத்தத் தவறியதால் முஸ்லிம் லீக் என்ற பேரியக்கம் தேய்ந்து, பெயரளவில் தட்டுத் தடுமாறி பெயரளவில் இயங்கி வந்தது. தற்போது பேராசிரியர்.காதிர் முஹைதீன் மாநிலத்தலைவராக இருக்கிறார். அவருக்கு அடுத்ததாக முஸ்லிம்லீக்கைத் தமிழகத்தில் தலைமையேற்று நடத்தப் பொருத்தமான எவரும் இருப்பதாகத் தெரியவில்லை.<br /><br />யூனானி மருத்துவர் சையத் சத்தார், வடக்குக் கோட்டையார் என்று யார் யாரெல்லாமோ முஸ்லிம்லீக்கின் பிரதிநிதிகளாக அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் பொதுமேடைகளிலும் தோன்றுகிறார்கள். திமுக தலைவர் கருணாநிதி பலதடவை முஸ்லிம் லீக்கிற்கு இதயத்தில் மட்டுமே இடம் கொடுத்தும், சிலநேரம் இதயக்கதவை திறந்து காட்டியபிறகும் திமுகவின் சிறுபான்மைப் பிரிவாக இருப்பதையே இதன் தலைவர்கள் விரும்புகிறார்கள்!<br /><br />ஜெயலலிதா அணியிலிருக்கும்போது அவர் பாஜகவுடன் கூட்டுசேர்ந்தால் "நாங்கள் அதிமுகவுடன் மட்டுமே கூட்டு" என்று விவரமாகத் தெளிவு படுத்துகிறார்கள். தமிழகத்தில் இருக்கும் ஜாதிக் கட்சிகள் அளவுக்குக்கூட முஸ்லிம்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தாததற்கு அதன் தலைவர்களாகச் செயல்பட்டவர்களே காரணம். <br /><br />கடந்த 20-30 ஆண்டுகளில் முஸ்லிம் லீக்கைப் பொருத்தவரை மத்தியில் காங்கிரஸுடனும் மாநிலங்களில் தனித்து அல்லது ஏதேனும் ஒரு திராவிட கட்சியுடன் கூட்டனியாகத் தேர்தலில் போட்டியிடுகிறது. சுதந்திரத்திற்குப் பிந்தைய முஸ்லிம் லீக், முஸ்லிம்களுக்காகச் சொல்லிக் கொள்ளும்படியாக எதுவுமே செய்யவில்லை என்பதுதான் அதன் தேய்வுக்குச் சரியான காரணம் என்று சொல்லலாம்.அனேகமாக கட்சியின் பெயருடன் மத அடையாளத்தை வைத்துக் கொண்டு அம்மதத்தைச் சார்ந்தவர்களுக்காக எதுவுமே செய்யாத ஒரே மதசார்புடையக் கட்சி முஸ்லிம் லீக் மட்டுமே!<br /><br />ஆண்டுக்கு ஒருமுறை மீலாது விழா மற்றும் இஃப்தார் விருந்தில் மட்டுமே முஸ்லிம்லீக் என்று ஒரு கட்சி இருப்பதை மீள்நினைவு செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. தேர்தல் பிரச்சாத்தின்போது கூட்டணித் தலைவரின் பேச்சைக் கேட்க முஸ்லிம்கள் கூடினார்கள் என்பதைக் காட்ட பச்சைப் பிறைக்கொடி தென்படும். சென்னை அங்கப்பன் தெருவிலிருந்து திருவல்லிக்கேணிவரை மக்களை ஊர்வலமாக வரச்செய்து சீரணி அரங்கிலும் எழும்பூர் இம்பாலாவிலும் கலைஞர் அல்லது வீரமணியை வைத்து நபிகள் நாயகத்தையும் காயிதே மில்லத்தையும் புகழ்ந்து ஒருசில வார்த்தைகள் பேசவைத்ததே தமிழக முஸ்லிம்லீகின் நீண்டகாலச் சாதனையாக இருந்து வருகிறது!<br /><br />பாபர் மசூதி இடிப்பைக் கண்டிக்கும் வருடாந்திர சடங்குகளில்கூட முஸ்லிம் லீக் எழுச்சியுடன் கலந்து கொண்டதாக அறியமுடியவில்லை. கட்சிப் பெயரில் "முஸ்லிம்" என்பது பெயரளவில் மட்டுமே இருக்கிறதே தவிர கிட்டத்தட்ட இதன் தலைவர்கள் உண்மையான முஸ்லிம்களாக நடந்து மற்றவர்களுக்கு வழிகாட்டவுமில்லை.மீலாது விழா என்ற இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை ஆண்டுதோறும் நடத்தி வருவதிலிருந்து முஸ்லிம் லீக்கின் இஸ்லாம் குறித்த புரிந்துகொள்ளலை அறியலாம்.<br /><br />இந்துத்துவா அமைப்புகளைப் போல் இந்துக்களுக்கு எதிராக முஸ்லிம்களை உசுப்பிவிட்டு இலாபம் அடைந்து கொள்ளும் குறைந்தபட்ச அரசியல் தகுதி(!)கூட லீக்குக்கு இருந்ததாக வரலாறு இல்லை. இதுவரை முஸ்லிம் லீக்கைச் சார்ந்த ஒருவர்கூட குண்டுவெடிப்புகளில் தொடர்பு படுத்தப்படாமல் இருப்பதிலிருந்து அதிகார வர்க்கம் முஸ்லிம் லீக்கின் செயல்பாடுகளை நன்கு அறிந்திருப்பது தெளிவாகிறது. முஸ்லிம் லீக்கின் கொடியும் பாகிஸ்தான் தேசியக்கொடியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தும்கூட எதற்கெடுத்தாலும் தன் பிறந்த மண்ணான பாகிஸ்தானுடன் இந்திய முஸ்லிம்களை இணைத்துப் பேசும் அத்வானிகூட முஸ்லிம் லீக்கைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.<br /><br />பெயரளவில் மட்டுமே முஸ்லிம்களுக்கான அரசியல்கட்சி என்று சொல்லி, முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் அரசியலுக்காக அடகுவைத்து வெறும் ஓட்டு வங்கியாக மட்டுமே முஸ்லிம் லீக் மாறிப் போனதை உணர்ந்த சிலர் 1990களில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பில் இணைந்து செயல்பட்டனர். தற்போது தவ்ஹீது ஜமாத் என்று பிரிந்து நீண்டகாலத்திற்குப் பிறகு அரசியல்ரீதியில் ஒருங்கிணைந்து வந்த முஸ்லிம்களை அற்ப காலத்துக்குள் மீண்டும் மார்க்கம், அரசியல் என்று கூறுபோட்டுள்ளனர் என்பது தனிக்கதை!<br /><br />பிரிவினையின்போதே பாகிஸ்தானுடன் முஸ்லிம் லீக் முழுமையாகப் போயிருந்தாலாவது இந்திய முஸ்லிம்கள் ஓரளவு அரசியல் விழிப்புணர்வு அடைந்திருப்பர். நியாயமாகச் சொல்வதென்றால் முஸ்லிம்களைப் பின்னுக்குத் தள்ளியதில் முஸ்லிம் லீக், மற்ற கட்சிகளுக்கு சற்றும் குறைந்ததல்ல. தேசியளவிலும் மாநிலளவிலும் முஸ்லிம்களுக்குப் பயனற்று முஸ்லிம்களை ஓரணியில் திரட்டத்தவறிய முஸ்லிம் லீக்கை ஆர்.எஸ்.எஸ் சங்பரிவாரங்களைப் போன்ற மதவாதக் கட்சியாக ஞானி உவமித்திருப்பது சரியல்ல.<br /><br />ஆங்கிலத்தில் LEAGUE என்றால் An association of states or organizations or individuals for common action அதாவது தனிநபர்கள், அமைப்புகள், மாநிலங்கள் இணைந்து ஒரு பொதுநோக்கத்தை அடைவதற்கான அமைப்பு என்று பொருள் விரியும். தேசப்பிரிவினைக்குப் பின்னர், இந்திய முஸ்லிம் லீக் அப்படி ஏதாவது ஓர் பொதுநோக்கத்தை அடைந்ததா எனத் தெரியவில்லை. முஸ்லிம் லீக் (LEAGUE) என்பதைவிட முஸ்லிம் வீக் (WEAK) என்பதே சரியாக இருக்கும்!<br /><br />பெரும்பாலான முஸ்லிம்களே,முஸ்லிம் லீக்கை மறந்து விட்டனர். ஞானிக்கு நினைப்பில் இருப்பது வியப்புக்குரிய ஒன்றுதான்! <br /><br />முஸ்லிம் லீக்! ஜிந்தாபாத் :-(நல்லடியார்http://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-12417711.post-6791263966098572072008-10-30T12:42:00.002+04:002008-10-30T12:53:36.989+04:00இந்துத்வா பயங்கரவாதம் என்பதே சரி!<a href="http://www.milligazette.com/images2002/58VHP-attack-on-orissa-asse.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 360px; height: 262px;" src="http://www.milligazette.com/images2002/58VHP-attack-on-orissa-asse.jpg" border="0" alt="" /></a>மகாராஷ்டிரா குண்டு வெடிப்புக்களை நடத்திய பண்ணாடைகளைக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து "இந்து பயங்கரவாதம்" என்று மக்களவையில் சொன்னதற்கு பா.ஜ.க எதிர்ப்புத் தெரிவித்தது. திருவாளர் ராமகோபாலனும் இதை கடுமையாக எதிர்க்கிறார்.எதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள் என்று தெரியவில்லை.<br /> <br />வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட நாள்முதல் நேற்றுவரை எங்கு குண்டு வெடித்தாலும் அந்தக்குண்டுக்கு சுன்னத் செய்து, தாடி வைத்து, தொப்பிப் போட்டு அதை இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியப் பயங்கரவாதம் என்று சொல்லி இன்பம் கண்டுவந்ததோடு அதை வைத்து பிழைப்பு நடத்தி அரசியல் இலாபம் கண்டு வந்த சங் பரிவாரங்களுக்கு, தற்போது அதையே இந்துப் பயங்கரவாதம் என்றதும் குய்யோமுறையோவெனக் கூக்குரல் போடுகிறார்கள்.<br /> <br />அப்பாவிகளைக் குண்டு வைத்துக் கொல்லும் தீவிரவாதிகளுக்கு எம்மதமும் இல்லை. மனிதகுல விரோதிகளான அவர்கள் மதமற்ற, மனிதாபிமானமற்ற மிருகங்கள். அத்தகைய மக்கள்விரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் தீவிரவாதி, பயங்கரவாதி என்றே குறிப்பிடப்பட வேண்டும் என்று சொன்னபோதெல்லாம் கண்டும்காணாமல் இருந்துவிட்டு, "தற்போது இந்து பயங்கரவாதம் என்றதும் வலிக்கிறதோ?<br /> <br />இஸ்லாம் என்றால் அமைதி. அமைதியும் பயங்கரவாதமும் எக்காலத்திலும் ஒன்றுசேர முடியாது. இஸ்லாமியப் பயங்கரவாதம் என்ற சொல்லாடலே முரணானது. எனினும் இந்திய முஸ்லிம்களைப் பயங்கரவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் சித்தரிக்க,வாய்ப்புக்கிட்டியபோதெல்லாம "இஸ்லாமிய" என்ற அடைமொழியுடன் தீவிரவாத,பயங்கரவாதச் செயல்களோடு சேர்த்தே ஊடகப்படுத்தி சிற்றின்பம் கண்டனர்.<br /> <br /><a href="http://photos.sunyaprajna.com/DurgaVahini3.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 410px; height: 286px;" src="http://photos.sunyaprajna.com/DurgaVahini3.jpg" border="0" alt="" /></a><br />இந்துபயங்கரவாதம் என்றதும் சாமியாடும் இவர்களே குஜராத, ஒரிஸ்ஸா, மஹாராஷ்டிரா மற்றும் பலமாநிலங்களில் சிறுபான்மையினரை அச்சுருத்தி, பொது இடங்களில் ஆயுதப்பயிற்சி செய்தும், ரதயாத்திரை என்ற பெயரில் கலவரம் செய்து வருகிறார்கள். சிறுபான்மையினரை இந்தியாவை விட்டும் முடிந்தால் உலகையும்விட்டுத் துரத்திவிட்டு இந்து ஞானமரபு அல்லது வருணாசிரத்தை எஞ்சிய மக்களை அச்சுருத்தி ஏற்கச்செய்து அகண்டபாரதக் கனவில் வன்முறையாட்டம் போட்டு வருகிறார்கள்.<br /> <br />இந்துக்களில் பெரும்பான்மை சாதியைச் சார்ந்த மிகச்சிறுபான்மையினரான இவர்களால் பெரும்பான்மை இந்துக்கள் நிம்மதியற்று வாழவேண்டியுள்ளது. <strong>காலங்காலமாக அண்டை வீட்டுக்காரர்களாக, அண்ணன்-தம்பிகளாகப் பழகி வந்தவர்களை ராமர் பெயரால் மதவெறியேற்றி உசுப்பிவிடும் இவர்களை இந்துப் பயங்கரவாதிகள் என்பதைவிட இந்துத்வா பயங்கரவாதிகள் என்பதே சரியாகும்.</strong> உலகெங்கும் இந்து என்றால் அஹிம்சாவாதி, பிற உயிர்களுக்கு தீங்கிழைக்காதவர்கள் என்றே அறியப்பட்டு வந்துள்ளனர்.அதனால்தான் காந்தியடிகள்கூட தன்னை ஓர் இந்து என்று பகிரங்கமாகச் சொல்லத் தயங்கவில்லை.<br /> <br />இராம.கோபாலன் சொல்வதுபோல், <a href="http://thatstamil.oneindia.in/news/2008/10/29/tn-rama-gopalan-opposes-usage-of-word-hindu-terrorism.html">மஹாராஷ்டிரா குண்டு வெடிப்புகளில் கைது செய்யப்பட்டவர்களை இந்து பயங்கரவாதிகள் என்பது இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு இழைக்கப்படுகிற துரோகம் </a>ஆகும்.நல்லடியார்http://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-12417711.post-87992399634945773002008-10-21T13:43:00.000+04:002008-10-21T13:44:19.816+04:00சந்த்ராயன் விண்கலமும் மதநம்பிக்கைகளும்!!!<a href="http://www.h4x3d.com/feat/themes/moon.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px;" src="http://www.h4x3d.com/feat/themes/moon.jpg" border="0" alt="" /></a>சந்திரனுக்கு ஆளில்லா விண்கலத்தைச் செலுத்தும் <a href="http://thatstamil.oneindia.in/news/2008/10/20/india-countdown-to-chandrayaan-begins-today.html">CountDown தொடங்கி விட்டது</a>. நிலவில் மனிதன் இறங்கவேயில்லை என்று விஞ்ஞானிகளில் ஒரு சாரார் இன்றும் நம்புகிறார்கள். <a href="http://www.google.com/search?hl=en&q=moon+landing+hoax&aq=f&oq=">Apollo Hoax</a> என்று கூகிலிட்டால் சுவாரஸ்யமான பல விடயங்கள் கிடைக்கும். நிலவில் மனிதன் வாழமுடியுமா என்ற நெடுநாளைய ஆசையின் தொடர்ச்சியால் நிலவு குறித்த மனித ஆய்வுகள் தொடர்கின்றன.<br /><br />இயற்கையை வணங்கி வந்த பண்டைய மனிதர்கள் நிலவைக் கடவுளாகக் கருதி வழிபட்டனர். கிரேக்கர்களின் வழிபாடுகளில் நிலவுக்கு முக்கிய இடமுண்டு. கிரேக்கர்கள் தவிர்த்து இந்துக்களில் சிலர் நிலவை "சந்திர பகவான்" என்று நம்பி வழிபடுகிறார்கள்.இவை தவிர்த்து ஏனைய மதங்களில் நிலவு குறித்த நம்பிக்கைகள் இருப்பதாகத் தெரியவில்லை.<br /><br />இஸ்லாமிய வரலாற்றிலும் நிலவு குறித்தத் தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது.முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நபித்துவம் பெற்றத் தொடக்கத்தில் <a href="http://www.ikmahal.org/anmikam/kuran/atijayam%2054.htm">சந்திரன் பிளக்கப்பட்டதாக </a>குர்ஆன் அறிவிக்கிறது.சமகாலத்தில் <a href="http://suvanappiriyan.blogspot.com/2006/10/blog-post_25.html">நம் இந்தியப் பகுதியான கேரளாவை ஆண்ட சேரமான் இரும்பொறை இந்நிகழ்வைப் பார்த்ததாகவும் கேரளக் குறிப்பேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.</a><br />நிலவுக்கு விண்கலம் அனுப்புமளவுக்கு விஞ்ஞான தொழில்நுட்ப மேன்மை அடைந்துள்ள நமது விஞ்ஞானிகள் சந்த்ராயன் விண்கலம், சரியாக இலக்கை சென்றடைய திருப்பதி ஏழுமலையானை வேண்டிக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன! விஞ்ஞானத்தையும் மீறிய ஒரு சக்தி உண்டு என்ற நம்பிக்கையின் வெளிப்பாடாக இஸ்ரோ விஞ்ஞானி மாதவன் நாயர் திருப்பதியில் விசேச பூசை செய்திருக்க வேண்டும்.! <br /><br />இந்து மதத்தைச் சார்ந்தவராக இருப்பதால் திருப்பதிவெங்கடாசலபதியை வேண்டி இருக்கக் கூடும்! இவருக்கு முன்பு இந்திய அணுசக்தித்துறையின் தலைமை விஞ்ஞானியாகவும் பின்னர் இந்திய ஜனாதிபதியாகவும் இருந்த A.P.J.அப்துல் கலாம் அவர்கள் இவ்வாறு மதச்சார்பு அடையாளத்துடன் நடந்ததாக அறிய முடியவில்லை! அப்படி நடந்திருந்தாலும் பழமைவாதி, அடிப்படைவாதி என்ற முத்திரைகளுடன் எங்காவது ஒரு சிறிய ஆய்வுக்கூடத்திலேயே அவரின் ஆய்வுகள் முடக்கப் பட்டிருக்கும்!<br /><br />சேதுக்கால்வாய் திட்டத்தை ராமர் பாலம், இந்துக்களின் மதஉணர்வு என்றெல்லாம் காரணம் சொல்லித் தடைபோட்டுவரும் சங்பரிவாரங்கள் நிலவுக்கு விண்கலம் அனுப்புவது சந்திரபகவானை அவமதிக்கும் செயல் அல்லது இந்துக்களின் மதநம்பிக்கையைச் சீண்டும் செயல் என்று வாய் திறக்காமல் இருப்பது வியப்பாக உள்ளது. ராமர் பாலம் குறித்து அமெரிக்காவின் நாஸா ஆய்வு மையம் சொன்னதை, ராமர் பாலம் இருந்ததற்கான விஞ்ஞானச் சான்றாகச் சொல்லி பரிவாரங்களின் ஊதுகுழல்கள் செய்திகளில் பரவவிட்டார்கள். அதே நாஸாதான் சந்திரனை பூமியின் துணைக்கோல் என்றும் சொல்கிறது! பரிவாரங்களுக்கு எது அரசியல் லாபமோ அதை மட்டுமே பற்றிப் பிடித்துக் கொள்வார்கள் என்பதற்கு இதுவும் சான்று.<br /><br />திருக்குர்ஆனையும் முஹம்மது நபியின் தூதுத்துவத்தையும் பொய்ப்படுத்த முனைந்த எத்தனையோ முயற்சிகளில் தோல்வியுற்ற பலரைப் பற்றி வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது. அறிவியல் அறியப்படாத காலத்தில் மனித சிந்தனைக்கு அப்பாற்பட்ட இவ்வரிய வானியல் நிகழ்வைக் குறித்து எவரும் ஆராயாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.வானியல்/நிலவியல் ரகசியங்களை உள்ளங்கையில் வைத்திருக்கும் உலக விஞ்ஞானிகள் இந்நிகழ்வு குறித்த ஆய்வைச் செய்துள்ளார்களா அல்லது திட்டமிட்டே தவிர்த்து வந்துள்ளார்களா என்று தெரியவில்லை. விஞ்ஞானிகளை வியக்க வைத்த குர்ஆன் கூறும் இந்நிகழ்வை இனியாவது விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து வெளியிட வேண்டும்.<br /><br />சந்த்ராயன் விண்கலம் வெற்றிகரமாக இலக்கைச் சென்றடைந்து, நம் இந்தியர்களின் அறிவாற்றலை உலகிற்கு மீண்டும் நிரூபிக்க வேண்டும் என்று மனதார விரும்பும் இந்தியர்களும் அடியேனும் இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.<br /><br />வாழ்க மதசார்பற்ற பாரதம்!நல்லடியார்http://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.com4